Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அருள்மேவும் ஆண்டவனே... அன்புடைய காவலனே || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | பள்ளபட்டி கச்சேரி .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயேசுவை காண்போம்  இயேசுவை காண்போம் 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கர்த்தர் என் மேய்பரா இருக்கிறார்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரம் தருவாய் அம்மா

 

நாதர்முடி மேல் அமர்ந்திருக்கும் நல்ல பாம்பே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாணிக்க வீணையே மரகதப் பதுமையே வைரத்தில் தோய்ந்த மனமே
 மதங்கமா முனிவரின் மாதவச் செல்வியே மாதுளம் சிவந்த விழியே
 ஆணிப்பொன் கட்டிலே அரியாசனத்திலே அரசாள வைத்த தேவி
 அறியாத நெஞ்சிலே ஓம் எனும் எழுத்திலே ப்ரணவம் தந்த காளி

 யார் தருவார் இந்த அரியாசனம்?
யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி
 அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
 யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி
 அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம் - அம்மா
 யார் தருவார் இந்த அரியாசனம்?

பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் - உயர்ந்த
 பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
 பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் - உயர்ந்த
 பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
 சேரும் சபையறிந்து செல்லாதவன்
 சேரும் சபையறிந்து செல்லாதவன் - அங்கு
 தேர்ந்த பொருள் எடுத்து சொல்லாதவன் தனக்கு
 யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி
 அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்

 கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா? - உன்
 காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா?
கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா? - உன்
 காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா?
சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா? ஆ..
சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா? - உன்
 சிங்காரக் கைக்கு அபிநயம் வேண்டுமா?
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்லா அல்ஹம்துலில்லா... எல்லா புகழும் அல்லா || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | ISLAMIC SONGS | ALLAH

 

Edited by உடையார்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கெங்கோ தேடித் தேடி தேடி அலைந்தேன்
தேவை நீ தேவா
என்றென்றும் பாடிப் பாடி உன்னை அழைத்தேன்
பாதை நீ நாதா
கார்கால மேகம் கண்டும் கனலானேன் நானே நாதா
இதயம் திறந்து உதயம் காண
உனதருள் தாரும் இறைவா

1. என் மனம் சோர்ந்து போகும் வேளை
உன்னைக் கூவி அழைப்பேன்
இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா
தாய்மடி சேரும் சேய் போல ஓடிவருவேன்
எனையன்பு செய்யும் நல்ல தெய்வம் நீதான்
எனையென்றும் காக்கும் வல்ல தெய்வம் நீதான்
நான் வாழும் நாளில் வணங்கும் தெய்வம் நீதான்
நான் காணும் பொருளில் கவிதை வடிவம் நீதான்
நான் தேடும் இடங்களில் தெய்வதரிசனம் நீதான்

2. என் நிலை பாதை மாறும் வேளை
வாசல் தேடிவருவேன்
இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா
தாகம் கொண்ட மான் போல ஓடிவருவேன்
என் வழித்துணையாய் ஆன தெய்வம் நீதான்
எனையென்றும் தேற்றும் நல்ல தெய்வம் நீதான்
நான் பாடும் பொருளில் விளங்கும் தெய்வம் நீதான்
நான் பேசும் மொழியில் அகர னகரம் நீதான்
நான் வேண்டும் இடங்களில் தெய்வதரிசனம் நீதான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறைவனின் வானக விருந்து தந்தார்
இதயங்கள் மகிழ்ந்திட எழுந்து வந்தார்
இறைவனின் படியேறீ…
என்னை தந்தேன் விருந்துண்டேன்
உன்னில்லத்தில் எந்நாளுமே சரணடைந்தேன்
இறைவனின் வா…னக விருந்து தந்தார்
இதயங்கள் மகிழ்ந்திட எழுந்து வந்தார்
இறைவனின் படியேறீ…
என்னை தந்தேன் விருந்துண்டேன்
உன்னில்லத்தில் எந்நாளுமே சரணடைந்தேன்

எந்தன் நாவில் தினம் வந்திடுவா..ர்
எந்தன் நெஞ்சில் என்றும் தங்கிடுவா..ர்
உந்தன் அன்பில் தினம் வளர்ந்திடுவே..ன்
உன்னில் இன்பம் என்றும் நிலைத்திடுவே..ன்
திருவிருந்தே… தேனமுதே…
திருவடி பணிகின்றே…..ன்
திருவிருந்தே… தேனமுதே…
திருவடி பணிகின்றே….ன்
மலராக மலர்ந்து வந்தேன்
மனதினிலே.. பூஜை செய்வேன்
பூஜை செய்வேன் பூஜை செய்வேன்
இறைவனின் வானக விருந்து தந்தார்
இதயங்கள் மகிழ்ந்திட எழுந்து வந்தார்
இறைவனின் படியேறீ….
என்னை தந்தேன் விருந்துண்டேன்
உன்னில்லத்தில் எந்நாளுமே சரணடைந்தேன்


விண்ணின் அருள் என்னில் பொழிந்திடுவா..ர்
கண்ணின் மணி என்னை காத்திடுவா..ர்
அன்பின் பாடல் என்றும் இசைத்திடுவே…ன்
என்னில் தெய்வம் என்றும் மகிழ்ந்திடுவே.ன்
தினம் தினம் நா….ன் வருகின்றேன்
விருந்தினில் மகிழ்கின்றே…ன்
தினம் தினம் நா….ன் வருகின்றேன்
விருந்தினில் மகிழ்கின்றே…ன்
மலரோ டு மகிழ்ந்து வந்தேன்
மனதினிலே.. பூஜை செய்வேன்
பூஜை செய்வேன் பூஜை செய்வேன்
இறைவனின் வா..னக விருந்து தந்தார்
இதயங்கள் மகிழ்ந்திட எழுந்து வந்தார்
இறைவனின் படியேறீ…
என்னை தந்தேன் விருந்துண்டேன்
உன்னில்லத்தில் எந்நாளுமே சரணடைந்தேன்
இறைவனின் வா…னக விருந்து தந்தார்
இதயங்கள் மகிழ்ந்திட எழுந்து வந்தார்
இறைவனின் படியேறீ…
என்னை தந்தேன் விருந்துண்டேன்
உன்னில்லத்தில் எந்நாளுமே சரணடைந்தேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓசை ஒலியெலாமானாய்..
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை    : ஆறாம் திருமுறை
பண்              : திருத்தாண்டகம்
நாடு              : சோழநாடு காவிரி வடகரை
தலம்             : திரு ஐயாறு

ஓசை ஒலியெலா மானாய் நீயே
 உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலா மானாய் நீயே
 மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிது மினியாய் நீயே
 பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலா மானாய் நீயே
 திருவையா றகலாத செம்பொற் சோதீ.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்!
சொல்லக் கூடாதே
மன்னன் கிறிஸ்து என் பாவத்தையெல்லாம்
மன்னித்து விட்டாரே

1. கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் ஒன்றாய்
மகிழ் கொண்டாடுவோம்
நாடியே நம்மை தேடியே வந்த
நாதனை ஸ்தோத்தரிப்போம்

2. பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்
பரிகரித்தாரே
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
தங்கியே விட்டாரே

3. அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு
அருளினதாலே
நிச்சயம் ஸ்வாமியை பற்றிய சாட்சி
பகர வேண்டியதே

4. வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல் வீட்டில்
ஜெயக் கொடியுடனே
மண்ணுலகில் வந்து விண்ணுலகம் சென்ற
மன்னனை ஸ்தோத்தரிப்போம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா
ஸ்வாமி வாருமேன் – இந்த
தாரணி மீதினில் ஆளுகை செய்திட
சடுதி வாருமேன்
2. சீக்கிரம் வருவேனென்று ரைத்துப்போன
செல்வக் குமாரனே – இந்த
சீயோனின் மாதுகள் தேடித் திரிகின்ற
சேதி கேளீரோ?
3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக்
கண் பூத்துப் போகுதே;- நீர்
சுட்டிக் காட்டிப் போன வாக்குத்தத்தம்
நிறைவேறலாகுதே
4. நங்கை எருசலேம் பட்டினம் உம்மை
நாடித் தேடுதே ; – இந்த
நானிலத்திலுள்ள ஜீவ பிராணிகள்
தேடிவாடுதே
5. சாட்சியாக சுபவிசேஷம்
தாரணிமேவுதே; – உந்தன்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம்
தாவிக்கூவுதே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே எனக்குள் ஆசை பெருகுதப்பா

பாடிப் பரவசமாய் உன்னையே பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேறி முருகா ஓடி வருவாயப்பா

பாசம் அகன்றதய்யா-பந்த....
உந்தன் மேல் நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததய்யா

ஆறு திருமுகமும் உன்னருளை வாரி வழங்குதய்யா
வீரமிகும் தோளும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா

கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா
பாவியென்று இகழாமல் எனக்குன் பதமலர் தருவாயப்பா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம‌ண்ணானாலும் திருச்செந்தூரில் ம‌ண்ணாவேன் ஒரு ம‌ர‌மானாலும் ப‌ழ‌முதிர் சோலை ம‌ர‌மாவேன் ம‌ண்ணானாலும் திருச்செந்தூரில் ம‌ண்ணாவேன் ஒரு ம‌ர‌மானாலும் ப‌ழ‌முதிர் சோலை ம‌ர‌மாவேன் க‌ருங்க‌ல்லானாலும் தணிகை ம‌லையில் க‌ல்லாவேன் க‌ருங்க‌ல்லானாலும் தணிகை ம‌லையில் க‌ல்லாவேன் ப‌சும் புல்லானாலும் முருக‌ன் அருளால் பூ ஆவேன் நான்... ம‌ண்ணானாலும் திருச்செந்தூரில் ம‌ண்ணாவேன் ஒரு ம‌ர‌மானாலும் ப‌ழ‌முதிர் சோலை ம‌ர‌மாவேன் 

பொன்னானாலும் வ‌டிவேல் செய்யும் பொன்னாவேன் ப‌னி பூவானாலும் ச‌ர‌வ‌ண‌ப்பொய்கை பூவ‌வேன் பொன்னானாலும் வ‌டிவேல் செய்யும் பொன்னாவேன் ப‌னி பூவானாலும் ச‌ர‌வ‌ண‌ப்பொய்கை பூவ‌வேன் த‌மிழ் பேச்சானாலும் திருப்புக‌ழ்விள‌க்க‌ பேச்சாவேன் த‌மிழ் பேச்சானாலும் திருப்புக‌ழ்விள‌க்க‌ பேச்சாவேன் ம‌ன‌ம்பித்தானாலும் முருக‌ன் 

அருளால் முத்தாவேன் நான்... ம‌ண்ணானாலும் திருச்செந்தூரில் ம‌ண்ணாவேன் ஒரு ம‌ர‌மானாலும் ப‌ழ‌முதிர் சோலை ம‌ர‌மாவேன் சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன் ப‌ழ‌ச்சுவையான‌லும் ப‌ஞ்சாமிர்த‌ச் சுவையாவேன் 

சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன் ப‌ழ‌ச்சுவையான‌லும் ப‌ஞ்சாமிர்த‌ச் சுவையாவேன் அருள் உண்டானாலும் வீடும் பேரும் உண்டாவேன் அருள் உண்டானாலும் வீடும் பேரும் உண்டாவேன் த‌னி உயிரானாலும் முருக‌ன் அருளால் ப‌யிராவேன் நான்... ம‌ண்ணானாலும் திருச்செந்தூரில் ம‌ண்ணாவேன் ஒரு ம‌ர‌மானாலும் ப‌ழ‌முதிர் சோலை ம‌ர‌மாவேன் க‌ருங்க‌ல்லானாலும் தணிகை ம‌லையில் க‌ல்லாவேன் ப‌சும் புல்லானாலும் முருக‌ன் அருளால் பூ ஆவேன் நான்... ம‌ண்ணானாலும் திருச்செந்தூரில் ம‌ண்ணாவேன் ஒரு ம‌ர‌மானாலும் ப‌ழ‌முதிர் சோலை ம‌ர‌மாவேன் முருகா முருகா முருகா முருகா முருகா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களைப் பாடியவர்கள் திருமதி மும்பை ஜெயஸ்ரீ மற்றும் திருமதி.வித்யாவும். இருவருமே வயலின் மேதை திரு லால்குடி ஜெயராமனின் சீடர்கள்.
ராகம் :தன்யாசி தாளம் : ரூபகம்
பல்லவி
பாலகிருஷ்ணன் பாதமலர் பணிவோர்க்கு இடரில்லை
வரகுண பாலகிருஷ்ணன் பாதமலர்.....
அனுபல்லவி
நீலமுகில்போலழகன் நிறைமதி வதனமதனில்
இளநகை நிலவருள் ஒளி தவழும்....... (பாலகிருஷ்ணன்)
சரணம்
கோகுலம் பிருந்தாவனம் யமுனாவிஹாரி கோபாலன்
கோபிஜன மன மோஹன முரளி கான விலோலன்
வியாகுலம் தவிர்த்து அன்பர் மனதில் வாழ் கருணாளால பாலன்
மழை தடுக்க கோவர்தனமலை எடுத்த திண்தோளன்
பிழைபொறுத்தருள் தயாளன் பிரமன் பணி மலர்த்தாளன்...(பாலகிருஷ்னன்)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே – அதைத்
தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே

1. காசினிதனிலே நேசமதாகக்
கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்
கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்
கண்டுனர் நீ மனமே – தேன்

2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத்
தாமே ஈந்தவராம் – பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு
நிதம் துதி என் மனமே – தேன்

3. காலையில் பனிபோல் மாயமாய் யாவும் (உலகம்)
உபாயமாய் நீங்கிவிடும் – என்றும்
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ மனமே – தேன்

4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
துணைவராம் நேசரிடம் – நீயும்
அன்பதாய்ச் சேர்ந்தால் அணைத்துனைக் காப்பார்
ஆசை கொள் நீ மனமே – தேன்

5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
புகழ்ந்து போற்று நாமம் – அதைப்
பூண்டுகொண்டால்தான் பொன்னகர் வாழ்வில்
புகுவாய் நீ மனமே – தேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்வதி மைந்தா பாலகுமாரா சிங்காரவேலா செந்தில்நாதா
பைந்தமிழ் தந்த எங்களின் தேவா சிங்காரவேலா செந்தில்நாதா
கூர்மதியோனே குன்றுறை தீரா சிங்காரவேலா செந்தில்நாதா
குரவள்ளியோடு நின்றிருப்போனே சிங்காரவேலா செந்தில்நாதா
மாமயிலேறி வந்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா
மங்களம் என்றும் சேர்த்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா
சேவற்கொடியைத் தாங்கிய தேவா சிங்காரவேலா செந்தில்நாதா
சிந்தையில் வந்து நின்றிடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா
ஓமென்றுரைத்த ஓங்கார நாதா சிங்காரவேலா செந்தில்நாதா
அள்ளித்தருவாய் ஆனந்தம் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா
நீயிருந்தாலே நெஞ்சினில் வீரம் சிங்காரவேலா செந்தில்நாதா
ஊரிடுமய்யா உமையின் பாலா சிங்காரவேலா செந்தில்நாதா
ஞாயிறும் நீயே திங்களும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா
நாளும் உன்னை பணிந்திடுவோமே சிங்காரவேலா செந்தில்நாதா
வேலவன் நீயே வேண்டுதல் கேட்டு சிங்காரவேலா செந்தில்நாதா
பேரருள் தன்னை தந்திடுவாய் சிங்காரவேலா செந்தில்நாதா
மாலவன் மருகா மயில்வாகனனே சிங்காரவேலா செந்தில்நாதா
சங்கடம் தீர்க்கும் சண்முகவேலா சிங்காரவேலா செந்தில்நாதா
கண்டவர்ப் போற்றும் கதிர்வேலவனே சிங்காரவேலா செந்தில்நாதா
உன்பதம்நாடி வந்தோமய்யா சிங்காரவேலா செந்தில்நாதா
அறுமுகன் நீயே அழகனும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா
அன்பரின் உள்ளம் அறிந்தவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா
திருமுகம் காட்டி அருள்செய்வாயே சிங்காரவேலா செந்தில்நாதா
தீந்தமிழ் பாடல் நீ தருவாயே சிங்காரவேலா செந்தில்நாதா
கரும்பாய் வாழ்வை மாற்றிடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா
கருணை என்மேல் காட்டிடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா
பிரம்மனும் போற்றும் பிள்ளையும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா
பேரறிவாளன் செல்வனும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா
ஒளவையின் முன்னே வந்தான் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா
அருந்தமிழ் அள்ளித் தந்தவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா
கங்கையின் மைந்தா கார்த்திகை பாலா சிங்காரவேலா செந்தில்நாதா
காத்தருள்வாயே செந்தமிழ் வேலா சிங்காரவேலா செந்தில்நாதா
சங்கரன் ஈன்ற சரவணபவனே சிங்காரவேலா செந்தில்நாதா
சகலரும் போற்றும் சண்முகநாதா சிங்காரவேலா செந்தில்நாதா
பங்கயப் பூவில் கண்மலர்தோனே சிங்காரவேலா செந்தில்நாதா
பக்தருக்கென்றும் அருள்செய்வோனே சிங்காரவேலா செந்தில்நாதா
சுப்ரமணியன் சூரனை வென்றோன் சிங்காரவேலா செந்தில்நாதா
சோதனையாவும் தீர்ப்பவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா
செப்பிடவந்தோம் உந்தன் நாமம் சிங்காரவேலா செந்தில்நாதா
செப்பிடும்போதே செந்தேன் ஊரும் சிங்காரவேலா செந்தில்நாதா
வேழவன் தம்பி வேலவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா
வேண்டியதெல்லாம் தந்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா
அறுபடையில் வீற்றிருப்போனே சிங்காரவேலா செந்தில்நாதா
அன்பரின் நெஞ்சில் வாழ்ந்திருப்போனே சிங்காரவேலா செந்தில்நாதா
காரிருள் தன்னை நீக்கிடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா
காவல் தந்து காத்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா
வீறுடன் நின்ற வீரனும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா
வெற்றியளிக்கும் சூரனும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா
பாடிட வந்தோம் உன்புகழ் தானே சிங்காரவேலா செந்தில்நாதா
பாடிட வைத்த தெய்வமும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா
பன்னிருக்கண்கள் கொண்டவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா
பாவம் தீர்க்கும் பாலனும் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா
பன்னிருக்கைகள் கொண்டவன் நீயே சிங்காரவேலா செந்தில்நாதா
பணிந்தோமய்யா காத்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா
எண்ணியதெல்லாம் ஈடேறவேண்டும் சிங்காரவேலா செந்தில்நாதா
இதயம் தானே குளிர்ந்திடவேண்டும் சிங்காரவேலா செந்தில்நாதா
மண்ணிடை வாழ்க்கை சிறந்திட வேண்டும் சிங்காரவேலா செந்தில்நாதா
மால்மருகா உன் கருணை வேண்டும் சிங்காரவேலா செந்தில்நாதா
உன்வடிவழகைப் பார்த்திருப்போமே சிங்காரவேலா செந்தில்நாதா
உன்னடியென்றும் போற்றிடுவோமே சிங்காரவேலா செந்தில்நாதா
சேனாபதியே செவ்வேல் கோவே சிங்காரவேலா செந்தில்நாதா
சீருடன் வாழ செய்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா
வீணாய் போகும் வாழ்நாள் தன்னில் சிங்காரவேலா செந்தில்நாதா
வெற்றிகள் காண செய்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா
தேனாய் எங்கள் நாவில் ஊறும் சிங்காரவேலா செந்தில்நாதா
திருமுருகா உன் இனிக்கும் நாமம் சிங்காரவேலா செந்தில்நாதா
தானாய் வந்து காத்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா
தயவுடன் எம்மைப் பார்த்திடுவாயே சிங்காரவேலா செந்தில்நாதா
ஏனோ இன்னும் மௌனம் அய்யா சிங்காரவேலா செந்தில்நாதா
என்றும் உன்னைப் போற்றிடுவோமே சிங்காரவேலா செந்தில்நாதா
பிள்ளைத்தமிழில் வாழும் தேவா சிங்காரவேலா செந்தில்நாதா
பிணிகள்த் தீர்க்கும் வல்லமையோனே சிங்காரவேலா செந்தில்நாதா
கன்னித்தமிழில் கலந்திருப்போனே சிங்காரவேலா செந்தில்நாதா
கதிராய் வந்து ஒளி தருவோனே சிங்காரவேலா செந்தில்நாதா
தீவினையாவும் தீர்த்திடுவோனே சிங்காரவேலா செந்தில்நாதா
தெள்ளுத் தமிழின் உள்ளிருப்போனே சிங்காரவேலா செந்தில்நாதா
சோர்வினை நீக்கும் சுந்தர பாலா சிங்காரவேலா செந்தில்நாதா
சொல்லிட வந்தோம் உன்புகழ் தானே சிங்காரவேலா செந்தில்நாதா
ஆறுமுகத்தோன் நீயிருந்தாதாலே சிங்காரவேலா செந்தில்நாதா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் தீபம் காதில் கேளும்
கருணை நபியே கல்பில் வாரும்
[தேடித் தேடி பாடும் குரலோ] (2)
பாலை மணலை தாண்டி வருதோ
மதினா வரமாய் சுமக்கும் மேனியே!

அழகும் தோற்க்கும் அற்புதம் வியக்கும்
உங்கள் முகம் கண்டால்
உலகம் சுழலும் உன்னத நபியின் அற்புதப் பேரொளியால்

கண்ணில் வைத்துக் காத்திருப்பேன் கண்மணியின் காட்சியதை
கல்பில் சுமக்க காத்திருப்பேன் என் மரணம் எய்தும் வரை
சுந்தர நபியின் சந்திர முகத்தை ரசித்திட உயிர்த்திருப்பேன்
உத்தம நபியின் வழிமுறை அதனை உயிராய் பற்றிடுவேன்

எந்தன் உயிரே !  விண் மறைச்சுடரே !
என் கருவிழியே !  என் கல்பாளரே !

(அழகும் தோற்க்கும்)

தோன்றிய உலகின் உயிர்கள் யாவும் நபி புகழ் பாடிடுமே
நபியின் புகழை மறக்கா வரையில் உலகம் இயங்கிடுமே
வாடிய மனமும் வாஞ்சை நபி முகம் கண்டால் மலர்ந்திடுமே
உன்னத நபியின் சொற்கள் அனைத்தும் அற்புத சாஸ்த்திரமே

(அழகும் தோற்க்கும்)
 
உயிரின அலைகள் அனு தினமாக என் மனக் காதல் உயிலை தொடுத்திடுதே!
உணர்வும் துடித்திட தடமாறிப்போகிடும்
குழந்தை தாய்கரம் ஏற்றிடும் ...
தாயென்றும் நீரே தவித்திடும் போதே!
தெளிந்திட கரம் கொடுப்பீர் நபியே!
இறையிடம் நானும் இறைஞ்சிடும் நேரம் ...
பிழைத்திட பரிந்துரைப்பீர் நபியே!
பிழையாக நான் செய்யும் பாவங்கள் என்னை சூழும்...
உயிராக உம்மீதில் நான் கொள்ளும் அந்த நேசம்
[உயிரே அந்த நேசம் உரையாய் வந்து பேசும்] (2)
[என்னை காத்திட கரம் பிடிக்கும்] (2)

ஜொலிக்கும் ஜோதியைக் கண்டிடுவோம் கண்மணியின் புகழ்படித்தே
ஹவ்துல் கவ்ஸரில் பருகிடுவோம் நம் நாயகம் கரம் பிடித்தே
ஜன்னத்தில் இடத்தை உன்னத நபியின் அருகினில் பெற்றிடுவோம்
சுவனத்தில் யாவரும் சுகமாய் வாழ்ந்திட பொன்நபி உடன் வேண்டும் 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புப்பணியாலே உலகை வெல்லுங்கள்
இன்ப துன்பம் எதையும் தாங்கிடுங்கள் (2)
எளியவர் வாழ்வில் துணைநின்று
இயேசுவின் சாட்சியாய் நிலைத்திருங்கள் (2)

 மண்ணகத்தில் பொருளைச் சேர்க்க வேண்டாம்
மறைந்து ஒழிந்து போய்விடுமே (2)
விண்ணில் பொருளை தினம் சேர்த்து
இயேசுவின் சாட்சியாய் நிலைத்திருங்கள் (2)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேல் கையிலெடுத்து கந்தன் வருகையில்
அவன் பழமுதிர்சோலையில் காட்சி தருகையில்

தெய்வானை இடப்புறமும் குறவள்ளி வலப்புறமும்
நின்று புன்னகை சிந்திடும் பொன்னெழில் கண்டதும்

முருகா முருகா என்றேதான் மயில் நடனமாடாதா
ஓம் முருகா முருகா என்றேதான் மனம் உருகிப்பாடாதா

மூன்று தமிழ்மலராலே தேன் சிந்தும் கவிமாலை
நான் சூட்ட அவன் தந்தான் இசை பாடலே

கனிவேண்டி மலை நின்றான் கனித்தந்து தமிழ் உண்டான்
அவன் செய்யும் செயல்யாவும் விளையாடலே

இலகாத  கல்நெஞ்சும் இலகும்படி செய்து
இளநீரில் அபிஷேகம் ஏற்கின்றவன்

மலைதோறும் தேன்கொண்டு அபிஷேகம்தான் செய்ய
நிறைவான அருளாசி புரிகின்றவன்

வண்ணசேவல் கொடியாட காற்சலங்கை சுழன்றாட
சிவசண்முக வேலனின் பொன்முகம் கண்டதும்

வேலேந்தும் பெருமானை ஆராதனை செய்ய
தீராத வினையெல்லாம் தீர்க்கின்றவன்

திருநீறுதனை பூசி முருகா என்றழைப்போர்க்கு
சீரான செல்வங்கள் சேர்கின்றவன்

பழியொன்றும் வாராமல் மலர்ப்பாதம் பணிவோர்க்கு
வழியெல்லாம் துணையாக வருகிறவன்

படியேறி சிரம்தாழ்ந்து புகழ்பாடும் அடியார்க்கு
மறவாமல்த் திருக்காட்சி தருகின்றவன்

குளிர்பொய்கையில் நீராடி நறுசந்தனமே சூடி
அந்த படைவேல் செம்மலை பணிவுடன் வணங்கி

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.