Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அப்துல் ஹாலிக்

(யுவன் சங்கர் ராஜா) வின் பாடல்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் ஹஜ் செய்யலாம்... வல்லோனின் காபாவை காணலாம் || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தானைத் துதிப்போமே – திருச்
சபையாரே கவி – பாடிப்பாடி
தந்தானைத் துதிப்போமே
விந்தையாய் நமக்கனந்தனந்தமான
விள்ளற்கரியதோர் நன்மை மிக மிக (2) – தந்தானை

1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து
ஒய்யாரத்துச் சீயோனே
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி
செய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும் (2) – தந்தானை

2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
கண்ணாரக் களித்தாயே
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே (2) – தந்தானை

3. சுத்தாங்கத்து நற்சபையே – உனை
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
சுத்தாங்கத்து நற்சபையே
சத்துக் குலைந்துனைச் சக்தியாக்கத் தம்மின்
ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் (2) – தந்தானை

4. சிங்காரக் கன்னிமாரே – உம்
அலங்காரக் கும்மி அடித்துப் படித்து
சிங்காரக் கன்னிமாரே
மங்காத உம் மணவாளன் இயேசுதனை
வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும் (2) – தந்தானை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விண்ணப்பத்தை கேட்பவரே

 

அன்பே, அன்பே, அன்பே
ஆருயிர் உறவே!
ஆனந்தம் ஆனந்தமே

ஒரு நாள் உம் தயை கண்டேனையா
அந்நாள் என்னை வெறுத்தேனையா
உம் தயை பெரிதையா – என் மேல்
உம் தயை பெரிதையா – அன்பே

அலைந்தேன் பலநாள் உமையும் அறியா
மறந்தே திரிந்த துரோகி ஐயா
அணைத்தீர் அன்பாலே – எனையும்
அணைத்தீர் அன்பாலே – அன்பே

பூலோகத்தின் பொருளின் மகிமை
அழியும் புல்லின் பூவைப் போல
வாடாதே ஐயா – அன்பு
வாடாதே ஐயா – அன்பே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலையாளும் தணிகேசனே
முருகா மனம் வாழும் வேலவனே
கெளரி மனோகரி சிவன் மைந்தனே
குறவள்ளிக் கொடியோடு திகழ்பவனே
என் குறைதீர்க்கும் வனவேட குருபரனே
முருகா சண்முகா குமரா . . .
திருப்புகழை நான் பாடி படியேறுவேன்
முருகா உன் இசையாலே மனம் மாறுவேன்
முகம் ஆறும் ஒன்றாகும் நிலை காணுவேன்
அதில் ஊடுவேன் இசை பாடுவேன்
மயிலோடு விளையாடும் வடிவேலவா
எந்தன் குடியேறி விளையாட வருவாயப்பா
வள்ளி மணாளா வரம் தரும் வேலா
சிவ பாலா உந்தன் அருள் வேண்டுமே
இசை பாயும் திருநாமம் கொண்டவனே கந்தா
ஈசன் முகச் சுடராய் இதம் தரும் வேலவா
வள்ளி மணாளா தணிகையின் தலைவா
வரம் வார்க்க வா வா வடிவேலவா
மறவாமல் பாடும் வரம் சேர்க்க வா
தணிகாசலா முருகா தணிகாசலா
முருகா முருகா சண்முகா சண்முகா குமரா
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா

கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா

சென்னிமலை சுப்ரமணிய சாமிக்கு . . . அரோகரா . . .

நின்றருளும் அருணாச்சலன் பிள்ளையல்லவா

தாயும் தந்தையும் நீயல்லவா

எனக்கு தாயும் தந்தையும் நீயல்லவா

முருகா சரணம் குமரா சரணம் குகனே சரணம் கந்தா சரணம்

முருகா சரணம் குமரா சரணம் அருளாரமுதே சரணம் சரணம்

சரணம் சரணம் சரணம் சரணம்

முருகா முருகா முருகா முருகா

பரிமலத்திருநீறும் உடல் மணக்கும்

ஆதி பழனி ஆண்டவன் புகழ் மணக்கும்

சிரகிரிவேலவன் சன்னிதியே

நாடி வருவோர்க்கு அருள்வான் பொன்நிதியே

அடியார்கள் கூடினார் ஆயிரம் கோடி

தேடினார் முருகனை கவசம் பாடி

ஆடினார் காவடி உன் பாதம் நாடி

நீ வாடிய எனைக்கண்டு வந்தாய் ஓடி

முருகா வந்தாய் ஓடி முருகா வந்தாய் ஓடி

சென்னிமலை மகிமை அற்புதங்கன்

அவை சொல்லி மாளாத அதிசயங்கள்

கணப்பொழுதும் தவறாத உன்நாமங்கள்

கண்கொள்ளா முருகனின் அலங்காரங்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் தோன்றிட காரணமான உத்தம நபி மகள் யாரம்மா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறைவனின் புகழ்பாட இங்கு இதயங்கள் பல கோடி
குறையெல்லாம் கடந்தவனே உன் துணை ஒன்றே நாம் தேடி

1. மறைபொருள் ஆனவனே - உன்னை
மனங்களில் சிறை வைத்தோம்
குறையுள்ள கோவிலிலே - உன்னை
கொண்டு நாம் குடிவைத்தோம்

2. அன்பு உன் பேர் அறிவோம் - தூய
அறிவென்றும் நாம் தெரிவோம்
இன்பம் நீ எனத் தெளிவோம் - நல்ல
இரக்கம் நீ என மொழிவோம்

 

ஆவே கீதம் பாடியே உன் புகழைப் பாடுவேன்
உன் அன்பின் பெருமை அகிலம் விளங்கும்
மாண்பைப் போற்றுவேன் ஆவே ஆவே ஆவே

1. பாவிகளின் ஆதரவே பாருலகோர்க்கொளியே
அன்பின் தாய் நீயே எம் குரல் கேளம்மா

2. தாயெனவே யாம் அழைப்போம் தாயன்பில் வாழுவோம்
மாய உலகினில் காத்திடுவாய் அம்மா
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியா திருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வுனான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்
அன்னை இதயமாக அன்பு வடிவமாக
வந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம்


ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்
அன்னை இதயமாக அன்பு வடிவமாக
வந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம்

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்

கடவுளிலே கருணை தன்னை காணலாம்
அந்த கருணையிலே கடவுளையும் காணலாம்

கடவுளிலே கருணை தன்னை காணலாம்
அந்த கருணையிலே கடவுளையும் காணலாம்
நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியாம்
அங்கு ஒருபோதும் மறையாது அவன் காட்சியாம்

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்

பாவமென்ற கல்லறைக்கு பலவழி
என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி

பாவமென்ற கல்லறைக்கு பலவழி
என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி
இந்த வழியொன்று தான் எங்கள் வழியென்று நாம்
நேர்மை ஒருநாளும் தவறாமல் நடைபோடுவோம்


ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்


இதயதெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்

இதயதெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்


ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் ஓம் ஓம் ஓம்
அமரஜீவிதம் சுவாமி அமுத வாசகம்
பதிதபாவனம் சாமி பக்த சாதகம் ஓம் ஓம்

அமரஜீவிதம் சுவாமி அமுத வாசகம்
பதிதபாவனம் சாமி பக்த சாதகம்
முரளி மோகனம் சாமி அசுரமர்தனம்
கீதபோதகன் श्रीகிருஷ்ண மந்திரம்

அமரஜீவிதம் சுவாமி அமுத வாசகம்
பதிதபாவனம் சாமி பக்த சாதகம்
ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்
ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்

நளின தெய்வதம் சுவாமி மதனரூபகன்
நாக நர்த்தனம் சுவாமி மான வஸ்திரம்
பஞ்ச சேவகன் சுவாமி பாஞ்சசன்யன்
கீதபோதகன் श्रीகிருஷ்ண மந்திரம் ஓம் ஓம்

அமரஜீவிதம் சுவாமி அமுத வாசகம்
பதிதபாவனம் சாமி பக்த சாதகம்
ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்
ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்
ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்
ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்

சம்யபங்கஜன் சுவாமி அம்யபுஷ்பகன்
சர்வரட்சகன் சுவாமி தர்மதத்துவம்
ராகபந்தணன் சுவாமி ராசலீலகன்
கீதபோதகன் श्रीகிருஷ்ண மந்திரம் ஓம் ஓம்

அமரஜீவிதம் சுவாமி அமுத வாசகம்
பதிதபாவனம் சாமி பக்த சாதகம்
ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்
ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்
ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகமெல்லாம்... முகமது நபி போல் முகமாகுமா || நெல்லை அபுபக்கர் | ISLAMIC SONGS.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹீரா குகையினிலே... சீராய்ப் பிறந்ததம்மா || S.P.பாலசுப்ரமணியம் | இஸ்லாமிய பாடல்கள் | ISLAMIC SONGS.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவின் கரங்கள் ஒன்றாய் இணையும் நேரம்
பகிர்வின் பூக்கள் பலியாய் மலரும் நேரம்
நம் இயேசுவுடன் அணியாய் வருவோம் - அவர்
வார்த்தைகளை இனி வாழ்வாய் அணிவோம்
வருக அன்பின் இறையாட்சியே வருக வருக
எழுக மனித இறையுறவில் எழுக எழுக (2)

1. நமை வீழ்த்திடும் சுமை யாவையும் பலியாக்கிடுமுன்
மத பேதங்கள் இனப் பிளவுகள் நம்மில் மாற்றிடுவோம் (2)
மனிதம் மகிழ்ந்திடும் எளியோரின் உயர்வில்
இறைமை மலர்ந்திடும் அன்பால் எழும் உலகில் (2) வருக...

2. இறைவார்த்தையை நிதம் வாழ்வினில் நிகழ்வாக்கிடுவோம்
பெறும் மகிழ்வினைப் பிறர் வாழ்விலும் பகிர்வாக்கிடுவோம் (2)
உழைக்கும் உயிர்களில் தெய்வீகம் உறையும்
உறவின் சக்தியில் உரிமைக் கதிர் உதிக்கும் (2) வருக .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழனிமலை ஆண்டவனே தண்டபாணி

 

கஜானனா ஓம் கஜானனா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீயல்லால் தெய்வமில்லை எனது 
நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா
நீயல்லால் தெய்வமில்லை எனது 
நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா
நீயல்லால் தெய்வமில்லை எனது 
நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா
நீயல்லால் தெய்வமில்லை
முருகா முருகா முருகா

தாயாகி அன்புப் பாலூற்றி வளர்த்தாய்
தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய்
தாயாகி அன்புப் பாலூற்றி வளர்த்தாய்
தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய்
குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய் ஞான
குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்
திருவே நீ என்றும் என் உள்ளம் நிறைந்தாய்
திருவே நீ என்றும் என் உள்ளம் நிறைந்தாய்
நாயேனை நாளும் நல்லவனாக்க
நாயேனை நாளும் நல்லவனாக்க
ஓயாமல் ஒழியாமல் உன்னருள் தந்தாய்
ஓயாமல் ஒழியாமல் உன்னருள் தந்தாய்
நீயல்லால் தெய்வமில்லை எனது 
நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா
நெஞ்சே நீ வாழும் எல்லை

வாயாரப் பாடி மனமார நினைந்து
வணங்கிடலே என்தன் வாழ்நாளில் இன்பம்
வாயாரப் பாடி மனமார நினைந்து
வணங்கிடலே என்தன் வாழ்நாளில் இன்பம்
தூயா முருகா மாயோன் மருகா
தூயா முருகா மாயோன் மருகா
தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம் உன்னைத்
தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்

நீயல்லால் தெய்வமில்லை எனது 
நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா
நீயல்லால் தெய்வமில்லை
முருகா முருகா முருகா

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.