Jump to content

அஞ்சலி: பொறியியலாளர் சேந்தனின் சமூக அர்ப்பணிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொறியியலாளர் சேந்தனின் சமூக அர்ப்பணிப்பு

on June 21, 2020

spacer.png

 

 

திரு. வீரகத்தி சேந்தன் ஒரு பொறியியலாளர் மற்றும் முற்போக்கு புத்திஜீவி, அவர் தனது 71வது வயதில், ஜூன் 12, 2020இல் இயற்கையெய்தியமை தமிழ் சமூகத்திற்கு ஒரு பெரும் இழப்பு. அவர் தனக்கென புகழ் தேடாது எளிமையாக வாழ்க்கையை முன்கொண்டு போனதுடன் தன் அறிவையும் திறன்களையும் ஆழமாக வளர்த்து அவற்றை மக்களுக்காகப் பயன்படுத்திய ஒருவர். இவருடைய அர்ப்பணிப்பு தமிழ் சமூகத்தின் எதிர்காலத்திற்கு நம்பிக்கையூட்டுவதாயும், இளம் தலமுறையினருக்கு ஒரு முன்னுதாரணமாகவும் அமையும்.

பண்டிதர் வீரகத்தியின் மகனான சேந்தனுடைய உரையாடல்கள் ஒரு கவிஞனுடைய ஆழமான இலக்கிய அறிவையும் மொழித்திறனையும் தன்னகத்தே கொண்டிருக்கும். சேந்தன் ஹாட்லிக் கல்லூரியில் தனது பாடசாலை கல்வியை முடித்த பின் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பையும் நிறைவு செய்தார். அதன்பின் வெளிநாடுகளுக்கு சென்றிருந்த போதும் இளம் வயதிலேயே தன்நாட்டில் வேலை செய்யவேண்டுமென்ற உறுதியுடன் இலங்கை திரும்பினார்.

ஒரு இளம் பொறியியலாளராக இருந்த காலத்திலேயே அந்த பெரும் திக்கம் வடிசாலையை வடிவமைக்கும் பொறுப்பையேற்று கடினமாக உழைத்து வெற்றிகரமான தொழிற்சாலையாக அதை உருவாக்கினார். திக்கம் வடிசாலைக்கு அப்பால் வட மாகாணத்தில் இருக்கும் ஒவ்வொரு பனை தென்னை கூட்டுறவு சங்கங்களுடனும் நன்றாக பழகி அங்கு கள்ளை போத்தலில் அடைப்பதிலிருந்து பனங்கட்டி உற்பத்தி போன்ற பலவிதமான உற்பத்தித் திட்டங்களை தனது பொறியியல் அறிவுடன் உருவாக்கினார். பனைவளம் என்பது வட மாகாணத்தின் மிக முக்கியமான வளம் என்பதை விளங்கி அந்த வளத்தை அபிவிருத்தி செய்ததில் அவருக்கு ஒரு தனியிடம் இருக்கிறது.

இங்கு பனைவளத்தை மட்டுமல்லாமல் வடக்கினுடைய வளங்கள் மற்றும் சமூக கட்டமைப்பை விளங்கி அதற்கு ஏற்றமாதிரியான தொழில்நுட்ப மாற்றங்கள்தான் வேண்டும் என செயற்பட்டார். அதாவது, வெறுமனே நவீனமயமாக்கலை பின்பற்றாது எங்களுடைய புவியியல், சமூக, பொருளாதார கட்டமைப்பிற்கு பொருத்தமான திட்டங்களையும் மாற்றங்களையுமே தேட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

இலங்கையின் சூழலைப் பற்றி சிந்தித்து பல தடவை அவர் இவ்வாறு கூறுவார்: “மேற்கு நாடுகளை போலல்ல, எமது நாட்டில் தாராளமான இயற்கை வளங்களும், குறைந்த வசதிகளுடனேயே தன்நிறைவுடனும் மனநிறைவுடனும் வாழக்கூடிய காலநிலையும் இருக்குது. ஆனால், ஏன் இவ்வளவு வறுமையும், சாதி, வர்க்க மற்றும் இன முரண்பாடுகளும் இருக்க வேண்டும்?” இவர் வெறுமனே கேள்விகளை கேட்பது மட்டுமல்லாது அதற்கான தீர்வுகள் பற்றியும் ஆழமாக யோசிப்பவர். எங்களுடைய சூழலைப் பாதுகாக்க வேண்டும் மற்றும் எவ்வாறு எங்களுக்கு பொருத்தமான வாழ்வாதார வளர்ச்சியை உருவாக்கலாம் என்பதை பற்றியெல்லாம் சிந்திப்பவர்.

காந்தியுடைய சிந்தனைகளில் இருந்து மாக்சிச தத்துவத்தை படிப்பதற்கு அப்பால் அவ்வாறான கருத்துக்களுடன் தனது வாழ்க்கையையும் மாற்றியமைக்க முயன்றார். பூலோக அரசியல் பொருளாதாரத்தில் இருந்து சர்வதேச இலக்கிய விமர்சனங்கள் மற்றும் விஞ்ஞான மாற்றங்கள் போன்ற விடயங்களில் அவருக்கு ஒரு தேடல் இருந்தது, நண்பர்களுடனான கலந்துரையாடல்களில் கூட இவ்வாறான விடயங்களையே விவாதித்தார்.

இவ்வாறான அவருடைய பார்வை என்னுடைய எழுத்துக்களிலும் ஆய்வுகளிலும் பாரிய தாக்கத்தைச் செலுத்தியது. உதாரணமாக யுத்தகாலத்தில் அவரைச் சந்தித்த பொழுது நாள்கூலியில் தங்கியிருக்கும் மக்கள்தான் போராலும் பெரும் பாதிப்பிற்கு உட்படுகிறார்கள் என்றும் அவர்களுக்கான ஒரு தீர்வுதான் சமாதானத்தையும் உறுதிப்படுத்தும் என்றும் விவாதித்தார். மேலும் யுத்தம் முடிந்தவுடன் வடக்கை தெற்குடன் புகையிரதமூடாக இணைப்பது வடக்கின் மேம்பாட்டிற்கும் இராணுவ மயமாக்கத்தைக் குறைப்பதற்கும் உதவும் என்பது போன்ற தந்திரோபாயத்தை முன்வைத்தார். அதற்கப்பால் பனை வளம் மற்றும் அதுசார்ந்த தொழில்களை ஆராய வேண்டிய முக்கியத்துவத்தை எடுத்து விளக்கினார். இவைபோன்ற அவருடைய ஆழமான கருத்துக்களும், காலத்திற்கு காலம் வரும் முக்கியமான கேள்விகள் தொடர்பான அவருடனான எனது விவாதங்களும் என்னை வளர்த்தது.

சேந்தன் எந்தக்கட்சி சார்பாகவும் இருக்காத பட்சத்தில் தமிழ் மக்களிற்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வு தேவை என்றும் இலங்கையிலிருக்கும் அனைத்து மக்களினது உரிமைகள் மற்றும் சுயமதிப்புகள் பற்றி அக்கறைகாட்டினார். ஒரு உறுதியான ஐனநாயகவாதி என்பதன் அடிப்படையில் மாற்றுக்கருத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

அதன் அடிப்படையில்தான் 1990ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் புலிகளினுடைய வன்முறைக்கும் உட்படுத்தப்பட்டார். குறிப்பாக மாற்றுக்கருத்து செயற்பாட்டாளர்களாக இருந்த சில பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு எதிராக புலிகள் நடவடிக்கை எடுத்தபோது அவர்களைப் பாதுகாக்க  முயன்றார். அதன் விளைவாகத்தான் புலிகளால் சிறையில் அடைக்கப்பட்டு பெருந்துயரத்திற்கு ஆளானார். சிறையிலிருந்து வெளியில் வந்த பின்பும் தொடர்ச்சியாக புலிகளுடைய புலனாய்விற்கு உட்படுத்தப்பட்ட பொழுதும் படிப்படியாக தன்னுடைய குடும்பத்தினுடைய வளர்ச்சியிலும், பொறியியல் வேலைகளிலும் தொடர்ந்தார்.

இவ்வாறான துயரம் மிக்க வாழ்க்கையின் மத்தியில் யுத்த காலத்திலும் யுத்தத்தின் பின்பும் தன் சேவைகளை முன்கொண்டு போன சேந்தன், வேலைகளில் இலாபத்தையோ வருமானத்தையோ கருத்திற் கொள்ளாமல் எவ்வாறு எமது சமூகத்தை கட்டியெழுப்பலாம் என்பதில் தான் கவனம் செலுத்தினார். இவ்வாறான ஒருவரின் வாழ்க்கையை நினைவுகூரும் அதேநேரம், இவர்போல் மௌனமாக மக்கள் சார்ந்த சேவை செய்த பலரது அர்ப்பணிப்புக்கள்தான் தமிழ் சமூகத்தின் விமோட்சனத்திற்கும் வழிவகுக்கும். இவருடைய வாழ்க்கை, செயற்பாடு மற்றும் சிந்தனைகள் இளம் தலைமுறைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும்.

கலாநிதி அகிலன் கதிர்காமர்

சிரேஷ்ட விரிவுரையாளர்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்
 

https://maatram.org/?p=8576

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.