Jump to content

மகா நடிகன் சிறீதரனின் பச்சோந்தி அரசியல்!


Recommended Posts

spacer.png

நடிகர்கள் எல்லாம் தலைவர்கள் ஆகிவிட்டனர், தலைவர்கள் எல்லாம் நடிகர்கள் ஆகிவிட்டனர் என்பது காசி ஆனந்தனின் பிரபல கவிதை வரிகள். இந்தியாவிலும் தமிழகத்திலும் நீண்ட கால மிதவாத அரசியல் காணப்படுகின்ற சூழலில் இது யதார்த்தமான வரிகள்தான். ஆனால் முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு தொடங்கிய மிதவாத அரசியலில், தமிழகத்தின் நடிகர் திலகங்களை மிஞ்சும் மகா நடிகர்கள் உருவாகியிருப்பது வியப்புத்தான். இன்னும் எத்தனை தசாவதாரங்களை காண நேரிடுமோ?

மூச்சுக்கு முந்நூறு தரம் விடுதலைப் புலிகளைப் பற்றி பேசிவிட்டு, ரணில் ஒரு நரி, கருணாவை பிரித்து, எங்கள் மண்ணை சிதைப்பதில் பங்காற்றியவர் என்றும் ரணிலுக்கு வாக்களிப்பவர்கள் துரோகிகளே என்றும் பேசிவிட்டு தேர்தல் முடிந்த பின்னர், ரணில் முதுகை தடவிக் கொடுக்க சிரித்துக் கொண்டு நின்ற சிறீதரனின் மகா நடிப்பும் பச்சோந்தித்தனமும் மீண்டும் வெளிப்படுவதை அண்மைய அரசியல் நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன.

அண்மையில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைமைக்கும் எதிராக வன்மங்களை கக்கியிருந்தார். அப்போது, விடுதலைப் புலிகளைப் பற்றி யார் பேசினாலும் அதற்கு நான்தான் பதில் அளிப்பேன் என்ற மாதிரியும், விடுதலைப் புலிளை பற்றி பேச எனக்கு மாத்திரமே தகுதி உண்டு என்றும் காட்டிக் கொண்டிருந்த சிறீதரன் வாய்கட்டுப் போட்ட நாய்க்குட்டியாக மாறியிருந்தார். இது பற்றி பலரும் கேள்வி எழுப்பியபோதும் அவர் கள்ளமெனத்தில் இருந்தார்.

விடுதலைப் புலிகள் பற்றிய உண்மையான அன்பும் ஈடுபாடும் கொண்ட ஒருவர் அவ்வாறு மௌனியாக இருக்க மாட்டார். தலைவர் பிரபாகரன் மீது உண்மையான பற்றும் உறுதியும் கொண்ட ஒருவர் அப்படி கோழையாக அடங்கியிருக்க முடியாது. தனது அரசியலிருப்பு மற்றும் எதிர்கால வருவாய்களை கருத்தில் கொண்ட ஒருவரால்தான் சுமந்திரனை பகைத்து எதிர்காலத்தில் கட்சியின் இருப்பை பாதித்துவிடக்கூடாது என்ற நோக்கில் மௌனியாக கோழையாக மூச்சுக்காட்டாமல் இருக்க முடியும்.

இது பற்றி அன்றைக்கு தமிழ்க்குரல் கேள்விகளை எழுப்பியிருந்தது. வழமைபோல ரணிலின் ஆள், கோத்தாவின் ஆள் என்று கண்ணை மூடிக் கொண்டு சூரியனை நோக்கி கல்லெறியும் சிறுவனைப் போல சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொண்ட சிறீதரன், இப்போது ஒரு மகா நடிகன் என்ற தன் அரசியல் நாடகத்தை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளார்.

அண்மையில் தீவகத்திற்கு எம்.ஏ. சுமந்திரனுடன் சிறீதரன் அரசியல் பிரசாரத்திற்கு சென்றுள்ள புகைப்படங்கள், சிறீதரனின் கபடமான பச்சோந்தி அரசியலை வெளிப்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கம்மீதும் அதன் தலைமை மீதும் எந்த பற்றும் சிறீதரனுக்கு இல்லை என்பதும் சுமந்திரன் பற்றே இருக்கிறது என்பதும் சுமந்திரனின் சிங்கள ஆதரவு கருத்துக்களே சிறீதரனின் கருத்தும் நிலைப்பாடும் என்பதையும் இப் புகைப்படங்களும் கூட்டும் நன்றாக புலப்படுத்துகிறது.

சுமந்திரனுக்கு கிடைக்கும் வாக்கு தனக்கும் கிடைக்கும் என்பதும் தனக்கு அதிகூடிய விருப்பு வாக்குகள் கிடைக்க வேண்டும் என்றால் சுமந்திரனை பகைக்கக்கூடாது என்பதுமே சிறீதரனின் அணுகுமுறை. விடுதலைப் புலிகளையும் அதன் தலைவரையும் கொச்சைப்படுத்தும் சுமந்திரனுடன் இணைந்து அரசியல் செய்வதும், சிங்களப் பேரினவாதக் கட்சியில் நின்று அரசியல் செய்வதும் ஒன்றுதான். வெளிப்படையான துரோகத்தை செய்யும் சுமந்திரனைக் காட்டிலும் சிறீதரன் ஆபத்தானவர் என்பதை அண்மையகால நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன.

கிளிநொச்சியில் தன்னை மீறி சுமந்திரனை ஆதரித்தவர்களை துரோகிககள் என்றார் சிறீதரன். சிலரை கட்சியில் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கினார். இன்றும் சுமந்திரன் துரோகி என்று, சிறீதரனின் அன்றைய வார்த்தைகளை நம்பி சமூக ஊடகங்களில் கம்பு சுற்றும் சிறீதரன் ஆதரவாளர்களும் உள்ளனர். தன்னை மீறி சுமந்திரனை ஆதரித்தவர்கள், துரோகி என்றுவிட்டு, இன்று சுமந்திரனின் அதிரடிப்படையினரின் பாதுகாப்பில் தேர்தல் பிரசாரம் செய்வது அவரை நம்பிய ஆதரவாளர்களுக்கு செய்யும் பெரிய துரோகமல்லவா?

பிரபாகரன் புகழ்பாடி இதுவரை அரசியல் செய்த சிறீதரன், தற்போது தனது அரசியலை காப்பாற்றிக்கொள்ள, சுமந்திரனுடன் இணைந்து பிரச்சாரம் செய்தால் மக்கள் தன்னை தோற்கடித்தால், அந்த வரலாற்று தோல்வியை ஏற்கத் தயார் என்று கூறியிருப்பது சுமந்திரன்மீதான பக்தியால் அல்ல. அன்றைக்கு பிரபாகரன்மீதான பக்தியால் அவரை புகழ்ந்திருந்தால், இன்று சிறீதரனிடம் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்காது. அன்றைக்கு தனது அரசியலுக்காக பிரபாகரன் பெயர் உச்சரித்த வாய், இன்று சுமந்திரன் அடுத்த தலைமையாக வந்தால் தனது அரசியல் இல்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காகவே கண்மூடித்தனமான சுமந்திரன் பக்தியை வெளிப்படுத்துகிறது.

சுமந்திரன்மீது, யாழ்ப்பாண நகரத்தில் செருப்புமாலை அணிவித்து, பல்வேறு இணையங்களிலும் பத்திரிகைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டு, அவரது கூட்டங்களுக்கு வெறும் ஐந்தாறுபேர்கள் சேருகின்ற நிலையிலும் தோல்வியை தழுவிவிடுவேனா என சுமந்திரன் அஞ்சுகின்ற நிலையிலும் அவரது பாதங்களை பற்றி அரசியல் செய்து தன்னை காப்பாற்ற முயல்கிற ஒருவர் தமிழ் மக்களின் விடிவுக்கும் உரிமைக்கும் உண்மையாக ஒருபோதும் செயற்பட முடியாது. சுமந்திரனை தவிர்க்கும் தமிழ் தேசியப் பற்றாளர்கள், சிறீதரனையும் தவிர்க்க வேண்டியது தவிர்க்க முடியாதது.

 தாயகன்

https://thamilkural.net/thesathinkural/views/45222/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.