Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கர்த்தரின் படைப்புக்களை வியந்து பாடும் SPB || ஓ வானம்!பூமி 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேனருவி குன்றாடும் அழகா
வள்ளி மான்மகளை தான்மணந்த திருத்தணிகை முருகா

வானுயர மலைமேவும் தலைவா
மலைவாசலில் உன்படியேறி வந்தோமே துணைவா

தேனருவி குன்றாடும் அழகா . . .

நீலமயில் ஆடிவரும் காடு
அண்ணல் நீ விளங்கிச் சீர்ப்பருவும் ஆறுபடைவீடு

காவடிகள் காணிக்கையோடு
எந்த காலமும் தொண்டரினம் தேடிவரும் நாடு

பழமுதிரும் திருச்சோலையழகா
அவ்வை பாட்டியவள் பாடம்தர பழம் கொடுத்த முருகா

பரங்குன்றில் தெய்வானைக் கணவா
உன்பாதமலர் தேடிநிதம் பணிந்தோமே இறைவா

திருநீறு நான்பூச வேண்டும்
நின்திருப்புகழை என்றென்றும் நான்பாட வேண்டும்

உறவாக நீயும்வர வேண்டும்
விழி ஊடுருவும் திருக்காட்சி நாளும் தர வேண்டும்

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானே உன்னை அழைத்தேன் - தியானப் பாடல்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: புல்லாய் பிறவி தர வேணும்
பாடலாசிரியர்: ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்
பாடியவர்: சுதா ரகுநாதன்
ராகம் : செஞ்சுருட்டி
தாளம் : ஆதி
.
பல்லவி :

புல்லாய் பிறவி தர வேணும் கண்ணா

புனிதமான பலகோடி பிறவி தந்தாலும்
பிரிந்தாவனமிதில் ஒரு புல்லாய்….

அனுபல்லவி :

புல்லாகிலும் நெடுநாள் நில்லாது, ஆதலினால்
கல்லாய் பிறவி தர வேணும், கண்ணா,
கமலா மலரினைகள் அணைய, எனது உள்ளம்,
புலகித முற்றிடும் பவ மத்திடுமென

சரணம் :

ஒரு கணம் உன் பதம்
படும் எந்தன் மேலே
மரு கணம் நான் உயர்வேன்
மென் மேலே
திருமேனி என் மேலே
அமர்ந்திடும் ஒரு காலே,
திருமகளென  மலரடி பெய்துன்னை

தொடர்ந்த ராதைக்கு
இடம் தருவேனே,
திசை திசை எங்கினும் பரவிடும்
குழலிசை மயங்கி வரும்
பல கோபியருடனே

சிறந்த ரசமிது நடம் நீ ஆடவும்,
ஸ்ருதியோடு லயம் கலந்து பாடவும்,
திளைப்பிலே வரும் களிப்பிலே,
எனக்கு இணை யாரென மகிழ்வேனே !

தவமிகு சுரரொடும்முனிவரும் இயலா,
தனித்த பெரும் பேரு அடிவேனே,
எவ்வுயிர்க்கும் உள் கலக்கும்,
இறைவனே யமுனைத் துறைவனே
எனக்கு ஒரு புல்லாய்…

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீ நினைந்தால் ஆகாதது உண்டோ
நீரஜதளநயணி மகாலக்ஷ்மி
மானிட வாழ்க்கையிலே இன்ப துன்பம் 
மாறி மாறி வருவது உன் செயலன்றோ ||
எல்லா பெருமைகளும் இருந்தாலும் அது
உன் அடி வணங்காமல் நிலைபெறுமோ 
உன்னருள் பார்வை இல்லாதவற்கு
உலகிலே வாழ வழியேது அம்மா ||

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏகனே யா அல்லாஹ்
நாயனே யா அல்லாஹ் 
அஹதான்  அவனே யா அல்லாஹ் 
சமதான் அவனே யா அல்லாஹ் 
அழிந்த உடலை மீண்டும் உயிர் தந்தெழுப்பிடுவோனே யா அல்லாஹ் 
லாயிலாஹா இல்லல்லாஹ்
லாயிலாஹா இல்லல்லாஹ் 

நாளை என்றொரு கேள்வி அமைத்து 
நாளை கடத்து யா அல்லாஹ் 
நானும் ஒருநாள் அங்கே வருவே
நலமளிப்பாயே யா அல்லாஹ் 
வாழும் உலகில் நாளும் உன்னை மறந்தவனில்லை யா அல்லாஹ் ..

சூது துன்பம் சூழ்ந்த போதும் 
சுகமளிப்பாயே யா அல்லாஹ்..
பச்சைகுழந்தை  பாதம் பட்டதும் பரிசளித்தாய்  ஜம்ஜம் தண்ணீரை 
பாவிகள்  நாங்கள் பதருகிறோம்
போக்கிடு எங்கள்  கண்ணீரை 

இச்சைகள்  யாவும்  உன்னை  தவிர 
வேறொன்றுமில்லை யா  அல்லாஹ். 
இதயம்  கனிந்து இசை போடுகிறேன் 
ஏற்றுக் கொள்வாயே  யா அல்லாஹ். 
லாயிலாஹா  இல்லல்லாஹ் 
 லாயிலாஹா இல்லல்லாஹ் 
                             ( அஹதான்.... )

ஒடிந்த நெஞ்சில் அரும்பும் பிஞ்சாய் 
மலராய் மலர்ந்த யா அல்லாஹ் 
ஒவலைகள் என்போம் குல்குவல்லாஹு

அஹதான் அவனே யா அல்லாஹ்..
அடியார்  வடிக்கும் கண்ணீரெல்லாம் 
பன்னீருக்கு  யா அல்லாஹ். 

அடியேன்தாசன்  கவிதை  என்றும்
அலங்கரிப்பாயே யா அல்லாஹ். 
                                  (அஹதான்....)

அன்பினை  தருவாய்  யா அல்லாஹ். 
உழைத்திட  வருவாய் யா அல்லாஹ். 
பண்பினை நாளும்   பணிவிடை  நெஞ்ஞில்  பரிசளிப்பாயே யா அல்லாஹ்...

லாயிலாஹா இல்லல்லாஹ் 
லாயிலாஹா இல்லல்லாஹ்....

 

 

 

 

Edited by உடையார்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.