Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஏழை எந்தன் இதய வீட்டில் வாரும் தேவனே
என் பிழை பொறுத்து உமது அருளைத் தாரும் தேவனே
அலகை வலையில் அடிமையாகி அமைதியின்றி அலைகின்றேன்
வருவீர் எனது கவலை தீர்க்கும் கருணை தெய்வமே

1. குழந்தையாய் நான் இருக்கையில் என் சின்ன இதயமே
நீர் குடியிருக்கும் கோயிலாகத் திகழவில்லையோ 
பாவம் அதிலே விழுந்தெழுந்த எந்தன் பருவ இதயமே 
தேவா உமது இல்லமாகத் தகுதியில்லையோ

2. புலன்கள் தம்மைப் புனிதமாக்கித் துதிகள் பாடினேன்
உம் மலர் பதத்தைக் கழுவித் துடைக்கக்
கண்ணீர் வடிக்கின்றேன் 
சிலுவை மரத்தில் உமக்கு வந்த தாகமதையே தணிக்கவே
உடலை ஒறுத்து உதிரம் சிந்தக் காத்திருக்கின்றேன்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருகா! முருகா!

அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

சுடராக வந்த வேல் முருகா கொடும்
சூரரை போரிலே வென்ற வேல் முருகா

சுடராக வந்த வேல் முருகா கொடும்
சூரரை போரிலே வென்ற வேல் முருகா

கனிக்காக மனம் நொந்த முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா
முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

ஆண்டியாய் நின்ற வேல் முருகா
உன்னை அண்டினோர் இன்பமே முருகா

ஆண்டியாய் நின்ற வேல் முருகா
உன்னை அண்டினோர் இன்பமே முருகா

பழம் நீ அப்பனே முருகா
பழம் நீ அப்பனே முருகா
ஞானப்பழம் நீ அல்லாது பழமேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

குன்றாறும் குடிகொண்ட முருகா
பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா

குன்றாறும் குடிகொண்ட முருகா
பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா

சக்தி உமை பாலனே முருகா
சக்தி உமை பாலனே முருகா
மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

அன்பிற்கு எல்லையோ முருகா
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா

அன்பிற்கு எல்லையோ முருகா
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா

கண்கண்ட தெய்வமே முருகா
கண்கண்ட தெய்வமே முருகா
எந்தன் கலியுக வரதனே அருள் தாரும் முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா
பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா

ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா
பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா

அரகரா சண்முகா முருகா
அரகரா சண்முகா முருகா
என்று பாடுவோர் என்னத்தில் ஆடுவாய் முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

முருகா முருகா முருகா

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருநீற்று மந்திரம் "ஓம் சரவணபவா"
பழநி ஷண்முக சுந்தர ஓதுவார்
திருப்புகழ் 

அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
     அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய்

அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
     அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய்

சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
     திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல்

தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
     திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய்

மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
     மணிமுடியின் மீத ணிந்த ...... மகதேவர்

மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
     மலைமகள்கு மார துங்க ...... வடிவேலா

பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
     படியதிர வேந டந்த ...... கழல்வீரா

பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
     பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செம் கேழ் அடுத்த சின வடிவேலும் திருமுகமும்

   பங்கே நிரைத்த நல் பன்னிருதோளும் பதுமமலர்க்

      கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன் என
         எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் நிற்பனே.சந்தான புஷ்பபரி மளகிண் கிணீ முகச்
   சரணயுக ளமிர்தப்ரபா


சந்த்ரசே கரமூஷி காரூட வெகுமோக
   சத்யப்ரி யாலிங்கனச்

சிந்தா மணிக்கலச கரகட கபோலத்ரி
   யம்பக விநாயகன்முதற்

சிவனைவலம் வருமளவில் உலகடைய நொடியில்வரு
   சித்ரக் கலாபமயிலாம்

மந்தா கிநிப்பிரப வதரங்க விதரங்க
   வனசரோ தயகிர்த்திகா

வரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய
   வராசலன் குலிசாயுதத்

திந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரண
   இகல்வேல் விநோதன் அருள்கூர்

இமையகிரி குமரிமகன் ஏறுநீ லக்ரீவ
   ரத்னக் கலாப மயிலே.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

اللهم اغفرلنا...... اللهم اغفرلنا.......اللهم اغفرلنا...... يا الله

நோயின் சோதணை போதும் இறைவா...
வாழும் வழியருள் எந்தன் இறைவா...
பாவம் பொருத்து பலாய்கள் நோயை...
நீக்கி வாழ்வில் அருள் சுகம் தருவாய்
கோபமிருந்தால் காமில் நபியின் முகத்தின் பொருட்டால் நோயை போக்கு...
கோடி உயிரின் பாவம் தீரும் வேந்தர் நபியின் முகத்தின் அருளால்...

(நோயின் சோதணை) 

தாங்க முடியா நோயின் பிடியில் காலம் கசக்கிறதே!
பாவமறிந்தே பூமியில் எங்கும் செய்த கோபமிதே!
இறைவன் நாடும் விருப்பம் மறுத்து ...
வாழும் முறை ஏனோ....
கோடி உயிரின் கேடில் விளைந்த ...
இறைவன் சோதணையோ...!

தன் நலம் போதும் என்ற வாழ்க்கை என்றும் வேண்டாமே!
மார்க்கத்தில் பூத்திட்ட சொற்க்கள் ஏற்று வாழ்வோமே..!
மன்னெல்லாம் போராடி காத்தும் ஏதும் பயனில்லை...
இறைஏகன் முகம் நாடி ஏந்தும் கைக்கு ஈடில்லை...

இறைவா எங்கள் நிலமை...
உன்னை மறந்தே வந்த வறுமை...
மனதாய் உம்மை ஏந்தும் ...
கைகளோ நிறைந்தால் போதும்...

اللهم اغفرلنا...... اللهم اغفرلنا.......اللهم اغفرلنا...... يا الله

(நோயின் சோதணை)
 
கொள்ளை நோயின் கோர பிடியில் நாளும் கடக்கிறதே ...
என்ன பாவம் செய்தோம் என்று அறியா நிலைதனிலே...
இறையை துதித்து போற்றி மகிழும் இல்லம் உறங்கிடுதே...
வணக்கம் மறந்து வாழ்ந்த யாவும் வணங்க தவிக்கிறதே...
மண்னகம் முழுதும் நியாயமற்று போனதே...
வின்னகம் நோக்கி ஏந்தும் கரம் இல்லையே ...
பாவங்கள் செய்திட மணம் தடை இல்லையே...
சோதணை அடைந்தும் இறை பயம் இல்லையே...

இறைவா எங்கள் மனதில் ...
நிரப்பிடு உந்தன் பயத்தை ...
பிஞ்சுகள் உள்ளம் பார்த்து...
அருள்வாய் பிழையை தீர்த்து ...

اللهم اغفرلنا...... اللهم اغفرلنا.......اللهم اغفرلنا...... يا الله

(நோயின் சோதணை)

உலகின் ஆசை உள்ளத்தில் முழுதாய் நிறைந்து கான்கிறதே...
இறைவன் காட்டிய மார்க்க வழியில் நடக்க மறுக்கிறதே...
சொத்து சோபனம் இருந்தால் போதும் என்ற ஆசையிலே...
கியாம நாளை மறந்து நாமும் வாழும் நிலை இதுவே...

பாவத்தை தினம் தினம் கண்கள் மூடி செய்கின்றோம்...
சோதணை வந்தால் மட்டும் இறைவனை பார்க்கின்றோம்...
வாழ்க்கையின் ஆசையிலே ஹராம் ஹலால் மறக்கின்றோம்...
இறையோனின் கோபம் தரும் பாவம் வாழ்வில் செய்கின்றோம்...

இறைவா பாவி எமக்கு...
நோய்பலாயை சுகமாய் ஆக்கு...
இனிதாய் உன்னை போற்றும் ....
வணக்கத்தை வாழ்வில் ஆக்கு...

اللهم اغفرلنا...... اللهم اغفرلنا.......اللهم اغفرلنا...... يا الله

(நோயின் சோதணை)

اللهم اغفرلنا...... اللهم اغفرلنا.......اللهم اغفرلنا...... يا الله

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமை முழுதும் உமக்களிக்க எமக்கிருக்கும் ஆசைதனை 
எடுத்துரைக்கக் கூடிவந்தோம் ஏற்றருள்வீர் ஆண்டவரே

இயேசுவுடன் உமை வணங்க நேசமுடன் நன்றி சொல்ல 
ஆசையுடன் மன்றாட தோஷமெல்லாம் தீர்ந்திடவே

கல்வாரி மலைமேலே பலியான இயேசுவையே 
பலியாகத் தரவந்தோம் ஏற்றருள்வீர் ஆண்டவரே

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் செங்காலன் முருகன் பாடல் 

 

மயிலாடும் பாறையிலே என் மனச நானும் விட்டுபுட்டன்..பாடல் (முருகன் காவடி) - மகாநதி சோபனா

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் அடி தங்கமே தங்கம்
   கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் - பின்னர்
   ஏதெனிலும் செய்வமடி தங்கமே தங்கம்!     (கண்ணன் மனநிலையை..)

கன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம் -- நாங்கள் 
    காலங்கள் கழிப்பமடி தங்கமே தங்கம் 
அன்னிய  மன்னர் மக்கள்  பூமியிலுண்டாம்--என்னும் 
     அதனையும் சொல்லிடடி தங்கமே தங்கம்     (கண்ணன் மனநிலையை..)


ஆற்றங்கரை அதனில் முன்னம் ஒருநாள் - எனை
   அழைத்துத் தனி இடத்தில் பேசியதெல்லாம்
தூற்றி நகர் முரசு சாற்றுவேன் என்றே 
    சொல்லி வருவையடி தங்கமே தங்கம்!       (கண்ணன் மனநிலையை..)


நேர முழுதிலும் அப்பாவி தன்னையே - உள்ளம்
   நினைந்து மறுகுதடி தங்கமே தங்கம்
தீர ஒருசொல் இன்று கேட்டு வந்திட்டால்
   பின்பு தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம்!  (கண்ணன் மனநிலையை..)

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணிலே பிறந்ததேனோ எங்கள் பெருமானே

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஸ்ஸல்லாம் அஸ்ஸல்லாம்

மாஷா அல்லாஹ் அல்லாஹ் 

 

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஏன் தமிழகத்தில் கேரளாவில் பாஜாகவினால் வெற்றி பெறமுடியவில்லை. அங்கு வேறு இயந்திரமா உபயோகிக்கிறார்கள்?  😀
    • த‌வ‌றுக்கு ம‌ன்னிக்க‌னுன் அண்ணா🙏..............நான் நினைத்தேன் 2013கால‌ க‌ட்ட‌த்தில் சொன்ன‌து என்று......................
    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.