Jump to content

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் சாதனைகளும் பங்களாதேஷ் தொடர்ந்து சந்திக்கும் தோல்விகளும்


Recommended Posts

மிர்பூர் டெஸ்டில் பங்களாதேஷ் அணியை இனிங்ஸாலும் 239 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வென்று இந்திய அணி டெஸ்ட் போட்டியில் தனது அதிகூடிய வெற்றி வித்தியாசத்தை நேற்று முன்தினம் பதிவு செய்தது. இதற்கு முன் 1997 - 98 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இனிங்ஸாலும் 219 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தது.

சிட்டகாங் மற்றும் மிர்பூரில் நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடித்து அசத்திய `மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், தொடர் நாயகன் விருதைக் கைப்பற்றினார். 254 ஓட்டங்கள் தவிர, 3 விக்கெட் மற்றும் 4 கட்சுகளும் சச்சினுக்கு தொடர் நாயகன் விருதை பெற்றுத்தந்தன. இது, டெஸ்ட் போட்டிகளில் சச்சின் கைப்பற்றும் நான்காவது தொடர் நாயகன் விருது.

மிர்பூர் டெஸ்டின் இரண்டு இனிங்ஸிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி, அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் சாஹிர்கான். இவர் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். டெஸ்ட் போட்டிகளில் சாஹிர்கான் கைப்பற்றும் முதல் ஆட்டநாயகன் விருதும் இதுதான்.

இந்தியாவுடனான இந்தத் தோல்வி பங்களாதேஷுக்கு டெஸ்ட் போட்டிகளில் 40 ஆவது தோல்வியாக அமைந்தது. இதுவரை 46 டெஸ்ட் போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. 5 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. இதுவரை பங்களாதேஷ் அணி 26 டெஸ்ட் போட்டிகளில் இனிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

மிகவும் மோசமாக 2002 - 03 ஆம் ஆண்டு மேற்கிந்தியாவுக்கு எதிராக இனிங்ஸாலும் 310 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் படுதோல்வியடைந்திருந்தது.

நேற்று முன்தினம் இரண்டாவது இனிங்ஸில் பங்களாதேஷின் முகமது அஷ்ரபுல் அதிரடியாக ஆடி 67 ஓட்டங்களை குவித்து அசத்தினார். 26 பந்துகளில் அரைச்சதம் அடித்த இவர், டெஸ்ட் போட்டிகளில் குறைந்த பந்துகளில் அரைச்சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை, இங்கிலாந்தின் இயன் பொதம் மற்றும் பாகிஸ்தானின் சஹிட் அப்ரிடியுடன் பகிர்ந்து கொண்டார். இப் பட்டியலில் தென் ஆபிரிக்காவின் ஜக் கலிஸ் (24 பந்துகள்) முதலிடத்தில் உள்ளார்.

முதல் இனிங்ஸில் 3 பங்களாதேஷ் வீரர்களை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் இந்தியாவின் அனில் கும்ப்ளே டெஸ்ட் போட்டிகளில் 550 விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் ஷேன் வோர்ன் (708), முரளிதரன் (674) மெக்ராத் (563), இலங்கையின் ஆகியோர் இந்த இலக்கை எட்டியுள்ளனர்.

பங்களாதேஷின் முகமது ஷரீப்பை முதல் இனிங்ஸில் ஆட்டமிழக்கச் செய்த கும்ப்ளே, இதுவரை 138 முறை எல்.பி.டபிள்யூ. மூலம் விக்கெட்டுகளை வீழ்த்திய அவுஸ்திரேலியாவின் ஷேன் வோர்னின் சாதனையை சமன் செய்தார்.

இந்த டெஸ்டில் ஒரு இனிங்ஸில் முதல் நான்கு துடுப்பாட்டக்காரர்களும் சதமடித்ததன் மூலம் இந்திய அணி புதிய சாதனை படைத்ததும் தெரிந்ததே.

--thinakkural.com-

Link to comment
Share on other sites

குட்டி எந்த அணிக்கு சபோட்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குட்டி எந்த அணிக்கு சபோட்

எந்த அணியிலும் தமிழர் இருந்தால் தமிழருக்கு சப்போர்ட் செய்யுங்கள்!!!

Link to comment
Share on other sites

எந்த அணியிலும் தமிழர் இருந்தால் தமிழருக்கு சப்போர்ட் செய்யுங்கள்!!!

அப்ப ஒரு அணிக்கும் சபோட் செய்ய ஏலாது எனக்கு வாழ்வு தந்த அவுஸ்ரெலியாவுக்கு தான் என்றும் சபோட்

:lol:

Link to comment
Share on other sites

அப்ப ஒரு அணிக்கும் சபோட் செய்ய ஏலாது எனக்கு வாழ்வு தந்த அவுஸ்ரெலியாவுக்கு தான் என்றும் சபோட்

:lol:

சொல்லலயே.. எப்ப வாழ்வு தந்தது :lol:

Link to comment
Share on other sites

உலக கோப்பை விட்டுவிட்டு

ஒண்ணாம் கிளாசில் 100 மார்க் வாங்கி என்ன உபயோகம். :lol:

Link to comment
Share on other sites

சொல்லலயே.. எப்ப வாழ்வு தந்தது :blink:

சொல்ல தான் நினைக்கிறேன் சொல்லாம தவிர்கிறேன் குட்டி

:P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.