Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் உன்னை மறப்பதில்லை கலக்கம் கொள்ளாதே 
கடல் கடந்து செல்லும் பொழுதில் உன்னை 
அன்பில் நினைத்தாரே அள்ளி அணைத்தாரே – 2 

ஆழ கடலை தாண்டும் போதும் அருகில் இருந்திடுவார் 
அலையில் நடந்து செல்லும்போதும் கரங்கள் பிடித்திடுவார் – 2  
தவறிப்போன ஆட்டை தேடி காண தவித்திடுவார் – 2 
காணாமல் போன காசு உன்னை (கருத்தாய் தேடிடுவார்) – 2 

பகைவர் உன்னை தாக்கும்போது கோட்டை அரணாவார் 
பள்ளத்தாக்குகள் கடக்கும்போதும் தோளில் சுமந்திடுவார் – 2 
பசுமை நிறைந்த புல்லின் வெளியில் நிதமும் அலைதிடுவார் – 2 
பாலும் தேனும் பொழியும் காணான் (தேசம் நடத்திடுவார்) – 2

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டவரே என் ஆண்டவரே உம் குரல் கேட்க ஆசை கொண்டேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பதி சூழும் திருமலை வாழும்
அருள் நிறை ஆண்டவனே
திருவடித் தாமரை திரு நிழல் தந்தருள்
அடைக்கலம் கோவிந்தனே
உலகொடு கோள்கள் உயிர் புலம் யாவும்
அடைத்தனை மாயவனே
அடைத்த பின் காத்து வளர்த்திடும் பாதம்
அடைக்கலம் மாலவனே
உடல் பொருள் ஆவி கொடுத்ததும் நீயே
ஒளி மலை வேங்கடவா
உயர் குணம் ஓங்கவும் இருவினை நீங்கவும்
அடைக்கலம் நீ தர வா
அருந்தவ நட்பு பொருந்திடும் சுற்றம்
அமைப்பது நீ அல்லவா
அறம் பொருள் இன்பமும் தருவது உன் கடன்
அடைக்கலம் வேங்கடவா
இருப்பதை விட்டு பறப்பதை நாடி
துடிப்பது எங்கள் மதி
அறிவொளி வந்த பின் தெளிவையும் கண்டிட
அடைக்கலம் உந்தன் படி
வெறும் பொருள் செல்வம் பெரும் பொருள் என்றே
விரும்பிடும் என் மனமே
பிறவியில் அன்புடன் திருவருள் சேர்ந்திட
அடைக்கலம் வேங்கடனே
எது எது இங்கே இதில் எதில் சேரும்
அறிந்தவர் யாருமில்லை
நினைப்பதும் இன்பங்கள் குவிப்பதும் உன் திறம்
அடைக்கலம் தெய்வ மலை
வருவதை முன்னாள் உரைத்திட வல்ல
அறிஞர்கள் யாருமில்லை
இனி வரும் யாவையும் விதித்தவன் நீயே
அடைக்கலம் அன்பு மலை
அழுவது துன்பம் சிரிப்பது இன்பம்
இயற்கையில் காணும் நிலை
அதனையும் மாற்றிடும் அருள் நிலை உன் நிலை
அடைக்கலம் உந்தன் மலை
திருவிழிப் பார்வை ஒருநொடி போதும்
பெரும் பயன் உண்டல்லவா
விரைவினில் என் முகம் ஒருமுறை பார்த்தருள்
அடைக்கலம் வேங்கடவா
அறவழி செல்வம் பெருகிட வேண்டும்
அருளெனும் தேன் பொழிக
உடல் நலம் கல்வியும் குறைவற சேர்ந்திட
அடைக்கலம் நீ தருக
உனதருள் இன்றி உலகியல் மேன்மைகள்
பெறுவது பொய் அய்யனே
வினை பெரிதாயினும் விதி வலிதாயினும்
அடைக்கலம் வைகுந்தனே
திருவருள் வேண்டும் திருவடி வேண்டும்
நிதம் உனைப் போற்றுகிறேன்
அதைவிட வேறு நல் கதி கிடையாதென
அடைக்கலம் வேண்டுகிறேன்
திருமகள் வாழும் அழகிய நெஞ்சில்
எனக்கொரு பங்கு உண்டு
படைத்தவன் உன்னிடம் கொடுத்துவிட்டேன் எனை
அடைக்கலம் நானும் இன்று
உணர்வெனும் ஐந்தும் அறிவெனும் ஆறும்
மலர்வது உன்னருளே
உருகிடும் நெஞ்சினில் அமைதியும் வந்திட
அடைக்கலம் தந்தருளே
அணு முதல் தோன்றும் விரிவெளி யாவும்
இயக்கிடும் வேங்கடவா
சிறு மனம் வேண்டிடும் உறவென நீ தரும்
அடைக்கலம் மேலல்லவா
குல நல மேன்மை தலைமுறை சீர்மை
வளர்ந்திட கண் மலர்க
நிலை உயர்ந்தோங்கிட திருமலைக் கோவிலில்
அடைக்கலம் நீ தருக
அழகிய ஏழு மலையெனும் வீட்டில்
திகழ்கிற ஆண்டவனே
அடைக்கலம் திருப்பதி அடைக்கலம் திருமலை
அடைக்கலம் கோவிந்தனே
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குன்றக்குடி ஊர் அழகா! குன்றாடும் வேல் அழகா! முருகன் பாடல்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சாதே ஆண்டவர் துணை இருக்க 
நெஞ்சோடு நித்தம் அவர் நினைவிருக்க- 2
 உன் தாயின் உதிரத்தில் உனைத் தெரிந்தார் 
உன் வாழ்வின் உறவாய் உன்னில் நிறைந்தார் 
அஞ்சாதே ஆண்டவர் துணை இருக்க 
நெஞ்சோடு நித்தம் அவர் நினைவிருக்க 

தீயின் நடுவில் தீமை இல்லை
திக்கற்ற நிலையில் துயரம் இல்லை 
தோல்வி நிலையில் துவண்டு வாடும் 
துன்பம் இனியும் தொடர்ந்திடாது
காக்கும் தெய்வம் காலமெல்லாம் 2
கரத்தில் தாங்கிடுவார் 
அன்பின் கரத்தில் தாங்கிடுவார்


 தூரதேசம் வாழ்க்கைபயணம்
 தேவன் ஏசு உன்னை தொடரும்
 பாவம் யாவும் பறந்து போகும்
 பரமன் அன்பில் பனியை போல
 வாழும் காலம் முழுதும் உன்னில் -2
 வசந்தம் வீசிடுமே 
அன்பின் வசந்தம் வீசிடுமே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் கூடவே இரும் ஓ இயேசுவே
நீரில்லாமல் நான் வாழ முடியாது
என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே
நீரில்லமால் நான் வாழ முடியாது - 2

இருளான வாழ்க்கையிலே
வெளிச்சம் ஆனீரே
உயிரற்ற வாழ்க்கையிலே
ஜீவன் ஆனீரே (2)
என் வெளிச்சம் நீரே
என் ஜீவனும் நீரே
எனக்கெல்லாமே நீங்கதானப்பா - 2
                    - என் கூடவே

கண்ணீர் சிந்தும் நேரத்தில்
நீர் தாயுமானீரே
காயப்பட்ட நேரத்தில் நீர்‌
தகப்பனானீரே
என் அம்மாவும் நீரே
என் அப்பாவும் நீரே
எனக்கெல்லாமே நீங்க தானப்பா - 2
                    - என் கூடவே

வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே
சோதனை நேரத்தில்
நண்பரானிரே (2)
என் வைத்தியர் நீரே
என் நண்பரும் நீரே
                    - என் கூடவே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தரணிதனில் அறுபத்து அறுகோடி தீர்த்தமும் சரவ ணத்துள் அடக்கம் சாற்றுமோர் எழுகோடி மந்திரங் களுமுன் சடாக்ஷ ரத்துள் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்லாஹ்... அல்ஹம்துலில்லாஹ்.. | இசை முரசு E.M.நாகூர் ஹனிபா இசை நிகழ்ச்சி 2002 | ISLAMIC SONGS.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் குளமாகுதம்மா.... கர்பலாவை நினைக்கையிலே || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | ISLAMIC SONGS

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மயில் வாஹனா! வள்ளி மனமோஹனா! மா (மயில்) 
சரவண பவ! வரமருள்வாய்! வா! மா (மயில்) 

கயிலாயம் முதல் மலைகளில் எல்லாம் களித்து 
விளையாடும் பன்னிரு கையா! முருகையா! (மயில்) 

பூர்ண சந்திரன் போலும் அறுமுகா! 
புவனம் எங்கும் நிறை மாயவன் மருகா! 
ஆரணப் பொருளே! அடிமை எனை ஆள 
வா வா வா! இராமதாசன் பணி குஹா!

இராகம்: மோஹனம் 
இயற்றியர்: பாபநாசம் சிவன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டவன் அன்பே சக்தி தரும்

ஆண்டவன் அன்பே சித்தி தரும்

ஆண்டவன் அன்பே புத்தி தரும்

ஆண்டவன் அன்பே முக்தி தரும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி

சுகஸ்வரூபிணி மதுரவாணி

சொக்கநாதர் மனம் மகிழும் மீனாட்சி

பாண்டிய குமாரி பவானி அம்பா

சிவசங்கரி பரமேஸ்வரி

வேண்டும் வரம்தர இன்னும் மனம் இல்லையோ

வேதவேதாந்த நாத ஸ்வரூபிணி

ஜகத் ஜனனி

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லிங்கபைரவி அஷ்டகம் || சுதா ரகுநாதன் || லிங்கபைரவி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருவேங்கடேசா உன் திரு நாமம் போற்றி
திருமேவும் ஓரேழு மாமலைகள் போற்றி
திருத்தலத்தில் சுரக்கின்ற தீர்த்தங்கள் போற்றி
திருமார்பில் திகழ் லக்ஷ்மி பதம் போற்றி போற்றி
திருப்பதியை நாடி வரும் அடியார்கள் போற்றி
திருக்கோவில் வைபவங்கள் ஒவ்வொன்றும் போற்றி
திருமாலே வேங்கடவா பெருமாளே போற்றி
திருமேனி திருப்பாத மலர் போற்றி போற்றி
நன்னாளைத் தொடங்கி வைக்கும் சுப்ரபாதம் போற்றி
நல்லார்கள் ஆழ்வார்கள் பாசுரங்கள் போற்றி
கருவறையில் விஸ்வரூப தரிசனமும் போற்றி
கண்ணாரக் கண்டோம் உன் எழில் போற்றி போற்றி
தொடர்கின்ற அபிஷேகம் வேதம் ஒலி போற்றி
தோமாலை சேவையெனும் ஆதமலர் போற்றி
கொற்றவைகள் படைக்கின்ற பஞ்சாமிர்தம் போற்றி
கோவிந்தன் அருளாட்சி திறம் போற்றி போற்றி
சஹஸ்ரநாமாவளியின் சங்கீதம் போற்றி
சந்நிதியில் ஒலிக்கின்ற அர்ச்சனைகள் போற்றி
இரவினிலே பள்ளியறை தாலாட்டு போற்றி
ஏகாந்த சேவையதன் இசை போற்றி போற்றி
வியாழனில் திருநேத்ர திருக்காட்சி போற்றி
விழி காண விழி காட்டும் எழில் வண்ணம் போற்றி
மறை நான்கின் கருவான மாயோனே போற்றி
மலராடை அணிகின்ற மால் போற்றி போற்றி
வெள்ளிதனில் நீயாடும் திருமஞ்சனம் போற்றி
வேண்டுகின்ற பெரியாழ்வார் பாசுரங்கள் போற்றி
அறுபத்து நான்கென்னும்  உபசாரம் போற்றி
அணிவிக்கும் சோலைகளின் வகை போற்றி போற்றி
கல்யாணாமூர்த்தி நின் அலங்காரம் போற்றி
கலசாபிஷேகங்கள் ப்ரமோற்சவம் போற்றி
நிகமாந்த தேசிகனாம் கண்டாமணி போற்றி
நித்திய கல்யாணம் நிகழ் தலம் போற்றி போற்றி
அன்னமாச்சார்யார் ஸ்தோத்திரங்கள் போற்றி
ஆதிசங்கரர் தந்த அஷ்டகம் போற்றி
தேனான தியாகராஜர் கீர்த்தனைகள் போற்றி
திருமலையின் புகழ் நூல்கள் தொகை போற்றி போற்றி
நாராயண உபநிஷத்தின் நலன் யாவும் போற்றி
நாமாவளி காயத்ரி மந்திரங்கள் போற்றி
பாலாஜி புகழ் சேர்க்கும் இலக்கியங்கள் போற்றி
பரந்தாமன் திகழ் நல்ல பதி போற்றி போற்றி
அலர்மேலு மங்கை திகழ் திருச்சானூர் போற்றி
த்வாதக திருமலை ஸ்ரீ வேங்கடேசா போற்றி
பங்காரு திருப்பதியின் கோவில்கள் போற்றி
பாதார விந்தங்கள் சரண் போற்றி போற்றி
புதுடில்லி ராமகிருஷ்ணபுரத்தோனே போற்றி
பம்பாயின் பனஸ்வாடி தலத்தோனே போற்றி
வங்கத்தில் வைகுந்த நாதனே போற்றி
வகுள மாளிகை வளர்த்த சுடர் போற்றி போற்றி
ஒப்பில்லா உப்பிலியப்பா உன் மேன்மை போற்றி
உயர் நெல்லை கருங்குளத்தில் தெய்வம் நீ போற்றி
மலைவையாயூர் பிரசன்ன வேங்கடேசா போற்றி
மறவாத பக்தர்க்கு உன் துணை போற்றி போற்றி
திருவல்லிக்கேணி பார்த்தசாரதியே போற்றி
தினம் தொழுவார் மனம் உறையும் பெருமாளே போற்றி
திருவரங்க பள்ளிகொண்ட ஸ்ரீரங்கா போற்றி
அருள்மேவும் அவதார பயன் போற்றி போற்றி
மாதத்தில் உன் மாதம் புரட்டாசி போற்றி
வாரத்தில் உன் வாரம் சனி வாரம் போற்றி
யுகம் நான்கில் உனது யுகம் கலியுகமே போற்றி
கலிதீர்க்கும் பாலானே கழல் போற்றி போற்றி
ஆமுக்தமால்யதா ஆண்டாளும் போற்றி
அவள் மாலை ஆண்டுதொறும் பெறுவாய் நீ போற்றி
அனந்தாழ்வார் ஆண்பிள்ளை பரம்பரையும் போற்றி
அலர்மேலு மணவாளன் அருள் போற்றி போற்றி
தேடிவரும் திருப்பதி குடை ஓராறும் போற்றி
கூடவரும் அழகுமிகும் பட்டாடை போற்றி
ஈடில்லா ஆலயத்தின் பண்டிகைகள் போற்றி
ஏழுமலை ஆண்டவனே தாள் போற்றி போற்றி
மலையாக திகழ் ஆதி சேஷன் புகழ் போற்றி
மணிமார்பில் திகழும் இரு மங்கையரும் போற்றி
நிலையாக வளம் கூட்டும் இறைவனே போற்றி
நின்றபடி வரவேற்கும் நிலை போற்றி போற்றி
ஆகாச ராஜன் அவன் அருளாட்சி போற்றி
அவர் வளர்த்த அருளன்னை பத்மாவதி போற்றி
காதலித்து கைப்பிடித்த கோவிந்தா போற்றி
கற்பூர சந்தனத்தின் சுவை போற்றி போற்றி
நரசிம்ம வடிவான அவதாரம் போற்றி
ஒரு யுகத்தில் ராமன் எனும் திருத்தோற்றம் போற்றி
மறு யுகத்தில் கண்ணன் என வந்தாய் நீ போற்றி
கலியுகத்தின் கோவிந்தா சீர் போற்றி போற்றி
ஆகமத்தின் விதிகாக்கும் வழிபாடு போற்றி
அமைத்திட்ட ராமானுஜர் திருப்பெயரும் போற்றி
ஊழி முதல் நீயே ஸ்ரீ கோவிந்தா போற்றி
உவமையில்லா பெருமாள் உன் ஊர் போற்றி போற்றி
காணிக்கை சேர்த்துவைத்து தருவார்கள் போற்றி
கைமாறாய் பல வளங்கள் பெறுவார்கள் போற்றி
கோரிக்கை நிறைவேற்றும் குலதெய்வம் போற்றி
கோவிந்தா கோவிந்தா பேர் போற்றி போற்றி
சனிக்கிழமை விரதத்தில் இருப்பார்கள் போற்றி
சத்தியமும் தர்மங்களும் காப்பார்கள் போற்றி
வினைதீர்க்கும் பெருமாளே அருளாளா போற்றி
வேண்டுதலை தந்தருளும் குணம் போற்றி போற்றி
ஸ்ரீநிவாசன் உனது திருநாமம் போற்றி
ஸ்ரீபாதரேணு எனும் ப்ரசாதம் போற்றி
மானிடர்க்கும் வானவர்க்கும் கதி நீயே போற்றி
மலை போற்றி மனம் போற்றி அருள் போற்றி போற்றி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வான்மழை போல் ஈந்த... வள்ளல் சீதக்காதி புகழ் மாலை || முகவை முரசு - ஹாஜி S.A.சீனி முஹம்மது | ISLAMIC.

 

முகவை முரசு ஹாஜி S.A.சீனி முஹம்மது அவர்கள் பாடிய வள்ளல் சீதக்காதியின் சிறப்பைக் கூறும் பாடல் ..
_________________________________________________________________________________________________
சீதக்காதி பதினேழாம் நூற்றாண்டில் தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த புகழ்பெற்ற வள்ளல் ஆவார். இவர் இயற்பெயர் 'ஷைகு அப்துல் காதிறு மரக்காயர்' என்பதாகும். இவர் பெயர் 'ஷெய்க் அப்துல் காதர்' என்றும் அழைக்கப்பெறும். 

இவரின் தந்தையார் 'மவ்லா சாகிப்' என்ற 'பெரியதம்பி மரக்காயர்' ஆவார். தாயார் 'சய்யிது அகமது நாய்ச்சியார்'. இத்தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள். சீதக்காதி இரண்டாவது பிள்ளை, அதாவது நடுவிலவர். இவரின் முன்பிறந்தவர் பட்டத்து மரக்காயர் என்ற 'முகம்மது அப்துல் காதிறு'; இவரின் தம்பியார் 'ஷைகு இப்றாகீம் மரக்காயர்' ஆவார். சீதக்காதியின் முன்னோர்கள் மரக்கலராயர் மரபில் வந்தவர்கள், அதாவது கப்பலில் வெளிநாடு சென்று கடல் வாணிகம் செய்தவர்கள்; செல்வம் மிக்கவர்கள்; ஊரின் தலைமைக்காரராக விளங்கியவர்கள். சீதக்காதியின் தாயைப்பெற்ற பாட்டனார் 'வாவலி மரக்காயர்' ஆவார். இவர் இறந்தநாள் கி.பி.1614ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் நாள் ஆகும்.இதனைக் கீழக்கரையில் உள்ள வாவலிமரக்காயரின் கல்லறையில் எழுதியுள்ள குறிப்பிலிருந்து அறியலாம்; அதில் கொல்லம் 790 ஆம்ஆண்டு ஆனந்தவருடம் கார்த்திகைமாதம் 26 ஆம்தேதி வெள்ளிக்கிழமை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீயே எமது வழி நீயே எமது ஒளி நீயே எமது வாழ்வு இயேசய்யா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்மதமே இறைவா
சம்மதமே தலைவா
உன் மாலையிலே ஒரு மலராகவும்
பாலையிலே சிறு மணலாகவும் 
வாழ்ந்திட சம்மதமே - இறைவா
மாறிட சம்மதமே
சம்மதமே இறைவா

தயங்கும் மனதுடைய 
நான் உனக்காகவே உன் பணிக்காகவே
வாழ்ந்திட வரம் தருவாய் - 2
கருவாக எனைப் படைத்து - உயர்
கண்மனியாய் எனை வளர்த்து - 2
கரமதிலே உருபதித்து 
கருத்துடனே எனைக் காக்கின்றாய்  

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
    • சின்னங்களை ஒதுக்குவதில் பாரபட்சமாகச் செயல்படுகிறதா தேர்தல் ஆணையம்? பட மூலாதாரம்,DURAI VAIKO/FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 28 மார்ச் 2024, 02:34 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் புதன்கிழமையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துவிட்டது. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் என, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு முந்தைய தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட சின்னத்தை இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. தேர்தல் ஆணையம் `ஒருதலைபட்சமாக` செயல்படுவதால்தான் நீதிமன்றம் வரை சென்றும் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை என அக்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதேவேளையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக போன்ற அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு பின்னால் 'பாஜகவின் தலையீடு' இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி ஆரம்பத்தில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. பின்னர், அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலிலும் அதே சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கோரியிருந்தது நாம் தமிழர் கட்சி. ஆனால், அந்த சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி என்ற கட்சிக்கு ஒதுக்கியதால், நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னத்தை ஒதுக்கவில்லை என்கிறது தேர்தல் ஆணையம்.   பட மூலாதாரம்,THIRUMAVALAVAN FB படக்குறிப்பு, தொல். திருமாவளவன் நாம் தமிழர் கட்சி காலம் தாழ்த்தி விண்ணப்பித்ததால் அச்சின்னத்தைத் தர முடியவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. உச்ச நீதிமன்றம் சென்றும் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சியால் பெற முடியவில்லை. அக்கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த முடிவுக்கு சீமான் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதேபோன்று, இரு தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பானை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுகியது. ஆனால், ’பானை’ சின்னம் கிடைக்காததால் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியது அக்கட்சி. ஆனால், ஒரு சதவீதத்திற்கும் குறைவாக வாக்கு சதவீதம் கொண்டிருப்பதாகவும் சில விதிமுறைகளை பின்பற்ற முடியவில்லை என்றும் கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் புதன்கிழமை திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறது. தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக விசிக தெரிவித்த நிலையில், இந்த முடிவு வந்தது. முன்னதாக, தமிழகத்தில் விழுப்புரம், சிதம்பரம் என இரு தொகுதிகளிலும் பானை சின்னத்தை முன்வைத்து அக்கட்சி பிரசாரத்தை மேற்கொண்டு வந்தது. பானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் தொகுதிப் பங்கீட்டில் திமுகவிடம் உறுதியாக இருந்தது விசிக.   பட மூலாதாரம்,NAAM TAMILAR படக்குறிப்பு, சீமான் சட்டம் என்ன சொல்கிறது? அதேபோன்று, பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது எனக்கூறி மதிமுகவின் வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைக்கப்பட்டது. குறைந்தது இரு தொகுதியிலாவது போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை மதிமுக பூர்த்தி செய்யவில்லை என இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வாதாடியது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. அத்தொகுதியில் அக்கட்சியின் முதன்மை பொதுச் செயலாளரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகனுமான துரை வைகோ போட்டியிடுகிறார். குறைந்தது இரு தொகுதிகளில் போட்டியிட்டால்தான் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தன் வாதத்தை முன்வைத்தது. வேறு மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளதாக மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், வேட்புமனுத் தாக்கல் நிறைவடையும் நிலையில் அதற்கு சாத்தியமில்லை என்பதால் மதிமுக வாதம் ஏற்கப்படவில்லை. 1994-ம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்து மதிமுகவை தொடங்கினார் வைகோ. 1996 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது. அதன்பின் நடைபெற்ற தேர்தல்களிலும் பம்பரம் சின்னத்திலேயே போட்டியிட்டது.   2001 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மதிமுகவால் ஒரு இடம் கூட பெற முடியவில்லை. பெரிய வாக்குவங்கியை அக்கட்சியால் பெற முடியாத நிலையில், 6 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வங்கியை கொண்டுள்ளதாக கூறி, மதிமுகவின் மாநில அந்தஸ்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். எனினும், அடுத்தடுத்த தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து பம்பரம் சின்னத்தைப் பெற்றுக்கொண்டது மதிமுக. ஆனால், இந்த தேர்தலில் மதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என, புதன்கிழமை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதுதொடர்பான வழக்கில், ஒரு மாநிலத்தில் குறைந்தபட்சம் இரு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அச்சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணைய விதிமுறைகள் அனுமதிக்கவில்லை என, இந்திய தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் தெரிவித்துள்ளதாக, `தி இந்து` ஆங்கில செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சின்னங்கள் 1968 ஆணை (ஒதுக்கீடு)-ன் படி, ஒரு கட்சி அங்கீகாரத்தை இழந்தவுடன் அதன் சின்னம் தானாகவே பொதுச் சின்னத்திற்கு மாறும் வகையிலான வழிமுறை இல்லை என தெரிவித்த அவர், தற்போது பம்பரம் சின்னம் பொது சின்னமாகவும் இல்லை, ஒதுக்கீட்டுச் சின்னமாகவும் இல்லை என்பதால், இக்கோரிக்கையை ஏற்க முடியாது என வாதாடினார். அச்சட்டத்தின் 17-வது பத்தியின்படி, ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் பொதுச் சின்னங்கள் குறித்த அறிவிப்பாணை வெளியிடப்படும். ஆனால், இந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் பம்பரம் சின்னம் இல்லை என அவர் கூறினார். ஆனால், அதேசமயம், அங்கீகாரத்தை இழந்த அரசியல் கட்சிகளுக்கு 10B பத்தியின்படி வழங்கப்பட்டுள்ள சலுகையை மதிமுக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதாவது, குறைந்தது 2 தொகுதிகளில் போட்டியிட்டிருந்தால் பம்பரம் சின்னம் கிடைத்திருக்கும்.   பட மூலாதாரம்,FACEBOOK சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படும்? ஒரு மாநில கட்சி அங்கீகரிக்கப்படுவதற்கு தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதன்படி கடந்த சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளையும் இரு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும். அல்லது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 6% வாக்குகளையும் ஒரு மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாத அரசியல் கட்சிகள் மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும். அதன் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுக்கொள்ளும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கென சின்னங்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பொது சின்னத்தை ஒதுக்கும். அக்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் உள்ள பொதுச் சின்னங்களிலிருந்து தங்களுக்கு விருப்பமான மூன்று சின்னங்களை தங்களின் விருப்பமாக கோர வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பொதுச் சின்ன பட்டியலில் இல்லாத எந்த சின்னமும் நிராகரிக்கப்படும். இதனிடையே, இந்தாண்டு ஜனவரி 4-ம் தேதி, பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதில் சில புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, சின்னம் கோரும் கட்சி கடந்த மூன்று ஆண்டுகளின் வரவு-செலவு கணக்கையும் கடந்த இரண்டு தேர்தல்களின் செலவு அறிக்கைகளையும் கட்சியின் அலுவலக பொறுப்பாளர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. ஜனவரி 11 முதலே இந்த விதிகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. கேட்ட சின்னத்தைப் பெற்ற பாஜக கூட்டணி கட்சிகள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகளும் காங்கிரஸ், பாஜக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் அங்கீகாரம் பெற்றவையாக உள்ளன. பாமக, மதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் அங்கீகாரம் பெறாதவையாக உள்ளன. ஆனால், பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அவை கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட சின்னங்களான முறையே மாம்பழம், குக்கர், சைக்கிள் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, டிடிவி தினகரன் சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள் இதனால், தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறுகிறார், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு. "விடுதலைச் சிறுத்தைகளுக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு எம்.பிக்களும் உள்ளனர். திருமாவளவன் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினர்களும் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். முன்னுரிமை அடிப்படையில் பானை சின்னம் வழங்கியிருக்க வேண்டும். மற்ற மாநிலத்தில் ஒதுக்கப்பட்ட சைக்கிள் சின்னத்தைக் கூட மாற்றி தமாகாவுக்கு ஒதுக்கினர். பாஜகவின் பங்கு இல்லாமல் தேர்தல் ஆணையம் இதை முடிவு செய்யவில்லை. தன்னிச்சையான அமைப்பான தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பாக செயல்படுகிறதோ என்ற ஐயம் இருக்கிறது" என்றார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினமான பணியா என்ற கேள்விக்கு, "சமூக ஊடகங்கள் மூலம் கொண்டு செல்வோம். ஆனால், மற்றவர்களுக்குப் பின்னால் தான் நாங்கள் ஓட வேண்டியிருக்கும். இத்தகைய விதிமுறைகளையே மாற்ற வேண்டும். போட்டியிடும் களம் அனைவருக்கும் சமமானதாக இல்லை. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சின்னத்தையே தர வேண்டும். தேர்தல் ஆணையம் விதிகளை மாற்ற வேண்டும்" என்றார். இதனிடையே, ஜனவரி மாதம் கொண்டு வரப்பட்ட “புதிய விதிகளை கணக்கில் கொள்ளாமல், கர்நாடகாவை சேர்ந்த புதிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியிருப்பதாகவும்,” குற்றம்சாட்டுகிறது நாம் தமிழர் கட்சி. தேர்தல் ஆணையம் மீதான இத்தகைய விமர்சனங்கள் குறித்து, முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவதற்கென வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை தேர்தல் ஆணையம் பின்பற்றும். `ஒருதலைபட்சமானது` என்பதற்கு சில ஆதாரங்கள் வேண்டும். எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்பும் காரணம் கூற வேண்டும். அந்த முடிவு, ஒருதலைபட்சமானதா, இல்லையா என்பதை கூற சில ஆதாரங்கள் வேண்டும்” என தெரிவித்தார்.   படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் "சின்னம் முக்கியம் தான்" தேர்தல் ஆணைய முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக கூறும் எதிர்க்கட்சிகளின் சந்தேகம் நியாயமானதே என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "குக்கர் சின்னத்தில் போட்டியிடாமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டது அமமுக. ஆனால், இந்த தேர்தலில் குக்கர் சின்னம் கொடுத்துள்ளனர். தமாகா என்ற கட்சியே இல்லாமல் பல தேர்தல்கள் நடந்துவிட்டன. ஆனால் அந்த கட்சிக்கு சைக்கிள் சின்னம் கொடுக்கின்றனர். பாஜக கூட்டணியில் இருப்பதாலேயே அவர்களுக்கு இந்த லாபம் கிடைக்கிறது. ஏதாவது சங்கடத்தை திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்படுத்துகின்றனர். புதிய சின்னத்தில் போட்டியிடுவது நிச்சயம் சங்கடம் தான். பாஜக கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் எந்த பிரச்னையும் வரவில்லை. அவர்களுக்கு எல்லாமே சுமூகமாக இருக்கிறது” என்றார். மேலும், இன்றும் தேர்தல்களில் சின்னம் வெற்றி-தோல்விகளை தீர்மானிப்பதில் முக்கிய கருவியாக இருப்பதாக அவர் கூறுகிறார். ”இரட்டை இலையா, உதயசூரியனா என்றுதான் இப்போதும் தேர்தல் நடக்கிறது. விழிப்புணர்வு இருந்தாலும் சின்னம் முக்கியமானதுதான். பிரபலமானவர்களால் தான் புதிய சின்னத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல முடியும். தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தபோது ரஜினிகாந்த் இருந்ததால்தான் சைக்கிள் சின்னத்தை எடுத்துச் செல்ல முடிந்தது” என்றார் அவர். ”பாஜகவுக்கு பங்கு இல்லை” தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவது தேர்தல் ஆணையத்தின் தனி அதிகாரம். அதற்கென விதிமுறைகள் இருக்கின்றன. கேட்ட சின்னம் கிடைக்காத கட்சிகள் அனைத்தும் அங்கீகாரம் இல்லாத கட்சிகள். இவை முன்கூட்டியே தங்களுக்கு வேண்டிய சின்னத்தைக் கேட்காமல் இருந்திருப்பார்கள். இதில் பாஜகவின் பங்கு எதுவும் இல்லை” என்றார். https://www.bbc.com/tamil/articles/c29w8kpg55zo
    • ரீலை ஓட்டுவதில் திறமை கொண்டவர்  உங்களுக்கு நினைவிருக்கோ  முன்பு நான் தான் கற்பகதரு Tulpen என்றவர்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.