Jump to content

திருநங்கை வாழ்க்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருநம்பி

நீயும் நன்றாக வாழ்ந்திட்டு, மற்றவனையும் வாழவிட்டுவிட்டுபோ.

ஒவ்வொருவரும் அவர்களின் உணர்வுப்படி வாழ்கின்றார்கள்

 

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மலேசியாவில் திருநங்கையாக மாறுவதற்கு தடை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருநங்கை எனும் பதம் பொருத்தமானதா (நிகரானதா) Transgender எனும் ஆங்கில சொல்லிற்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஆனந்த்பாபு

15959589802952.jpg

நாம் அன்றாட தினசரி வாழ்க்கையில் பிறருக்கு பல வழிகளில் உதவிடும் மனிதர்களைப் பார்க்கிறோம். அவர்கள் எந்தவித எதிர்பலனையும் பாராது அந்த உதவியைச் செய்துவருவதை கவனித்திருப்போம். திருநங்கைகளின் சுயதொழில் முயற்சிகளுக்கு கை கொடுக்கும் காவல் ஆய்வாளர் ஜி.ஆனந்த்பாபு. இப்படி எளிய மக்களுக்காக தனது உதவிக்கரங்களை நீட்டியவருக்கு ‘காட்பரி டெய்ரி மில்க்’ நன்றி கூற விரும்புகிறது. அது அவர்களின் சேவைப் பயணத்தை இன்னும் சுகமாக்கும், வலுப்படுத்தும்...

‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்ற சொல்வதைச் செயலில் காட்டுவதுபோல் காவல்துறையில் பதவியேற்ற நாளிலிருந்து இன்றுவரை வாழ்ந்து வருகிறார் சூளைமேடு காவல்நிலையத்தின் ஆய்வாளர் ஜி.ஆனந்த்பாபு. கடலூரைச் சேர்ந்த ஆனந்த்பாபு, கல்லூரியில் ஹாக்கி விளையாட்டு வீரர். தாத்தா ராணுவம், அப்பா விமானப் படை, மாமா காவல்துறை என இவரது குடும்பத்தினர் மக்கள் சேவைப் பணியில் இருந்தவர்கள். பிறந்ததிலிருந்தே காவல்துறை வேலை ஒரு பெருமை என்ற சூழலில் வளர்ந்த ஆனந்த்பாபுவும், அதே துறைக்குள் நுழைந்தார்.

2000-ஆம் ஆண்டு காட்டுமன்னார் கோயில் பகுதியில் உதவி ஆய்வாளராகத் தன் பணியை ஆரம்பித்தார். காட்டுமன்னார் கோயிலில் பணி செய்த காலத்தில் அங்குள்ள இளைஞர்களைத் திரட்டி அவர்களுக்கு காவல்துறை, ராணுவ வேலையில் சேருவதற்கான பயிற்சியும் ஊக்கமும் அளித்துள்ளார். இதன்மூலம் கிட்டத்தட்ட 100 பேருக்கு காவல்துறையில் வேலை கிடைத்திருக்கிறது.

2010–ஆம் ஆண்டு சென்னை மதுரவாயில் காவல்நிலையத்துக்குப் பதவி உயர்வில் ஆய்வாளராக வந்த ஆனந்த்பாபு, சூளைமேடு பகுதியில் இருக்கும் திருநங்கைகளுக்கு ஆனந்த்பாபு ஒரு உற்ற தோழனாகவே இருக்கிறார். அவர்களின் மறுவாழ்வு, மாற்றுத்தொழில் ஏற்பாடு என உதவி செய்து வருகிறார்.

தோழி, சகோதரன் உள்ளிட்ட அமைப்புகளோடு சேர்ந்து இவரது முன்னெடுப்பால், இதுவரை 6 திருநங்கைகள் தனியார் நிறுவனங்களில் வேலை பெற்றுள்ளனர். இன்னும் 6 பேருக்கு தள்ளுவண்டியில் சிற்றுண்டி கடை அமைத்துக் கொடுத்திருக்கிறார், இன்னும் சிலருக்கு டாடா ஏஸ் வண்டி வாங்கிக் கொடுத்து, அதன்மூலம் குடிநீர் கேன் வியாபாரம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

“கடைகள்ல அஞ்சுக்கும் பத்துக்கும் கைநீட்டிக்கிட்டு அசிங்கப் பட்டுக்கிட்டு இருந்தேன். ‘கைகால் நல்லாத்தானே இருக்கு’னு கேலி செய்வாங்க. அவமானப் பட்டு அழுதிருக்கேன். ஆனந்த்பாபு அய்யாக்கிட்டே என்னோட பிரச்சினையை எழுதி கொடுத்தேன். அய்யாவோட முயற்சியிலதான் தள்ளுவண்டி, பாத்திரம், அடுப்பு, 2 சிலிண்டர்னு இன்னிக்கி மானத்தோட சாப்பாட்டுக்கடை நடத்துறேன். திருநங்கையோட பிரச்சினைய புரிஞ்சுக்கிட்ட அந்த மகாராசன் நூறு வருசம் வாழணுங்க…” என்று நெகிழ்கிறார் பட்டினப்பாக்கத்தில் சாப்பாட்டுக் கடை நடத்திவரும் திருநங்கை மோகனா.

காவல்துறையே மக்கள் பணி தான், அதையும் மீறி இதுபோன்ற சமூக சேவைகளைச் செய்வதற்கு நேரம் எங்கிருந்து கிடைக்கிறது என்று கேட்டால், “என்னோட வேலை நேரம் போக, ஓய்வு நேரத்துலதான் இது மாதிரியான சமூகப் பணிகளைச் செய்யிறேன். மேலும், பலரையும் ஒருங்கிணைச்சு, சில நேரங்கள்ல் போன் மூலமா இந்தப் பணிகளைச் செய்யிறதால பெரிய சுமையா தெரியலே, சந்தோஷம் தான்” என மிக எளிமையாகப் புன்னகைக்கிறார் ஆனந்த்பாபு.

https://www.hindutamil.in/news/brandhub/566975-thanks-police-inspector-anand-babu-dont-forget-goodness-noble-service-of-police-inspector-anand-babu.html

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

திருநங்கை இல்லாத திருவிழாவிற்கு போக மாட்டோம்

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இடைபாலினக் குழந்தைக்கு ஒரு மனிதநேயத் தாலாட்டு!

a-humane-lullaby-for-a-transgender-child

 

ஆங்கிலத்தில் இன்டர்செக்ஸ் என்று அழைக்கப்படும் இடைபாலினக் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்து அவர்களின் இயல்பான வாழ்க்கைக்கு இடையூறு செய்யக் கூடாது என கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை அளித்தது.

ஓர் இடைபாலினக் குழந்தைக்குச் சட்டபூர்வமான பாதுகாப்பு கிடைப்பது அவசியம். அதேநேரம் அத்தகைய குழந்தைக்குச் சமூக அங்கீகாரம் கிடைப்பதற்கு முதலில் தேவைப்படுவது தாயின் அன்பும் நேசமும்தான். இதை வலியுறுத்தும் தாலாட்டுப் பாடலை திருநங்கைக் கவிஞரான விஜயராஜா மல்லிகா மலையாளத்தில் எழுதினார். அந்தப் பாடலை ஷினி அவந்திகா பாட, மோகினியாட்டக் கலைஞர் டாக்டர் சந்தியா இந்தப் பாடலுக்கான நடனத்தோடு கடந்த ஆகஸ்ட் 16 அன்று யூடியூபில் வெளியிட்டனர்.

இதற்குப் பெருத்த வரவேற்பு கிடைக்கவே இந்தப் பாடலின் தமிழாக்கத்தை பத்மகுமார் பரமேஸ்வரன் எழுத, பாடலுக்கு மெட்டமைத்துப் பாடியிருக்கிறார் கரும்புழா ராதா. நிலம்பூர் ஷாஜியின் வயலின் பாடலின் இடையே நிலவும் கனத்த மவுனத்தைத் தன் தந்திகளால் மொழிபெயர்க்கிறது.

இந்தப் பாடலைப் பாடியிருக்கும் பிரபல பின்னணிப் பாடகியான

15997222392484.jpg கரும்புழா ராதா

50 ஆண்டுகளுக்குப் பின் இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார். ஆகவே, அவரைப் பெருமைப்படுத்தும் விதமாக அவரின் 76-வது பிறந்த நாளான செப்டம்பர் 6 அன்று இந்தப் பாடல் யூடியூபில் வெளியிடப்பட்டிருக்கிறது.

“ஆண் அல்ல பெண் அல்ல; பொன்மணி நீ எனக்கு..” என்னும் தொடக்க வரியே அன்பையும் பாசத்தையும் தாலாட்டி மகிழ்கிறது. “நீ சாபமோ, பாவமோ அல்ல; என் வானின் அதிர்ஷ்டத் தாரகை” என்று நம்பிக்கை மொழியைத் தாலாட்டின் வழியாகக் கேட்கும் குழந்தை தன்னம்பிக்கையோடுதானே வளரும்!

“ஒரு குடும்பத்தில் ஓர் இடைபாலினக் குழந்தை பிறந்தால் யார் முதலில் ஏற்றுக்கொள்வது என்பதில் பிரச்சினை இருக்கிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரையில் தாய்தான் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். தாயின் அன்பு அந்தக் குழந்தைக்குக் கிடைக்கும்பட்சத்தில் அந்தக் குழந்தையால் உலகத்தில் எந்தவிதமான பிரச்சினையையும் சவால்களையும் சந்திக்க முடியும் என்பதைத்தான் என் பாட்டில் கூறியிருக்கிறேன்.
அந்த அன்பு மட்டும் கிடைத்துவிட்டால், ஆண், பெண், இனம், சாதி, மதம் போன்ற பிரிவினைச் சட்டகத்துக்குள் சிக்காமல் சுதந்திரமாக அந்தக் குழந்தையால் வாழ முடியும்” என்றார் திருநங்கை விஜயராஜா மல்லிகா.

 

https://www.hindutamil.in/news/blogs/576783-a-humane-lullaby-for-a-transgender-child-1.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் அல்ல, பெண் அல்ல
பொன்மணி நீ எனக்கு
தேனமுதம் தான் கண்ணே தேனமுதம்

என் துயரத்தின் கண்ணீர் கண்டு 
காலம் தந்த செல்வம் நீயே 
(ஆண் அல்ல .....)

நன்மையும் தீமையும் 
வகையீடு செய்து நீ 
எல்லைகள் தாண்டி வளர்ந்திடவே 
பொருளின் எதிரொலியாகவே நீ 
நீயாகத்தான் நிறைந்திடு 
ராரி...ராரோ...ராராரோ... (2)

மகனல்ல மகளல்ல வானவில்லே (2)  
மார்போடு சேர்த்துவைத்தேன் நான் உன்னையே 
உச்சி மீது முத்தங்கள் பொழிந்திடுவேன்
என் வாழ்க்கை சாதனையின் முத்தங்கள் 

தளராது செழிக்கட்டும் உன் கனவுகள் 
பிறர்க்காதரவாய் மாறவேண்டும் உன் வாழ்வு 
(ஆண் அல்ல ....)

சாபம் அல்ல, பாவம் அல்ல அன்பே நீ 
என் வாழ்க்கை வானிலுதித்த அதிர்ஷ்ட தாரகை,
முதற்தாரகை, முதற்தாரகை நீ.
ராரி...ராரோ...ராராரோ...(2)

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களே உங்கள் வேட்டிகள் கவனம் இனிமேல் 🤣😂

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/7/2020 at 14:31, நியாயத்தை கதைப்போம் said:

திருநங்கை எனும் பதம் பொருத்தமானதா (நிகரானதா) Transgender எனும் ஆங்கில சொல்லிற்கு?

ஆங்கிலம் பிறக்க முன்னரே 
பல சமூகங்கள் இதற்கு முகம் கொடுக்க தொடங்கிவிட்டன
ஆகவே ஆங்கில பதம் எல்லா இடத்திலும் அர்த்தம் கொடுக்காது. 

உதாரணத்துக்கு வெள்ளைக்காரர் முதன் முதலில் இந்தியா வந்த போதுதான் 
ஆட்கள் குளிப்பதை பார்த்து இருக்கிறார்கள். அத பின்புதான் ஐரோப்பிய மொழிகளில் 
குளித்ததலுக்கு உரிய சொல் உருவாகி இருக்கிறது.

"குளித்தல்" என்பதே பிழையானது சரியானது குளிர்த்தல் குளிர்வித்தல் அல்லது முழுக்கு.
அழுக்கை போக்குவதை   இரண்டாம் பட்ஷமாகத்தான் எமது முன்னோர்கள் 
பார்த்து இருக்கிறார்கள் உடல் வெப்பத்தை சீராக்குவதுக்குத்தான் நீர் நிலைகளில் மூழ்கி 
இருக்கிறார்கள். புறநானுற்று புரட்டுகளிலேயே குளிப்பது பற்றி இருக்கிறது 
எமது சமூகம் 3000 ஆண்டுகளாக நீராடி வருகிறது.

இதை ஏன் எழுதுகிறேன் என்றால் நாம் என்ன செய்கிறோம் ஏன் செய்கிறோம் என்பதை 
தொலைப்பதால் மறப்பதால்தான் பல இரசாயனங்களால் எமது குளியலறையை சோடித்து 
வீணான வில்லங்கங்களை விளக்கு வாங்கி கொள்கிறோம்.    

விலைக்கு  வாங்கி கொள்கிறோம்.   

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தன்னம்பிக்கை தம்பதிகளின் India's 1st வல்லாரை Mojito | Transgender Food Shop | Tamil Food Review

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நர்த்தகி நடராஜ்: தடைகளைத் தகர்த்த நாட்டிய கலைஞர் - சாதித்த கதை

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
24 அக்டோபர் 2020
நர்த்தகி நடராஜ்
 

(பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் பலரும் அந்த உச்சத்தை தொடும் முன்பு, பல தடங்கல்களையும் சவால்களையும் எதிர்கொண்டிருக்கிறார்கள். அத்தகைய பெண்களில் குறிப்பிடத்தக்கவர்கள், தங்களின் வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொள்ளும் தொடரை பிபிசி தமிழ் வழங்குகிறது. அதில் நான்காவது கட்டுரை இது.)

பத்ம ஸ்ரீ விருதுபெற்ற, தேசத்தின் சிறந்த நடன கலைஞர்களில் ஒருவரான நர்த்தகி நடராஜ், கடும் போராட்டங்களுக்கு மத்தியில் அந்த உயரத்தை அடைந்தவர். சமூகம் விதித்த அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்தவர். வாழ்வின் தடைகளைத் தகர்க்க நினைப்பவர்களுக்கு இவரது வாழ்க்கை ஒரு உதாரணம்.

தமிழ்நாட்டில் பரத நாட்டியத்திற்காக பத்ம ஸ்ரீ விருது, கலைமாமணி விருது, சங்கீத நாடக அகாடமியின் புரஸ்கார் விருது, கௌரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட அங்கீகாரங்களைப் பெற்ற பரதநாட்டியக் கலைஞரான நர்த்தகி நட்ராஜ், சிறு வயதிலிருந்தே நடனத்தின் மீது தீராத காதல் கொண்டவர். தற்போது இந்தியாவின் முக்கியக் கலைஞர்களின் ஒருவரான நர்த்தகியின் கலைப் பயணம், யாருக்கும் உத்வேகமூட்டக் கூடியது.

"நடனத்தை நான் தேர்வுசெய்தேன் என்பதை விட, நடனம்தான் என்னைத் தேர்வுசெய்தது. ஆணாகப் பிறந்த நான், பெண்ணாக என்னை உணர்ந்த அந்தத் தருணத்தில், என் பெண்மையை வெளிப்படுத்த அது உகந்த கலையாக இருந்தது.

அந்தப் பருவத்தில் இருந்த இடர்களில் இருந்து சாய்ந்து கொள்ள ஒரு தோளாக அந்தக் கலை இருந்தது. ஒரு ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியதால் ஏற்பட்ட பிரச்சனைகளைக் கடக்க, இது வாகனமாக இருந்தது. நல்ல துணையாக இருந்தது. அப்படித்தான் நடனத்தின் மீது ஈர்ப்புக்கொள்ள ஆரம்பித்தேன்" என்கிறார் நர்த்தகி.

மதுரை அனுப்பானடி பகுதியில், வசதியும் அரசியல் செல்வாக்கும் மிகுந்த குடும்பத்தில், அவரது பெற்றோருக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தவர் நடராஜ். ஆனால், 5-6 வயதிலேயே தான் மற்றவர்களைப் போல அல்ல என்று உணர ஆரம்பித்தார். எதிர்பார்த்தபடியே அவரது வீட்டினருக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

நர்த்தகி நடராஜ்
 

அனுப்பானடியில் உள்ள தியாகராசர் முன்மாதிரிப் பள்ளியில் படித்த நடராஜ், மிகச் சிறந்த மாணவர். இருந்தபோதும், உடலில் இருந்த மாற்றங்கள் அவரைத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தன.

வீட்டிலும் வெளியிலுமாக தங்கியிருந்தபடி, 12ஆம் வகுப்புவரை படித்த நடராஜ், அதற்குப் பிறகு பள்ளிக்கூடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில்தான் நடனம் என்ற கலை அவரை முழுமையாக ஆக்கிரமித்தது. அவரைப் போலவே உணர்ந்த பாஸ்கரும் (இப்போது சக்தி) நடராஜும் செவ்வியல் நடனத்தை நோக்கி வெகுவாக ஈர்க்கப்பட்டார்கள்.

திரைப்படங்கள்தான் அவரது முதல் நடன குருவாக இருந்தன. அதில் நாயகிகள் ஆடிய நடனங்களைப் பார்த்தே, நடனத்தையும் அவர்கள் பேசிய வசனங்களைக் கேட்டு மொழியையும் செழுமைப்படுத்திக் கொண்டார் நடராஜ். அதற்குப் பிறகு, கோவில் திருவிழாக்களில் தொடர்ந்து ஆடிவந்தார்.

ஆனால், முறைப்படி நடனம் கற்க வேண்டுமென்ற ஆசைமட்டும் தீரவில்லை. அந்தக் காலகட்டத்தில் தஞ்சாவூர் பாணி பரதக்கலையில் மிக உயர்ந்த இடத்தில் இருந்த பி. கிட்டப்பா பிள்ளையிடம் பரதம் கற்க முடிவுசெய்தார் நடராஜும் அவரது தோழியான பாஸ்கரும்.

நர்த்தகி நடராஜ்

பட மூலாதாரம்,NARTHAKI NATRAJ

 

"யாமினி கிருஷ்ணமூர்த்தி, சுதாராணி ரகுபதி போன்ற இந்தியாவின் மிகப் பெரிய பரதநாட்டியக் கலைஞர்களின் குரு அவர். தஞ்சாவூருக்குச் சென்று எங்களுக்கும் பரதம் கற்றுத்தரும்படி தொடர்ந்து வேண்டினோம். அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்வோம். ஒரு வருடக் காத்திருத்தலுக்குப் பிறகு அவர் எங்களை ஏற்றுக்கொண்டார். அது ஒருபெரிய பல்கலைக்கழகத்தில் படிக்கக் கிடைத்த வாய்ப்பு போல இருந்தது," என்கிறார் நர்த்தகி.

பரத நாட்டியத்தில் புகழ்பெற்ற தஞ்சை நால்வரில் ஒருவரான சிவானந்தத்தின் பரம்பரையைச் சேர்ந்தவர்தான் கிட்டப்பா பிள்ளை.

17வது வயதில் கிட்டப்பா பிள்ளையிடம் சேர்ந்த நடராஜும் பாஸ்கரும், அதற்கு அடுத்த 15 வருடங்கள் அவருடனேயே இருந்தனர். தொடர்ச்சியாக நட்ராஜுக்கும் பாஸ்கருக்கும் கற்பித்தார் கிட்டப்பா பிள்ளை. நட்ராஜிற்கு நர்த்தகி என்று பெயர் சூட்டியவரும் அவர்தான்.

சாதித்தே ஆக வேண்டுமென்பதுதான் அவரது இலக்காக இருந்தது. "குடும்ப ஆதரவு, சமூக ஆதரவு போன்ற எதுவுமே இல்லை. ஆகவே நடனத்தை வெறித்தனமாகக் காதலிக்க ஆரம்பித்தேன். எதிர்ப்புகள், அவமானங்கள் ஆகியவை தொடரவே செய்தன. ஆனால், வெற்றியடைய வேண்டும் என்ற கொள்கை மட்டுமே என்னை நடத்திச் சென்றது" என நினைவுகூர்கிறார் நர்த்தகி.

நர்த்தகி நடராஜ்
 

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக சில காலம் பணிபுரிந்த நர்த்தகி, புத்தாயிரத்தின் துவக்கத்தில் சென்னையில் குடியேறினார்.

எந்தத் தருணத்திலும் நர்த்தகியும் சக்தியும், தாங்கள் திருநங்கைகள் என்பதைச் சொல்லி வாய்ப்புகளைப் பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.

"ஆகவே பேய்த் தனமாக உழைத்தோம். என் கலையை, கஷ்டங்களைக் காதலித்தோம். அடுத்தடுத்த வெற்றிகள் எனக்கு நல்ல நம்பிக்கையை கொடுத்தன. எனக்கு வெற்றிகள் மிகத் தாமதமாகக் கிடைத்தன, ஆனால், கிடைத்தன. நான் கடந்த வந்த பாதையைப் பார்த்தால், நான் மிக பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கிறேன். ஆனால், என்னுடைய திறமைகளுக்குக் கிடைக்கும் அங்கீகாரத்தை ஒரு திருநங்கை என்பதால் கிடைத்த அங்கீகாரமாகச் சொல்லும் போக்கு வலிக்கிறது. பத்ம ஸ்ரீ விருது எனக்குத் தரப்பட்டபோதுகூட, அது எனது கலைக்காகத் தரப்பட்டது என சொல்லப்பட்ட நிலையிலும் ஒரு திருநங்கைக்கு பத்ம ஸ்ரீ, ஒரு திருநங்கைக்கு பத்ம ஸ்ரீ என்றுதான் குறிப்பிட்டார்கள்" என்கிறார் நர்த்தகி.

நர்த்தகியின் அனைத்துப் பயணங்களிலும் துணையாக இருக்கிறார் சக்தி. "சக்தி என்னோடு இருப்பது என்பது, தெய்வம் என்னோடு இருப்பதைப் போல. தன்னலமற்றவர். அவரிடம் சிறிது நேரம் பேசினாலும் அந்தப் பேச்சு என்னைப் பற்றித்தான் இருக்கும். ஒரு நாணயத்தின் முன் பக்கம் நான். பின் பக்கம் அவள்," என்கிறார் நர்த்தகி.

நர்த்தகி நடராஜ்
 

வெள்ளியம்பலம் என்ற தன்னுடைய நடனப் பள்ளியை வெள்ளியம்பலம் அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளையாக்கியிருக்கிறார். "எங்களுடைய வாழ்க்கை முறை வெற்றியடைந்த வாழ்க்கை முறை. நிறைய திருநங்கைகளுக்கு அதை நாங்கள் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இது அவர்கள் வாழ்க்கையை மாற்றும் என நம்புகிறோம்" என்கிறார் அவர்.

 

https://www.bbc.com/tamil/india-54648023

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/9/2020 at 12:09, Maruthankerny said:

ஆங்கிலம் பிறக்க முன்னரே 
பல சமூகங்கள் இதற்கு முகம் கொடுக்க தொடங்கிவிட்டன
ஆகவே ஆங்கில பதம் எல்லா இடத்திலும் அர்த்தம் கொடுக்காது. 

உதாரணத்துக்கு வெள்ளைக்காரர் முதன் முதலில் இந்தியா வந்த போதுதான் 
ஆட்கள் குளிப்பதை பார்த்து இருக்கிறார்கள். அத பின்புதான் ஐரோப்பிய மொழிகளில் 
குளித்ததலுக்கு உரிய சொல் உருவாகி இருக்கிறது.

"குளித்தல்" என்பதே பிழையானது சரியானது குளிர்த்தல் குளிர்வித்தல் அல்லது முழுக்கு.
அழுக்கை போக்குவதை   இரண்டாம் பட்ஷமாகத்தான் எமது முன்னோர்கள் 
பார்த்து இருக்கிறார்கள் உடல் வெப்பத்தை சீராக்குவதுக்குத்தான் நீர் நிலைகளில் மூழ்கி 
இருக்கிறார்கள். புறநானுற்று புரட்டுகளிலேயே குளிப்பது பற்றி இருக்கிறது 
எமது சமூகம் 3000 ஆண்டுகளாக நீராடி வருகிறது.

இதை ஏன் எழுதுகிறேன் என்றால் நாம் என்ன செய்கிறோம் ஏன் செய்கிறோம் என்பதை 
தொலைப்பதால் மறப்பதால்தான் பல இரசாயனங்களால் எமது குளியலறையை சோடித்து 
வீணான வில்லங்கங்களை விளக்கு வாங்கி கொள்கிறோம்.    

விலைக்கு  வாங்கி கொள்கிறோம்.   

உண்மைதான்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் திருநங்கையான தமிழகத்தைச் சேர்ந்த நர்த்தகி நடராஜன் தனது வாழ்க்கைப் பயணத்தை பகிர்ந்து கொள்கிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா தேர்தல்: வரலாற்றில் முதல்முறையாக திருநங்கை வெற்றி

அமெரிக்கா தேர்தல்: வரலாற்றில் முதல்முறையாக திருநங்கை வெற்றி

 

வாஷிங்டன்

அமெரிக்கா தேர்தலில் நான்கு மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு உள்ளது. பென்சில்வேனியா, விஸ்கோன்சிஸ், ஜார்ஜியா, மிக்சிகன் மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தமென தகவல் வெளியாகி உள்ளது.


அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக திருநங்கை சாரா மெக்.பிரைட் டெலாவேரில் வெற்றி பெற்று உள்ளார். இவர் ஜோ பிடனின் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர் ஆகும். வழக்கறிஞரான 31 வயதாகும் திருநங்கை சாரா மெக் பிரைட் ஒரின சேர்க்கையாளர் விவகாரத்தில் ஆதரவாக செயலாற்றியுள்ளார். 

இந்த தேர்தல் வெற்றி குறித்து தெரிவித்துள்ள சாரா மெக் பிரைட், நாம் செய்து முடித்து விட்டோம். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம். வாக்களித்தவர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு ஜனநாயக கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான டாக்டர்.அமி பெரா, பிரமிளா ஜெயபால், ரோ கண்ணா மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேர் மீண்டும் தேர்வு!

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றுள்ளது; உச்சநீதிமன்றத்தை அணுகி வாக்கு எண்ணிக்கையை நிறுத்த உள்ளதாக டொனால்ட் டிரம்ப் மிரட்டி உள்ளார்.

மிசவுரி மாகாணத்தில் அமைக்கபட்ட டிரைவ் த்ரூ வாக்குச்சாவடி அமெரிக்க அதிபர் தேர்தலில் கொரோனா நோயாளிகள் வாக்களிக்க ட்ரைவ் த்ரூ வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன. மிசவுரியில் உள்ள செயின்ட் லூயிஸ் பகுதியில் சாலையோரமாக அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு காரில் வந்த கொரோனா நோயாளிகள் வாக்களித்தனர். பாதுகாப்பு கவச உடையுடன் வந்திருந்த பணியாளர்கள் காரில் வருவோருக்கு வாக்குச்சீட்டுகளை வழங்கி வாக்களிக்க உதவினர்.

தேர்தல் தினத்தன்று அமெரிக்காவில் பலருக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு கோடி பேருக்கு இந்த மர்ம அழைப்புகள் வந்ததாக கூறப்படுகிறது. இந்த தானியங்கி அழைப்பில் ஒலித்த குரல்” வீட்டிலேயே இருங்கள்.. பாதுகாப்பாக இருங்கள்” என்று நம் ஊர் கொரோனா வைரஸ் ரிங்டோன் போல கூறிய பின் அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நாளில் வன்முறைகள் நிகழலாம் என்ற அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் பலருக்கு வந்த இந்த மர்ம தொலைபேசி அழைப்பால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த அழைப்பில் கிருமிப்பரவல் பற்றியோ, அதிபர் தேர்தல் பற்றியோ குறிப்பாக எதுவும் சொல்லப்படவில்லை என்றபோதும் தேர்தல் நாளில் வந்ததால், இது குறித்து அமெரிக்க மத்திய புலனய்வுத்துறைவிசாரணை நடத்தி வருகிறது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/04152844/US-election-2020-Sarah-McBride-creates-history-becomes.vpf

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

திருநம்பியாக மாறினார் பிரபல ஹொலிவூட் நடிகை எலன் பேஜ்!

ஜூனோ திரைப்படத்திற்காக ஒஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரபல ஹொலிவூட் நடிகை எலன் பேஜ்(Ellen-Page)  தன்னை திருநம்பியாக அடையாளப்படுத்தி கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கனடாவைச் சேர்ந்த எலன் பேஜ், ஜூனோ, இன்செப்சன், டூ ரோம் வித் லவ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Ellen-Page-new.jpg

கடந்த  2014ஆம் ஆண்டு தன்னை தற்பாலின ஈர்ப்பாளராக அடையாளப்படுத்திக்கொண்ட எலன், எம்மா என்ற பெண்ணை திருமணம்செய்து கொண்டார்.

மேலும் LGBTQ சமூகத்துடன் இணைந்து அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தார்.

இந்நிலையில், தற்போது தாம் திருநம்பியாக மாறிவிட்டதாகவும், தனது பெயரை எலியட் பேஜ் என்று மாற்றிக்கொண்டுள்ளதாகவும் சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

 

https://thinakkural.lk/article/94610

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/9/2020 at 17:09, Maruthankerny said:

ஆங்கிலம் பிறக்க முன்னரே 
பல சமூகங்கள் இதற்கு முகம் கொடுக்க தொடங்கிவிட்டன
ஆகவே ஆங்கில பதம் எல்லா இடத்திலும் அர்த்தம் கொடுக்காது. 

உதாரணத்துக்கு வெள்ளைக்காரர் முதன் முதலில் இந்தியா வந்த போதுதான் 
ஆட்கள் குளிப்பதை பார்த்து இருக்கிறார்கள். அத பின்புதான் ஐரோப்பிய மொழிகளில் 
குளித்ததலுக்கு உரிய சொல் உருவாகி இருக்கிறது.

"குளித்தல்" என்பதே பிழையானது சரியானது குளிர்த்தல் குளிர்வித்தல் அல்லது முழுக்கு.
அழுக்கை போக்குவதை   இரண்டாம் பட்ஷமாகத்தான் எமது முன்னோர்கள் 
பார்த்து இருக்கிறார்கள் உடல் வெப்பத்தை சீராக்குவதுக்குத்தான் நீர் நிலைகளில் மூழ்கி 
இருக்கிறார்கள். புறநானுற்று புரட்டுகளிலேயே குளிப்பது பற்றி இருக்கிறது 
எமது சமூகம் 3000 ஆண்டுகளாக நீராடி வருகிறது.

இதை ஏன் எழுதுகிறேன் என்றால் நாம் என்ன செய்கிறோம் ஏன் செய்கிறோம் என்பதை 
தொலைப்பதால் மறப்பதால்தான் பல இரசாயனங்களால் எமது குளியலறையை சோடித்து 
வீணான வில்லங்கங்களை விளக்கு வாங்கி கொள்கிறோம்.    

விலைக்கு  வாங்கி கொள்கிறோம்.   

மருதர்,

இங்கிலாத்தில் Bath என்று ஒரு ஊர் ஊள்ளது. அதே போல் Leamington Spa இப்படி பல காரணப் பெயர் உள்ள ஊர்கள் உண்டு. இவை எல்லாம் ரோம சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சியின் கீழ் இங்கிலாந்து இருந்த போது, பொது குளியல் வசதிகளுடன் கட்ட பட்ட ஊர்கள் என்பதாலேயே இந்த பெயர்கள் வந்தது.

 

https://www.independent.co.uk/travel/news-and-advice/complete-guide-spa-towns-5334588.html 

சங்க இலக்கியங்களில் அல்லது சங்கமருவிய இலக்கியங்களில் திரு நங்கைகள் எப்படி அழைக்கப்படார்கள்? என்பது யாருக்காவது தெரியுமா?

ஏனென்றால் கருணாநிதிதான் திருநங்கை என்ற சொல்லை உருவாக்கியவராம். 

https://www.vikatan.com/news/politics/133471-transgender-grace-banu-recalls-her-golden-moments-with-karunanidhi 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

மருதர்,

இங்கிலாத்தில் Bath என்று ஒரு ஊர் ஊள்ளது. அதே போல் Leamington Spa இப்படி பல காரணப் பெயர் உள்ள ஊர்கள் உண்டு. இவை எல்லாம் ரோம சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சியின் கீழ் இங்கிலாந்து இருந்த போது, பொது குளியல் வசதிகளுடன் கட்ட பட்ட ஊர்கள் என்பதாலேயே இந்த பெயர்கள் வந்தது.

 

https://www.independent.co.uk/travel/news-and-advice/complete-guide-spa-towns-5334588.html 

சங்க இலக்கியங்களில் அல்லது சங்கமருவிய இலக்கியங்களில் திரு நங்கைகள் எப்படி அழைக்கப்படார்கள்? என்பது யாருக்காவது தெரியுமா?

ஏனென்றால் கருணாநிதிதான் திருநங்கை என்ற சொல்லை உருவாக்கியவராம். 

https://www.vikatan.com/news/politics/133471-transgender-grace-banu-recalls-her-golden-moments-with-karunanidhi 

துருக்கியில் ஹமாம் என்று ஆயிரம் வருட முந்திய ஸ்பா முறைமை பற்றியெல்லாம் 
இருக்கிறது என்று வாசித்து இருக்கிறேன் எல்லாம் அரச மன்னர்களின் ஆடம்பரமாகவே 
இருந்து இருக்கிறது .......... எல்லோரும் குளிக்கவேண்டும்  அதில் உடல் ஆரோக்கியம் இருக்கிறது 
என்ற அடைப்படை எண்ணம் இருக்கவில்லை. அதுக்கான வசதிகளும் இருக்கவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Maruthankerny said:

துருக்கியில் ஹமாம் என்று ஆயிரம் வருட முந்திய ஸ்பா முறைமை பற்றியெல்லாம் 
இருக்கிறது என்று வாசித்து இருக்கிறேன் எல்லாம் அரச மன்னர்களின் ஆடம்பரமாகவே 
இருந்து இருக்கிறது .......... எல்லோரும் குளிக்கவேண்டும்  அதில் உடல் ஆரோக்கியம் இருக்கிறது 
என்ற அடைப்படை எண்ணம் இருக்கவில்லை. அதுக்கான வசதிகளும் இருக்கவில்லை. 

அப்படி இல்லை மருதர்.

இங்கே ஹேட்ரியன் வால் என்று ஒன்று உள்ளது. நான் போய் பார்த்துள்ளேன். கிட்டதட்ட தற்போதைய இங்கிலாந்தின் எல்லை வரை நீண்ட ரோமப்பேரரசு, அதற்க்குமேல வாழ்ந்தவர்களை மிலேச்சர்கள் என வர்ணித்து கிழக்கு மேற்காக கட்டிய மதில். 

இந்த மதிலின் ஒவ்வொரு குறிப்பிட்ட தூரத்திலும் ஹோம்ஸ்டெட்ஸ் என கொத்தளங்கள் அமைத்து சிறிய முகாம் போல வாழ்ந்துள்ளார்கள் அதில் மலசல கூடம், குளியல் அறை எல்லாம் இருந்திருக்கிறது.

அதே போல் பாத் நகருக்கும் போய் ரோமன் பாத்சை பார்த்துள்ளேன், சாதாரண குடிகளும் குளிக்கும் படிதான் அமைத்துள்ளார்கள்.

குளிப்பது என்பது மிக இயல்பானது. உடுத்துவது, இறைச்சியை சுட்டு உண்ணுவது போல.

ஒரு மனிதன் சேற்றில் தவறி விழுந்து விட்டால் அருகில் உள்ள நீர்நிலையில் முக்கி எழுந்திருப்பான். அப்படியே சேற்றுடனா திரிந்திருப்பான்?

ஆகவே நாம்தான் அவர்களுக்கு குளியலை கற்று கொடுத்தோம் என்பது வரலாற்று தகவல் அடிப்படையில் மட்டும் அல்ல, லொஜிக்கலாகவும் எனக்கு படவில்லை.

சிலசமயம் எங்களை போல், ஒவ்வொரு நாளும் குளிக்கும்பழக்கம் இல்லாமல் இருக்கலாம்.

அது இப்போதும் இங்கே பலருக்கு இல்ல்லைத்தானே 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட, அப்ப குளியலையும் நாங்களே உலகத்துக்கு அறிமுகம் செய்திருக்கிறம்? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அப்படி இல்லை மருதர்.

இங்கே ஹேட்ரியன் வால் என்று ஒன்று உள்ளது. நான் போய் பார்த்துள்ளேன். கிட்டதட்ட தற்போதைய இங்கிலாந்தின் எல்லை வரை நீண்ட ரோமப்பேரரசு, அதற்க்குமேல வாழ்ந்தவர்களை மிலேச்சர்கள் என வர்ணித்து கிழக்கு மேற்காக கட்டிய மதில். 

இந்த மதிலின் ஒவ்வொரு குறிப்பிட்ட தூரத்திலும் ஹோம்ஸ்டெட்ஸ் என கொத்தளங்கள் அமைத்து சிறிய முகாம் போல வாழ்ந்துள்ளார்கள் அதில் மலசல கூடம், குளியல் அறை எல்லாம் இருந்திருக்கிறது.

அதே போல் பாத் நகருக்கும் போய் ரோமன் பாத்சை பார்த்துள்ளேன், சாதாரண குடிகளும் குளிக்கும் படிதான் அமைத்துள்ளார்கள்.

குளிப்பது என்பது மிக இயல்பானது. உடுத்துவது, இறைச்சியை சுட்டு உண்ணுவது போல.

ஒரு மனிதன் சேற்றில் தவறி விழுந்து விட்டால் அருகில் உள்ள நீர்நிலையில் முக்கி எழுந்திருப்பான். அப்படியே சேற்றுடனா திரிந்திருப்பான்?

ஆகவே நாம்தான் அவர்களுக்கு குளியலை கற்று கொடுத்தோம் என்பது வரலாற்று தகவல் அடிப்படையில் மட்டும் அல்ல, லொஜிக்கலாகவும் எனக்கு படவில்லை.

சிலசமயம் எங்களை போல், ஒவ்வொரு நாளும் குளிக்கும்பழக்கம் இல்லாமல் இருக்கலாம்.

அது இப்போதும் இங்கே பலருக்கு இல்ல்லைத்தானே 🤣

இது நான் எழுதியது இல்லை 
ஒரு பிரிட்டிஸ்காரர் தனது சொந்த அனுபவத்தை எழுதியது 
தான் இந்தியா வந்தபோதுதான் முதன் முதலில் எல்லோரும் 
ஏரிகள் குளம்கள் சென்று நாள் தோறும் குளிப்பதை பார்த்தேன் என்று 
குறிப்பாக பெண்கள் குளிப்பது உடுத்துவது என்பதை சிரமமாக செய்துவந்தார்கள் 
என்று எழுதி இருக்கிறார் 

கிறிஸ்த்தவர்களின் பாப்டிசம் என்பது நீரில் மூழ்கி எடுப்பதுதானே?
ஆனால் இது எல்லாம் கி.பி 350க்கு பிறகு தோன்றியதுதான் 
நீங்கள் கூறும் இடங்கள் எல்லாம்வற்றிலும் 6 மாத குளிர் காலத்தில் என்ன செய்தார்கள்?

மாதவிடாய் முடிந்த நாட்களில் பெண்கள் என்ன செய்தார்கள்?
என்ற கேள்விகள் எனக்குள்ளும் உண்டு  ஆனால் சாராசரியாக குளித்தார்கள் 
என்பதுக்கு எந்த ஆதாரமும் இல்லை 
நீங்கள் கூறியதுபோல சேற்றில் விழுந்தால் கழுவது போன்ற மாதிரியான முறைமைதான் 
அவர்களிடம் இருந்து இருக்கிறது 

இந்தியர்கள்தான் முதன் முதலாக குளிக்க தொடங்கினார்கள் என்பதை நீங்கள் தேடினால் கண்டு கொள்வீர்கள். இந்தியர்களை அடுத்து சீனர்கள் என்றுதான் ஆதார அடிப்படையிலேயே இருக்கிறது 

bath (n.)

Old English bæð "an immersing of the body in water, mud, etc.," also "a quantity of water, etc., for bathing," from Proto-Germanic *badan (source also of Old Frisian beth, Old Saxon bath, Old Norse bað, Middle Dutch bat, German Bad), from PIE root *bhē- "to warm" + *-thuz, Germanic suffix indicating "act, process, condition" (as in birth, death). The etymological sense is of heating, not immersing.

The city in Somerset, England (Old English Baðun) was so called from its hot springs. Bath salts attested from 1875 (Dr. Julius Braun, "On the Curative Effects of Baths and Waters"). Bath-house is from 1705; bath-towel is from 1958.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.