Jump to content

தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்கும் சுமணரட்ன தேரர்! ஞானசாரரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்கும் சுமணரட்ன தேரர்! ஞானசாரரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு

Report us Gokulan 4 hours ago

வடக்கு, கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு சொத்துகள் இல்லை, காணிகள் இல்லை என ஞானசாரதேரர் தெரிவித்த கருத்தை நான் தேரர் என்ற வகையில் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கின்றேன், அத்துடன் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்கின்றேன் என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஞானசாரதேரர் தெரிவித்த கருத்து தொடர்பாக தமிழ் பெற்றோர்களும் பிள்ளைகளும் வேதனையடைந்துள்ளனர். எனவே நான் தேரர் என்ற முறையில் மன்னிப்பு கேட்கின்றேன் . அதேவேளை ஞானசாரதேரர் மற்றும் சில தேரர்கள் சில சந்தர்ப்பங்களில் சில விடயங்களை வெளிப்படுத்தும் போது எங்கள் நாட்டில் வாழுகின்ற மக்களை கருத்தில் கொண்டு கருத்து தெரிவிப்பதில் குறைபாடுகள் காணப்படுகின்றன.

தமிழர்கள் அவர்களது பிரதேசங்களில் தங்களது அடையாளங்களை பாதுகாத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இம் மக்களுக்கு இவ்வாறான கதையைக் கேட்கும்போது தங்களது சந்ததியினரின் எதிர்காலம் என்ன நடக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டதுடன் மீண்டும் மதவாத, இனவாத, வைராக்கியம் குரோதங்கள் ஏற்பட வழிவகுக்கும்.

நான் தேர்தலில் முன்னிற்பது இனவாத, மதவாதத்தை கிளர்ச்சியடையச் செய்வதற்கல்ல இந்த அப்பாவி மக்களை நிர்க்கதியாக்கும் எண்ணம் எனக்கில்லை. மக்களின் எதிர்கால சுபீட்சத்துக்கு என்ன செய்ய முடியும். இந்த நாட்டில் தயாரிக்கப்படும் கொள்கையின் அடிப்படையில் அந்த வேலைத்திட்டங்களுக்கு உதவிவழங்கி அடிமட்டத்திலிருந்து அவர்களுக்கு தேவையானவற்றை வழங்குவதே இன்று அரசியலில் தேவையாகவுள்ளது.

தர்மத்தை எடுத்துக் கூறும் தேரர் என்ற வகையில் இம் மக்கள் மீண்டும் மீண்டும் இன்னல்களுக்கு முகம் கொடுக்காத வகையில் சில பொறுப்புக்களை கையில் எடுக்க வேண்டியுள்ளது. அவர்கள் தங்களது பிரதேசங்களில் தங்களுக்கான வேலைகளை உரிய முறையில் செய்து கொண்டு வாழ்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் தேவை ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் எப்போதும் யுத்தம் செய்து கொண்டிருக்க முடியாது. ஒவ்வொருவரும் சிங்களம் தமிழ் என பிழைகளைக் கூறிக்கொண்டிருக்க முடியாது. தேர்தல் என்ற வகையில் எனக்கு 50 வீத மட்டக்களப்பு மாவட்ட மக்கள் உதவிகளை வழங்குகின்றதுடன் என்னை நாடாளுமன்றம் அனுப்பும் வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக நாடாளுமன்றம் சென்று நாட்டின் ஆட்சியாளரிடம் உண்மைவிடயங்களை கூறி இந்த மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திகளை இன, மத ஒற்றுமையை ஏற்படுத்தவேண்டும் அப்போது தான் என் கண்கள் மூடும்போது நிம்மதியாக மூடிக்கொள்ள முடியும்.

தேர்தலில் நிற்கும் ஏனைய வேட்பாளரிடம் கேட்பது என்னவென்றால் ஒவ்வொருவரைப் பற்றி அசிங்கப்படுத்த வேண்டாம். நாங்கள் மற்றவர்களை அசிங்கப்படுத்தும் போது நம்மை அசிங்கப்படுத்த அதிகமிருக்கின்றது எனவே இன்று யோசித்து மக்களுக்காக பாடுபடுங்கள்.

புதிய அரசியல் யாப்பை 30 வருடமாக தலையில் வைத்துக் கொண்டிருந்து சரியான முறையில் தீர்வை எட்டமுடியாமால் போயிற்று. தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது ஈழம் என்ற தனிநாடல்ல என்பதை நான் நன்கு அறிவேன். அம்மக்கள் அனைத்து அடிப்படை உரிமைகளையும் பெற்றுக் கொள்வதற்கு இரண்டு கைகளையும் உயர்த்தி வாக்களியுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilwin.com/community/01/249221?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஞானசார றேரர் ; 

நான் பிள்ளையைக் கிள்ளுறன்,

சுமணரட்ண தேரர்;

நான்   தொட்டிலை ஆட்டுறன். 

😏

Link to comment
Share on other sites

2 hours ago, பெருமாள் said:

வடக்கு, கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு சொத்துகள் இல்லை, காணிகள் இல்லை என ஞானசாரதேரர் தெரிவித்த கருத்தை நான் தேரர் என்ற வகையில் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கின்றேன், அத்துடன் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்கின்றேன் என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரர் தெரிவித்துள்ளார்.

தூசணப்பிக்கு என்ற பட்டப்பெயரால் பெருமைகொண்டவர்தான இந்த மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரர் என கேள்விப்பட்டுள்ளேன். இவர் என்ன தூசணத்தால் தனது எதிர்ப்பை வெளியிட்டிருப்பார்....?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ கடவுளே...

எங்கண்ட தூசண பிக்கர், தேர்தலில் நிக்கிறார்.

வாக்குகளுக்காக.... விடுறார்... டிமிக்கா... 😎

3 hours ago, பெருமாள் said:

 

நான் தேர்தலில் முன்னிற்பது இனவாத, மதவாதத்தை கிளர்ச்சியடையச் செய்வதற்கல்ல இந்த அப்பாவி மக்களை நிர்க்கதியாக்கும் எண்ணம் எனக்கில்லை. மக்களின் எதிர்கால சுபீட்சத்துக்கு என்ன செய்ய முடியும். 

தர்மத்தை  தூசணத்தை எடுத்துக் கூறும் தேரர் என்ற வகையில் இம் மக்கள் மீண்டும் மீண்டும் இன்னல்களுக்கு முகம் கொடுக்காத வகையில் சில பொறுப்புக்களை கையில் எடுக்க வேண்டியுள்ளது. அவர்கள் தங்களது பிரதேசங்களில் தங்களுக்கான வேலைகளை உரிய முறையில் செய்து கொண்டு வாழ்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் தேவை ஏற்பட்டுள்ளது.

இந்த பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக நாடாளுமன்றம் சென்று நாட்டின் ஆட்சியாளரிடம் உண்மைவிடயங்களை கூறி இந்த மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திகளை இன, மத ஒற்றுமையை ஏற்படுத்தவேண்டும் அப்போது தான் என் கண்கள் மூடும்போது நிம்மதியாக மூடிக்கொள்ள முடியும்.

 

https://www.tamilwin.com/community/01/249221?ref=home-imp-parsely

 

Link to comment
Share on other sites

6 hours ago, பெருமாள் said:

தேர்தல் என்ற வகையில் எனக்கு 50 வீத மட்டக்களப்பு மாவட்ட மக்கள் உதவிகளை வழங்குகின்றதுடன் என்னை நாடாளுமன்றம் அனுப்பும் வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

வரும் தேர்தலில் சிங்கள-பௌத்த காடைத்தனத்தின் பின்னால் மட்டக்களப்பில் எத்தனை பேர் உள்ளனர் என்பது தெரியவரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

இந்த பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக நாடாளுமன்றம் சென்று நாட்டின் ஆட்சியாளரிடம் உண்மைவிடயங்களை கூறி இந்த மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திகளை இன, மத ஒற்றுமையை ஏற்படுத்தவேண்டும் அப்போது தான் என் கண்கள் மூடும்போது நிம்மதியாக மூடிக்கொள்ள முடியும்.

 இதற்கு நீங்கள் பாராளுமன்றம் போய்த்தான் செய்யவேண்டும் என்கிற கட்டாயம் ஒன்றுமில்லை. நல்ல பிக்குவாக இன, மத பேதம் இல்லாமல் வாழ்ந்தாலே நீங்கள் கூறும் எல்லாம் ஏற்படும். 

பவுத்த துறவிகள் அரசியலில் ஈடுபட முடியாது என்று ஏதோ சொன்னார்கள். இவர்களோ தேர்தல் களை கட்டி உளறுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரண்ட் பில் கட்டவில்லை என்று, இணைப்பினை துண்டிக்க வந்த மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு கொடுத்த, சாத்து, அர்ச்சனையில் மட்டக்கிளப்பு பகுதியில் இப்போது மின் இணைப்பு துண்டிக்கும் வேலைக்கே யாருமே போவதில்லை. 🤪

பள்ளி, கோவில் எல்லாம் தொடுறதில்லை. பங்க்சலையில வெட்ட வந்திடியளோ... தொட்டு பாருங்கடா பாப்பம்... தெரியும் எண்ட வேலை...😜

அப்போதைய மின்துறை அமைச்சர் பவித்திராவுக்கும், அப்போதைய ஜனாதிபதிக்கும், பிக்கர் கொடுத்த தூசண அர்ச்சனையால், அவர் அன்று முதல், எம்மால் அன்புடன், 'தூசண பிக்கர்' என்று அழைக்கப்படுகின்றார்.

(ஒரு மேடையில் அம்மணி கொடுத்த லுக், அப்பவே... மகிந்தர் மனிசியை சும்மா, கோபத்தில், அலறவைத்தது.)

Champika and Pavithra at Dispute on Power Hike | Lanka on Globe

 

இவர் MP ஆக தேர்தெடுக்கப்பட்டால், பாராளுமன்றம் அலறும். மகிந்தர்.... காதை பொத்திக் கொண்டு ஓட்டம் பிடிப்பார் என்பதால் தூசண பிக்கருக்கே உங்கள் பொன்னான வாக்களிப்பீர். 

ஹெல்மெட் இல்லாமல் போனால்... தவறு தானே.

என்ன கோதாரியை போதிக்கிறாய்... நீயே ஒழுங்காக சட்டத்தினை மதிக்காமல்?

நியாயமான கேள்விக்கு பதில் சொல்ல முடியாவிடடால், சும்மா... எங்கண்ட தூசண பிக்கர், இனவாதி என்று சொல்வதில் அர்த்தமில்லை. :grin: 

போலீசு... இங்க... இவர் ஹெல்மெட் இல்லாமல் போறார்... ஏன் ஆளை பிடிக்காமல் இருக்கிறீர்கள்? சாதாரண மக்கள் என்றால் அமத்திப் பிடிப்பியலோ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Nathamuni said:

அப்போதைய மின்துறை அமைச்சர் பவித்திராவுக்கும், அப்போதைய ஜனாதிபதிக்கும், பிக்கர் கொடுத்த தூசண அர்ச்சனையால், அவர் அன்று முதல், எம்மால் அன்புடன், 'தூசண பிக்கர்' என்று அழைக்கப்படுகின்றார்.

(ஒரு மேடையில் அம்மணி கொடுத்த லுக், அப்பவே... மகிந்தர் மனிசியை சும்மா, கோபத்தில், அலறவைத்தது.)

Champika and Pavithra at Dispute on Power Hike | Lanka on Globe

 

இவர் MP ஆக தேர்தெடுக்கப்பட்டால், பாராளுமன்றம் அலறும். மகிந்தர்.... காதை பொத்திக் கொண்டு ஓட்டம் பிடிப்பார் என்பதால் தூசண பிக்கருக்கே உங்கள் பொன்னான வாக்களிப்பீர். 

பவித்திரா... மகிந்தரை பார்க்கிற 😍பார்வை.... 
சிலுக்கு சிமிதா... பார்க்கிற மாதிரியே இருக்கு.  🤩

வருகின்ற தேர்தலில்...  தூசண பிக்கருக்கே எனது வாக்கு.
அவரின் 🗣குரல்... மீண்டும் கேட்கத் தோன்றும், இனிமையான 🎼  மியூசிக் குரல். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

பவித்திரா... மகிந்தரை பார்க்கிற 😍பார்வை.... 
சிலுக்கு சிமிதா... பார்க்கிற மாதிரியே இருக்கு.  🤩

வருகின்ற தேர்தலில்...  தூசண பிக்கருக்கே எனது வாக்கு.
அவரின் 🗣குரல்... மீண்டும் கேட்கத் தோன்றும், இனிமையான 🎼  மியூசிக் குரல். 😁

Cxz.jpg

எனக்கு பார்வையிலே ஒரு காந்தம் தெரியுது தோழர்..👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.