Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குழலும் யாழும் குரலினில் தொனிக்க
கும்பிடும் வேளையிலே
மழலை யேசுவை மடியில் சுமந்து 
மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா
வருவாளே!

******************
அருளே நிறைந்த மரியே என்று
அன்புடன் அழைக்கயிலே....
அருளே நிறைந்த மரியே என்று
அன்புடன் அழைக்கயிலே.

இருளே நீங்க இறைவனை ஏந்தி
இன்னருள் தருவாளே- மாதா
இன்னருள் தருவாளே.

குழலும் யாழும் குரலினில் தொனிக்க
கும்பிடும் வேளையிலே
மழலை யேசுவை மடியில் சுமந்து 
மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா
வருவாளே!
*****************

ஜபமே செய்து தவமே புரிந்து
ஜெபிக்கும் வேளையிலே...
ஜபமே செய்து தவமே புரிந்து
ஜெபிக்கும் வேளையிலே

ஜயமே தருவாள் பயமே வேண்டாம்
ஜகத்தின் இராக்கினியே- இந்த
ஜகத்தின் இராக்கினியே.

குழலும் யாழும் குரலினில் தொனிக்க
கும்பிடும் வேளையிலே
மழலை யேசுவை மடியில் சுமந்து 
மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா
வருவாளே!

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாதேஷு சர்வ பூதேஷு லக்ஷ்மி ரூபேண ஸ்தம்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ
ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி பாஹிமாம்
ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ரக்ஷமாம்

செல்வம் கொழிக்குது செல்வம் கொழிக்குது
செய் தொழில் செழிக்குதம்மா

சிந்தை மகிழுதென் சிந்தை மகிழுது செல்வாக்கு பெருகுதம்மா
வாழ்வில் செல்வாக்கு பெருகுதம்மா

ஓரெட்டு லக்ஷ்மியும் ஈரெட்டு செல்வத்தை
என் வீட்டில் நிறைத்து விட்டாள் . . என் வீட்டில் நிறைத்து விட்டாள்

ஈரெட்டு செல்வமும் எட்டெட்டு கலைகளும்
சிந்தையில் ஏற்றிவிட்டாள் என் சிந்தையில் ஏற்றிவிட்டாள்

கற்பகவிருக்ஷமும் காமதேனுவையும்
பரிசாய் எனக்கு தந்தாள் . . பரிசாய் எனக்கு தந்தாள்

அக்ஷயபாத்ரமும் அமுதசுரபியும்
சீரென வழங்கி விட்டாள் வம்ச சீரென வழங்கி விட்டாள்

பாற்கடலமுதென மார்போடணைத்தெனை
பாங்காய் ஊட்டி விட்டாள் . . பாங்காய் ஊட்டி விட்டாள்

பூட்டிய பிணிகளும் வாட்டிய வறுமையும்
மாயமாய் மாய்த்துவிட்டாள் இன்று மாயமாய் மாய்த்துவிட்டாள்

செந்தாமரை தாயே செந்தாமரை கையால்
சீர்பெற வாழ்த்தி விட்டாள் எம்மை சீர்பெற வாழ்த்தி விட்டாள்

செந்தாமரை கண்ணன் மனமாய் நின்றவள்
சேயென சேர்த்தணைத்தாள் எனை சேயென சேர்த்தணைத்தாள்

 

 

 

Edited by உடையார்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாலை மாற்றினால் கோதை | கல்யாணப்பாடல்கள்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
சேவடி செவ்விதிருக் காப்பு.

* அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்றமங்கையும் பல்லாண்டு
வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படையோர்புக்குமுழுங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.

வாழாட்பட்டுநின்றீருள்ளீரேல் வந்துமண்ணும் மணமும் கொண்மின்
கூழாட்பட்டுநின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்களிராக்கதர்வாழ், இலங்கை
பாழாளாகப்படைபொருதானுக்குப் பல்லாண்டுகூறுதுமே.

ஏடுநிலத்திலிடுவதன் முன்னம்வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்தொல்லைகூடுமினோ
நாடுநகரமும்நன்கறிய நமோநாராயணாயவென்று
பாடுமனமுடைப்பத்தருள்ளீர் வந்துபல்லாண்டுகூறுமினே.

அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை
இண்டைக்குலத்தையெடுத்துக்களைந்த இருடீகேசன் தனக்குத்
தொண்டக்குலத்திலுள்ளீர்! வந்தடிதொழுது ஆயிரநாமம் சொல்லிப்
பண்டைக்குலத்தைத்தவிந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே.

எந்தைதந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி
வந்துவழிவழியாட்செய்கின்றோம் திருவோணத்திருவிழவில்
அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தாவனைப்
பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதுமே.

தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின்
கோயிற்பொறியாலேயொற்றுண்டுநின்று குடிகுடியாட் செய்கின்;றோம்
மாயப்பொருபடைவாணனை ஆயிரந்தோளும் பொழிகுருதி -
பாயச், சுழற்றியவாழிவல்லானுக்குப் பல்லாண்டுகூறுதுமே.

நெய்யெடைநல்லதோர்சோறும் நியதமும்மத்தாணிச்சேவகமும்
கையடைக்காயும் கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும்
மெய்யிடநல்லதோர்சாந்தமும்தந்து என்னைவெள்ளுயிராக்கவல்ல
பையுடைநாகப்பகைக்கொடியானுக்குப் பல்லாண்டுகூறுவனே.

உடுத்துக்களைந்தநின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்ததுழாய்மலர் சூடிக்களைந்தன சூடுமித்தொண்டர்களோம்
விடுத்ததிசைக்கருமம்திருதித் திருவோணத்திருவிழவில்
படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

எந்நாளெம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்ட-
அந்நாளே, அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுய்ந்ததுகாண்
செந்நாள்தோற்றித் திருமதுரையுள்சிலைகுனித்து, ஐந்தலைய -
பைந்நாகத்தலைப்பாய்ந்தவனே உன்னைப்பல்லாண்டுகூறுதுமே.

*அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன், அபிமானதுங்கன்
செல்வனைப்போலத் திருமாலே! நானுமுனக்குப்படிவடியேன்
நல்வகையால் நமோநாராயணாவென்று நாமம்பலபரவிப்
பல்வகையாலும் பவித்திரனே! உன்னைப்பல்லாண்டுகூறுவனே.

* பல்லாண்டென்றுபவித்திரனைப் பரமேட்டியைச், சார்ங்கமென்னும்
வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டுசித்தன்விரும்பியசொல்
பல்லாண்டென்றுநவின்றுரைப்பார் நமோநாராயணாயவென்று
பல்லாண்டும்பரமாத்மனைச் சூழ்ந்திருதேத்துவர்பல்லாண்டே.

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை மைந்தா வேல்முருகா கணிந்தருள் செய்வாய் வேல்முருகா
போற்றிடவந்தோம் வேல்முருகா  புண்ணியம் சேர்ப்பாய் வேல்முருகா 

வேல்முருகா திருவேல்முருகா வெற்றிகள் தருவாய் மால்மருகா
வேல்முருகா திருவேல்முருகா வெற்றிகள் தருவாய் மால்மருகா

சக்தியின் பிள்ளை வேல்முருகா சண்முகநாதா வேல்முருகா
பக்தியில் உன்னை வேல்முருகா பணிந்திட வந்தோம் வேல்முருகா

உத்தமர் போற்றும் வேல்முருகா உன்னடிபணிவோம் வேல்முருகா
சித்தம் குளிர்வாய் வேல்முருகா செய்திடுவாயருள் வேல்முருகா

அறுமுகன் நீயே வேல்முருகா அரவணைப்போனே வேல்முருகா
கருணையின் வடிவே வேல்முருகா களிப்புறச் செய்வாய் வேல்முருகா

திருமுகம் காட்டி வேல்முருகா தீவினை மீட்கும் வேல்முருகா
ஒருதரம் உன்னை வேல்முருகா வணங்கிட நன்மை வேல்முருகா

அறிவினைப் பேருக்கும் வேல்முருகா அன்பினை வளர்ப்பாய் வேல்முருகா
பெருமைகள் சேர்ப்பாய் வேல்முருகா பிழைகளை களைவாய் வேல்முருகா

குருபரன் நீயா வேல்முருகா குமரனும் நீயே வேல்முருகா
வரும்வினைத் தீர்க்கும் வேல்முருகா வளமுடன் காப்பாய் வேல்முருகா

குறமகள் வள்ளியை மணம்முடித்தாயே வேல்முருகா
சமநிலை ஓங்கிட வேல்முருகா நெறிதனை வகுத்தாய் வேல்முருகா

சூரனை வென்றாய் வேல்முருகா சோதனைத் தீர்த்தாய் வேல்முருகா
மாமயிலேறி வேல்முருகா வலம்வருவோனே வேல்முருகா

கணபதி இளையோன் வேல்முருகா கருணைபுரிவாய் வேல்முருகா
துணைவருவாயே வேல்முருகா தொழுதிடுவோமே வேல்முருகா

அறுபடைவீடு வேல்முருகா அழகுடன் கொண்டாய் வேல்முருகா
திருவருள் செய்திட வேல்முருகா எழிலுடன் நின்றாய் வேல்முருகா

ஆறெழுத்தோனே வேல்முருகா அபயம் தருவாய் வேல்முருகா
தேரிழுப்போமே வேல்முருகா திருவடிப் பணிந்தே வேல்முருகா

சீறிடும் பகைமை வேல்முருகா சிதறிட வைப்பாய் வேல்முருகா
கூறிடும் அன்பில் வேல்முருகா ஒன்றிட வேண்டும் வேல்முருகா

பூவுலகெங்கும் வேல்முருகா புதுமைகள் பரவிட வேல்முருகா
நீயருள் செய்வாய் வேல்முருகா நின்தழல் பணிந்தோம் வேல்முருகா

வானவர் போற்றும் வேல்முருகா வடிவழகோனே வேல்முருகா
தேனமுதான வேல்முருகா தீந்தமிழ்த் தந்தாய் வேல்முருகா

சுப்ரமண்யனே வேல்முருகா சொக்கிடும் எழிலே வேல்முருகா
செப்பிடும் போதே வேல்முருகா செந்தேன் ஊறிடும் வேல்முருகா

கங்கையின் புதழ்வா வேல்முருகா கைகொடுப்பாயே வேல்முருகா
கையினில் கூசம் வேல்முருகா தாழ்பணிவோமே வேல்முருகா

மாமலை மருதம் வேல்முருகா மகிழ்வுடன் கண்டாய் வேல்முருகா
காவலும் நீயே வேல்முருகா கைதொழுவோமே வேல்முருகா

தண்டம் ஏந்தி வேல்முருகா தனித்திருப்போனே வேல்முருகா
குன்றம் நாடி வேல்முருகா குடியிருப்போனே வேல்முருகா

குகன் வடிவோனே வேல்முருகா கும்பிடவந்தோம் வேல்முருகா
மகிழ்வினையளிப்பாய் வேல்முருகா மலரடிப் பணிந்தோம் வேல்முருகா

கோதண்டபாணி வேல்முருகா குலத்தைக் காப்பாய் வேல்முருகா
பாதம் பணிந்தோம் வேல்முருகா பழநியாண்டவா வேல்முருகா

செந்தில்நாதர் வேல்முருகா செய்திடுவாயருள் வேல்முருகா
உந்தன் நாமம் வேல்முருகா உரைத்திட வந்தோம் வேல்முருகா

முத்துகுமாரா வேல்முருகா மோகனவடிவே வேல்முருகா
முக்தியைத் தருவாய் வேல்முருகா முன்வினைத் தீர்ப்பாய் வேல்முருகா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாகூர் ஹனிபாவின் எங்கும் நிறைந்தோனே இரு கரம் ஏந்துகிறேன்|

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்திடவே இறைவன் வருகின்றான் பிறரை அன்பு செய்திடவே இதயம் தருகின்றான் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவ ஷக்திய தூயது பவதி ..
சத்தியப் பிரபிவிதும் ..
நசே தேவம் தேவோனகள குசலஹச்பந்திதுமபீ ..
அகஸ்த்மாம் ..ஆராத்யாம் ..
ஹரிஹர விரிஞ்சாதி பிறவி .
ப்ரனம்தும் ஸ்தோதும் ம ..
கதமஹிர்த்த புண்யாக பிரபாவதி ...ஆ 

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

ஒரு மான் மழுவும் கூன் பிறையும் 
சடை வார் குழலும் பிடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே 
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜனனி ....

சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங்கழலே  மலை மாமகளே
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ.

ஜனனி ....

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே 
பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்
பணிந்தே துவழும் மணி நேத்திரங்கள்
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ.


ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு -4
என் இயேசையா அல்லேலூயா -4

இன்பத்திலும் நீரே, துன்பத்திலும் நீரே -2
எவ்வேளையும் ஐயா நீர் தானே -2  - உம்மை அல்லாமல்

என் ஸ்நேகமும் நீரே, என் ஆசையும் நீரே -2
என் எல்லாமே ஐயா நீர் தானே  -2   - உம்மை அல்லாமல்

இம்மையிலும் நீரே, மறுமையிலும் நீரே  -2
எந்நாளுமே ஐயா நீர்தானே -2  - உம்மை அல்லாமல்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!

நித்தமும் பாலிலே நீராட்டுவோம்
பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்!
நித்தமும் பாலிலே நீராட்டுவோம்
பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்!
திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில்
திகழும் குங்குமத்தை அன்னையென்போம்!
திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில்
திகழும் குங்குமத்தை அன்னையென்போம்!

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!

பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்!
பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்!
பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்!
பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்!
திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு
தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்!
திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு
தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்!


விரலுக்கு மோதிரம் பவளத்திலே!
கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே!
முருகன் விரலுக்கு மோதிரம் பவளத்திலே!
கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே!
தங்கத் திருப்பாதம் வணங்கும்போது,
தங்கத் திருப்பாதம் வணங்கும்போது,
பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது!
பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது!

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!


மயில்மீது மன்னனை இருக்கவைத்து
ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி
மயில்மீது மன்னனை இருக்கவைத்து
ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி
வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து,
வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து,
இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்!
இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்!

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!
நன்மையெல்லாம் நடக்குது..!
நன்மையெல்லாம் நடக்குது..!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருகா ! முருகா ! முருகா ! முருகா! முருகா ! முருகா !  
என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்க வில்லை! 
இன்னும் என்ன சோதனையா ? முருகா ! முருகா ! 

அன்னையும் அறிய வில்லை ! 
தந்தையோ நினைப்பதில்லை   !
மாமியும்    பார்ப்பதில்லை ! 
மாமனோ  கேட்பதில்லை ! ( என்ன கவி ) 

அட்சர லட்சம்  ! அட்சர லட்சம்  தந்த  அண்ணல்  போஜ ராஜன் இல்லை !
பட்ச முடனே அழைத்து பரிசளிக்க யாருமில்லை ! 
இக்கணத்தில்   நீ நினைத்தால் எனக்கோர்  குறைவில்லை ! 
 லட்சியமோ உனக்கு !   முருகா ! உன்னை நான் விடுவதில்லை !

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராகம் வராளி தாளம் ஆதி

பல்லவி

கா வாவா கந்தா வாவா எனைக் கா வா வேலா வா
பழநிமலை யுறையு முரு (கா)

அனுபல்லவி

தேவாதிதேவன் மகனே வா - பர
தேவி மடியி லமரும் குஹனே வா வள்ளி -
தெய்வயானை மணவாளா வா - சர
வணபவ பரமதயாள ஷண்மு (கா)

சரணம்

ஆபத்திருளற அருளொளி தரும் அப்பனே அண்ணலே ஐயா வா
பாபத் திரள் தரும் தாபம் அகல வரும் பழநி வளர் கருணைமழையே வா
தாப த்ரய வெயிலற நிழல்தரும் வான் தருவே என் குலகுருவே வா
ஸ்ரீபத்மநாபன் மருகா ராமதாஸன் வணங்கும் முத்தய்யா விரைவொடு (கா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன் (2 )
தாயென்று உன்னைத்தான் (2 )
 பிள்ளைக்கு காட்டினேன் மாதா  
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே (2 )
மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே 
மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்றவா - மாதா 
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே (2 )
தரைகண்டிடாத ஓடம் தண்ணீரிலே 
அருள்தரும் திருச்சபை மணிஓசை கேட்குமோ - மாதா 
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

பிள்ளைப பெறாத பெண்மை தாயானது (2 )
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது 
கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது - மாதா 
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைத்தான் (2 )
 பிள்ளைக்கு காட்டினேன் மாதா  
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
ம்ம்...ம்ம்..ம்ம்ம்........

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமைதி தேடி அலையும் நெஞ்சமே
அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமேஅமைதி தேடி அலையும் நெஞ்சமே
அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே
நிலையான சொந்தம் நீங்காத பந்தம் 
நிலையான சொந்தம் நீங்காத பந்தம் 
அவரன்றி வேறில்லையே
அமைதி தேடி அலையும் நெஞ்சமே
அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமேபோற்றுவேன் என் தேவனை பறைசாற்றுவேன் என் நாதனை 
எந்நாளுமே என் வாழ்விலே போற்றுவேன் என் தேவனை பறைசாற்றுவேன் என் நாதனை
எந்நாளுமே என் வாழ்விலே காடு மேடு பள்ளம் என்று கால்கள் சோர்ந்து அலைந்த ஆடு
நாடுதே அது தேடுதே காடு மேடு பள்ளம் என்று கால்கள் சோர்ந்து அலைந்த ஆடு
நாடுதே அது தேடுதே அமைதி தேடி அலையும் நெஞ்சமே
அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமேஇறைவனே என் இதயமே இந்த இயற்கையின் நல் இயக்கமே
என் தேவனே என் தலைவனே இறைவனே என் இதயமே இந்த இயற்கையின் நல் இயக்கமே
என் தேவனே என் தலைவனே பரந்து விரிந்த உலகம் படைத்து  சிறந்த படைப்பாய் என்னைக் கண்ட
தேவனே என் ஜீவனே பரந்து விரிந்த உலகம் படைத்து  சிறந்த படைப்பாய் என்னைக் கண்ட
தேவனே என் ஜீவனேஅமைதி தேடி அலையும் நெஞ்சமே
 அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமேஅமைதி தேடி அலையும் நெஞ்சமே
அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே
நிலையான சொந்தம் நீங்காத பந்தம் 
நிலையான சொந்தம் நீங்காத பந்தம் 
அவரன்றி வேறில்லையேஅமைதி தேடி அலையும் நெஞ்சமே
அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

யோகநாதனே || பாடியவர் :S P பாலசுப்ரமணியம் || இசை : வீரமணி கண்ணன் || வரிகள்: வாரஸ்ரீ || ராகு பெயர்ச்சி பாடல்

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.