Jump to content

அப்பா ( குட்டிக் கதை )


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

  அப்பா    தின குட்டிக் கதை 

 

  முன்னைய காலங்களில் சில கிராமதுக்கு கிராமம்   வழக்கங்கள் நடை முறைகள் வேறுபட்டிருக்கும். இருக்கும்  இப்படியான ஒரு கிராமத்தில் குடும்பத்திலுள்ள ஆண்  பிள்ளைகள்  பதினாறு வயதை அடைந்ததும்  ஒரு இரவு காட்டில்  தங்க  வேண்டும்.  அங்கு பல வகை கொடிய மிருகங்கள் இருக்கும் .  அவர்களது பதினைந்தாவது வயதில்  வில் பயிற்சி ஈட்டி எறிதல் விலங்குகளை தாக்கி தப்பித்தல்   முதலிய தற்காப்பு கலைகள் யாவும் சொல்லி கொடுக்கப்படும் . இப்படியாக ஒரு குடியானவன்  மகனுக்கு பதினாறாவது  பிறந்த நாள்  வந்தது மறு  நாள் அவன் காட்டுக்கு செல்ல வேண்டும். முதல் நாள் குடியானவன்  சகல புத்திமதி கள் யுக்திகளை   மீண்டும் மீண்டும் ஞாபக படுத்தினான் 

 

 மறு  நாள் மாலையானதும் தந்தை காட்டுக்குள் அழைத்து  சென்றார் .  மகன் கண் கலங்கிய வாறே  தந்தையுடன் சென்றான்.  அங்கே ஒரு நிழல் மரத்தின் கீழே  இருக்க விட்டு தந்தை வீட்டுக்கு செல்வதாக கூறி வந்து விட் டார்.  மாலை இரவா னது. வா னத்தில் நட்ஷத்திரங்கள் மின்ன தொடங்கி விட்ட்ன எங்கும் ஒரே இருட்டு . மகனோ  தூக்கமின்றி  விழித்துக் கொண்டிருந்தான் பயத்தாலும் தனிமையாலும் ..நேரம் ஓடிக் கொண்டு இருந்தது 

.ஒரு வாறு பொழுது புலரத்தொடங்கிவிட்ட்து 

 

...தூரத்தே ஒரு வேடன்  வில்லும்  அம்புக ளும் கொண்டு வருவதைக் கண்டான். இவனுக்கு பயமாக இருந்தது ...அந்த உருவம் கிட் வந்த போ து அது ..அப்பாவின்  நடை போன்று இருந்தது. மிக அண்மித்தும் அது அப்பாவே தான் வேடன் வேஷத்தில் வந்திருந்தார் ..இவன் காட்டித் தழுவி  அழுதான். 

 " நன்றாக தூங்கினாயா என்று கேடடார் . இல்லையப்பா எப்படி தூங்க முடியும் ? என்றான் . மகனே நான் இரவு முழுதும் தூங்காமல் சற்று தூர உள்ள மரத்தைக் காட்டி "அங்கு தான் நான் உனக்கு காவல் இருந்தேன். " என்கிறார். இதை  நேற்றைக்கே சொல்லியிருக்கலாமே நான் நன்றாக தூங்கி இருப்பேனே என்றான் மகன். 

 

 எல்லா அப்பாக்களும் இப்படித்தான் . குழந்தைகளை நெஞ்சிலே சுமப்பார் .   கவனிக்காமல் இருப்பது போலெ தெரியும் ஆனால் அத்தனையும்  கூர்ந்தது கவனித்து கொண்டே இருப்பார். அப்பாவுக்கு ஈடு இணை யாருமே இல்லை 

 

முன்பு   நாம்  சைக்கிள் பழக  ஆசைப்படும் போ து ...அப்பா பின்னால் பிடித்துக்கொண்டு இருப்பா ர் ..அப்பா பிடிக்கிறார் என்ற துணிவில் தைரியத்தில் நாம் ஓட  முயற்சிப்போம்.  ஓடிக் கொண்டு இருக்கும் போ து இடை இடையே வி ட்டு விட்டு பிடிப்பார் .  நாமாகவே ஓடடுவோம். 

 

"நான் ஓடுவேனா ? அப்பா என்றால்  இது வரை நான் பிடிக்காமல் நீ தானே தனியாக ஓட டினாய் என்பார். அப்போது நமக்கு தைரியம் வந்து விடும்.  இன்னும் துணிவாக  சற்று  வேகமாக ஓட டிட  தைரியம் வரும் .    அப்பாக்கள் என்றும் நிழல் போல எம்மோடு தான்  இருப்பா ர்கள்.                     

 

 அப்பாக்கள் என்றும் அப்பாக்கள் தான்.

 

  •  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாக்கள் என்றும் அப்பாக்கள்தான் அதை பிள்ளைகளிடம் இருட்டடிப்புச்  செய்வது அம்மாக்கள்தான். பகிர்வுக்கு நன்றி சகோதரி.......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, suvy said:

அப்பாக்கள் என்றும் அப்பாக்கள்தான் அதை பிள்ளைகளிடம் இருட்டடிப்புச்  செய்வது அம்மாக்கள்தான். பகிர்வுக்கு நன்றி சகோதரி.......!   😁

😂👌

நன்றி அக்கா பகிர்வுக்கு, அப்பா 👍👍👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🚴🏻‍♂️ நல்ல ஒரு கதை, நிலாமதி அக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்க்கனவே வாசித்திருந்தாலும் காலத்திற்கு ஏற்ற பதிவு.நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய காலத்திற்கேப்பக்  கதை

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் குட்டிக்கதை.

பொறுப்புள்ள அப்பாக்கள் தமது பிள்ளைகள் தங்களைப் விட உயரே போகவேண்டும் என்று தயார்படுத்தலில் ஈடுபடுவதில்தானே முழுநேரமும் செலவழிப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஒரு நண்பன் , காவலன்,  சகோதரன் எனப் பல உணர்வுகளும் அப்பாக்களினுள் இருக்கும்
 பதிவிற்கு நன்றி அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கதை இணைப்புக்கு நன்றி நிலாமதி.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 21/6/2020 at 14:55, நிலாமதி said:

எல்லா அப்பாக்களும் இப்படித்தான் . குழந்தைகளை நெஞ்சிலே சுமப்பார் .   கவனிக்காமல் இருப்பது போலெ தெரியும் ஆனால் அத்தனையும்  கூர்ந்தது கவனித்து கொண்டே இருப்பார். அப்பாவுக்கு ஈடு இணை யாருமே இல்லை 

கதை நல்லாய் இருக்குது. யதார்த்தத்தில் எல்லா அப்பாக்களும் இப்பிடி இல்லை! பெரும்பாலான அப்பாக்கள் இப்பிடித்தான். "ஒருபானை சோத்துக்கு ஒரு சோறு" என்பதுபோல உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.