Jump to content

கூட்டமைப்பு பலமிழக்க ஜனநாயக போராளிகள் இடமளிக்க மாட்டார்கள் – நகுலேஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு பலமிழக்க ஜனநாயக போராளிகள் இடமளிக்க மாட்டார்கள் – நகுலேஸ்

104861015_195546518423020_4065054085639943586_n-960x638.jpg?189db0&189db0

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலமிழக்கச் செய்வதற்குப் போராளிகளாகிய நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு எப்போதும் இருப்போம். உரிமைக்காகவும், தேசியத்திற்காகவும் குரல் கொடுப்போம் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான ஆதரவு தொடர்பிலான ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும்,

‘தேசியத்திற்காகப் போராடிய நாங்கள் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இதற்குக் காரணம் 2001 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைத் தலைவர் உருவாக்கினார். இதனை தற்போது ஒரு சிலர் மறுதலித்துப் பேசலாம். ஆனால் தலைவரின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைத் தான் தேசியத்திற்காகக் கதைக்கும் ஒரு கட்சியாக தலைவர் நியமித்தார். யுத்தம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசியல் நீரோட்டத்தில் இணைந்த நாம் குறிப்பிட்ட சில வருடங்களாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பயணத்தில் இணைந்து செயற்படுகின்றோம். கடந்த மூன்ற வருடங்களாக நெருங்கிய நிலையில் செயற்பட்டு வருகின்றோம்.

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமக்கு உள்ளுராட்சி மன்றத்திற்கான ஆசனப் பங்கீடுகளை மேற்கொண்டது. அதேபோன்று தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலிலும் கிழக்கில் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் வேட்பாளர்களை நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்களுக்கு ஆசன ஒதுக்கீட்டினைத் தந்தது. இருப்பினும் எமது ஒற்றுமை காரணமாகவும், தேசியம் தொடர்பிலான எமது பற்று காரணமாகவும் தற்போதைய நிலையில் தரப்பட்ட ஆசன பங்கீட்டினை விட்டுக் கொடுத்து செயற்படுகின்றோம்.

தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உடைப்பதற்காகப் பல கட்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன. எமது போராளிகளைப் பயன்படுத்தியும் இச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த விசப்பாம்புகளின் நஞ்சினை அறியாத எமது போராளிகளும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒத்துழைத்து வருகின்றனர். ஆனால் எமது கட்சியைப் பொறுத்தவரையில் நாங்கள் எப்போதும் தமிழ்த் தேசியத்தினோடே பயணிப்போம். எதிர்வரும் காலங்களிலும் எமது பிரதிநித்துவங்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு ஏற்படுத்தப்படும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை நாங்கள் பலப்படுத்த வேண்டும். அதனை பலமிழக்கச் செய்ய முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலமிழக்கச் செய்வதற்குப் போராளிகளாகிய நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு எப்போதும் இருப்போம். உரிமைக்காகவும், தேசியத்திற்காகவும் குரல் கொடுப்போம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை வெல்ல வைப்போம்.’ – என்றார். (150)

 

https://newuthayan.com/கூட்டமைப்பு-பலமிழக்க-ஜனந/

Link to comment
Share on other sites

53 minutes ago, உடையார் said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலமிழக்கச் செய்வதற்குப் போராளிகளாகிய நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு எப்போதும் இருப்போம். உரிமைக்காகவும், தேசியத்திற்காகவும் குரல் கொடுப்போம் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தெரிவித்தார்.

எலும்புத் துண்டுகளுக்கு அலையும் கூட்டம் ஒன்றிணைந்துள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டுவரும் ஹிந்திய அரச பயங்கரவாத கும்பல்கள் இனியும் எலும்புத்துண்டுகளை வீசுமா என்று தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு இக்கட்டான  நிலையை எதிர்பார்த்துதான்  தலைவர் குப்பியை கழுத்தில சுமக்கச் சொன்னாரோ? அவர்களுக்கு சொந்தமாக கதைக்கும் சந்தர்ப்பம் வராது என்று அன்றே தெரிந்து வைத்திருந்தார்.  

Link to comment
Share on other sites

10 hours ago, satan said:

இப்படி ஒரு இக்கட்டான  நிலையை எதிர்பார்த்துதான்  தலைவர் குப்பியை கழுத்தில சுமக்கச் சொன்னாரோ? அவர்களுக்கு சொந்தமாக கதைக்கும் சந்தர்ப்பம் வராது என்று அன்றே தெரிந்து வைத்திருந்தார்.  

இந்த தறுதலைகளை எல்லாம் ஒழுக்கத்துடன் கட்டி மேய்த்தவர் எவ்வளவு திறமைசாலியாக இருந்திருக்க வேண்டும்! 🙏🙏🙏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள்.
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.