Jump to content

இது ஒன்று தான் இது வரை missing in Canada.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒன்று தான் இது வரை missing in Canada.

எனக்கு வாட்ஸ் அப்பிலை வந்தது. பழசோ புதிசோ தெரியாது.

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தண்டிகைப்  பாடையும் பறை மேளமும் நன்றாகத்தான் இருக்கு......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, suvy said:

தண்டிகைப்  பாடையும் பறை மேளமும் நன்றாகத்தான் இருக்கு......!  👍

 இலங்கை போல் தெருவால் ஊர்வலம் போவதற்கு கனடாவில் அனுமதி உள்ளதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

 இலங்கை போல் தெருவால் ஊர்வலம் போவதற்கு கனடாவில் அனுமதி உள்ளதா?

பொடி வைத்திருந்த இடமும் அதை தகனம் / தாக்கும்  செய்யும் இடமும் ஒரே வளாகத்தில் இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன்......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எல்லாம் தற்போதைய சூழ்நிலையில் நடந்திருக்க கூடிய சாத்தியங்கள் இல்லை.. கடந்த காலங்களில் நடை பெற்று இருக்கும்.

கடந்தசில மாதங்களாக இறுதி கணத்தில் பட்டன் அமர்த்தி (கொள்ளி வைப்பது என்று சொல்வார்கள்).

அதைக் கூட இந்த நிகழ்வை செய்யும் நிறுவன உறுப்பினர்களே செய்ய வேண்டிய சூழ்நிலை.இப்போ வழமைக்கு வந்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்காகத் தன்னும்... கனடாவுக்குப் போய், சாக வேணும் போலை கிடக்கு. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தணம் மிஞ்சினால் தடவடா பு......க்கில என்று கூறியது இவை போன்றவைக்குத்தானே ☹️

சாம்பலை ஆறு, ஏரிகளில் கரைத்துத் தண்டம் கட்டியவர்கள் பலர் என்று அறிந்திருக்கிறேன்.🤥

ஆனால் எல்லோரும் இப்படித்தான் என்று பொதுமைப்படுத்த முடியாது. அந்த அளவில் ஆறுதலடையலாம் 🙂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொழில் போட்டி... பலரையும், பலவகையில் சிந்திக்க வைக்கிறது.

கலியாண விடீயோக்களில், மாப்பிளை, பொம்பிளையை, சினிமா பாட்டுக்கு மரத்தை சுத்தி ஓட வைத்து படமெடுக்கினம் எல்லோ. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது இப்ப கிட்டடியில் நடந்திருக்கு ...மாஸ்க் போட்டு இருக்கினம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இதுக்காகத் தன்னும்... கனடாவுக்குப் போய், சாக வேணும் போலை கிடக்கு. :grin:

ஏன் இந்த விபரீத ஆசை சிறி ? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இது ஒன்று தான் இது வரை missing in Canada.

எனக்கு வாட்ஸ் அப்பிலை வந்தது. பழசோ புதிசோ தெரியாது.

 
 

எனது தூரத்து உறவினர்கள் கூட ஒருவரும் இந்தமாதிரி கோமாளிக்கூத்து ஆடக்கூடாது என்று நினைத்திருந்தேன். இரு வருடங்களுக்கு முன் ஒரு உறவினர் ஒருவரின் இறுதி ஊர்வலம் இப்படித்தான் கனடாவில் செய்தார்கள். இறந்த மனுசி மிகவும் சாதாரணமான ஒரு பெண். மகன் ஆடம்பரம் அதிகம். மருமகள் மாமி சண்டையால் முதியோர் இல்லத்தில் தான் 7 வருடம் இருந்து அதுவும் Alzheimer's வருத்ததுடன். அம்மா சாகவும் மகன் ஒரு ஆடம்பர செத்தவீடு வைத்து கொண்டாடினார். மருமகள் அழுத்தமாதிரி மகள்மார் அழவில்லை . 

சிலபேர் செய்யிற வேலைகளை பார்த்தால் ஓரில இந்த ஆசைகள் எண்ணங்கள் எல்லாவற்றையும் வைத்துக்கொண்டுதான் பேசாமல் இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கத்தோன்றும். பிரச்சனை கூடிய காலங்களிலேயே ஊருக்கோ போய் ஹெலிகொப்டரில்  ஏறி இறங்கி கொண்டாட்டங்கள் வைத்து ஊரில் உள்ளவர்களுக்கு புதினம் காட்டுவது என்று எத்தனை கோமாளித்தனம். எம் மக்களுக்கு இப்படி  ஒரு  கேவலமான ரசனையா என்று நினைத்து வெட்கப்பட வேண்டி இருக்குது. சில வீடியோக்களை பார்க்க நம்ப முடியாமல் இருக்கும். 30 ஆவது வருட கலியாண தினம் என்று 55 , 60 வயசு கணவனும் மனைவியும் துள்ளி ஆடி ஓடி பிடித்து விளையாடி ஒரு வீடியோ பார்த்தேன். என்னத்த சொல்லுறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nilmini said:

எனது தூரத்து உறவினர்கள் கூட ஒருவரும் இந்தமாதிரி கோமாளிக்கூத்து ஆடக்கூடாது என்று நினைத்திருந்தேன். இரு வருடங்களுக்கு முன் ஒரு உறவினர் ஒருவரின் இறுதி ஊர்வலம் இப்படித்தான் கனடாவில் செய்தார்கள். இறந்த மனுசி மிகவும் சாதாரணமான ஒரு பெண். மகன் ஆடம்பரம் அதிகம். மருமகள் மாமி சண்டையால் முதியோர் இல்லத்தில் தான் 7 வருடம் இருந்து அதுவும் Alzheimer's வருத்ததுடன். அம்மா சாகவும் மகன் ஒரு ஆடம்பர செத்தவீடு வைத்து கொண்டாடினார். மருமகள் அழுத்தமாதிரி மகள்மார் அழவில்லை . 

சிலபேர் செய்யிற வேலைகளை பார்த்தால் ஓரில இந்த ஆசைகள் எண்ணங்கள் எல்லாவற்றையும் வைத்துக்கொண்டுதான் பேசாமல் இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கத்தோன்றும். பிரச்சனை கூடிய காலங்களிலேயே ஊருக்கோ போய் ஹெலிகொப்டரில்  ஏறி இறங்கி கொண்டாட்டங்கள் வைத்து ஊரில் உள்ளவர்களுக்கு புதினம் காட்டுவது என்று எத்தனை கோமாளித்தனம். எம் மக்களுக்கு இப்படி  ஒரு  கேவலமான ரசனையா என்று நினைத்து வெட்கப்பட வேண்டி இருக்குது. சில வீடியோக்களை பார்க்க நம்ப முடியாமல் இருக்கும். 30 ஆவது வருட கலியாண தினம் என்று 55 , 60 வயசு கணவனும் மனைவியும் துள்ளி ஆடி ஓடி பிடித்து விளையாடி ஒரு வீடியோ பார்த்தேன். என்னத்த சொல்லுறது 

நில்மினி,  பிரான்சில் பல வருடங்களுக்கு முன்.... அறுபதாம் கலியாணத்துக்கு, அறுபது பவுணில் தாலிக்கொடி செய்து, கட்டினார் ஒருவர்.

மற்றொருவர் தனது பிள்ளையின் பிறந்த நாளுக்கு, கேக் வெட்ட... 22 காரட்டில் உள்ள தங்கக் கத்தியை பாவித்தார்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, தமிழ் சிறி said:

நில்மினி,  பிரான்சில் பல வருடங்களுக்கு முன்.... அறுபதாம் கலியாணத்துக்கு, அறுபது பவுணில் தாலிக்கொடி செய்து, கட்டினார் ஒருவர்.

மற்றொருவர் தனது பிள்ளையின் பிறந்த நாளுக்கு, கேக் வெட்ட... 22 காரட்டில் உள்ள தங்கக் கத்தியை பாவித்தார்.😁

ஆசைக்கோர் அளவில்லை  என்பது இதைத்தான். என்ன செய்வது இவற்றையெல்லாம் பார்த்தும் பார்க்காதது போல இருக்க வேண்டியிருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

எனது தூரத்து உறவினர்கள் கூட ஒருவரும் இந்தமாதிரி கோமாளிக்கூத்து ஆடக்கூடாது என்று நினைத்திருந்தேன். இரு வருடங்களுக்கு முன் ஒரு உறவினர் ஒருவரின் இறுதி ஊர்வலம் இப்படித்தான் கனடாவில் செய்தார்கள். இறந்த மனுசி மிகவும் சாதாரணமான ஒரு பெண். மகன் ஆடம்பரம் அதிகம். மருமகள் மாமி சண்டையால் முதியோர் இல்லத்தில் தான் 7 வருடம் இருந்து அதுவும் Alzheimer's வருத்ததுடன். அம்மா சாகவும் மகன் ஒரு ஆடம்பர செத்தவீடு வைத்து கொண்டாடினார். மருமகள் அழுத்தமாதிரி மகள்மார் அழவில்லை . 

சிலபேர் செய்யிற வேலைகளை பார்த்தால் ஓரில இந்த ஆசைகள் எண்ணங்கள் எல்லாவற்றையும் வைத்துக்கொண்டுதான் பேசாமல் இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கத்தோன்றும். பிரச்சனை கூடிய காலங்களிலேயே ஊருக்கோ போய் ஹெலிகொப்டரில்  ஏறி இறங்கி கொண்டாட்டங்கள் வைத்து ஊரில் உள்ளவர்களுக்கு புதினம் காட்டுவது என்று எத்தனை கோமாளித்தனம். எம் மக்களுக்கு இப்படி  ஒரு  கேவலமான ரசனையா என்று நினைத்து வெட்கப்பட வேண்டி இருக்குது. சில வீடியோக்களை பார்க்க நம்ப முடியாமல் இருக்கும். 30 ஆவது வருட கலியாண தினம் என்று 55 , 60 வயசு கணவனும் மனைவியும் துள்ளி ஆடி ஓடி பிடித்து விளையாடி ஒரு வீடியோ பார்த்தேன். என்னத்த சொல்லுறது 

அகதியாக வந்தோம் என்ற எந்த கூச்சமோ குற்ற உணர்வோ இல்லமால் 
இப்படி பார்க்கும்போது அப்படியே பாடையிலே சேர்த்து வைத்து எரிக்க வேண்டும் போல் இருக்கும்.

உறவினர்களுக்குள் இப்படி நடக்கும்போது 
வாய் சும்மா இருக்காது ..இதனால் தேவையில்லாத வாக்குவாதமாக 
மாறி வெறும் மன கசப்பு வருவதால் ... இப்போ நிறுத்தி விட்டேன் 
போனால் தானே வில்லங்கம் என்று போவதை குறைத்து விட்டென் 

இப்படியான கூத்துக்களை இங்கிருக்கும் மக்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள்?
இது எதோ கலாச்சாரம் என்று விட்டு ஒருவேளை போவார்கள் 
கெலி பிளேனில் ஏறி கும்மாளம் போட்டால் ...?
தேவையற்ற இன துவேஷங்களை இவர்கள்தான் தூண்டுகிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு பாடையை நாங்களே கட்டலாம். செலவு ஒரு ஐநூறு டொலருக்குள் மட்டுப்படுத்தி.

அடிக்கும் மேள, தாளங்கள் ஆட்களிடம் இரவல் வாங்கலாம் கடையிலும் இரவல் எடுக்கலாம். அவற்றை சொந்தக்காரர்கள், நண்பர்களே தட்டலாம்.

கனடா என்றால் அங்கு நடப்பவற்றை தூக்கிப்பிடித்து நையாண்டி செய்வது சிலருக்கு பொழுதுபோக்கு. அது அறியாமையாகவும் இருக்கலாம். எரிச்சல், பொறாமை, தாழ்வு மனப்பான்மையாகவும் இருக்கலாம்.

உலகத்தில் பெரிய லெவலில் மில்லியன்கள் டொலர் வீண் செலவுகளில் எவ்வளவோ கூத்துக்கள் நடக்கின்றன.

இங்கு சில பத்துப்பேர் பாடையில் ஒரு பிணத்தை கொண்டு செல்வது மகா தவறு போல் சித்தரிக்கப்படுகின்றது?

செத்தவீட்டை அமைதியான முறையில் செய்வதும் ஆரவாரமாக செய்வது அவரவர் தனிப்பட்ட தெரிவுகள்.

சட்டவிரோதமாக இங்கு ஏதும் நடைபெறவில்லையே?

இந்த வீடியோவில் புதினமாக ஒன்றும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

இப்படி ஒரு பாடையை நாங்களே கட்டலாம். செலவு ஒரு ஐநூறு டொலருக்குள் மட்டுப்படுத்தி.

அடிக்கும் மேள, தாளங்கள் ஆட்களிடம் இரவல் வாங்கலாம் கடையிலும் இரவல் எடுக்கலாம். அவற்றை சொந்தக்காரர்கள், நண்பர்களே தட்டலாம்.

கனடா என்றால் அங்கு நடப்பவற்றை தூக்கிப்பிடித்து நையாண்டி செய்வது சிலருக்கு பொழுதுபோக்கு. அது அறியாமையாகவும் இருக்கலாம். எரிச்சல், பொறாமை, தாழ்வு மனப்பான்மையாகவும் இருக்கலாம்.

உலகத்தில் பெரிய லெவலில் மில்லியன்கள் டொலர் வீண் செலவுகளில் எவ்வளவோ கூத்துக்கள் நடக்கின்றன.

இங்கு சில பத்துப்பேர் பாடையில் ஒரு பிணத்தை கொண்டு செல்வது மகா தவறு போல் சித்தரிக்கப்படுகின்றது?

செத்தவீட்டை அமைதியான முறையில் செய்வதும் ஆரவாரமாக செய்வது அவரவர் தனிப்பட்ட தெரிவுகள்.

சட்டவிரோதமாக இங்கு ஏதும் நடைபெறவில்லையே?

இந்த வீடியோவில் புதினமாக ஒன்றும் இல்லை.

காரணத்துக்காக செய்துவந்ததை 
ஒரு காரணமும் இன்றி செய்வதால்தான் 
ஒரு கலாச்சாரமே கேலி கூத்தாகி போகிறது.

அடிக்கடி இங்கு பலரும் திரிக்கும் கயிறு "எம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை" என்பது 
அவர்களை யார் முட்டால்கள் என்று சொல்கிறார்கள்? அவர்கள் தமக்கு இருந் அறிவுடன் 
இருந்த வசதிக்கு ஏற்ப சிலவற்றை செய்தார்கள் 
அதை ஒரு முன்னேறிய சமூகம் எந்த கேள்வியும் இன்றி செய்வதுதான் தவறானது.

பறை அடிப்பது என்பது ஒரு செய்தியை கூறுவதாகும் 
பறையில் பல வகை உண்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிகழ்வாக 
தமிழர்களுடன் சேர்ந்து பின்னி பிணைந்த ஒன்று 

இதை அதைப்பற்றியே தெரியாதவன் வீட்டு முன்னாள் நின்று நான் அடித்துக்கொண்டு இருந்தால் 
நான் அவனது சுதந்திரத்தில் தலை இட்டு கொண்டு இருக்கிறேன் என்பதுதான் பொருள். 

ஆட்டுக்குட்டி வெறும் $100 என்பதால் கோவிலில் கனடாவில் வைத்து வெட்டுவதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nilmini said:

30 ஆவது வருட கலியாண தினம் என்று 55 , 60 வயசு கணவனும் மனைவியும் துள்ளி ஆடி ஓடி பிடித்து விளையாடி ஒரு வீடியோ பார்த்தேன். என்னத்த சொல்லுறது 

தள்ளி. ஓடி, ஆடி விளையாடுவதற்கு, மனமும் உடல் கட்டுக் கோப்பும் வேண்டும். அவர்கள் அப்படியான உடல், மற்றும் மன நலத்தில் இருக்கிறார்கள். 

பப்ளிக் ஆக செய்வது தவிர்க்கப்பட்டு இருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் ஒருவகையில் தொழில் போட்டிதான்...இறுதி நிகழ்வு செய்கின்ற முகவர்கள்....அய்யர்மார் செய்கின்ற தில்லு  முல்லு....கொரனாகனடாவில் ஆரம்ப கட்டம்...இந்த இறுதிக்கிரியை முகவர்கள்   டடி.வியில் செய்த அட்டகாசம்..இது கனடாவில் சகஜம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kadancha said:

தள்ளி. ஓடி, ஆடி விளையாடுவதற்கு, மனமும் உடல் கட்டுக் கோப்பும் வேண்டும். அவர்கள் அப்படியான உடல், மற்றும் மன நலத்தில் இருக்கிறார்கள். 

பப்ளிக் ஆக செய்வது தவிர்க்கப்பட்டு இருக்கலாம். 

அதைத்தான் நானும் சொல்கிறேன் Kadancha. யார் என்ன செய்தாலும் எனக்கு என்ன கவலை? மற்ற கேலிக்குரிய பொதுகொண்டாட்டங்களில் எனது கருத்து  என்னவென்றால் இதுதான் எமது ஈழத்தமிழரின் கலாச்சாரம் என்று மற்றவர்கள் நினைப்பார்கள் என்று. எனது அனுபவத்தில் இலங்கை தமிழர் யாழ்பாணத்தமிழர் என்றால் சிங்களவரோ இந்திய மக்களோ ஒரு மரியாதை மதிப்பு வைத்திருக்கிறார்கள். இது அவர்கள் மூலமாக நான் கேள்விப்பட்டது.  அந்த கருது எதிர்பார்பு கலைந்து விடுமே அன்று ஒரு கவலைதான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

1) இப்படி ஒரு பாடையை நாங்களே கட்டலாம். செலவு ஒரு ஐநூறு டொலருக்குள் மட்டுப்படுத்தி.

2) அடிக்கும் மேள, தாளங்கள் ஆட்களிடம் இரவல் வாங்கலாம் கடையிலும் இரவல் எடுக்கலாம். அவற்றை சொந்தக்காரர்கள், நண்பர்களே தட்டலாம்.

3) கனடா என்றால் அங்கு நடப்பவற்றை தூக்கிப்பிடித்து நையாண்டி செய்வது சிலருக்கு பொழுதுபோக்கு. அது அறியாமையாகவும் இருக்கலாம். எரிச்சல், பொறாமை, தாழ்வு மனப்பான்மையாகவும் இருக்கலாம்.

உலகத்தில் பெரிய லெவலில் மில்லியன்கள் டொலர் வீண் செலவுகளில் எவ்வளவோ கூத்துக்கள் நடக்கின்றன.

4) இங்கு சில பத்துப்பேர் பாடையில் ஒரு பிணத்தை கொண்டு செல்வது மகா தவறு போல் சித்தரிக்கப்படுகின்றது?

5) செத்தவீட்டை அமைதியான முறையில் செய்வதும் ஆரவாரமாக செய்வது அவரவர் தனிப்பட்ட தெரிவுகள்.

சட்டவிரோதமாக இங்கு ஏதும் நடைபெறவில்லையே?

இந்த வீடியோவில் புதினமாக ஒன்றும் இல்லை.

1) இலங்கையில் ஏன் பாடையில்  கட்டுகிறார்கள். கனடாவில் பாடையில் கட்டி காவுவதற்கான தேவை என்ன இருக்கிறது ? ☹️ 

2) இதே நண்பர்களும் உறவினர்களும் ஊருக்குப் போன இடத்தி இப்படியொரு சம்பவம் இடம்பெற்றால் பறை அறிவிப்பார்களா ?  🤥

3) கனேடியத் தமிழர்கள் எண்ணிக்கையில் கூடுதலாக இருந்தும் அவர்களிடையே ஒற்றுமை இல்லை என்கின்ற கோபமாக இருக்கலாம். 😜

4) தவறு அல்ல, பாடையில் கொண்டுபோவதற்கான தேவை இருக்கிறதா என்பதுதான் கேள்வி. அதற்கான தேவை இல்லையென்றால் ஏன் அவ்வாறு செய்கின்றனர். ☹️

5) மூப்படைந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகளை ஆரவாரமாகச் செய்யும் வழக்கு என்பது எமது சமூகத்தில் இருக்கிறதா ? இல்லை என்றே நம்புகிறேன்.  🤥

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

உறவினர்களுக்குள் இப்படி நடக்கும்போது 
வாய் சும்மா இருக்காது ..இதனால் தேவையில்லாத வாக்குவாதமாக 
மாறி வெறும் மன கசப்பு வருவதால் ... இப்போ நிறுத்தி விட்டேன் 

உங்களை மாதிரி பிரச்சனை எனக்கும் இருக்கிறது வாய்க்கு பிளாஸ்ரர் ஒட்டி கொண்டிருக்க முயற்சிப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உங்களை மாதிரி பிரச்சனை எனக்கும் இருக்கிறது வாய்க்கு பிளாஸ்ரர் ஒட்டி கொண்டிருக்க முயற்சிப்பேன்.

சொன்னால் என்ன கிடைக்கும் என்று தெரிந்ததால் சொல்லவே இல்லை. தவிர்க்கக்கூடிய கொண்டாட்டங்களை தவிர்த்து கொள்வதுதான் எனக்கு ஒரே வழி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

தவிர்க்கக்கூடிய கொண்டாட்டங்களை தவிர்த்து கொள்வதுதான் எனக்கு ஒரே வழி 

👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


வயது போன காலத்தில் அந்த அப்பாவிகளை வைச்சுப் பார்க்க்க முடியாத பிள்ளைகள்.அவர்கள் இறந்ததும் எதற்காக சோ காட்ட முயற்சிக்கிறார்கள்...என்ன இப்படி இடம் கிடைக்கும் இடத்தில் எமது ஆதங்கத்தை கொட்டுறம்.அவ்வளவு தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
    • இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை – புனரமைப்பையும் ஆரம்பித்தனா் March 29, 2024     ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், அந்தத் தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சென்ற இராணுவத் தளபதி லெப். ஜெனரல் விக்கும் லியனகே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இதன் போது, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கும் சென்று அங்கு முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். இந்தத் தொழிற்சாலையை கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி முதல் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. கூழாமுறிப்பில் அமைந்துள்ள இந்த ஓட்டுத் தொழிற்சாலை உள்நாட்டு போர் காரணமாக கடந்த 1983ஆம் ஆண்டு முதல் செயலிழந்து காணப்பட்டது. எனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர் இந்தத் தொழிற்சாலையை மீண்டும் இயக்க மாறி மாறி வந்த அரசாங்கங்கள் உறுதியளித்தன. ஆனால், அவை எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையிலேயே, இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம் தொழிற்சாலையை இராணுவ சமூக சேவையின் கீழ் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்தே தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அந்தப் பகுதி மக்களின் நலனை மேம்படுத்தவும் இந்த தொழிற்சாலை புதுப்பிக்கப்படுகிறது” என்று இராணுவம் தெரிவித்துள்ளது.   https://www.ilakku.org/இராணுவத்தின்-நிர்வாகத்த/
    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.