Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குதம்பாய்

அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப் 
பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
பிண்டத்துள் பார்ப்பாயடி.

தீர்க்க ஆகாயம் தெரியாத தன்மைபோல் 
பார்க்கப் படாதானடி குதம்பாய்
பார்க்கப்படா தானடி.

வெட்டவெளிக்குள் வெறும்பாழாய் நின்றதை 
இட்டமாய்ப் பார்ப்பாயடி குதம்பாய்
இட்டமாய்ப் பார்ப்பாயடி.

தாவார மில்லை தனக்கொரு வீடில்லை 
தேவார மேதுக்கடி குதம்பாய்
தேவார மேதுக்கடி.

என்றும் அழியாமை எங்கும் நிறைவாகி 
நின்றது பிரமமடி குதம்பாய்
நின்றது பிரமமடி.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீ இல்லாமல் இந்த உலகம் ஏது எங்கள் இறைவா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலங்காதே மனமே  திகையாதே மனமே
கன்மலையாம் கிறிஸ்து கைவிடவே மாட்டார்

1.கவலைப்படாதே கண்ணீர் சிந்தாதே
கடைசிவரை உன்னை கைவிடமாட்டார்

2.அநாதி தேவனே உனது அடைக்கலம்
அவரது புயங்கள் உந்தன் ஆதாரம்

3.அண்டிக்கொள் இயேசுவை அடைக்கலம் அவரே
ஆதரிப்பாரே அமைதிகொள் மனமே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்லவி
ஓடோடி வந்தேன் கண்ணா நான்
உனக்கும் எனக்குமுள்ள உறவின்று அறிந்து


அனுபல்லவி
கோடானுகோடி தவம் செய்து உனைக்காண
கோவிந்தா என்றழைத்து பிருந்தாவனத்திடை


சரணம்
குழலூதும் எழில் காணவே கூடும்
கோபியர்கள் முகம் நாணவே காதல்
விழியுன்றன் முகம் நாடவே
முறுவல் இதழோரம் சுழித்தோடவே

ஜகன்னாதன் இசை பாட நங்கை ஜதி போட
கால காலமெல்லாம் ஸ்ருதியும் லயமுமென
வேதப்-பொருள் உன்னில் ஒன்றி உறைந்திடவே
போதம் மிகு காதல் பொன்னடி தனில் கொண்டு
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடி கிருத்திகை திருத்தணி முருகன் கவசம்
குரலிசை : வாணி ஜெயராம்
இசை : சுரும்பியன்
அருளியவர் : பாலதேவராய ஸ்வாமிகள்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ண
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோர்க்கும் சொந்தம் நபி நாயகம்

எல்லோர்க்கும் சொந்தம் நபி நாயகம் !
அவர் இல்லாமல் இல்லை இந்த நாநிலம்!

கோத்திரம் குலங்களும்
தேசமும் மொழிகளும்
மாறிய போதிலும்
மண்ணகமெங்கிலும் !

ரஹ்மத்துன்லில் ஆலமீன் !
ராஹத்துல் ஆஷிக்கீன் !
சொர்க்கத்தின் ஜோதியாம் !
சைய்யிதுன் முர்ஸலீன் !!

 

Edited by உடையார்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம்
ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம்
ஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிறாம்
ஒவ்வொரு மனிதனும் இன்னொரு இயேசுவாம்..!
அந்த இயேசுவை உணவாய் உண்போம் 
இந்த பாரினில் அவராய் வாழ்வோம் 


இருப்பதை பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலுமில்லையே
இழப்பதை வாழ்வென ஏற்றிடும் இலட்சியம் இறுதியில் வெல்லுமே
வீதியில் வாடும் நேரிய மனங்கள் நீதியில் நிலைத்திடுமே 
நம்மை இழப்போம் பின்பு உயிர்போம்
நாளைய உலகின் விடியலாகவே !

பாதங்கள் கழுவிய பணிவிடை செயலே வேதமாய் ஆனதே
புரட்சியை ஒடுக்கிய சிலுவை கொலையே புனிதமாய் நிலைத்ததே
இயேசுவின் பலியும் இறப்பும் உயிர்ப்பும் இறையன்பின் சாட்சிகளே 
இதை உணர்வோம்  நம்மை பகிர்வோம் 
இயேசுவின் கொள்கைகள் நம்மில் வாழவே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடினயே கண்ணா பிருந்தாவனம் தனில்
ஆனந்த ரசமய அற்புத நடனம்
(ஆடினயே)

ஈடிலா அழகிய கோபியர் உனைத்தேடி
நாடி வந்தார் நதிக்கரை நிலவொளியில்
(ஆடினயே)

மயில் பீலி சற்றே கொண்டைதனில் அசைய
நவரத்ன மகுடம் சிரம்தனில் ஒளிர
மகர குண்டலங்கள் இருசெவி இலங்க
மதிமுகம் தனிலே முறுவல் விளையாட

மணம் கமழ் மாலைகள் மார்பில் அசைந்தாட
மயங்கும் அந்திவண்ண ஆடை இடையாட
மதுர மோகன குழலிசை கூட்ட
மங்கையர் கண்கள் மையல் காட்ட

மலர்கழல் சதங்கை ஜதிலயம் கூட்ட
மனமறிந்து அருள்சொறிந்து
இணைந்து ஒன்றாய்
(ஆடினயே)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தன் குமரன் வள்ளி குறத்தி மானை துரத்தி வந்தானே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் எனும் பிரணவ உரு அமைத்தாய்
ஞான விநாயகா வரம் தருவாய்
நாவினில் நல்லிசை அருள்வாய்.

முன்னவா மூத்தவா முழுமுதலே
மூண்டிடும் வினைகளை தீர்த்தருளே
அண்ணலே நின்மலரடி பணிந்தேன்
அனுதினம் பாடியே மனமகிழ்ந்தேன்.

அடியாரைக் காக்கும் சண்முக சோதரனே
ஆதி அந்தப் ப்ரபுவாக அவதரித்தாய்
தாயும் நீ தந்தை நீ சகலமும் நீ
சரணம் உன்சரணமே சரணம் ஐயா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தில்லைவாழ்அந்தணர்தம் அடியார்க்குமடியேன்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும்
நீ வழியாகும் என் வாழ்வுக்கு துணையாகும்
அரணும் நீயே கோட்டையும் நீயே
அன்பனும் நீயே நண்பனும் நீயே
இறைவனும் நீயே

நீ வரும் நாளில் உன் அமைதி வரும் - உன்
நீதியும் அருளும் சுமந்து வரும்
இரவின் இருளிலும் பயம்விலகும் - உன்
கரத்தின் வலிமையில் உயர்வு வரும்
கால்களும் இடறி வீழ்வதில்லை
தோள்களும் சுமையாய் சாய்வதில்லை
என் ஆற்றலும் வலிமையும் நீயாவாய்   (2) -நீ ஒளியாகும்

விடியலைத் தேடிடும் விழிகளிலே புது
விளக்கினை ஏற்றிடும் பேரொளி நீ
பால்நினைந்தூட்டும் தாயும் என்
பால்வழி பயணத்தின் பாதையும் நீ
அருவிக்கு நடத்திடும் ஆயனும் நீ
அகமனம் அமர்ந்தென்னை ஆள்பவன் நீ
என் மீட்பரும் நேசரும் நீயாகும்   (2) -நீ ஒளியாகும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேல்முருகா வேல்முருகா  வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா  வேல்முருகா வேல்

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
தண்டாயுதபாணி தெய்வத்துக்கு அரோகரா

வள்ளிக்குறத்தியின் உள்ளம் கவர்ந்தவா
வாராயோ வேல் முருகா

மனக்குன்றிலேறும் பரங்குன்றநாதா
வேலேறி வா முருகா

புள்ளிக் கலாபமயில் துள்ளி அமர்ந்தவா
புகழாளும் வேல் முருகா

புறம் வென்ற நாதன் முகம் வந்த பாலா
கொடியோடு வா முருகா

ராஜாதி ராஜனே சந்யாசி கோலனே
நீராடும் வேல் முருகா

பழம் தந்தநாதா பழம் கண்டநாதா
உன் பாதங்கள் தா முருகா

செந்தூரில் மண்ணிலே நின்றாடி வென்றவா
சீரலைவாய் வேல் முருகா

உன் மந்தகாசம் அதில் நெஞ்சமாரும்
நிலை என்றும் வேணும் முருகா

வண்டாடும் சோலையும் கொண்டாடும் வேலவா
வாராயோ வேல் முருகா

வரம் தந்து ஆள மலை நின்ற தேவா
உன் நாமங்கள் தேன் முருகா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கானமழை பொழிகின்றான்-கண்ணன்
யமுனாதீரத்தில் யாதவகுலம் செழிக்க (கானமழை)
 
ஆனந்தமாகவே அருள்பெருகவே
முனிவரும் மயங்கிடும் மோகனரூபன் (கானமழை)
 
குயிலினம் கூவிட மயிலினம் ஆடிட
ஆவினம் கரைந்திட அஞ்சுகம் கொஞ்ச
கோவலர் களித்திட கோபியர் ஆட
கோவிந்தன் குழலூதி (கானமழை)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீ எந்தன் பாறை என் அரணான இயேசுவே - 2 
நீ எந்தன் உள்ளத்தின் அணையாத தீபமே 
அணையாத தீபமே இயேசுவே இயேசுவே - 2

1. ஒளி கொண்டு தேடினால் இருள் நில்லுமோ 
உன் துணையில் வாழ்கையில் துயர் வெல்லுமோ (2) 
தடைகோடி வரலாம் உள்ளம் தவித்தோடி விடலாம் - 2 
ஆனாலும் உன் வார்த்தை உண்டு 
எது போனாலும் உனில் தஞ்சம் உண்டு இயேசுவே இயேசுவே - 2

2. இரவுக்கும் எல்லை ஓர் விடியலன்றோ 
முடிவாக வெல்வதும் நன்மையன்றோ (2) 
தளராது வாழ்வோம் அருள் அணையாது காப்போம்-2 
என்றென்றும் உன் ஆசீர் கொண்டு 
வரும் நல்வாழ்வைக் கண்முன்னே கொண்டு 
இயேசுவே இயேசுவே - 2

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பால் மணக்குது ... பழம் மணக்குது ... பழனி மலையிலே 
பால் மணக்குது ... பழம் மணக்குது ... பழனி மலையிலே

பாரைச் சுற்றி முருக நாமம் எங்கும் ஒலிக்குதாம்
பழனி மலையைச் சுற்றி முருக நாமம் எங்கும் ஒலிக்குதாம்

முருகா உன்னைத் தேடித்தேடி எங்கும் காணேனே ... அப்பப்பா
முருகா உன்னைத் தேடித்தேடி எங்கும் காணேனே

எங்கும் தேடி உன்னைக் காணா மனமும் வாடுதே 
எங்கும் தேடி உன்னைக் காணா மனமும் வாடுதே 


முருகா உன்னைத் தேடித்தேடி எங்கும் காணேனே

தேன் இருக்குது ... தினை இருக்குது ... தென் பழனியிலே

முருகா ...........முருகா ......முருகா.........முருகா.......

தேன் இருக்குது ... தினை இருக்குது ... தென் பழனியிலே
தெருவைச் சுற்றி காவடி ஆட்டம் தினமும் நடக்குதாம்

பால் காவடி பன்னீர்க் காவடி புஷ்பக் காவடியாம் 
பால் காவடி பன்னீர்க் காவடி புஷ்பக் காவடியாம்

சக்கரக் காவடி சந்தனக் காவடி சேவற் காவடியாம்
சர்பக் காவடி மச்சக் காவடி புஷ்பக் காவடியாம்
மலையைச் சுற்றி காவடி ஆட்டம் தினமும் நடக்குதாம்

வேலனுக்கு ... அரோகரா
முருகனுக்கு ... அரோகரா
கந்தனுக்கு ... அரோகரா

அதோ வராண்டி பழனி ஆறுமுகன் தாண்டி
அவன் போனா போராண்டி முருகன் தானா வாராண்டி

வேல் இருக்குது ... மயில் இருக்குது ... விராலிமலையிலே 
வேல் இருக்குது ... மயில் இருக்குது ... விராலிமலையிலே

அந்த விராலிமலையிலே

மலையைச் சுற்றி மயிலின் ஆட்டம் தினமும் நடக்குதாம்
 விராலி மலையைச் சுற்றி மயிலின் ஆட்டம் தினமும் நடக்குதாம்

முருகா உன்னைத் தேடித்தேடி எங்கும் காணேனே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணபதியே வருவாய்
அருள்வாய் கணபதியே வருவாய்
அருள்வாய் கணபதியே வருவாய்
மனம் மொழி மெய்யாலே
தினம் உன்னைத் துதிக்க
ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
மனம் மொழி மெய்யாலே
 தினமுன்னைத் துதிக்க
 மங்கள இசையென்தன்
நாவினில் உதிக்க
 மங்கள இசையென்தன்
 நாவினில் உதிக்க
 கணபதியே வருவாய்
 ஏழு சுரங்களில் நானிசை பாட
 எங்குமே இன்பம் பொங்கியே ஓட
 ஏழு சுரங்களில் நானிசை பாட
 எங்குமே இன்பம் பொங்கியே ஓட
 தாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட
 தாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட
 தரணியில் யாவரும் புகழ்ந்து கொண்டாட
 கணபதியே வருவாய்
தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்க
 தொனியும் மணியென
கணீரென்றொலிக்க
 தூக்கிய துதிக்கை
 வாழ்த்துக்கள் அளிக்க
தொனியும் மணியென
 கணீரென்றொலிக்க
ஊத்துக நல்லிசை
உள்ளம் களிக்க
உண்மை ஞானம்
 செல்வம் கொழிக்க
கணபதியே வருவாய்
 அருள்வாய் கணபதியே வருவாய்

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.