Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தணிகை மலை படிகள் எல்லாம் திருப்புகழ் பாடும் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருவேகம்பமாலை

 

அறந்தான் இயற்றும் அவனிலுங்கோடி அதிகமில்லம்
துறந்தான் அவனிற் சதகோடிஉள்ளத் துறவுடையோன்
மறந்தான் அறக்கற் றறிவோடிருந்திரு வாதனையற்று
இருந்தான் பெருமையை என் சொல்லுவேன் கச்சியேகம்பனே.

கட்டிஅணைத்திடும் பெண்டிரு மக்களுங் காலத்தச்சன்
வெட்டிமுறிக்கும் மரம்போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்
கொட்டிமுழக்கி அழுவார் மயானங் குறுகியப்பால்
எட்டியடி வைப்பரோ இறைவாகச்சி யேகம்பனே.

கைப்பிடிநாயகன் தூங்கையிலேயவன் கையையெடுத்து
அப்புறந்தன்னில் அசையாமல் முன் வைத்தயல் வளவில்
ஒப்புடன் சென்று துயினீத்துப் பின்வந் துறங்குவளை
எப்படி நானம்புவேன் இறைவாகச்சி யேகம்பனே.

நன்னாரிற்பூட்டிய சூத்திரப்பாவைநன் னார்தப்பினால்
தன்னாலுமாடிச் சலித்திடுமோஅந்தத் தன்மையைப்போல்
உன்னா லியானுந் திரிவதல்லான் மற்றுனைப்பிரிந்தால்
என்னா லிங்காவதுண்டோ இறைவாகச்சி யேகம்பனே

நல்லரிணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே
அல்லாது வேறு நிலையுளதோ அகமும் பொருளும்
இல்லாளுஞ் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும்
எல்லாம் வெளிமயக்கே இறைவாகச்சி யேகம்பனே.

பொல்லா தவனெறி நில்லா தவனைப் புலன்கடமை
வெல்லா தவன்கல்வி கல்லாதவன் மெய் யடியவர்பால்
செல்லா தவனுண்மை சொல்லா தவனின் திருவடிக்கன்பு
இல்லாதவன் மண்ணில் ஏன் பிறந்தேன்கச்சி ஏகம்பனே.

பிறக்கும்பொழுது கொடுபோதில்லைப் பிறந்துமண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவதில்லை இடைநடுவில்
குறிக்கும்இச் செல்வம் சிவன்தந்த தென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக்கென் சொல்லுவேன்கச்சி ஏகம்பனே.

அன்னவிசாரம் அதுவே விசாரம்அது வொழிந்தாற்
சொன்னவிசாரந் தொலையா விசாரநற் றோகையரைப்
பன்னவிசாரம் பலகால்விசார மிப்பாவி நெஞ்சுக்கு
என்னவிசாரம் வைத்தாய் இறைவாகச்சி ஏகம்பனே.

கல்லாப்பிழையுங் கருதாப்பிழையுங் கசிந்துருகி
நல்லாப்பிழையும் நினையாப்பிழையும் நின்அஞ்செழுத்தைச்
சொல்லாப்பிழையுந் துதியாப்பிழையுந் தொழாப்பிழையும்
எல்லாப்பிழையும் பொறுத்தருள் வாய்கச்சி ஏகம்பனே.

மாயநட்போரையும் மாயமலமெனும் மாதரையும்
வீயவிட்டோட்டி வெளியேபுறப்பட்டு மெய்யருளாந்
தாயுடன் சென்று பின்தாதையைக் கூடிப்பின்தாயைமறந்து
ஏயுமதேநிட்டை என்றான் எழிற்கச்சி ஏகம்பனே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படைத்தவனை நினைத்து நினைத்து அழுது நனைகிறேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே
நிறையும் சிநேகத்தோடே பொன் போலென்னை காத்திடும்) - 2
நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே.

1. பாவியாய் நான் மருகும்போது, பாவமெல்லாம் நீக்கிடும்
ரோகியாய் நான் நொறுங்கும்போது, சுகமளிக்கும் பரிசுத்தர்
மனமோ வாழ்த்திப்பாடும், இந்த மண்ணில் உந்தன் நாமம்
நீரே தொடர்ந்து நல்கும் தானம் என்னில் கனிவாய் இரங்கி
நீரே சிலுவை சுமந்தீர் தினமும்  எனக்காக தான்.
நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே
நிறையும் சிநேகத்தோடே பொன் போலென்னை காத்திடும்
நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே.

2. தளர்ந்திடாமல் தகர்ந்திடாமல் தேவரீர் என்னை காத்திடும்
வீழ்ந்திடாமல் தாழ்ந்திடாமல் தேவரீர் என்னை பேணிடும்
இதயம் நினைத்துப்பாடும், தயவு நிறைந்த தெய்வசிநேகம்.
நீரே தொடர்ந்து நல்கும் தானம் என்னில் கனிவாய் இரங்கி
நீரே சிலுவை சுமந்தீர் தினமும்  எனக்காக தான்.
(நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே
நிறையும் சிநேகத்தோடே பொன் போலென்னை காத்திடும்) - 2
நிழலாய் வருவீர் நீர் எப்போதும் என்னோடே.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தைக்கு மந்திரத்தை சாரப் பொருள் உரைத்து 
தகப்பன் சாமியென பெயர் பெற்ற முருகா 
மண்ணுக்கும் விண்ணுக்கும் 
சுவாமியென வந்த என் சுவாமிக்கும் நாதனே சுவாமிநாதா 

சொல்ல  சொல்ல இனிக்குதடா முருகா 

சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா 
உள்ளமெல்லாம் உன் பெயரைச் சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா (2)

பிள்ளை பிராயத்திலே பெரிய பெயர் பெற்றவனே (2) 
உள்ளமெல்லாம் உன் பெயரைச் சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா (சொல்ல )


முருகன் என்றால் அழகன் என்று தமிழ் மொழி கூறும் 
அழகன் எந்தன் குமரனென்று  மனமொழிக் கூறும் (2)

உயிரினங்கள் ஒன்றையொன்று  வாழ்த்திடும்போது(2)
  அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருளன்றோ கந்தா உன் அருளன்றோ முருகா  (சொல்ல )

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பே அன்பே என் நெஞ்சுக்குள் நீ வா
அன்பால் நெஞ்சம் ஆளச்சொல்லித் தா
எழை எந்தன் என் உள்ளம் நீ வா
எங்கும் எந்தன் தாகம் தீர்க்க வா
வாழ்வென்னும் பாடம் கற்றுத் தா
அன்பே அன்பே

தாய்ப்போல என்னை தாலாட்டுப்பாடி  
சேயாக நீயும் சீறாட்டினாய்
நீர்த்தேடிச்செல்லும் மான்போல நானும்
உன்பாதம் சேர வழிகாட்டினாய் 
நீயில்லை என்றால் நானும் இல்லையே
நீயின்றிபோனால் வாழ்வும் இல்லையே
நீதானே எந்தன் வாழ்வின் செல்வமே 
நீயின்றி  வாழ்வில் எல்லாம் சோகமே
வீழ்கின்ற நேரங்கள் விதையாக மடிந்தாலும்
எழுகின்ற நேரங்கள் புதுவாழ்வின் பாதைகள்
வாழ்வென்னும் பாடம் கற்றுத் தா - 2
அன்பே அன்பே என் நெஞ்சுக்குள் நீ
அன்பால் நெஞ்சம் ஆளச்சொல்லித் தா

நிலவென்னும் கண்கள் நீர்பூக்கும் வேலை
நிலமாக நின்று தாங்கிக்கொள்வாய்
மலர்சோலை நானும் மலராது போனால்
மழையாக என்னில் வளம் சேர்க்க வா
நீயில்லை என்றால் இன்பம் சேருமா
நீ என்னுள் சேர்ந்தால் சோகம் தங்குமா
நீயில்லை என்றால் கீதம் தோன்றுமா
நீ என்னுள் சேர்ந்தால் பேதம் வேண்டுமா
என் வாழ்வில் எல்லாமே
நீ தந்த செல்வங்கள்
என்வாழ்வில் துன்பங்கள்
நீர் பூத்த வானங்கள்
வாழ்வென்னும் பாடம் கற்றுத் தா - 2
அன்பே அன்பே என் நெஞ்சுக்குள் நீ
அன்பால் நெஞ்சம் ஆளச்சொல்லித் தா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவிந்தா ஹரி ஹரி கோவிந்தா..சர்வ காரணன் சுகுண நிர்குணன் பெருமாள் பாடல்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
கடம்பனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா

வேல் வேல் வெற்றிவேல் வேல் வேல் வீரவேல்
வேல் வேல் ஞானவேல் வேல் வேல் சக்திவேல்

சென்னிமலை மீது ஒரு வீடு
அது கன்னித்தமிழ் முருகனின் அருள்கூடு

ஆண்டியின் பாதத்தையேத் தேடு

ஈராறு கண்களால் காத்திடுவான் அன்போடு

சென்னிமலை முருகன் சென்னிமலை

வேல்முருகா வெற்றி வேல்முருகா

அருணனைத் தாலாட்டும் திருக்கோயில்
திரு முருகன் அருள்ததும்பும் தமிழ் கோயில்

ஆதி பழனியே அருள்வாயா  . . .

உந்தன் திருவடி என்றுமே என்மனதில்
திருவடி என்றுமே என் மனதில்

வள்ளி தெய்வானையுடன் அருட்கோலம்
மலர்மாலையுடன் கல்யாணத் திருக்கோலம்

வையகம் வணங்கிடும் வைபோகம்

அதை பார்க்க ஆயிரம் கண் வேண்டும்
பார்க்க ஆயிரம் கண் வேண்டும்

பார்க்க ஆயிரம் கண் வேண்டும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனந்தரும் வயிரவன் தளிரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும்
மனந் திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்வுகள் வந்து விடும்

ஸ்வர்ணாகர்ஷண பைரவ நாதா . . .

சினந்தவிர்த் தன்னையின் சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனாம்
தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான் வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான்

காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

முழுநில வதனில் முறையொடு பூஜைகள் முடித்திட அருளிடுவான்
உழுதவன்விதைப்பான் உடைமைகள் காப்பான் உயர்வுறச் செய்திடுவான்

முழுமலர்த் தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள் நிறைத்திடுவான்

வான்மழை எனவே வளங்களைப்பொழிவான் வாழ்த்திட வாழ்த்திடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான் பூரணன் நான் என்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான்

காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான் பொன்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான்

நிழல்தரும் கற்பகம் நினைத்திடபொழிந்திடும் நின்மலன் நானென்பான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

சதுர்முகன் ஆணவத் தலையினைக் கொய்தான் சத்தொடு சித்தானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம் செய்யென்றான்

பதரினைக் குவித்து செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

ஜெய ஜெய வடுக நாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய ஷேத்திர பாலனே சரணம் ஜெயங்களைத் தந்திடுவாய்

ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கிலை யீடு யாருமேஎன்பான் தனமழை பெய்திடுவான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறுபடை வீட்டில் அமர்ந்தவனே
நீ அழகுமுகம் ஆறும் கொண்டவனே

சென்னிமலை அருள் ஆண்டவனே

சென்னிமலை அருள் ஆண்டவனே
மன ஆறுதல் தந்திடும் வேலவனே

ஓம் சரவணபவாய ஓம் சரவணபவாய
ஓம் சரவணபவாய ஓம் சரவணபவாய

அறுபடை வீட்டில் அமர்ந்தவனே

தேவரைக் காத்திட அவதரித்தாய்
உன்னை வேண்டி வந்தவர்க்கு வரமளித்தாய்

பன்னிரு கரம்கொண்ட பாலகனே
அப்பன் பராமனுக்கே பாடம் சொன்ன வேலவனே

அன்னை தந்த வேலல்லவா
அது கண்ணீரைத் துடைத்திடும் உண்மையல்லவா

பொன்போல் மின்னுகின்ற மேனியல்லவா

பொன்போல் மின்னுகின்ற மேனியல்லவா
மயில்வாகனனே சிரகிரியின் வேலவா

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.