Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருவேகம்பமாலை

வரிக்கோல வேல்விழி யாரனுராக மயக்கிற்சென்று
சரிக்கோது வேனெழுத் தஞ்சுஞ் சொல்லேன்தமி யேனுடலம்
நரிக்கோ கழுகு பருந்தினுக் கோவெய்ய நாய்தனக்கோ
எரிக்கோஇரையெதுக்கோ இறைவாகச்சி ஏகம்பனே.

காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டி என் கண்ணெதிரே
மாதென்று சொல்லி வருமாயைத உனை மறலிவிட்ட
தூதென்றுஎண் ணாமற் சுகமென்று நாடுமித் துற்புத்தியை
ஏதென்று எடுத்துரைப்பேன் இறைவாகச்சி ஏகம்பனே.

ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப்பெற்ற
பேருஞ் சதமல்ல பெண்டிர் சதமல்ல பிள்ளைகளுஞ்
சீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேசத்திலே
யாருஞ் சதமல்ல நின்றாள் சதங்கச்சி ஏகம்பனே.

சீறும் வினையது பெண்ணுருவாகித் திரண்டுருண்டு
கூறு முலையும் இறைச்சியுமாகிக் கொடுமையினால்
பீறு மலமும் உதிரமுஞ்சாயும் பெருங்குழிவிட்டு
ஏறுங் கரைகண்டிலேன் இறைவாகச்சி ஏகம்பனே.

பொருளுடையோரைச் செயலிலும் வீரரைப் போர்க்களத்துந்
தெருளுடையோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல்
அருளுடையோரைத் தவத்திற்குணத்தில் அருளிலன்பில்
இருளறு சொல்லிலுங் காணத்தகுங்கச்சி ஏகம்பனே.

பருத்திப்பொதியினைப் போலவேவயிறு பருக்கத்தங்கள்
துறுத்திக் கறுசுவை போடுகின்றார் துறந் தோர்தமக்கு
வருத்திஅமுதிட மாட்டாரவரை இம்மானிலத்தில்
இருத்திக்கொண் டேனிருந்தா இறைவாகச்சி ஏகம்பனே.

பொல்லாஇருளகற் றுங்கதிர்கூகையென் புட்கண்ணினுக்கு
அல்லாயிருந்திடும் ஆறொக்குமேஅறி வோருள்ளத்தில்
வல்லாரறிவார் அறியார்தமக்கு மயக்கங்கண்டாய்
எல்லாம் விழிமயக்கே இறைவாகச்சி ஏகம்பனே.

வாதுக்குச்சண்டைக்குப் போவார்வருவார் வழக்குரைப்பார்
தீதுக்குதவியுஞ் செய்திடுவார்தினந் தேடியொன்றும்
மாதுக்களித்து மயங்கிடுவார் விதி மாளுமட்டும்
ஏதுக்கிவர் பிறந்தார் இறைவாகச்சி ஏகம்பனே.

ஓயாமற் பொய்சொல்வர் நல்லோரைநிந்திப்பர் உற்றுப்பெற்ற
தாயாரைவைவர் சதியாயிரஞ்செய்வர் சாத்திரங்கள்
ஆயார்பிறர்க்கு உபகாரஞ்செய்யார்தமை அண்டினர்க்கொன்று
ஈயாரிருந்தென்ன போயென்ன காண்கச்சி ஏகம்பனே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹர ஹர சிவ சிவ ஓம்.ஓம்.ஓம்

ஹர ஹர சிவ சிவ ஓம்

ஹர ஹர சிவ சிவ.சிவ சிவ ஹர ஹர

ஹர ஹர சிவ சிவ ஓம்... ஓம்.ஓம்

ஹர ஹர சிவ சிவ ஓம்

அருனையின் பெருமகனே

எங்கள் அண்ணாமலை சிவனே

ஆடிய பாதத்தில் ஓர் இடம் வேண்டும் (2)

அருள்வாய் ஈஸ்வரனே ...

அன்பே அருணாச்சல சிவனே

ஹர ஹர சிவ சிவ ஓம்

அபயம் அபயம் அண்ணாமலையே

ஹர ஹர சிவ சிவ ஓம் ...ஓம்.ஓம்

ஹர ஹர சிவ சிவ ஓம்

கானகம் ஏவிடும் மாந்தனை பாசமாய் கரமதில் பிடித்தவனே

மானிடர் யாரையும் மான் யான ஏற்பாய் (2

மலையென எழுந்தவனே

எங்கள் அருணாச்சல சிவனே(ஹர ஹர

ஆடக பொன் என பாம்பணி மாலையை அணிருத்ரபர்கரனே

பாலூறும் எங்கள் பக்தி பிரவாததை (2

அணிவாய் அவசியமே!

எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர

வன்புலி தோலினை பொன்னிடை மீதினில்

போற்றிய பரமேசா!

அன்பெனும் நூல் கொண்டு ஆடை தருகிறோம்(2

அணிந்திரு அரவிந்தமே

எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர

அண்டம் இருந்திட கண்டம் கருத்திட

நஞ்சினை சுவைதவனே!

அமுதம் போல் எங்கள் மனம் உள்ளதே (2

அதை நீ அருந்திடுமே

எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர


ரிஷபமே வாகனம் தெருவினில் ஊர்வலம்

தினம் செல்லும் குருமணியே

ஏழைகள் இதயமும் வாகனம் தானே(2

ஏறிட மனதில்லையோ!

எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர

சச்ச்சரின் கொக்கரை மத்தளம் உடுக்கையும் வசிககும் விமலேசா!

எண்களின் நெஞ்சகம் வாசித்து பழகிட (2

நேரம் உம்மக்கில்லையோ!

சொல்வாய் அருணாச்சல சிவமே(ஹர ஹர

சந்தனம் கனலென கையெனில் நெருப்புடன் ஆடிடும் கூத்தரசே!

அம்பலம் போல் எங்கள் நெஞ்சகம் உள்ளதே(2

ஆடிடுவாய் உடனே!

எங்கள் அருணாச்சல சிவனே!(ஹர ஹர

பொங்கிடும் கங்கையை செஞ்சடை மீதினில் கொண்ட குணாநிதியே

உன் திரு வாசலில் 1000 கங்கையை (2

கண்களில் ஊரிடுமே!

அதில் குளி அருணாச்சல சிவமே (ஹர ஹர

மாலவன் சோதரி மங்கள ரூபிணி இடபுறம் சுமந்தவனே

தாயினை சுமந்த நீ பிள்ளையை விடுவது (2

நியாயமோ ஈஸ்வரனே?

ஏற்பாய் அருணாச்சல சிவனே!(ஹர ஹர

சிந்தையில் சிவ மனம் வீசுது தினம் தினம்

அறிவாய் அமரேசா!

உன்னுடன் கலந்திடும் நாள் எது சொல்லிடு(2

வரமதை உடன் தருமே

எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர

ஆருயிர் ஈசனே ஆனந்த கூத்தனே

அய்யா!அழைத்திடுக

சிவமே! சிவமே!தருவாய் நலமே!

அபயம் தா அரனே!

எங்கள் அருணாச்சல சிவமே!(ஹர ஹர

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணைக் கடலாம்... காதர் வலியின் காரண சரிதம் || E.M.நாகூர் ஹனிபா | நாகூர் கச்சேரி |

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்றலங் கொந்துமிசை தெந்தனத் தெந்தனென
     வண்டினங் கண்டுதொடர்      குழல்மாதர்

மண்டிடுந் தொண்டையமு துண்டுகொண் டன்புமிக
     வம்பிடுங் கும்பகன      தனமார்பில்

ஒன்றஅம் பொன்றுவிழி கன்றஅங் கங்குழைய
     உந்தியென் கின்றமடு      விழுவேனை

உன்சிலம் புங்கனக தண்டையுங் கிண்கிணியும்
     ஒண்கடம் பும்புனையும்      அடிசேராய்!

பன்றியங் கொம்புகம டம்புயங் கஞ்சுரர்கள்
     பண்டையென் பங்கமணி      பவர்சேயே!

பஞ்சரங் கொஞ்சுகிளி வந்துவந் தைந்துகர
     பண்டிதன் தம்பியெனும்     வயலூரா!

சென்றுமுன் குன்றவர்கள் தந்தபெண் கொண்டுவளர்
     செண்பகம் பைம்பொன்மலர்     செறிசோலை

திங்களுஞ் செங்கதிரு மங்குலுந் தங்குமுயர்
     தென்பரங் குன்றிலுறை    பெருமாளே!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறைவன் அழைத்தான் திருநபியை ... சங்கீதவித்வான் S M A காதிர்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனை ஆளும் மேரி மாதா.....துணை நியே மேரி மாதா- 
எனை  ஆளும்  மேரி  மாதா.....துணை  நியே  மேரி  மாதா 

பரிசுத்த  ஆவியாலே பர  புத்திரன்  ஈன்ற  தாயே (2)
பிரபு  ஏசுநாதன்  அருளால்  புவியோரும் புனிதம் அடைந்தார் 

     எனை  ஆளும்  மேரி மாதா ......துணை  நியே  மேரி  மாதா       என்றும்  துணை  நியே  மேரி  மாதா 

நெறி  மாறி  வந்ததாலே  நகைப்பானதே  என்  வாழ்வே (2)

கணமேனும்  சாந்தி   இலையே ......அனு தினமும்  சோதியாதே 

     எனை  ஆளும்  மேரி  மாதா........துணை  நியே  மேரி  மாதா 
   என்றும்  துணை  நியே  மேரி  மாதா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாணிக்க வீணையுடன் ஞானாட்சியாய்
மனையில் குடியிருப்பாள் சரஸ்வதி நீயே

காலைக் கண்டால் வித்யா காயத்ரி நீ
மாலை வந்தால் சந்தியா சாவித்ரி நீ

ஆயுத மெய்யா உயிர்மெய்யா அறியா வயதில் நெல்மீது
அப்பா சொல்ல அன்போடு எழுதிப் பாத்தோம் உன் பேரு

வாய்மொழியாகும் தாய்மொழி சங்கீதம்
வளர்மதி உன்னாலே வளரும் சந்தோஷம்

பண்டித பிரகஸ்பதி பண்வளர் சரஸ்வதி
அம்மா வருவாய் நவராத்திரி இதுதான் எமக்கு சுபராத்திரி

பாவலர் கவிகேட்டு பாடிடுவோம் தமிழ் பாட்டு
பாமகள் விழிக்கூட்டு பாரினில் வழி காட்டு

புத்தகம் பூஜை இட்டு அச்சத்தை பூப்போட்டு
பக்தியாய் துவங்கும் சுபயோகமே வெற்றியாய் பெருகும் மென்மெலுமே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்… ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
எம்மையாளும்
உலகையாளும் ஈசனே 
ஓ….ஓ… ஓ…. ஓம்
விண்ணை ஆளும்
மண்ணையாளும் நேசனே
 ஓ… ஓ… ஓ…ஓம்

நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…

எம்மையாளும்
உலகையாளும் ஈசனே 
ஓ…ஓ… ஓ… ஓம்
விண்ணை ஆளும்
மண்ணையாளும் நேசனே 
ஓ… ஓ… ஓ…ஓம்

ஓம்... ஓம் …ஓம்… ஓம்… ஓம்… ஓம் ஓம்

கருணையென்றால் பனிமலையா
கோபம் கொண்டால் எரிமலையா
ஆடி நின்றால் புயல்மலையா
அண்ணாமலையே சிவமலையா

ஓம்…

சூரியன் ஓளியே உன் விழியா
பூமியே உந்தன் திருவடியா
வீசும் காற்றே உன் அசைவா
உலகே உந்தன் திரு உருவா

நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…

யானைமுகனே தலைமகனா
ஆறுமுகனே இளைமகனா
நானும் கூட உன்மகனா
நடக்கிற நடையே கிரிவலமா

ஆ ஆ ஆ ஆ...
ஆ ஆ ஆ ஆ...

மனித சொந்தம் மாறுமடா
தெய்வ சொந்தம் நிலைக்குமடா
சொத்து சுகமே மாயமடா
சிவமே மயமே உலகமடா

நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
ஓம்...
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
ஓம்...
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரியது கேட்கும் வடிவடிவேலோய்

அரிது அரிது மானிடராதல் அரிது

மானிடராயினும் கூன் குருடு 

செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது

கூன் குருடு செவிடு பேடு 

நீங்கிப் பிறந்தகாலையும்

ஞானமும் கல்வியும் நயத்தலரிது

ஞானமும் கல்வியும் நயந்தகாலையும்

தானமும் தவமும் தான் செய்தல் அரிது

தானமும் தவமும் தான் செய்வராயின்

வானவர் நாடு வழி பிறந்திடுமே...

அரியது கேட்டமைக்கு அழகான தமிழில்

விளக்கம் தந்த மூதாட்டியே 

கொடியது என்ன...


கொடியது கேட்கின் வடிவடிவேலோய்

கொடிது கொடிது வறுமை கொடிது

அதனினும் கொடிது இளமையில் வறுமை...

அதனினும் கொடிது ஆற்றுணாக் கொடு நோய்

அதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர்

அதனினும் கொடிது அவர் கையால் 

இன்புற உண்பது தானே...

மிக்க மகிழ்ச்சி சொல்லால் தமிழால்

வெல்லாத உலகையெல்லாம் வெல்லும்

திறமை படைத்த ஔவையே 

பெரியது என்ன...


பெரியது கேட்கின் நெறி தமிழ் வேலோய்

பெரிது பெரிது புவனம் பெரிது

புவனமும் நான் முகன் படைப்பு

நான் முகன் கரிய மால் (திருமால்/விஷ்ணு) உந்தியில் (தொப்புள்) வந்தோன்

கரிய மாலோ அலைகடல் துயின்றோன்

அலை கடலோ குருமுனியன் கையிற் அடக்கம்

குருமுனியோ கலசத்துப் பிறந்தோன்

கலசமோ புவியிற் சிறுமண் 

புவியோ அரவினுக்கொரு தலைப் பாரம்

அரமோ (அரவம்/பாம்பு) உமையவள் சிறு விரல் மோதிரம்

உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்

இறைவரோ தொண்டருள்ளத்து ஒடுக்கம்

தொண்டர் தம் பெருமையை சொல்லவும்

பெரிதே...

ஔவையே... வானவரும் உனது 

வாக்கிற்கு அடிமையாகி விடுவர் என்றால் 

அதில் வியப்பில்லை

இனியது என்ன...

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்

இனிது இனிது ஏகாந்தம் இனிது

அதனினும் இனிது ஆதியை தொழுதல்

அதனினும் இனிது அறிவினம் சேர்தல்

அதனினும் இனிது அறிவுள்ளோரை

கனவிலும் நனவிலும் காண்பது தானே

அரியது கொடியது பெரியது இனியது

அனைத்திற்கும் முறையோடு 

விடை பகன்ற ஔவையே 

புதியது என்ன...

என்றும் புதியது... ( இசை )

பாடல் என்றும் புதியது

பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது

முருகா உன்னை பாடும் பொருள் நிறைந்த 

பாடல் என்றும் புதியது

முருகா உன்னை பாடும் பொருள் நிறைந்த 

பாடல் என்றும் புதியது ( இசை )

அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்

அமுதம் என்னும் தமிழ் கொடுத்த

பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது

அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்

அமுதம் என்னும் தமிழ் கொடுத்த

பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது

முருகன் என்ற பெயரில் வந்த

அழகே என்றும் புதியது

முருகன் என்ற பெயரில் வந்த

அழகே என்றும் புதியது

முறுவல் (புன்முறுவல்/சிரிப்பு) காட்டும் குமரன் கொண்ட

இளமை என்றும் புதியது

முறுவல் காட்டும் குமரன் கொண்ட

இளமை என்றும் புதியது

உன்னை பெற்ற அன்னையர்க்கு

உனது லீலை புதியது

உன்னை பெற்ற அன்னையர்க்கு

உனது லீலை புதியது

உனது தந்தை இறைவனுக்கும்

வேலும்... மயிலும்... 

உனது தந்தை இறைவனுக்கும்

வேலும் மயிலும் புதியது....

முருகா உன்னை பாடும் பொருள் நிறைந்த 

பாடல் என்றும் புதியது ( இசை )

திங்களுக்கும் ஞாயிறுக்கும் 

கந்தன் மேனி புதியது

திங்களுக்கும் ஞாயிறுக்கும் 

கந்தன் மேனி புதியது

சேர்ந்தவர்க்கு வழங்கும்... 

கந்தன் கருணை புதியது

சேர்ந்தவர்க்கு வழங்கும் 

கந்தன் கருணை புதியது

அறிவில் அரியது அருளில் பெரியது

அறிவில் அரியது அருளில் பெரியது

அள்ளி அள்ளி உண்ண உண்ண 

உனது தமிழ் இனியது

அள்ளி அள்ளி உண்ண உண்ண 

உனது தமிழ் இனியது

முதலில் முடிவது முடிவில் முதலது

முதலில் முடிவது முடிவில் முதலது

மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு

ஆறுமுகம் புதியது... ( இசை )

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதி இருந்தும் பிழை செய்த பிறவிக்கு பெருமையுண்டோ? அம்மா
விதி என்ன கதி என்ன வீண் பிறவி அழிப்பதன்றோ?
உடன் வந்த தமக்கைக்கும் வசை தேடித்தந்த பாவி அம்மா
உனதன்பு அறிவுறையும் உதறி விட்ட பாவியன்றோ? பாவியன்றோ?

ஊராரும் நகைத்திடவே உற்றாரும் நகைத்தாரே அம்மா
உறுதுணையாம் மனையாளும் நகைத்தாளே இழிவன்றோ?

எத்தனையோ பிறவி பெற்று இழைத்திடும் தீமையெல்லாம்
இப்பிறவி ஒன்று பெற்று அத்தனையும் முடித்து விட்டேன்

எத்தனையோ பிறவி பெற்று இழைத்திடும் தீமையெல்லாம்
இப்பிறவி ஒன்று பெற்று அத்தனையும் முடித்து விட்டேன்

எனக்கினி பிறவி வேண்டாம் முருகா 
எனக்கினி பிறவி வேண்டாம் இறைவா உன் அருளால்
எனக்கினி பிறவி வேண்டாம் இறைவா உன் அருளால்
எனக்கினி இன்பம் வேண்டும் ஈனமெல்லாம் மறைய வேண்டும்

எத்தனையோ பிறவி பெற்று இழைத்திடும் தீமையெல்லாம்
இப்பிறவி ஒன்று பெற்று அத்தனையும் முடித்து விட்டேன்+

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீலானி.. அப்துல் காதிர் ஜீலானி || ஜைனுல் ஆபிதீன் பைஜி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை ஆட்கொண்ட இயேசு

 

என்னை ஆட்கொண்ட இயேசு
உம்மையாரென்று நானறிவேன்
உண்மை உள்ளவரே – என்றும்
நன்மைகள் செய்பவரே

1. மனிதர் தூற்றும்போது – உம்மில்
மகிழச் செய்பவரே
அதைத் தாங்கிட பெலன் கொடுத்து
தயவாய் அணைப்பவரே

2. தனிமை வாட்டும்போது – நம்
துணையாய் இருப்பவரே
உம் ஆவியினால் தேற்றி
அபிஷேகம் செய்பவரே

3. வாழ்க்கை பயணத்திலே
மேகத்தூணாய் வருபவரே
உம் வார்த்தையின் திருவுணவால்
வளமாய் காப்பவரே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருவாயூர் அப்பனே

 

 

ஓம் ஸ்ரீ விஜய கணபதி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரோடு பணிந்தேன் ஈரோடு மாரி 

 

ஆடி கிருத்திகை சிறப்பு முருகன் பாடல்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திங்கள் மதியோதி யொலிக்கும் தளிர் மேனியே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்தான முகம் எதிரில் அருள் பொழியுதே...
அணலான மலை காண ...மணம் குளிருதே...


சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...
சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...
புவணங்கள் ஆளும் அண்ணாமலையே...
புவணங்கள் ஆளும் அண்ணாமலையே...
எனது விழிகளில் காணும் பொழுதிலே...மாறிடுதே..மணம் ஊறிடுதே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...


யுகம் நாண்கு தாண்டியே...முகம் வேறு காட்டியே...
யகம் யாவும் ஆள்கின்ற...அருணாச்சலா...
யுகம் நாண்கு தாண்டியே...முகம் வேறு காட்டியே...
யகம் யாவும் ஆள்கின்ற...அருணாச்சலா...
சத்தியம் நீதான்...சகலமும் நீதான்...
நித்தியம் என்னில்... நிலைப்பவன் நீதான்...
அருணாச்சலா...உனை நாடினேன்...
அருணாச்சலா...உனை நாடினேன்...
சிவ லீலை செய்யாமல்..சிறுஏனை ஆட்கொள்ள...
சிறுதேனும் தயவோடு அருள்வாயப்பா...
சிறுதேனும் தயவோடு அருள்வாயப்பா...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...


முடி மீது தீபமாய்...மடி மீது ஜோதியாய்...
அடிவாரம் வெம்மையாய்... உணை காண்கிறேன்...
முடி மீது தீபமாய்...மடி மீது ஜோதியாய்...
அடிவாரம் வெம்மையாய்... உணை காண்கிறேன்...
தீயெனும் லிங்கம்...ஜோதியில் தங்கும்...
பாய்ந்திடும் சுடராய்...வான்வெளி தொங்கும்...
அருணாச்சலா...உன் கோலமே...
அருணாச்சலா...உன் கோலமே...
மனம் காண வர வேண்டும்...தினந்தோறும் வரம் வேண்டும்...
மலையான நாதனே அருள்வாயப்பா...
மலையான நாதனே அருள்வாயப்பா...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...
சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...
புவணங்கள் ஆளும் அண்ணாமலையே...
புவணங்கள் ஆளும் அண்ணாமலையே...
எனது விழிகளில் காணும் பொழுதிலே...மாறிடுதே..மணம் ஊறிடுதே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் பொதுவாகவே, ரத்த அழுத்தம் தீவிர உடல்நல பிரச்னையாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால், இதனை முறையாக பரிசோதிக்காவிட்டால் பல இணை நோய்கள் ஏற்படும் என மருத்துவ உலகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனால், இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (ICMR) சமீபத்தில் இந்தியாவில் ரத்த அழுத்த பாதிப்பின் நிலைமை குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியர்கள் அதனை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளாததை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அந்த ஆய்வறிக்கை சர்வதேச பொது சுகாதார ஆய்விதழில் வெளியாகியிருந்தது. அதன்படி, இந்தியாவில் 18 முதல் 54 வயதுக்குட்பட்ட 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. அதாவது, பத்தில் மூன்று பேர் அதை பரிசோதிப்பதில்லை. தென்னிந்திய மாநிலங்களில் அதிகபட்ச சராசரியாக 76% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். வட இந்திய மாநிலங்களில் சராசரியாக 70% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். ரத்த அழுத்தத்தை தொடர் இடைவெளியில் முறையாக கண்காணிக்காவிட்டால், இதய நோய்கள் உட்பட பல தீவிர நோய்கள் ஏற்பட்டு, இறப்புக்குக் கூட காரணமாகிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். அதுவே, முறையாக கண்காணித்து வாழ்வியல் மாற்றங்களின் மூலம் அதனை கட்டுக்குள் வைத்தால் பிரச்னை இல்லை என்ற ஆறுதல் செய்தியையும் அவர்கள் கூறுகின்றனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐ.சி.எம்.ஆர். ஆய்வில் 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. “முன்பு 50-60 வயதில்தான் ரத்த அழுத்தம் வரும். இப்போது சிறுவயதிலேயே வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குக் கூட உயர் ரத்த அழுத்தம் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். இளம் வயதினரிடையே மன அழுத்தம், தூக்கமின்மை, உப்பு, கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை எடுப்பது இதற்கு காரணமாக இருக்கிறது. நீரிழிவு நோயைவிட உயர் ரத்த அழுத்தம் அதிகமானவர்களை பாதிக்கிறது” என்கிறார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ். சந்திரசேகர். மேலும், “பெரும்பாலானோர் இதற்கு மருத்துவ சிகிச்சையே எடுப்பது கிடையாது. ஒருமுறை பரிசோதித்துவிட்டு ‘நார்மலாக' இருக்கிறது என மருந்துகளை எடுக்க மாட்டார்கள். அப்படி இருக்கக்கூடாது. தொடர்ச்சியாக ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். தொடர் பரிசோதனைகளில் ரத்த அழுத்தம் குறைந்தால்தான் மருந்துகளின் அளவை குறைக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தத்திற்கு தொடர்ந்து மாத்திரைகள் எடுக்க வேண்டும் என்பது விளிம்புநிலை மக்களுக்குத் தெரிவதில்லை. நடுத்தர மக்கள் மாத்திரைகள் எடுத்தாலும், தொடர்ந்து பரிசோதித்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்று பார்ப்பதில்லை” என்கிறார் அவர். ரத்த அழுத்தம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.   படக்குறிப்பு,சிறுவயதினருக்கும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதாக கூறுகிறார் மருத்துவர் எஸ். சந்திரசேகர். ரத்த அழுத்தம் எந்த அளவை எட்டினால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாட வேண்டும்? ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. இதில் 120 என்பது சிஸ்டோல் அளவு, இதய அறைகள் சுருங்கும்போது மாறுபட்ட கட்டம். 80 என்பது டயஸ்டோல், அதாவது இதயத்தின் அறைகள் ரத்தத்தால் நிரப்பப்படும் போது இதய சுழற்சியின் தளர்வான கட்டமாகும். இந்த அளவு 140/90 வரை அதிகரித்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்ன வகையான உணவுகள், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கூறாமல், மருந்துகளை நிறுத்தவோ, கூட்டவோ, குறைக்கவோ கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். ரத்த அழுத்தத்தை வீட்டிலேயே பரிசோதிப்பது எப்படி? மருத்துவர்கள் முன்பெல்லாம் பாதரசத்துடன் கூடிய ஸ்பிக்மோமேனோ மீட்டர் எனப்படும் ரத்த அழுத்தமானியை பயன்படுத்தினார்கள். இப்போது மின்னணு ரத்த அழுத்தக் கருவி வந்துவிட்டது. ரூ.2,500-3,000-ல் நல்ல கருவிகளை வீட்டிலேயே வாங்கி வைத்துக்கொள்ளலாம். அந்த கருவியை கையில் எங்கு, எப்படி பொருத்த வேண்டும் என, செவிலியர் அல்லது மருத்துவத் துறையை சேர்ந்த ஒருவரிடம் நேரிலேயே சென்று செய்துபார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன் டீ, காபி அருந்தியிருக்கக் கூடாது. பொதுவாகவே மது, புகைப்பிடிப்பது நல்லதல்ல. குறிப்பாக, ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் நிச்சயம் அவற்றை செய்திருக்கக் கூடாது. ரிலாக்ஸாக இருக்க வேண்டும். பின்பக்கம் சாய்ந்துகொள்ளக்கூடிய நாற்காலியில், நிச்சயம் கால்களை தொங்கவிட்டுக்கொள்ள வேண்டும். கால்களை மடக்கி வைத்துக்கொண்டோ, கால்மேல் கால் போட்டுக்கொண்டோ அமர்ந்திருக்கக் கூடாது. ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் ஓரிரு முறை மீண்டும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். வலது கை, இடது கை என மாற்றி பரிசோதித்து, அதன் சராசரியைக் கூட எடுத்துப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. எந்த நேரத்தில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறதா? ரத்த அழுத்தத்தை காலையில்தான் பரிசோதிக்க வேண்டும் என்பதில்லை. மதியம் அல்லது இரவிலும் பரிசோதிக்கலாம். உறங்குவதற்கு முன்பு கூட எடுக்கலாம். உறங்கும்போது ரத்த அழுத்தம் 15-20% குறையும். அந்த நேரத்தில் நம் உடல் சற்று ரிலாக்ஸாகும். ஆனால், இப்போது பெரும்பாலானோர் தூங்குவதற்கே இரண்டு-மூன்று மணியாகிவிடுகிறது. அதனால், அந்த சமயத்திலும் ரத்த அழுத்தம் தாழ்வு நிலைக்கு செல்லாமல் உயர்வாகவே இருக்கிறது. இதனை மருத்துவ மொழியில் இரவு நேர உயர் ரத்த அழுத்தம் (Nocturnal hypertension) என்கிறோம். அதனால்தான் பலருக்கும் காலையில் பக்கவாதம், மாரடைப்பு போன்றவை ஏற்படுகிறது. ரத்த அழுத்தம் என்பது 24 மணிநேரமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதே நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அதனால்தான் இளம் வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை நாம் பார்க்கிறோம். மனச்சோர்வு, மன அழுத்தம் இருந்தாலும் ரத்த அழுத்தம் அதிகமாகும். வலிநிவாரண மாத்திரைகள் எடுப்பதுகூட சில சமயங்களில் உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாக உள்ளது. ரத்த அழுத்தத்தை தினசரி பரிசோதிக்க வேண்டுமா? தினசரி பரிசோதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏதாவது அறிகுறிகள், தொந்தரவு இருந்தால் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? உயர் ரத்த அழுத்தம் தொடர்ந்து இருந்தால் கண்பார்வை பாதிக்கப்படும். இதய சுவர்கள், ரத்தக்குழாய்கள் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பு, மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் பாதித்து பக்கவாதம் ஏற்படலாம். காலுக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் பாதித்து பெரிஃபெரல் ஆர்ட்டரி நோய் எனப்படும் புற தமனி நோய் ஏற்படலாம். அனைத்து உறுப்புகளும் ரத்தக் குழாய்களும் பாதிக்கப்படலாம். ரத்த அழுத்தம் அதிகமாகும்போது இதய ரத்தக் குழாய்களின் சுற்றளவு குறைகிறது. இதய சுவர்கள் தடித்து வீங்கிவிடும். சுருங்கி விரிவது குறைந்துவிடும். எனவே, உயர் ரத்த அழுத்தம் நிறைய வழிகளில் இதயத்தைப் பாதிக்கும். இதய துடிப்புகள்கூட இதனால் அதிகமாகிவிடும். உயர் ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் என்னென்ன? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அறிகுறியே இருக்காது. ‘எனக்குதான் அறிகுறியே இல்லையே, நான் எதற்கு மாத்திரை எடுக்க வேண்டும்’ என்றுதான் பலரும் கேட்பார்கள். நாளடைவில்தான் அறிகுறிகள் தோன்றும். பதற்றம், தலைவலி, தலைசுற்றல், உடல் சோர்வு, தூக்கமின்மை, சிறிய விஷயத்திற்கு பயம், கால்களில் வீக்கம் உள்ளிட்டவை ஏற்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"உயர் ரத்த அழுத்தத்தால் கண் பார்வை பிரச்னை கூட ஏற்படலாம்" உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் எப்படி தடுக்கலாம்? உடல் எடையை ஒழுங்குக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சி, ஜாக்கிங், நீச்சல், ஸ்ட்ரெச்சிங் போன்றவற்றை செய்யலாம். எடை பயிற்சி போன்றவற்றை மருத்துவ ஆலோசனையுடன் செய்யலாம். ‘மெடிட்டரேனியன் டயட்’ எனப்படும் அதிகளவில் காய்கறிகள், பழங்களுடன் சிறிது புரதம், அதைவிட குறைவாக கார்போஹைட்ரேட் எடுக்கலாம். உடல் எடை 10% குறைகிறது என்றாலே இரண்டு இலக்கத்தில் நிச்சயம் ரத்த அழுத்தம் குறையும். சரியான உடல் எடையில் இருப்பவர்களுக்கும் அப்படி குறையும் என்பதில்லை. நடைபயிற்சி எல்லோராலும் செய்ய முடியும். அதற்கு எந்த தடையும் இல்லை. மூட்டு வியாதி, மூட்டு வலி இருப்பவர்கள், கை, கால்களை நீட்டி மடக்கி பயிற்சி (Stretching) செய்யலாம். தோட்ட வேலை, வீட்டு வேலைகளையே உடற்பயிற்சியாக செய்யலாம். ஒரேமாதிரியான உடற்பயிற்சிகளையே தினமும் செய்யாமல் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யலாம். ஒருவாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். குறைந்தது 5 நாட்களாவது உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். இதைத்தான் அமெரிக்க இதய சங்கம் கூறும் வழிமுறை. இவ்வளவு செய்தும் கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றாலோ அல்லது இணை நோய்கள் இருந்தாலோ நிச்சயம் மருத்துவ ஆலோசனைகளை பெறுவது அவசியம். உயர் ரத்த அழுத்தத்திற்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் எடுக்க வேண்டுமா? இதனை முற்றிலும் குணப்படுத்த முடியுமா? பெரும்பாலானோருக்கு இதற்கு காலம் முழுவதும் மாத்திரை எடுக்க வேண்டும்தான். ஆனால், இதற்கான நிரந்தர தீர்வுக்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வாழ்வியல் முறைகளை மாற்றினாலே கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உப்பு குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறை ரத்த அழுத்தம் என்பது என்ன? அதன் அறிகுறிகள் என்ன? குறை ரத்த அழுத்தம் என்பது நோய் கிடையாது. பெண்களுக்கு பொதுவாகவே 90/60 தான் ரத்த அழுத்தம் இருக்கும். அவர்களின் உடலமைப்புக்கு அப்படி இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மாத்திரை எடுத்து நார்மலாகிவிட்டது என்றால் சிலருக்கு தலைசுற்றல் இருக்கும். உடல்சோர்வு இருக்கும். அதனால் அவர்களுக்கு குறை ரத்த அழுத்தம் ஏற்படும். அவர்கள் அதற்கு மாத்திரைகள் எடுக்கலாம். நீர்ச்சத்துக் குறைபாட்டாலும் இது வரலாம். என்ன சாப்பிடலாம்? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் என்னென்ன சாப்பிடலாம், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து, சென்னையை சேர்ந்த உணவியல் நிபுணர் புவனேஸ்வரி கூறினார். “உப்பு அதிகமாக உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். தினசரி உப்பின் அளவை குறைக்க வேண்டும். சிப்ஸ், ஊறுகாய், உப்பு அதிகம் உள்ள நொறுக்குத் தீனிகளை தவிர்க்க வேண்டும். தினசரி எடுத்துக்கொள்வதில் பாதி அளவையே எடுக்க வேண்டும். உலக சுகாதார மையத்தின்படி தினசரி ஆறு கிராம் உப்பு போதும். இந்திய உணவுகளில் 10-12 கிராம் உப்பு இருக்கிறது. அதனால் அதில் பாதி எடுக்க வேண்டும். அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம். மேலும், அசைவ உணவுகளில் அதிக உப்பு, எண்ணெய், மசாலா சேர்க்கிறோம். கொழுப்பு அதிகமான ஆட்டிறைச்சி உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு குறைவான கோழி இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். அவற்றையும் என்ன அளவு எடுக்க வேண்டும் என்றும் இருக்கிறது” என தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c51nd7ekv99o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.