Jump to content

கல்வான் மோதல் - இலங்கைக்கு ஆபத்தா?


Recommended Posts

-ஹரிகரன்

இந்திய - சீன எல்லையில் நிகழ்ந்திருக்கின்ற கைகலப்புச் சண்டைகள், இலங்கைக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும் ஒரு நிகழ்வு தான். இரண்டு நாடுகளுக்கும் இடையில் நெருக்கமான உறவுகளைப் பேண முனையும் இலங்கையைப் பொறுத்தவரை, இது சங்கடமான சூழலை தோற்றுவித்திருக்கிறது.

இந்திய  சீன நாடுகளுக்கிடையில், போர் வெடித்தால் அது இலங்கைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. முதலில் இந்திய- சீன எல்லையில். என்ன நடந்தது என்று பார்த்து விட்டு, அந்தச் சம்பவம் இலங்கையில் விளைவுகளை ஏற்படுத்துமா என்று பார்ப்பதே பொருத்தம்.

இந்திய  சீன எல்லையில், கிழக்கு லடாக் பிரதேசத்தில், உள்ளது கல்வான் பள்ளத்தாக்கு. இமயமலையில், கிட்டத்தட்ட 15 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது இந்தப் பகுதி. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள அக்ஷய் சின் பகுதியில் இருந்து இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள லடாக் நோக்கி ஓடுகிறது 80 கி.மீ நீளமுள்ள கல்வான் நதி. அதற்கு இரண்டு நாடுகளும் உரிமை கோருவதால் தான் பிரச்சினை.

"கல்வான் பள்ளத்தாக்கு எங்களுக்கு ...
கடந்த செவ்வாய்க்கிழமை கல்வான் பள்ளத்தாக்கில், நடந்த மோதல்களில், கேணல் சந்தோஷ் பாபு உள்ளிட்ட 20 இந்தியப் படையினர் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவித்திருக்கிறது.

அதுபோல, சீனாவின் தரப்பில் ஐந்து பேர் உயிரிழந்தனர் என்று, சீன அரசு ஊடகமான குளோபல் ரைம்ஸ் செய்தி வெளியிட்டது. ஆனால், சீனத் தரப்பில் 43 பேர் வரை கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.

45 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய- சீனப் படைகள் நடத்திய சண்டை ஒன்றில், ஏற்பட்ட முதலாவது உயிரிழப்பு இதுவாகும்.

அண்மைக்காலமாக இந்திய - சீனா எல்லையில் நிலவி வந்த முறுகல் நிலையின் உச்சமாகவே இந்த மோதல்கள் நிகழ்ந்திருக்கின்றன. இது துப்பாக்கிகளைக் கொண்டு நடந்த மோதல்கள் இல்லை என்பது தான் முக்கியமான விடயம்.

கல்வான் பள்ளத்தாக்கில், இரண்டு தரப்பு படைகளும் ஆயுதங்களை கொண்டு செல்வதற்கு தடை உள்ளது. ஆயுதங்கள் இன்றி சீன காவலரணுக்கு அருகே சென்ற இந்திய இராணுவத்தின் 16 ஆவது பிகார் ரெஜிமென்ட்டைச் சேர்ந்த படையினரே தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
கற்களாலும், முட்கம்பிகள், இரும்பு ஆணிகளால் சுற்றப்பட்ட கட்டைகளாலும் இந்தியப் படையினரைத் தாக்கியிருக்கின்றனர் சீனப் படையினர். இந்தியப் படையினரும் அதுபோலவே தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். கைகலப்பு சண்டையாகவே இது நடந்திருக்கிறது.

"ஆணியடிக்கப்பட்ட இரும்புக் ..."

இந்தச் சண்டையை இந்திய இராணுவத்தினர் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் சீனப் படையினரின் திட்டமிட்ட தாக்குதலில் இருந்து தப்பிக்க கல்வான் ஆற்றில் குதித்திருக்கின்றனர். அப்போது லடாக் பூச்சியத்தை விட குறைவான- உறைநிலை வெப்பத்தில் இருந்தது. இதனால் காயமடைந்த இந்தியப் படையினரை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்தியா தமது பக்க இழப்புக்களை ஒப்புக் கொண்டிருப்பினும், சண்டை பற்றிய முழு விபரங்களையும் இன்னமும் வெளியிடவில்லை. சீனா சண்டை பற்றிய முழு விபரங்களை மாத்திரமன்றி, அதில் ஏற்பட்ட இழப்புகளையும் கூட வெளிப்படுத்தவில்லை.

இது இரண்டு நாடுகளும் பல விடயங்களை மறைப்பதற்கு முனைகின்றன, என்பதை எடுத்துக் காட்டுகிறது. சில விடயங்கள் வெளியே வருவதை இரண்டு நாடுகளும் விரும்பவில்லை. அந்த விடயத்தில் இரண்டு நாடுகளும் ஒருமித்த கருத்தில் இருக்கின்றன.

பழங்காலப் போர்களில் வாள்கள், ஈட்டிகள், வில், அம்பு, கதாயுதம் போன்றவற்றைக் கொண்டு போரிடுகின்ற முறை இருந்தது. அத்துடன், மல்யுத்தம் செய்யும் வழக்கமும் இருந்தது. தற்கால போர்ப் பயிற்சிகளில் மல்யுத்தம், கராத்தே போன்ற தற்காப்பு கலைகளும் கூட, கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

ஆயுதங்கள் தீர்ந்து போனால், ஆயுதங்களில்லாமல் வேவு பார்க்கச் செல்வது போன்ற சந்தர்ப்பங்களில், எதிரிகளுடன் சண்டையிடுவதற்கு இத்தகைய தற்காப்பு கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட அவ்வாறான ஒரு சண்டையைத் தான் இந்திய- சீன நாடுகளின் இராணுவங்கள் நடத்தியிருக்கின்றன.

இந்த மோதல்களை அடுத்து, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில், விரிசல்கள் ஏற்படும் ஆபத்தும் தோன்றியிருக்கிறது.
இதுவே இரண்டு நாடுகளுக்கும் இடையிலான போராக வெடிக்கப் போகிறது என்ற அச்சமூட்டும் கருத்துக்களும் வந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவும் சீனாவும், மிகவும் சக்திவாய்ந்த போர்த்தளபாடங்களைக் கொண்டுள்ள நாடுகள்.

நவீன குறுந்தூர துப்பாக்கிகள் தொடக்கம், நெருந்தூர ஏவுகணைகள் வரை பயன்படுத்தி சண்டையிடக் கூடிய வல்லமை பெற்ற நாடுகளாக இருக்கின்றன. தேவைப்பட்டால் அணுவாயுதங்களைக் கூடப் பயன்படுத்தக் கூடிய நிலையில் தான், இந்த நாடுகள் இருக்கின்றன.

ஆனாலும், இரண்டு நாட்டுப் படைகளும் எந்த நவீன ஆயுதங்களையும் பயன்படுத்தாமல், சண்டையிட்டிருக்கின்றன. ஆதி மனிதன் போரிட்டதைப் போலத் தான், இரண்டு நாடுகளின் படைகளும் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன.

இரு தரப்புகளுக்கும் இடையில் பதற்ற நிலை மோசமாக இருந்தாலும், துப்பாக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறையை மீறவில்லை என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

திட்டமிட்ட தாக்குதலாகவே இது நடந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனால் தான், முள்ளுக்கம்பிகள் சுற்றப்பட்ட பொல்லுகளை சீனப் படையினர் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

திட்டமிட்ட ஒரு தாக்குதலில் கூட, துப்பாக்கிகளைப் பயன்படுத்த அவர்கள் எத்தனிக்கவில்லை. அதேவேளை இந்த மோசமான தாக்குதலுக்குப் பின்னர், இந்தியப் படைகளும் கூட, துப்பாக்கிகளால் சுட்டுக் கொள்ள முற்படவில்லை. இது தான், இங்கு முக்கியமான விடயம்.

இந்தியாவும், சீனாவும் அடிக்கடி முட்டிக் கொள்வது போல காட்டிக் கொண்டாலும், இரண்டு நாடுகளுமே ஒன்றுடன் ஒன்று போரிடத் தயாராக இல்லை.

"இந்தியா - சீனா - பலம் யாருக்கு? -
சீனாவுடன் போரிட்டால், இந்தியா கடுமையான பின்னடைவுகளைச் சந்திக்கும். ஏனென்றால் சீனாவிடம் உள்ள படை வலிமை அதிகம். சீனா அதி நவீன ஆயுத தளபாடங்களையும் அதிகளவில் கொண்டிருக்கிறது,

இதனால், சீனாவுடன் முழு அளவிலான போர் ஒன்றில் இறங்குவதை இந்தியா எப்போதும் விரும்புவதில்லை. 1962 போரில் கூட இந்தியா படுதோல்வியைத் தான் சந்தித்தது. மீண்டும் ஒரு தோல்வியை எதிர்கொள்ள இந்தியா எப்போதும் தயாராக இல்லை.

அதேவேளை, சீனாவுக்கும் அதே பிரச்சினை தான் இருக்கிறது. இந்தியாவுடன் போரில் இறங்கினால், சீனா தனது கனவுகள் பலவற்றைத் தொலைக்க வேண்டியிருக்கும். இப்போதைய நிலையில், உலகின் முதல் நிலை வல்லரசாக வேண்டும் என்பதே சீனாவின் எதிர்பார்ப்பு.

பொருளாதார ரீதியாகவும், படைபல ரீதியாகவும் அந்த நிலையை எட்ட வேண்டும் என்று விரும்புகிறது சீனா. உலகம் முழுவதையும் தனது ஆதிக்கத்துக்குள் கொண்டு வருவதற்காக, சீனா பல்வேறு உத்திகளைக் கொண்டு தயார்படுத்தல்களை முன்னெடுத்து வருகிறது.

இப்போது கொரோனா வைரசினால் பொருளாதார ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும் சீனா பெரும் பின்னடைவைச சந்தித்திருக்கிறது. இவ்வாறான நிலையில், இந்தியாவுடன் முழு அளவிலான போர் ஒன்றில் சீனா இறங்கினால் அது பெரும் அழிவுகளை ஏற்படுத்தும். இந்தியாவிடமும் நவீன ஆயுதங்கள், இருக்கின்றன. எனவே போர் என்பது மிக தீவிரமானதாகவே இருக்கும்.

இராணுவ ரீதியாக இந்தியா வெற்றி பெற முடியாது போனாலும், சீனாவின் பொருளாதார மற்றும் இராஜதந்திர பலத்தை இந்தியாவினால் சிதைக்க முடியும். இது உலக வல்லாதிக்க சக்தியாக மாறுகின்ற சீனாவின் கனவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

எனவே இந்திய சீன எல்லையில் வெடித்திருக்கின்ற சண்டைகளை பெரும் போராக மாறும் என்று யாரும் கருதிக் கொள்ளக் கூடாது. அவ்வாறான ஒரு போர் வெடித்தால் கூட அது நீண்ட நாட்களுக்குத் தொடராது,

இவ்வாறான ஒரு களச் சூழலில், இந்தியாவுடனும், சீனாவுடனும் நெருங்கிய உறவை பேண முனையும் இலங்கைக்கு இந்த மோதல்கள் சோதனையாகவே இருக்கும்.

ஏனென்றால், எந்தப் பக்கமும் நியாயம் கூற முடியாது. யாருக்காகவும் வாய் திறக்கவும் முடியாது. அவ்வாறு திறந்தால் மறுதரப்பின் உதவிகள் ஒத்துழைப்புகளை இழக்க நேரிடும். எனவே இலங்கை இப்போதைய நிலையில் யாருக்காகவும் பரிந்து பேசாமல் இருக்கவே முனையும்.
அதேவேளை, இரண்டு நாடுகளும் மோதிக் கொள்ளும் என்றும், அது இலங்கைத் தீவையும் பிளவுபடுத்தும் என்றும் பகல் கனவு காண்பவர்களும் இருக்கிறார்கள்.

இப்போதைய நிலையில், இந்தியாவோ சீனாவோ ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ள தயாரில்லை. அந்த நிலை நீடிக்கும் வரை, இவ்வாறான ஒரு நிலை இலங்கைக்கு ஏற்படாது.

ஆனால், பொருளாதார வாய்ப்புகளை இழக்கும் நிலை ஏற்படுவது, இலங்கைக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும்.

https://www.virakesari.lk/article/84341

Link to comment
Share on other sites

10 minutes ago, ampanai said:

அதேவேளை, இரண்டு நாடுகளும் மோதிக் கொள்ளும் என்றும், அது இலங்கைத் தீவையும் பிளவுபடுத்தும் என்றும் பகல் கனவு காண்பவர்களும் இருக்கிறார்கள்.

ஐயா கலாம் அவர்கள் கனவு காண் என்றார், இங்கே இது அறிவியல் சம்பந்தம் இல்லாதது என்றாலும், இந்த கனவை காணும் மக்களில் நானும் ஒருவன். 

பல பலம் கொண்ட  நாடுகள் கூட சிதறுண்டன, உதாரணம் சோவியத்யூனியன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.