Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கையானை தூய விநாயகனை
நினை மனமே
நினை மனமே
தினம் அவனை நினைத்தாலே
துன்பம் பறந்திடும் அருளும் கிடைத்திடும்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கடங்கள் தீர்க்கின்ற சதுர்த்தி நாயகனே

சந்தன கணபதியே நலம் தருவாயப்பா

கல்வழை நாயகனே அருள் தருவாயப்பா

பாலும் இளநீரும் பஞ்சாமிர்தமும் நாளும் அபிசேகம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்வளையான் சந்நிதியில் கண்கள் மூடி கும்பிடவே
தொல்லயெல்லாம் நீங்கிவிடும் பாருங்க
இந்த தும்பிக்கையான் அற்புதத்தை கேளுங்க
 என்றும் கருணையின் வடிவான

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்வளை அழகோன் நாயகனே உன்னை
கைகூப்பி தொழுகின்றோம் நாயகனே
கல்வளை அழகோன் நாயகனே உன்னை
கைகூப்பி தொழுகின்றோம் நாயகனே
வல்வினைகள் நீக்கி எமை காத்திடய்யா
கல்வளையாரின்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேழ முகனே ஆளய்யா வேளை இதுவே தானையா அய்யா

வேழ முகனே ஆளய்யா வேளை இதுவே தானையா

ஈழ கருணையம் பதி தலத்தில் கோவில் கொண்ட முத்த விநாயகா

ஈழ கருணையம் பதி தலத்தில் கோவில் கொண்ட முத்த விநாயகா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தன வாசம் வீசும் சபரி காட்டிலே வாழும்

அய்யப்பா சாமியே அய்யப்பா அய்யப்பா

சுந்தர வதனம் கண்டவர் வாழ்வினிலே

சுகங்கள் ஒன்றல்ல நூறப்பா

காலையில் உதயம் காண்கின்ற பொது

கண்ணனின் மைந்தா உன் முகம்தெரியும்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஞானாம்பிகை தாயே போற்றி

ஞானலிங்கர் திருவே போற்றி

சிவமே போற்றி

இன்பத்தமிழே போற்றி போற்றி

ஞானலிங்கன் வருகிறான்

ஞானமள்ளி தருகிறான்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்

நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்

பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்

அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர்

வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை

இரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே

தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை

எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கயமுகா உனக்கென்ன தயிரியமா

சிவனிடம் வரம் பெற்ற ஆணவமா

காலனை வதம் செய்ய கங்கணமா க

டவுளை மதியாத திமிர்க்குணமா

தீர்ந்தது உன் கதை தீர்ந்தது உன் கதை

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவதழ கோபுரம் வாய்த்தவளே

நயினை நகருறையும் நாக பூசணியே

பாவ வினை நீக்கிட அப்பரவன்சல்லி

பாங்குற வீற்றிருந்து ஆள்பவளே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாகம்மை பாதத்தை நாடுமடா

இது நமக்கின்ப மோட்ச வீடடா

அலை கடல் சூழ்ந்த தலமடா

அறுபத்துனால்பீட திலகமடா

நாகம்மை பாதத்தை நாடுமடா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாரியம்மா மாரியம்மா தேரில் ஏறிவாரா இங்கு தேரில் எறிவாரா

எம்மை தேடி எல்லோ மாரியம்மா நேரில் காண வாரா

எம்மை நேரில் காண வாரா

ஊரில் உள்ள வினைகளெல்லாம் தூர ஓட்டபோறா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடிவேலன் வடிவம் கண்டேன்

மூளாயூர் வதிரன் புலோவாசல் வந்ததுமே

நெற்றிக்கண் பொறியொன்று வந்து விழுந்ததுபோல்

வெற்றிவேல் ஆயுதனின் வீடிங்கு எழுந்ததுவோ

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதி தொட்டு அரசடியில்

ஒற்றுமையே எங்கள் முதல்ப்படி

அதைத்தந்தது ஐங்கரனே உன் அருள்ப்படி

யோதி கொண்டு வாழுகின்றோம்

சொன்னபடி அப்பனே நீ

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழியோரம் கனவொன்று தெரிந்தது அய்யா

நான் விழித்தெழுந்து பார்த்தது உன் முகம் அய்யா

மனதோடு மனவலிமை சேர்ந்தது அய்யா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டாண்டு காலமாய் நாம் ஆண்ட பூமியின்


நாயகன் நல்லை  கந்தன்

அந்த வேல் காணும் நாள் எண்ணி

பாரினில் போராடும் ஊமை உள்ளம்

எந்தன் செவ்வேள் எழுந்தெப்போது நாடாளும்

நல்லைக்கந்தனே நம்மை

நம்மாளும் நாளென்று கை  கூடும் 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடு கின்றிலை கூத்துடை யான்கழற்
கன்பிலை என்புருகிப்
பாடு கின்றிலை பதைப்பதுஞ் செய்கிலை
பணிகிலை பாதமலர்
சூடு கின்றிலை சூட்டுகின் றதுமிலை
துணையிலி பிணநெஞ்சே
தேடு கின்றிலை தெருவுதோ றலறிலை
செய்வதொன் றறியேனே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்திக்குளி வைரவா அந்திக்குளி வைரவா
அருள் மழை அள்ளித்தரும் அந்திக்குளி வைரவா
எம் சந்ததியை காத்திடுவாய் அந்திக்குளி வைரவா
 அந்திக்குளி வைரவா அந்திக்குளி வைரவா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரறிவார் லீலை  விளையாடுவது அவன் வேலை
யாரறிவார் லீலை  விளையாடுவது அவன் வேலை
நீரலையை தாலாட்ட நெடுநாளாய் ஆடிநின்றான்
சூரர் குலம் வேரறுத்தான் தேவர் குலம் காத்து நின்றான்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா கண்ணா கண்ணா
காத்தருள்வாய்  காத்தருள்வாய் கண்ணா வந்தோமே
கருணை கடல் நாயகனே கண்ணா வந்தோமே
நீலமேனி கோலம் காண கண்ணா வந்தோமே
நித்தம் உந்தன் பூசை காண கண்ணா வந்தோமே 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தி நகர் கிழக்கே வல்லிபுரம் அமர்ந்த பராமதாமா
பாற்கடலில் குடியிருக்கும்

கண்ணா உன்னிடம் வந்தோம் நாம்
கருணை கடலே அருள் புரிவாய்
இன்பம் துன்பம் இரண்டிலுமே நாம்
இணைந்து வாழ்ந்திட அருள் புரிவாய்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனியாண்டி வடிவெடுத்து அமர்ந்தவனே
முனியாண்டி வடிவெடுத்து அமர்ந்தவனே
இந்த பூவுலகும் பாடுகின்ற  பரம் பொருளே  

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாம்பல் மண்ணில் வீற்றிருக்கும்  
துர்க்கை  அம்மன் தாயே
 மாநிலமும் தொழுதெற்க்கும் எங்கள் தேவி நீயே
நாடி உன்னை சரணடைந்தோம் துர்க்கை அம்மன் தாயே
 நாயகியே திருவருளால் காக்கவேண்டும் நீயே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கால கணபதி கருணை கணபதி
தர்மத்தை காத்திட வருவாயா
விரகணபதி சக்தி கணபதி
நல்வழி தந்திட வருவாயா
நிதிய கணபதி நிர்த்திய
கணபதி எம்மை காத்திட வருவாயா

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சிவபுராணம்

தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்
(திருப்பெருந்துறையில் அருளியது தற்சிறப்புப் பாயிரம்)


சிவபுராணம்
நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க
நமச்சிவாய இமைப் பொழுதும் என் நெஞ்சில்! நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க


வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன்பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரம் குவிவார் உள்மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் குழல் வெல்க

ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி ! சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீர் ஆர் பெருந்துறை நம்தேவன் அடி போற்றி

 


ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்

கண் நுதலான் தன் கருணைக் கண் காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி
விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய்
எண் நிறைந்து எல்லை இலாதானே நின் பெரும் சீர்
பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன்

புல் ஆகிப் பூடு ஆய்ப் புழுஆய் மரம் ஆகிப்
பல் விருகம் ஆகிப் பரவை ஆய் பாம்பு ஆகிக்
கல் ஆய் மனிதர் ஆய்ப் பேய் ஆய்க் கணங்கள் ஆய்
வல் அசுரர் ஆகி முனிவர் ஆய் தேவர் ஆய்ச்
செல்லா அ நின்ற இத்தாவர சங்கமத்துள்

 

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றே
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரம் ஆய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே!

வெய்யாய் தணியாய் இயமானன் ஆம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் போய் அகல வந்து அருளி
மெய்ஞானம் வி.மிளிர்கின்ற மெய்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல் விக்கும் நல் அறிவே

 

ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய்! சேயாய் நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே

கறந்த பால் கன்னலோடு நெய் கலந்தாற் போலச்
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்துடையாய்! விண்ணோர்கள் ஏத்த
மறைந்து இருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டிப்
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய

விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்த அன்பு ஆகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன் மேல் வந்து அருளி நீள் கழல்கள் காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

 

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே!
மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே!
தேசனே தேன் ஆர் அமுதே! சிவபுரனே

பாசம் ஆம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்

பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறு
ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆர் உயிர் ஆய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே

அன்பருக்கு அன்பனே! யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே! துன் இருளே! தோன்றாப் பெருமையனே
ஆதியனே! அந்தம் நடு ஆகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட் கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின்

நோக்கு அரிய நோக்கே நுணுக்கு அரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் எம் காவலனே ! காண்பு அரிய பேர் ஒளியே
ஆற்று இன்ப வெள்ளமே ! ஆத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச், சொல்லாத நுண் உணர்வாய்

 

மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே ! தேற்றத் தெளிவே ! என் சிந்தனையுள்
ஊற்றான உண்ணார் அமுதே! உடையானே
வேற்று விகார விடக்குடம்பின் உட் கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா! அரனே ஓ ! என்று என்று

போற்றிப் புகழ்ந்து இருந்து பொய் கெட்டுமெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப் பிறவி சாராமே

கள்ளப் புலக் குரம்பை கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லையுள் கூத்தனே! தென் பாண்டி நாட்டானே!

அல்லல் பிறவி அறுப்பானே! ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக் கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
    • 2013ம் ஆண்டு ல‌ண்ட‌ன் நாட்டு ஊட‌க‌மான‌ ச‌ண‌ல்4 த‌ப்பி பால‌ச்ச‌ந்திர‌னின் ப‌ட‌த்தை வெளியிட‌ அதை பார்த்த‌ லைய‌லோ க‌ல்லுரி மாண‌வ‌ர்க‌ள் போராட‌ அந்த‌ போராட்ட‌த்தை ஜெய‌ல‌லிதா காவ‌ல்துரைய‌ வைத்து குழ‌ப்பி அடிச்சா............ஆனால் அந்த‌ போராட்ட‌ம் அடுத்த‌ நாளே தமிழ‌க‌ம் எங்கும் தீயாய் ப‌ர‌விய‌து............இப்ப‌டியே போனால் த‌ன‌து க‌ட்சிக்கு ஆவ‌த்து வ‌ரும் என்று தெரிந்து தான் ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னால் அறிக்கை விட்டவ‌ர் நாங்க‌ள் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று....... அதே கூட்ட‌னில‌ இருந்த‌ திருமாள‌வ‌னும் ஊட‌க‌ம் மூல‌ம் சொன்னார் விசிக்காவும் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று...............இது தான் உண்மை ச‌ம்ப‌வ‌ம்..................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.