Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஞானம் நிறை கன்னிகையே
நாதனைத் தாங்கிய ஆலயமே
மாண்புயர் ஏழு தூண்களுமாய் - 2
பலிபீடமுமாய் அலங்கரித்தாயே 

பாவ நிழலே அணுகா
பாதுகாத்தார் உன்னையே பரமன்
பாவ நிழலே அணுகா
தாய் உதரம் நீ தரித்திடவே - 2
தனதோர் அமல தலமெனக் கொண்டார் - 2 
 

 

ஞானம் நிறை கன்னிகையே
நாதனைத் தாங்கிய ஆலயமே
மாண்புயர் ஏழு தூண்களுமாய் - 2
பலிபீடமுமாய் அலங்கரித்தாயே 

பாவ நிழலே அணுகா
பாதுகாத்தார் உன்னையே பரமன்
பாவ நிழலே அணுகா
தாய் உதரம் நீ தரித்திடவே - 2
தனதோர் அமல தலமெனக் கொண்டார் - 2 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இடம் உண்டு

(எனக்கும் இடம் உண்டு
அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
எனக்கும் இடம் உண்டு)

அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
எனக்கும் இடம் உண்டு

கார்த்திகை விளக்கு பெண்களுடன்
திருக் காவடி சுமக்கும் தொண்டருடன் (2)

தினம் பூத்திடும் ஞான மலர்களுடன்
ஒரு புல்லாய் முளைத்து தடுமாறும்
புல்லாய் முளைத்து தடுமாறும்

(எனக்கும் … )

நேற்றைய வாழ்வு அலங்கோலம்
அருள் நெஞ்சில் கொடுத்தது நிகழ்காலம் (2)

வரும் காற்றில் அணையா சுடர்போலும்
இனி கந்தன் தருவான் எதிர்காலம்
கந்தன் தருவான் எதிர்காலம்

(எனக்கும் … )

ஆடும் மயிலே என்மேனி
அதில் அழகிய தோகை என் உள்ளம் (2)

நான் உள்ளம் என்னும் தோகையினால்
கந்தன் உறவு கண்டேன் ஆகையினால்
உறவு கண்டேன் ஆகையினால்

(எனக்கும் … ).

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன்
திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம் ஆ..ஆ
திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன்
திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம் அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம்

வரிசை வரிசை என அழகுக் காவடிகள் தணிகை வேலன் அவன் சன்னிதி தேடி ஆ..
வரிசை வரிசை என அழகுக் காவடிகள் தணிகை வேலன் அவன் சன்னிதி தேடி
வருகின்ற காட்சி பாருங்கள் இந்த ஆனந்தமெல்லாம் எதிலுண்டு சாட்சி கூறுங்கள் ஆ

திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன்
திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம் அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம்

கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு
ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார்
கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு
ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார் இங்கே
ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார்

காவடிகள் பால் காவடிகள் பழக் காவடிகள் புஷ்பக் காவடிகள் மச்சக் காவடிகள் பன்னீர்க் காவடிகள்
சேவற்காவடிகள் சர்ப்பக் காவடிகள் சிற்பக் காவடிகள் தீர்த்தக் காவடிகள்
பால் கவடி பழக் காவடி புஷ்பக் காவடி சேவற்காவடி மச்சக் காவடி

கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு
ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார்
கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு
ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார் இங்கே
ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார் தேடி வருவார்

வடிவேல் முருகனுக்கு அரோகரா
வேலிருக்க வினையுமில்லை மயிலிருக்க பயமுமில்லை
திருத்தணி முருகனுக்கு அரோகரா
வேலிருக்க வினையுமில்லை மயிலிருக்க பயமுமில்லை
அணைவோம் கந்தன் சேவடி என ஆசை கொண்டு எடுத்தோம் இந்தக் காவடி
அணைவோம் கந்தன் சேவடி என ஆசை கொண்டு எடுத்தோம் இந்தக் காவடி

கந்தனிடம் உந்தனையே சொந்தமென விட்டுவிடு
சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே - உன்
சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே
முருகனருள் கூட வருமே

கந்தனிடம் உந்தனையே சொந்தமென விட்டுவிடு
சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே - உன்
சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே
சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே - உன்
சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே
முருகனருள் கூட வருமே கந்தனாருள் கூட வருமே
குமரன் அருள் கூட வருமே

 

Link to comment
Share on other sites

ஆத்தங்கரை சண்டியர்
யாழ்ப்பாணத்தில் தொண்டைமானாற்றில் இருக்கும் பிரசித்தமான முருகன் ஆலயம் செல்வச்சந்நிதி. இன்றும் வாய்கட்டி பூசை நடைபெறும் தலமாகும்.
 
வரிகள் - உமாகரன் ராசையா
இசை - சிந்துஜன் வெற்றிவேல்
பாடியவர் - பவனுஜா கஜாகரன்

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அழகு உன் அருள் அழகு 
என்ன அழகு உன் அன்பழகு (2)*
ஏவனின் நீர்ச்சுமையே...  தாவீதின் கோபுரமே...  
சாரோனின் மலரழகே...  சீயோனின் அருள் மகளே...  
                                (என்ன அழகு...)* அம்மா 
1. கன்னிமையின் தூய்மையும் தாழ்ச்சியின் மென்மையும் 
வார்த்தையின் உண்மையும் கொள்ளைக்கொண்டதே
என்னை கொள்ளைக்கொண்டதே... (2)
ஏசுவின் தாசனாய் என்னை வாழவைத்ததே – 2 
அன்பே... அருளே... அமுதே... அழகே... நீ வாழ்க... - 2
                                                      (என்ன அழகு...)* அம்மா


2. அன்பு விழி கருணையும் வாழ்வினில் எளிமையும்
விதையாய் என் நெஞ்சினில் 
விளைந்திடுமே கணிந்திடுமே (2)
வளமையும் வசந்தமும் தஞ்சம் கொள்ள வந்ததே – 2 
அன்பே... அருளே... அமுதே... அழகே... நீ வாழ்க... - 2
                                                      (என்ன அழகு...)* அம்மா
 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டாட்டு காலமாய் நாம் ஆண்ட பூமியின் நாயகன் நல்லை கந்தன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவாரம் : மாதர் மடப்பிடி
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : முதல் திருமுறை
பண் : யாழ்மூரி
தலம் : தருமபுரம்

மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்
  நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்
  அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர்
வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை 
  இரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே
தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை
  எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

நீ இருக்க எனக்கு பயமேது முருகா

 

1995 அந்த‌ கால‌ப் ப‌குதியில் மீசாலையில் அத்தை வீட்டை த‌ங்கி இருந்தேன் உடையார் அண்ணா ,அத்தை வீட்டில் சிவ‌பெருமானின் ப‌ட‌த்துக்கு கீழ‌ யாம் இருக்க‌ ப‌ய‌ம் ஏன் என்று த‌மிழில் எழுதி இருந்த‌து 

அதற்கு பிற‌க்கு நான் போகும் இட‌ம் எல்லாம் சிவ‌பெருமான் 🙏
 

உடையார் அண்ணா என‌க்கு உங்க‌ளிட‌ம் பிடிச்ச‌து எல்லா க‌ட‌வுளுக்கும் நீங்க‌ள் கொடுக்கும் ம‌ரியாதை , சில‌ர் அன்மையில் சைவ‌ ம‌த‌ம் இந்து ம‌த‌த்தில் இருந்து ம‌த‌ம் மாறி விட்டு போடும் கூத்துக‌ளை பார்க்கும் போது உண்மையில் கோவ‌த்துட‌ன் கூடிய‌ எரிச்ச‌ல் வ‌ரும் ,

என‌க்குள் ம‌த‌ வெறி ஒரு போதும் இருந்த‌து இல்லை , ந‌ல்ல‌ ம‌ன‌சு இருந்தால் அந்த‌ ம‌ன‌சில் நாங்க‌ள் நேசிக்கும் க‌ட‌வுள்க‌ளும் இருப்பின‌ம் 🙏🙏🙏

🙏🙏🙏🙏

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமான் நபிகள் தோன்றாவிட்டால்... குர் ஆன் வந்தே ||இசை முரசு E.M.நாகூர் ஹனிபா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியாரே
புதுமைகளை புரியும் எங்கள புனித அந்தோணியாரே
சரணமய்யா சரணமய்யா உந்தன் பாதம் சரணமய்யா 

துன்பப்படும் எங்களுக்கு சஞ்சீவி நீரே
துன்பம் பிணி வறுமைகளை களைபவரும் நீரே
ஆறு மலை காடுகளை கடந்து வந்தோமே
அழுது புலம்பும் எங்களுக்கு ஆறுதல் நீரே
சரணமய்யா...

நற்கருணை மகிமையதை உணத்தியவர் நீரே
நற்செய்தி போதித்த போதகரும் நீரே
உயிருள்ள இயேசுவிற்காய் வாழ்வைத் தந்தாயே
உம்மைப் போல வாழ்ந்து காட்ட வரம் தருவாய் நீரே
சரணமய்யா...

பரிசுத்தம் விளங்குகின்ற லீலி மலர் நீரே
உன்னதமாம் எழ்மையின் மாதிரியும் நீரே
கரமதிலே பாலனை சுமந்து நின்றாயே
கருணைக் கொண்டு வேண்டுதலை பரிந்துரைப்பாய் நீரே
சரணமய்யா...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஞான சூரியன் உனது வதனமாம்  ஞானத்துந்துபி உனது  நயனமாம் 
ஒன்று சேர பெரும் விந்தையானவா போற்றி குருவே போற்றி 
வரம் அளித்திடும் உனது பாதமே போற்றி குருவே போற்றி

குரு பகவானே சரணம்(2)  கோடி நலம் அருளும் பார்வையின் ஈசா பதம் சரணம் நிதம் சரணம்  
மஞ்சள் ஆடைக்  கொண்ட நாயகா ஆளும் ஞான காலகா  
வேதம் கண்ட  ஈஸ்வரா வியாழன் என்னும் மன்னவா 
தேவ லோகம்  போற்றுகின்ற எங்கள் யுவநாதா 
குருவே சரணம் உந்தன் குருவடி சரணம் ஐயனே என்றும் நீதானே அறிவின் கிரகணம் (2)
குரு பகவானே சரணம் கோடி நலம் அருளும் பார்வையின் ஈசா பதம் சரணம் நிதம் சரணம்

கரம் இருக்குமோர் கமண்டலம் கருணை என்பதோ அதில் ஜலம் 
கணக்கேதும் இல்லாமல் நீ அருள்பவன் தானே 
அதை கவிழ்த்தாலும்  ஜீவ வெள்ளமே குரு பகவானே   (2)
திருமுகப்பார்வை சிறிதே சேர்த்து எறுவினை  எங்கள் மனதில் ஊற்று 
கஜமதில் உலவும் கனகநாதனே குருபகவானே     (2) 
வில்லும் மீனும் ஆளும் அரசே வாக்கில் நின்றிட வேண்டினோம் 
வியாழக்கிழமை வாரந்தோறும் தீபமேற்றியே போற்றினோம் (2)
ப்ரஹஸ்பதியே சுடர் நிதியே ஜாதகமெங்கிலும் சாதகமாகிட வேணும் குருவே வா 
குருவே சரணம் உந்தன் குருவடி சரணம் ஐயனே என்றும் நீதானே அறிவின் கிரகணம் (2)
குரு பகவானே சரணம் கோடி நலம் அருளும் பார்வையின் ஈசா பதம் சரணம் நிதம் சரணம்

தவவிளக்கமே தரும் கரம் தண்டம் ஏந்திடும் இடப்புறம் 
எமக்காக தவமுகம் காட்டும் குருபகவானே 
இங்கே எமக்காக  அறிவொளி ஏற்றும் ஜெபனிலையானே (2)
அபயமாய் தோன்றும் வரமாய்  உந்தன் அருளினைக் காட்டும் கரமே கொண்டு  
ஆங்கீரசனின் சுதனே எம்மை அணைக்க வேணும்   (2)
உபதேசங்கள் நிகழுமிடத்தில் உறையும் தீதாம்பரநாதா  
உன்னை நினைந்து வலமாய் வந்தோம் உறுதுணை செய்வாய் சந்தானா  (2)
குரு பலமே தரவருவாய் கோளில் நின்று கோலம் காணும் எங்கள் குருதேவா
குருவே சரணம் உந்தன் குருவடி சரணம் ஐயனே என்றும் நீதானே அறிவின் கிரகணம் (2)
குரு பகவானே சரணம் கோடி நலம் அருளும் பார்வையின் ஈசா பதம் சரணம் நிதம் சரணம்
மஞ்சள் ஆடைக் கொண்ட நாயகா ஆளும் ஞான காலகா  
வேதம் கண்ட  ஈஸ்வரா வியாழன் என்னும் மன்னவா 
தேவ லோகம்  போற்றுகின்ற எங்கள் யுவநாதா 
குருவே சரணம் உந்தன் குருவடி சரணம் ஐயனே என்றும் நீதானே அறிவின் கிரகணம் (2)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
வரம் வேண்டு வருவோர்க்கு அருள்வாண்டி அவன்
வரம் வேண்டு வருவோர்க்கு அருள்வாண்டி ஆண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி

சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அந்த
சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அன்று
சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி அன்று
சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி
நவலோக மணியாக நின்றாண்டி
நவலோக மணியாக நின்றாண்டி என்றும்
நடமாடும் துணையாக அமைந்தாண்டி என்றும்
நடமாடும் துணையாக அமைந்தாண்டி அவன் தாண்டி

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப்
பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி
பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப்
பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி
காலாற மலையேற வைப்பாண்டி
காலாற மலையேற வைப்பாண்டி
கந்தா என்றால் இங்கு வந்தேனென்று
கந்தா என்றால் இங்கு வந்தேனென்று சொல்லி

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி
பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி திருப்
புகழ்பாடி வருவார்கள் கொண்டாடி திருப்
புகழ்பாடி வருவார்கள் கொண்டாடி

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி
பழனி மலையாண்டி பழனி மலையாண்டி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காண கண்ணாயிரம் வேண்டும்
ராகம்:  கர்நாடக தேவகாந்தரி 
இயற்றியவர் : அருளவன் 

விருத்தம்:
சந்தனமும் ஜவ்வாதும் சேர்ந்து மணம்கமழ
பாலபீஷேகமுடன் வெற்றிதிருநீர் அணிந்து 
தங்கரத தேரினிலே பக்தர்ப்படை சூழ்ந்துவர 
வள்ளி தெய்வயானையுடன் காட்சிதரும் 

உன்னழகை காண ஆயிரம் காணவேண்டும் 
முருகனை காண  கண்ணாயிரம் வேண்டும் 
முருகனை காண ஆயிரம் காணவேண்டும் 
வேலணை காண கந்தனை காண குமரனை 
காண ஆயிரம் காணவேண்டும் 

உலகலந்த வல்லவனை வண்ண மயில் வாகனை 
கணபதி சோதரனை தந்தைஸ்வாமி ஆனவனை || (காண)

சரவணை காண சிவகுமரனை காண ஆயிரம் காணவேண்டும் 
செங்கதிரும் முழுமதியும் செர்ந்தணிந்த சுந்தரனை 
விண்ணகமும் மண்ணகமும் காத்துநிற்கும் அருளகனை ||

முருகனை காண ஷண்முகனை காண 
வேலணை காண சிவபாலனை காண 
ஆறுமுகனை காண கந்தனை காண
குகனை காண கடம்பனை காண  
குருபரனை காண கார்த்திகேயனை காண 
மயில்வாகனை காண பழனி வேலணை காண
உன்னை கானா கண் ஆயிரம் வேண்டும் முருகா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: சிந்து பைரவி.
ராகம். நாட்டை
முத்துஸ்வாமி தீக்‌ஷிதர் கிருதி.
பாடியவர்: கே.ஜே. யேசுதாஸ்.
+
ஸ்ரீ மஹா கணபதிம்
ஸ்ரீ மஹா கணபதிம்- மனஸா ஸ்மராமி
மஹா கணபதிம் - மனஸா ஸ்மராமி
மஹா கணபதிம் - மனஸா ஸ்மராமி
மஹா கணபதிம் மனஸா ஸ்மராமி 
வஷிஷ்ட வாம தேவாதி வந்தித
மஹா கணபதிம் மனஸா ஸ்மராமி 
வஷிஷ்ட வாம தேவாதி வந்தித
மஹா கணபதிம்... ஆ ஆ ஆ...
.
மஹா தேவ சுதம்
ஆ ஆஅ ஆ.....
மஹா தேவ சுதம் - குரு குக நுதம்
மஹா தேவ சுதம் - குரு குக நுதம்
மாரகோடி ப்ரகாஷம் சாந்தம்
மாரகோடி ப்ரகாஷம் சாந்தம்
மஹா காவ்ய நாடகாதிப்ரியம்,
மஹா காவ்ய நாடகாதிப்ரியம்,
மூஷிக வாகன் மோதக்ப்ரியம்
மஹா காவ்ய நாடகாதிப்ரியம்,
மூஷிக வாகன் மோதகப்ரியம்,
மஹா கணபதிம். மனஸா ஸ்மராமி
வஷிஷ்ட வாம தேவாதி வந்தித மஹா கணபதிம்...!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் தீர்த்திடும் கங்கையும் பாலின் வெண்ணிற பிறை திங்களும்
மேவிடும் பனி மேருவும் கொண்ட ஈசனே பரமேசனே. 

பாவ கங்ககைள் பாய்ந்தது ஓடிடும் பாழ் மனத்துப் பராரி யான்
சீவனே கொண்டு செல்கிறேன் சீர் என் சிந்தையுள் செலுத்துவாய். 

கூப்பிடும் கைகள் கொண்டுனைத்தொழும் கோடி கோடி நற்த்தேவரும்
கூவுவார் கூடிப்பாடுவார் ஏற்றும் குன்றுரு கொண்ட குருவனே. 

காப்பிடும் காயத் தோப்பிலே காலம் போக்கிடும் கடைக்கேடன் யான்,
காத்து நீ கரை சேர்த்திடாய் எனை ஏற்றிடார் தாளில் ஏற்றுவாய். 

மெய்யிலே நான்மறையிலே நடு மய்யென உள் உறைந்தவா,
தையர்க்கே தன்னை தந்தவா தயை கொண்டவா தாயின் மேலவா. 

பொய்யிலே புழுப்பையிலே கிடந்தையனே இன்றற்றுவேர்,
மெய்யுளகத்துக்கேற்றியே எந்தன் மேன்மைக்கே கைக்கள் காட்டுவாய். 

பிச்சையே உணத்திச்சையாய் கொண்டு சுற்றி காடு திரிந்தவா,
எச்சில் வைத்து ருசித்துதந்ததை மெச்சி உண்ட மேலானவா.

பிச்சையாய் வினை மிச்சமே இட்ட நச்சு தேகம் கிடக்கிறேன்,
மெச்சிவாய் புகழ்ந்தேற்றினேன் எனை மெல்ல மலர்த்தாழ் ஏற்றுவாய். 

எண்ணிலாதவர் எண்ணிடும் எண்ணற்க்கரியவா எமக்குரியவா,
எண்ணிடில் எண்ணற்க்கெளியவா பாண்டிதென்னவா எங்கள் மன்னவா.

எண்ணிடா வந்தத்தேகமே இதில் என்னதான் பன்னற்க்காகுமோ,
அன்னலே கண்ணின் மின்னலால் இந்த பின்னலை பிரித்தோட்டிடு.

உன்னை நாடியற்க்கென்சுழி எனை தன்னைப்போல் செய்த தன்மையா,
பின்னை நாடிய அன்பர் பின்னமும் தீர்க்கும் அன்னலை கொண்டவா.

உன்னை பாடிடும் என்னை நீ இனி என்ன செய்திட போகிறாய்,
அன்பினால் அருட்கண்ணில் நோக்கி உன் மென்மலரடி சேர்த்திடு. 

ரமணசர்குரு ரமணசர்குரு ரமானசர்குரு ராயனே.. 
ரமணசர்குரு ரமணசர்குரு ரமானசர்குரு ராயனே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே...
சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே...
முன்னம் நிகழ்ந்ததெல்லாம் மனக்கண் முன்னாலே தோன்றிடுதே.. இன்னம் நினைந்திருந்து நெஞ்சம் அலை பாய்ந்து தவிக்கிறதே...ஏ
சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே...
(பால ரமணர் குரல்)
அருணாச்சலா...
அருணாச்சலா...
அருணாச்சலா...
அன்றொரு நாள் மரண பய சோதனையில்,
கொன்று விட்டான் ,தான் என்னும் தன்னை விசாரனையில்...
கட்டிய ஆடைகள்,சாதி குலத்தையும் தொட்டவிழ்த்தான்,
ஒட்டி வளர்ந்த தலை முடி தன்னை மொட்டையிட்டான்..
அண்ணாமலையாரை ஒட்டிக்கொண்டான்..........
அண்ணாமலையாரை ஒட்டிக்கொண்டான்.,
கண்ணீர் கயிற்றால் கட்டிக்கொண்டான்...
சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே... திண்ணை தெருக்களிலே தங்கி கொண்டான்,கைகளைப் போர்த்திக்கொண்டான்... உண்ணக்கிடைக்கைலே,உண்டு விட்டு உடம்பில் துடைத்துக் கொண்டான். பூதமும் போகாத பாதாள லிங்கத்துள் போயமர்ந்தான்...
ஒரு மாதம்,வருடமற்று,மனமற்று,தவத்தில் ஆழ்ந்துவிட்டான்.... பூரானும்,பூச்சியும் ஊர்ந்ததம்மா,இளம் தேகத்திலே,
புற்றுக்கறையான் அரித்ததம்மா,பல பாகத்திலே...
நவ முனி யோகத்திலே....

சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே...

ஷேஷாத்ரி ஸ்வாமிகள் காப்பாற்ற,நாம் செய்த புண்ணியம் என்றாச்சு...
ஆசா பாசத்துள் அல்லாடும் நமக்காசான் கிடைத்தான் நன்றாச்சு...
புற்றோடு புற்றாக போயிருந்தால் மனம் விற்றுப் போனவற்க்கு மருந்துண்டோ? முற்றும் அறிந்து முனிவனானவன்,
இல்லால் நம் பிறவிக்கு பயனுண்டோ?
இல்லால் நம் பிறவிக்கு பயனுண்டோ?
சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே...

மாங்கிளையில்,தூங்கி வாழ்ந்த மனிதர்கள் மண்ணில் உண்டோ?
பூங்குழவி கொட்டி,கால்கள் வீங்கத்தாங்கி கொண்டாருண்டோ?

த்யானித்திருப்பான்...சோரூட்டிப் போவார்கள்...தெரியாது....
நாலு நாள் ஆனாலும் வாயை விட்டு சோறு இறங்காது...

சிறு முனிக்கு மக்கள் கூடுவார்,சிலருக்கு பொறுக்காது..
உடலை மாய்த்திடப் போனானே ...விடவில்லை,ஈசனும் விதியா அது?
யாருக்கும் தெரியாது...
சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே...

உடம்போடு வாழ்ந்தாலும் உடம்பின்றி வாழ்ந்தவன் குரு ரமணன்..
உடம்பின்றி ஆன்மாவாய் உடன்வந்து உறைபவன் குரு ரமணன்..

புற்று நோயகற்ற கீறினாலும், அவன் தேகத்தில் இல்லை..
முற்றும் தேக வாழ்வு முடிந்தாலும் அவன் தேகி இல்லை..

ஒளி வெள்ளமாய்..மலை உச்சியில்,கலந்து விட்டான் ரமணன்,
கலியுகத்தில் களி ஒளிப்போன் அவனே குரு ரமணன்..
அவனே குரு ரமணன்..

சின்ன பையன் ஒருவன்,உலகத்தை சின்னதாய் ஆக்கிவிட்டான்.
இந்த சின்ன உலகினையும்,அன்பு கொண்டு,தன்னோடினைத்துக்கொண்டான்.. முன்னம் நிகழ்ந்ததெல்லாம் மனக்கண் முன்னாலே தோன்றிடுதே..
இன்னம் நினைந்திருந்து நெஞ்சம் அலை பாய்ந்து தவிக்கிறதே...ஏ
சின்ன பையன் ஒருவன்,செய்த செயல் என்னைக் கலக்கிடுதே...
அதை எண்ணத் தொடங்கி விட்டால்,என் பிறப்பு,ஏன் என்று தோன்றிடுதே...

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருள் மாமலையே அருணாச்சலனே அனலுருவானவனே அருணாச்சலனே
வரம்பல வழங்கிடும் அருணாச்சலனே வாழ்விக்கும் தெய்வம் நீயே அருணாச்சலனே

அடிமுடியேதுமில்லா அருணாச்சலனே ஆடலின் அரசே அருணாச்சலனே
கிரிவலம் வருவோம் அருணாச்சலனே கேட்டதைத் தருவாய் அருணாச்சலனே

நடப்பவையாவும் அருணாச்சலனே உந்தனின் நாடகம் அருணாச்சலனே
நினைப்பது முடித்திடும் அருணாச்சலனே நிகரில்லாதவனே அருணாச்சலனே

சுடலையில் இருப்பவனே அருணாச்சலனே சொக்கனாகவந்த எங்கள் அருணாச்சலனே
தடைகளை விலக்கிடும் அருணாச்சலனே தாழ்ப் பணிந்திடுவோம் அருணாச்சலனே

திருச்சாம்பலுள்ளிருக்கும் அருணாச்சலனே தினமுன்னைப் போற்றுகின்றோம் அருணாச்சலனே
நினைவுடன் வாழவைக்கும் அருணாச்சலனே நீயின்றி ஏதுத்துணை அருணாச்சலனே

மாதொருபாகனே அருணாச்சலனே மண்ணுலகாள்பவனே அருணாச்சலனே
காதலினால் உன்னை அருணாச்சலனே கைதொழுவோமய்யா அருணாச்சலனே

நாதசொரூபனே அருணாச்சலனே நல்லிசையேழும் நீயே அருணாச்சலனே
பேதமில்லாதவனே அருணாச்சலனே பேரறிவாளன் நீயே அருணாச்சலனே

கார்த்திகை தீபத்திலே அருணாச்சலனே காட்சிக் கொடுப்பவனே அருணாச்சலனே
நேர்த்திக்கடன் தன்னை அருணாச்சலனே நிறைவேற்ற செய்திடுவாய் அருணாச்சலனே

மூர்த்திகள் மூவரில் அருணாச்சலனே மூத்தவன் நீதானய்யா அருணாச்சலனே
காத்திடுவாய் எங்கள் அருணாச்சலனே காருண்ய நாயகனே அருணாச்சலனே

ஐந்தெழுத்தானவனே அருணாச்சலனே அன்பரைக் காப்பவனே அருணாச்சலனே
சிந்தையில் இருப்பவனே அருணாச்சலனே சிரம்பணிந்தோமய்யா அருணாச்சலனே

பொன்மலையானவனே அருணாச்சலனே புவியினுக்கரசே அருணாச்சலனே
உன்மலை உயர்ந்தது அருணாச்சலனே ஊழ்வினைத் தீர்ப்பது அருணாச்சலனே

உண்ணாமுலையம்மை அருணாச்சலனே உடனிருப்பவனே அருணாச்சலனே
கண்ணாய் உயிர்களை அருணாச்சலனே காப்பாற்றுவாய் எங்கள் அருணாச்சலனே

அண்ணாமலையே அருணாச்சலனே அல்லலைத் தீர்த்துவைக்கும் அருணாச்சலனே
சொன்னால் இனித்திடும் அருணாச்சலனே சுந்தர வடிவமே அருணாச்சலனே

அண்ணாமலையே ஓம்சிவா . . .  அருணாச்சலனே சதாசிவா . . .
அண்ணாமலையே ஓம்சிவா . . .  அருணாச்சலனே சதாசிவா . .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகையாளும் ஈஸ்வரா ஓம்சக்தி ஈஸ்வரா
அருள்மழையே ஈஸ்வரா அருணாச்சல ஈஸ்வரா

ஒளிவடிவாய் காட்சிதரும் உயர்ந்தவன் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

கலிநடனம் புரிந்தவனே கயிலாய ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

நலம்வழங்கும் நாயகனே நான்வணங்கும் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

தலம்வருவோர் வேண்டுவதை தருவபவனே ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

குலம்தழைக்க செய்பவனே குறைத்தீர்க்கும் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

நிலம் செழிக்க நீர்சொரியும் நீலகண்ட ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

உமையவளின் துணைவனே உனைப்பணிந்தோம் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

தவமிருந்தால் பெரும்பயனைத் தருபவனே ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

சுமையெனவே வரும்துன்பம் தீர்ப்பவனே ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

எமையாளும் ஒருதெய்வம் நீதானே ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

எளியவரின் அன்புதனை ஏற்பவனே ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

கலைபலவும் மண்ணுலகில் நிலை நிறுத்தும் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

அணுவுக்குள் அணுவாக இருப்பவனே ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

உனது அருள் இல்லாமல் எது நடக்கும் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

கனவெல்லாம் நனவாக கைகொடுக்கும் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

மனமுருக வேண்டிக்கொண்டால் மனமிறங்கும் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

அனைத்துயிரும் வாழ்ந்திடவே அருள்கொடுக்கம் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

தனமுடனே நல்லறிவு தருபவனே ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

பஞ்சபூதமானவனே பணிந்திடுவோம் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

அஞ்சிடுவோர் துயர்துடைக்கும் ஆண்டவனே ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

நெஞ்சிலே குடியிருந்து நிழல் கொடுக்கும் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

நஞ்சுதனை உண்டவனே நான் வணங்கும் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

வஞ்சகரின் மனம்தெளிய வைப்பவன் ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

பஞ்சமுடன் பசிதீர்க்கும் பரம்பொருளே ஈஸ்வரா
பௌர்ணமியில் பக்தியுடன் கிரிவலமாய் வந்திடுவோம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானிலம் போற்றிடும் நாகூரா... || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | நாகூர் கச்சேரி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிரந்தரமானவரே உம் நிகருக்கு நிகர் நீரே

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பேராசை"     "பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்" என்றார் புத்தர். ஆசை இல்லாமல் ஒரு வாழ்வும் இருக்காது. ஒருவரும் ஆசையை விட்டு விட்டு இருக்கமுடியாது. ஆசையை விட்டு விட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே! அது எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றக் கூடியது. அதனால்தானோ என்னவோ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" என்கிறார் வள்ளுவரும்.  ஆனால் அது சில எல்லை கடந்து போகும் பொழுது தான் பிரச்சனையே ஏற்படுகிறது என்பதே உண்மை! இந்த உண்மையை அனுபவித்தான் உணர்ந்தவன் நான். அதனால் தான் உங்களுடன் என் கதையை பகிர்கிறேன்.   நான் பாடசாலையில் படிக்கும் பொழுதே முதலாவதாக வரவேண்டும் என்ற ஆசை நிறைய உடையவன். அதில் உண்மையில் எந்த பிரச்சனையும் இல்லை. அது உன்னை முன்னேற்றும். ஆனால் அந்த ஆசை என்றும் நிறைவேறவில்லை. நான் ஒரு கூலி தொழிலாளியின் மகன். ஆகவே வீட்டில் படிக்க, சொல்லித்தர பெரிதாக வசதி இல்லை. பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி இருந்தேன். நல்ல உடுப்பும் என்னிடம் இல்லை. வகுப்பு ஆசிரியர் என் தோற்றத்தை, நடை உடை பாவனையை பார்த்து என்னை பின் வாங்கில் அமர்த்தியது மட்டும் அல்ல,  என் கரடு முரடு தோற்றம் இவன் உருப்பட மாட்டான் என்றும் அவரை தீர்மானிக்க வைத்து விட்டது. ஆசை ஆர்வம் என்னிடம் நிறைய இருந்தும், நான் மெல்ல மெல்ல பின்னுக்கு தள்ளப் பட்டேன். அந்த வகுப்பு ஆசிரியர் என்னில் கவனம் செலுத்துவதே இல்லை!   காலம் போக நான் பத்தாம் வகுப்பு தேசிய பரீட்சையில், படுதோல்வி அடைந்து, பாடசாலையால் அகற்றப் பட்டேன். என் ஆசை எல்லாம் சுக்கு நூறாகியது! எப்படியும் நான் என் வகுப்பு ஆசிரியரை விட, பாடசாலை முதல்வரை விட, என்னுடன் படித்து, சிறந்த சித்தி பெற்று, இப்ப மருத்துவம், பொறியியல் துறைக்கு புக உயர் வகுப்பு படிப்பவர்களை விட, ஏன் இந்த நாட்டையே ஆளும் ஒருவனாக வரக்கூடாது என்ற ஒரு பெரும் ஆசை என்னைக் கவ்விக் கொண்டது. அதற்கு படிப்பு தேவை இல்லை என்பதை நான் அறிவேன்!. அதுவே என்னை ஊக்கம் கொடுத்தது!! பேராசையாக, பெரும் வியாதியாக என் உள்ளத்தில் மலர்ந்தது!!!    "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"    இப்படித்தான் என்னை அப்பொழுது பலர் நினைத்தார்கள். என் பேராசை உள்ளத்தில் புகைத்துக்கொண்டு இருப்பதையோ, எப்படியாவது அந்த நிலையை அடைய வேண்டும் என்ற வெறியையோ அவர்கள் அறியார்கள், பாவம் அவர்கள் !!   நான் மெல்ல மெல்ல கூலிவேலையில் இருந்து சிறு முதலாளியாக மாறினேன். வியாபாரத்தில் நான் எந்த கருணையும் காட்டுவதில்லை. எனக்கு அடியாட்கள் சேரத் தொடங்கினர். என் பேராசையை, வெறியை  வெளிப்படையாக  காட்டாமல் இருக்க  ஆண்டவன் சேவை ஒன்றை, என் வியாபாரத்துடன் ஆரம்பித்தேன். நான் இப்ப தரும தலைவன்! எனக்கே ஆச்சரியம் இப்ப !!    "வருடம்    உருண்டு    போக வருமாணம் உயர்ந்து    ஓங்க கருணை   கடலில்     மூழ்க மிருக - மனித அவதாரம்  நான்"   "தருணம்   சரியாய்      வர இருவர்   இரண்டாயிரம் ஆக ஒருவர்   முன்         மொழிய   தரும - தெய்வ அவதாரம்   நான்"     என் பழைய வாத்தியார் இப்ப என்னை வணங்குகிறார். பாடசாலை முதல்வர் கால் தொட்டு விசாரிக்கிறார். காலம் மாறுது ! கோலம் மாறுது, இது தான் வாழ்க்கை!! ஆனால் பேராசை திட்டம் போட்டுக் கொன்டே இருக்கிறது ! இப்ப நான் பெரும் முதலாளி, பெரும் சாமி, கூட்டம் இரண்டு இடமும் குறைவில்லை. வேடிக்கை என்ன வென்றால், எந்த பாடசாலையில் இருந்து நான் துரத்தப் பட்டேனோ, அதன் ஐம்பதாவது ஆண்டு விழாக்கு நானே தலைமை தாங்குகிறேன்! வெட்கம், அப்படி ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, அடித்து துரத்தியவனுக்கு கம்பளி வரவேற்பு!   "ஊருக்கு    கடவுள்     நான் பாருக்கு    வழிகாட்டி  நான் பேருக்கு    புகழ்       நான் பெருமதிப்பு கொலையாளி  நான்"   "குருவிற்கு  குரு       நான் குருடருக்கு கண்      நான் திருடருக்கு பங்காளி   நான் கருவிழியார் மன்மதன்  நான்"    என் பேராசை இத்துடன் நின்ற பாடில்லை, பாவம் புண்ணியம் , இது எல்லாம் எனக்கு தெரியாது. இன்னும் பதவி வேண்டும் , அதை எப்படியும் அடைய வேண்டும். இது ஒன்றே இப்ப என் பேராசை!     "குமிழி வாழ்வில் குதூகலமாக பிறந்து கும்மாளம் அடித்து குத்துக்கரணம் போட்டு குடை பிடித்து பதவி உயர்ந்து குபேரன் வாழ்வை கனவு கண்டேன்!"   கள்ள வழிகளில் கனவு நியமாவதும், பின் அது கண்டு பிடித்ததும் உடைவது ஒன்றும் புதினம் இல்லை, ஆனால் நான் அப்பொழுது யோசிக்கவில்லை. தேர்தலில் தில்லு முல்லு செய்து வென்று மந்திரியும் ஆகிவிட்டேன் !  என்னை மணம் முடிக்க அழகிகள் கூட்டம்  போட்டி போட தொடங்கி விட்டது. எங்கோ ஒரு மூலையில் கடைசி வாங்கில் இருந்தவன், எங்கோ ஒரு மாளிகையில், மஞ்சத்துக்கு போய் விட்டான்! இதைத் தான் விந்தை என்பதோ!!  ஆனால் ஒன்றை நான் மறந்து விட்டேன். அது தான் பேராசை பெரும் நஷ்டம்!!       "ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும் ஒவ்வொரு ஆன்மாவையும் பேராசை தொற்றுகிறது ஒன்று ஒன்றாக அவனை ஏமாற்றி  ஒய்யாரமாக அவனில் வடுவாக மாறுகிறது!"   மக்கள் கூட்டம்  அரசுக்கு எதிராக எழுந்துவிட்டது.  கொள்ளையர்களே, ஏமாற்றி பிழைத்தவர்களே, அடித்த கொள்ளையை தந்து விட்டு சிறைக்கு போ ! எங்கும் ஒரே ஆர்ப்பாட்ட  ஒலி!  ஓடுவதற்கு இடம் தேடினேன், யாரும் தருவதாக இல்லை . எல்லாம் வெறிச் சோடி போய்விட்டது!    "நீர்க்கோல வாழ்வை நச்சி நான்  நீதியற்ற வழியில் நித்தம் சென்று நீச்சல் அடித்து செல்வம் சேர்த்து நீங்காத வாழ்வென கனவு கண்டேனே !"   பேராசை என்னும் நோயில் கட்டுண்டு, 'நல்லது, கெட்டது' எது என்பதைத் தெளிவாக ஆராய்ந்து அறியாத செயல்களை மேற் கொண்டு, இன்று ஒதுங்க இடம் இல்லாமல் தவிக்கிறேன். நான் இப்ப, இன்னும் என்னுடன் சேர்ந்து இருக்கும் அடியாட்கள் , பக்தர்கள் ஒரு சிலருடன் நாட்டை  விட்டு வெளியே களவாக, பணத்துடன் செல்வத்துடன் போய்க் கொண்டு இருக்கிறேன். மனைவி கூட என்னுடன் வர மறுத்துவிட்டார்.  பிடிபட்டால் நானே இல்லை!  உங்களுக்கு நான் கூறும் இறுதி வாக்கியம் இது தான்:   "ஒரு பரம ஏழைக்கும் ஒரு மிகப்பெரிய பணக்காரனுக்கும் இடையே உள்ள தொடர் ஓட்டத்துக்கு பெயர்தான் “பேராசை”!   இதற்கு பெயர் வைத்தது யார் என்று கேட்டால், அந்த பணக்காரனே தான்! அது மட்டும் அல்ல, பிறர் எவரும் தொட்டுவிட முடியாத தூரத்தில் இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான். ஆனால், அந்த பட்டத்தை [“பேராசை”] அவர்கள், முன்னுக்கு வர முயற்சிக்கும் ஏழைகளுக்கு, முகம் தெரியாதவர்களுக்கு, சாமானியர்களுக்கு, உழைப்பாளர்களுக்கு சூட்டிச் சூட்டி, அவர்களை வரவிடாமல் தடுத்து மகிழ்கிறார்கள்! உண்மையில் இவர்களே, நானே பேராசை பிடித்தவன்!!   நன்றி    அன்புடன்   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கட்டுரை தகவல் எழுதியவர், ஆலன் யென்டோப் மற்றும் நூர் நாஞ்சி பதவி, பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் சல்மான் ருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் தனக்கு நடந்த கோரத் தாக்குதலைப் பற்றி பிபிசியிடம் விரிவாகப் பேசினார். புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான ருஷ்டி, தாக்குதலின் போது அவரது கண் 'வேகவைத்த முட்டையைப் போன்று' முகத்தின் மீது தொங்கியதாகவும், அந்தக் கண்ணை இழந்தது ஒவ்வொரு நாளும் அவரை சோகத்தில் ஆழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். தாக்குதல் சம்பவத்தை நினைவு கூறுகையில் "அன்று நான் இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. பிழைத்துக் கொண்டேன்," என்கிறார். “Knife’’ (நைஃப்) என்னும் தனது புதிய புத்தகத்தை, தனக்கு நடந்த தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக ருஷ்டி கூறினார். ஆகஸ்ட் 2022இல் நியூயார்க்கில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் அவர் விரிவுரை வழங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 27 விநாடிகள் நீடித்த அந்த தாக்குதலில், தன்னை தாக்க வந்த நபர், எப்படி படிக்கட்டுகளில் ஏறி வந்து, தன் கழுத்து, வயிறு உட்பட உடல் முழுவதும் 12 முறை கத்தியால் குத்தினார் என்பதை ருஷ்டி நினைவு கூர்ந்தார். "என்னால் என்னைத் தாக்குபவருக்கு எதிராகச் சண்டையிட முடியவில்லை, தப்பித்து ஓடவும் முடியவில்லை," என்று அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் விவரித்தார். கத்தியால் தாக்கப்பட்டதும் அவர் தரையில் விழுந்தார். பெருமளவு ரத்தம் அவரைச் சுற்றி வெள்ளமாக ஓடியது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆறு வாரங்களுக்குப் பின்னர் படிப்படியாக குணமடைந்தார்.   'ஒவ்வொரு நாளும் மன உளைச்சல்' படக்குறிப்பு,ஆலன் யென்டோப், லேடி ருஷ்டி மற்றும் சல்மான் ருஷ்டி. ஆலனும் சல்மானும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள். இந்தியாவில் பிறந்த 76 வயதாகும் பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, நவீன காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி உலகம் முழுவதும் தலைப்பு செய்தியாக பகிரப்பட்டது. சல்மான் 1988ஆம் ஆண்டு வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்னும் புத்தகத்தால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால், பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். "ஏதாவது ஒருநாள் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ஒருவர் மேடையில் குதித்து என்னை தாக்கக் கூடும். இவ்வாறு என் மனதில் தோன்றாமல் இருந்திருந்தால் அது அபத்தமாக இருந்திருக்கும்," என்று தன் பயத்தைப் பற்றி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.   'கொலை முயற்சிக்கு இதுதான் காரணமா?' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சல்மான் தாக்கப்பட்டதையடுத்து, கருத்து சுதந்திரத்திற்கான ஆதரவை தெரிவிக்கும் பேரணி நியூயார்க்கில் நடைபெற்றது. முதன்முறையாக, ருஷ்டி தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தன் எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். நியூ ஜெர்சியில் வசிக்கும் 26 வயதுடைய ஹாடி மாதர் என்பவர் மீது சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து நியூயார்க் போஸ்ட் ஊடகத்திற்கு மாதர் அளித்த பேட்டியில், சல்மானின் வீடியோக்களை யூடியூப்பில் பார்த்ததாகக் குறிப்பிட்டு, "இது போன்ற நேர்மையற்ற நபர்களை நான் வெறுக்கிறேன்" என்று கூறியுள்ளார். சல்மான் ருஷ்டி 2022இல் தனக்கு நிகழ்த்தப்பட்ட கோரத் தாக்குதல் பற்றியும் அந்தச் சம்பவத்தின் பின்விளைவுகள் பற்றியும் ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டார். இதையொட்டி அலன் யென்டோப் உடன் ஒரு நேர்காணலில் விரிவாகப் பேசினார். நைஃப் புத்தகத்தில், சல்மான் ருஷ்டி தன்னை தாக்கியவருடன் ஒரு கற்பனையான உரையாடலை நடத்துவது போன்றும், ருஷ்டிக்கு அந்த நபர் பதிலளிப்பது போன்றும் எழுதப்பட்டுள்ளது. "அமெரிக்காவில், பலர் நேர்மையானவர் போன்று நடிக்கிறார்கள், அவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு பொய் சொல்கிறார்கள். அவர்களைக் கொல்ல இது ஒரு காரணமாக இருக்குமா?" என்று அந்த நபர் கேட்பது போன்று புனையப்பட்டுள்ளது. ருஷ்டி இதுவரை தாக்குதல் நடத்திய மாதர் என்ற நபரைச் சந்தித்ததில்லை. ஆனால், வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளது. ருஷ்டியின் புத்தகத்தை மறுபரிசீலனை செய்ய தங்களுக்கு உரிமை உண்டு என்று பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதைத் தொடர்ந்து விசாரணை சற்று தாமதமானது. இந்த வழக்கு அடுத்து வரும் நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   'தி சாத்தானிக் வெர்சஸ்' சர்ச்சையை ஏற்படுத்தியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'தி சாத்தானிக் வெர்சஸ்' புத்தகம் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் தடைசெய்யப்பட்டது. சல்மான் ருஷ்டி 1981இல் 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' என்னும் புத்தகத்தின் மூலம் புகழ் பெற்றார். அந்தப் புத்தகம் பிரிட்டனில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. ஆனால் அவரின் நான்காவது புத்தகம், 'தி சாத்தானிக் வெர்சஸ்', இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமதுவின் சித்தரிப்பு மற்றும் மதத்தைப் பற்றிய அதன் குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் புத்தகம் தடைசெய்யப்பட்டது. இரானின் அப்போதைய தலைவர் ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனி 1989இல் ஃபத்வா (மத ஆணை) ஒன்றை வெளியிட்டு ருஷ்டியின் படுகொலைக்கு அழைப்பு விடுத்து, புத்தக ஆசிரியரின் தலைக்கு 25 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அந்த ஃபத்வா ரத்து செய்யப்படவே இல்லை. இதன் விளைவாக, ருஷ்டி ஏறக்குறைய பத்து ஆண்டு காலம் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ருஷ்டிக்கு வந்த எண்ணற்ற கொலை மிரட்டல்களின் காரணமாக ஆயுதமேந்திய மெய்க்காப்பாளர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தனர். நாத்திகவாதிகளாக மதத்தைப் பின்பற்றாத இஸ்லாமியர்களுக்கு மகனாகப் பிறந்த சல்மான் ருஷ்டி, கருத்து சுதந்திரத்திற்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகிறார். தற்போது அது "மிகவும் கடினமாகிவிட்டது" என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். "இளைஞர்கள் உட்படப் பலர், கருத்து சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் நல்லது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்," என்பதை வருத்தத்துடன் குறிப்பிடும் ருஷ்டி "கருத்து சுதந்திரத்தின் முழு அம்சம் என்னவென்றால், நீங்கள் உடன்படவில்லை என்றாலும் அந்தக் கருத்தை நீங்கள் அனுமதிக்க வேண்டும்" என்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, தனது தனிப்பட்ட உடமைகளைப் பற்றி எண்ணியது 'முட்டாள்தனமாக' பார்ப்பதாகவும் தனது ரால்ப் லாரன் உடை பாழாகிவிட்டதை எண்ணி அந்த நேரத்தில் வருத்தப்பட்டதாகவும் ருஷ்டி கூறினார். மேலும், தனது வீட்டுச் சாவியும் கிரெடிட் கார்டுகளும் தனது பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிடுமோ என்றும் அவர் கவலைப்பட்டாராம். "நிச்சயமாக, இது நகைப்புக்குரியதுதான். ஆனால் அந்தக் கோர நிகழ்வை பின்னோக்கிப் பார்த்தால், அது என்னிடம் சொல்வது என்னவென்றால், எனக்குள் இறக்கக்கூடாது என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தது. எனக்கு கீழே விழுந்த அந்த வீட்டுச் சாவி வேண்டும், எனக்கு அந்த கிரெடிட் கார்டுகள் தேவைப்படும் என்று எனது உடமைகளைப் பற்றிய எண்ணங்களும் ஓடியது. இவை நான் உயிர் வாழ்வதற்கான உள்ளுணர்வு. 'நீங்கள் வாழப் போகிறீர்கள். வாழுங்கள், வாழுங்கள்...' என்று சொல்வதாகவே நான் பார்த்தேன்’’ என்றார். தாக்குதலுக்கு ஓராண்டு முன்பு, ருஷ்டி தனது ஐந்தாவது மனைவியான அமெரிக்க கவிஞரும் நாவலாசிரியருமான ரேச்சல் எலிசா கிரிஃபித்ஸை மணந்தார். லேடி ருஷ்டி பிபிசியிடம் பேசுகையில், தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டதும், கத்திக் கூச்சலிட்டதாகக் குறிப்பிடுகிறார். "அது என் வாழ்க்கையின் மோசமான நாள்" என்றும் கூறினார். லேடி ருஷ்டி, சல்மான் ருஷ்டியின் கண் இமைகளை மருத்துவர்கள் ஒன்றாகச் சேர்த்து தைத்தபோது தாம் அருகில் இருந்ததை விவரிக்கிறார். "நான் அவருடைய கண்களை அதிகம் நேசிக்கிறேன். அன்று அவர் இரண்டு கண்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார், அதன் பின்னர் எங்கள் உலகம் மாறியது. இப்போது நான் அவருடைய ஒற்றைக் கண்ணை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்" என்கிறார் லேடி ருஷ்டி. ருஷ்டி தனது நைஃப் புத்தகத்தை 'குறைந்தபட்ச காதல் கதை' என்றாலும், ஒரு திகில் கதையின் புத்தகம் என்றே குறிப்பிடுகிறார். "இந்த மோதலில் இரண்டு சக்திகள் இருந்தன. ஒன்று வன்முறை, மதவெறி. மற்றொன்று அன்பின் சக்தி. நிச்சயமாக, அன்பின் சக்தி என் மனைவி எலிசாவின் உருவில் கிடைத்தது. நடந்த சம்பவங்கள் இறுதியில் வெறுப்பின் சக்திகளைவிட அன்பின் சக்தி வலிமையானது என்பதை நிரூபித்தன. இந்த நிகழ்வைப் பற்றி நான் புரிந்துகொண்ட விதம் இதுதான்," என்கிறார் தீர்க்கமாக. மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என்று குறிப்பிடும் ருஷ்டி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என்றும், பாதுகாப்பு நடைமுறைகளில் நான் திருப்தி அடையாவிட்டால் நிகழ்வில் பங்கு பெறப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய நபரைப் பற்றிப் பேசுகையில் அவர் "ஒரு அழகான பிடிவாதமான நபர்" என்று குறிப்பிட்டு, "எனக்கு கட்டுப்பாடுகள் நிறைந்த அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை வேண்டாம். நான் என் வாழ்க்கையை வாழப் போகிறேன்" என்றார் நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/c51nxzjdrdxo
    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
    • ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.  😁  
    • அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான்.  🙂 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.