Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

மணலில்நடந்துஇருளைகடந்து

 

யாரப்பேஉன் கருணைமழை

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

ஏழையாக வாழ்ந்ததேனோ யா ரசூலுல்லாஹ்

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதயமே இதயமே இறைவனைத் தேடு
இகமதில் இறைவனின் புகழினைப் பாடு (2)


உந்தன் சொல்லில் புதிய உலகம் புனிதமடைந்தது
உந்தன் சொல்லில் எந்தன் உள்ளம் குணமும் அடைந்தது (2)
 பாறையும் கேடயமுமாம் எந்தன் தந்தையே
பாதையிலே நண்பனாக நாளும் தொடருமே
இறைவனே இறைவனே இறைவனே இறைவனே


வானில் நின்று மானிடரைக் காணும் தெய்வமே
வாழ்வில் எம்மை உரிமையோடு காக்கும் நாதனே (2)
நீதியும் நேர்மையுமாய் வழி நடத்துமே
நீங்காத அன்பிலே என்னை இணைக்குமே  இறைவனே இறைவனே இறைவனே இறைவனே

இயேசுவின் திருநாம கீதம்

 

 

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயேசுவின் இருதயமே 
என்றும் இரங்கிடும் அருள்மயமே
உந்தன் ஆசியும் அருளும் சேர்த்து வந்தால்
எங்கள் ஆனந்தம் நிலைபெறுமே - 2

1. இறைவனுக்கிதயம் உண்டு - 
அந்த
இதயத்தில் இரக்கம் உண்டு - 2 -
என்றும்
இரங்கிடும் இறைவன் இருப்பதனால்
எங்கள் அனைவர்க்கும் மகிழ்ச்சி உண்டு - 2

2. கடவுளின் கருணை உண்டு அந்த கருணைக்கு உருவம் உண்டு -2
அவர் உருவத்தில் உதித்தேழும் உயிர் அதனால்
எங்கள் உள்ளத்தில் உவகை உண்டு

3. இரவினில் தீபமுண்டு இந்த இல்லத்தில் ஒளியுமுண்டு - 2
எங்கள் இருதய அன்பர் விழித்திருந்தால்
எந்த இரவிலும் காவலுண்டு - 2

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

எந்நாளும் உம்மை மறவேன் யா நபியே

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் இயேசுவே என் நேசரே 
உம்மை வாழ்த்திப் போற்றுவேன் - (2) 
என் அன்பனே என் நண்பனே 
உன் உள்ளமே என் இல்லமே 


வாழ்வின் மொழிகள் பேசும் 
உந்தன் வார்த்தை எனக்கு வேண்டுமே
வளமை சேர்க்கும் வாழ்வின் மன்னா
நிதமும் எனக்கும் தாருமே  -(2)
உன் நினைவு போதுமே
என் வாழ்வு மாறுமே -(2)

 நாழிதோறும் காக்கும்
 உந்தன் கருணை நிறைவு போதுமே
மனதில்  உன்னை நினைக்கும் போதே
 மகிழ்ச்சிக் கண்ணீர் பெருகுமே
 என் இனிய தேவனே
 நீர் ஒருவர் போதுமே

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவி கட்டி வேண்டிக்கிட்டு காவடிய தூக்கிகிட்டு தேடி வந்தோம் தேடி வந்தோம்.

உப்புக் காத்து

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

இருளுக்கு நிலவாய் பிறந்தார்...

எஜமானே என்றழைத்தால் அருள்வீர்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாமறை புகழும் மரியென்னும் மலரே
மாதரின் மாமணியே

1. அமலியாய் உதித்து அலகையை மிதித்து
அவனியைக் காத்த அன்னையரே
உருவில்லா இறைவன் கருவினில் மலர
உறைவிடம் தந்த ஆலயமே

2. பழியினைச் சுமந்த உலகினில் பிறந்து
ஒளியினை ஏற்றிய அகல்விளக்கே
இருள்திரை அகற்றி அருள்வழி காட்டி
வானக வாழ்வை அளிப்பாயே.
 

ஒளியாம் இறையே வாராய்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

எல்லாமே நீதான்! வல்லோனே அல்லாஹ்

கவிஞர் நாகூர் காதர் ஒலியின்
இன்றைய பதிவு:

🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻

🛑கடந்த 9.10.20 அன்று இந்த தகவலை மட்டும் பதிந்தேன். அதை பார்த்து பலரும் அவருடைய பாடல்களை தனக்கு அனுப்பும் படி வேண்டினர். அனுப்பியும் வைத்தேன்.இன்று ஒரு பாடலை இணைத்து பதிந்துள்ளேன். தொடர்ந்து மற்ற பாடல்களையும் பதிய இருக்கிறேன்......

 🛑இஸ்லாமிய பாடகர் வடகரை( மாயவரம்) A.M. தாலிப்..
 🛑  இந்த பாடகரைப் பற்றி சிலருக்கு தெரியும், பலருக்கு தெரியாது. ஆனால் இவர் பாடிய பாடல்களை இசைத்தட்டு மூலமும், கேசட்கள் மூலமும் அனைவரும் கேட்டு மகிழ்ந்து உள்ளத்தில் பதிய வைத்து இருக்கலாம்.இந்தப் பதிவை வாசிக்கும்போது அவரைப் பற்றியும், அவர் பாடிய பாடலின் வரிகளும் உங்கள் நினைவில் நிச்சயமாக மலரும். 

🛑 1970 காலக்கட்டங்களில் தமிழ் வானொலி நிலையங்களில் ஒலிப்பரப்பாகும் இசுலாமிய பாடல்களில் அதிகமாக  இசைமுரசு, S M A காதர், இசைமணி யூசுப், மதுரை ஹுசைன்தீன், மொஹிதீன் பேக் ஆகியோரின் பாடல்களைதான் கேட்க முடியும். இதில் இசைமுரசு பாடல்கள் தான் அதிகமாக இருக்கும்.இலங்கை வானொலியில் அழகிய வர்ணனையோடு ஒலிப்பரப்பாகும்.k அந்த நாளையில் வானொலியில் கேட்ட பாடல்கள் அனைத்தும் வற்றாத வெள்ளமாய் எங்கள் நினைவலைகளில் இன்றளவும் பொங்கி பாய்கிறது.

🛑அந்த நேரத்தில் தான் இந்த A.M. தாலிப் அவர்களின் பாடல்கள் வானொலி வழியாக பலரது செவிகளையும், சிந்தைகளையும் ஈர்க்கிறது.இனிமையான குரல், அருமையான வரிகள், புதுமையான இசையமைப்பு எல்லோரையும் கவர்ந்திழுக்கிறது.யார் இந்த பாடகர், யார் இந்த யார் பாடகர் என்ற கேள்விகளுடன் புருவங்கள் நெளிங்கின்றன.ரொம்ப ரொம்ப நல்லா இருக்கே என்ற பாராட்டு விமர்ச்சனங்களும் குவிகின்றன.o சவுண்டு சர்விஸ்க்காரர்கள் இவர் பாடிய பாடல்கள் அடங்கிய இசைத்தட்டுகளை போட்டிப் போட்டுக் கொண்டு வாங்குகின்றனர்.முஸ்லிம்கள் வீட்டு அனைத்து இனிய நிகழ்ச்சிகளிலும், கல்யாணங்களிலும், தர்காக்கள் நிகழ்ச்சி, இசுலாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி அனைத்திலும் இவரது பாடல்கள் இடம் பிடிக்க தொடங்கின.இசைமுரசு பாடலுக்கு அடுத்த இடத்தை அந்நாளில் இவரது பாடல்கள் தக்க வைத்துக் கொண்டன..
  
🛑இவ்வளவுக்கும் இவரை மேடை பாடகர் என சொல்லி விட முடியாது.அந்த முத்திரையையும் அவர் தமிழ்நாட்டில் பெறவில்லை. அதிக பேர் பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை.அப்படி இருக்க இவரது பாடல்கள் எப்படி ஹிட்டானது.அதுதான் மக்கள் விரும்பும் மாற்றம். இந்த புதிய குரலைக் கேட்டதும் உள்ளத்தில் ஒருவிதமான ஆனந்தம்.உற்சாகம்.


 🛑 70 களில் ஒரே நேரத்தில் இவர் பாடிய 8 பாடல்கள் இசைத்தட்டு வாயிலாக வெளியாகி பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எட்டு பாடல்களில் சில பாடல்கள் கவிஞர் நாகூர் சலிம் அண்ணன் எழுதியது என நினைக்கிறேன்.m சரியாக ஞாபகமில்லை. குறிப்பாக தென்னகத்தின் திருவிளக்கு தெய்வம் தந்த ஒரு விளக்கு, நன்னாகூர் புகழ்  விளக்கு, நானிலத்தின் பொது விளக்கு என்ற பாடல் சலிம் அண்ணனின் வரிகள்.
இது அந்நாளில் ஏதோ ஒரு பத்திரிக்கையில் கவிதையாக வெளியானது. அந்த கவிதையை பாடகர் மெட்டமைத்து பாடலாக பாட விரும்பியதால் கவிஞர் அவர்களின் அனுமதிப் பெற்று அதை பாடினார். இச்செய்தி கவிஞர் அவர்கள் என்னிடம் நேரில் சொன்னது.

🛑மீண்டும் 1975 ,80க்குள் இன்னுமொரு இசைத்தட்டில் 4 பாடல்களை பாடி வெளியிட்டார்.அந்த 4 பாடல்களும் கவிஞர் நாகூர் சலிம் அண்ணன் அவர்கள் எழுதியது.k ஒரு பாடல் பற்றி மட்டும் குறிப்பிடுகிறேன்.ஏன்டி முத்தம்மா ,ஏது புன்னகை என்னென்ன எண்ணங்கள் என்ற தலைப்பில் இசையமைப்பாளர் பாடிய திரைப்படப் பாடல்( படத்தின் பெயர்  ஆறு புஷ்பங்கள்) அந்த மெட்டில் *ஏங்கி நிற்கின்றேன் ஏந்தல் வாசலில்* என ஒரு பாடலை கவிஞர் அவர்கள் எழுதினார்கள். இப்பாடலை நண்பர் கலைமாமணி குல்முஹம்மது, மற்றும் பல பாடகர்கள் மேடை நிகழ்ச்சியில் பாடி இருக்கின்றனர். தாலிப் அவர்கள் இசைத்தட்டில் பாட போகும்போது திரைப்பட பாடல் மெட்டை மாற்றி சொந்த மெட்டமைத்து பாடினார்.இசைத்தட்டில் பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.. (12 பாடல்கள் தான் குறிப்பில் உள்ளது. மேலும் பல பாடல்கள் பாடி இருக்கலாம்) தாலிப் அவர்களுடன் சேர்ந்து பாடியிருப்பவர் பாடகி S. சரளா அவர்கள்...

🛑பாடகரின் சொந்த ஊர் வடகரை(மாயவரம்) என்ற போதிலும், அவர் வாழ்ந்தது, தொழில் புரிந்தது எல்லாமே மலேசியாவில்தான்.அதனால் தமிழ்நாட்டில் பலருக்கு தெரியவில்லை.. அவர் பாடுவதை தொழிலாக கொள்ளாத காரணத்தால் மேடைகளில் ஒளி வீசவில்லை..1982 ல் ஒரே ஒருமுறை அவரை நாகூரில் சந்தித்து இருக்கிறேன்.. அவரிடமிருந்து சில தகவல்கள் அப்போது பெற்றேன்.. அதன் பிறகு தொடர்பு கொண்டதில்லை..2010ல் இறைவனடி சேர்ந்தார்.
அவர் மறைந்து விட்டாலும் அவர் பாடிய பாடல்கள் என்றென்றும் மனதில் நிறைந்து வாழும்..o
     அவர் இசைத்தட்டில் பாடிய 12 பாடல்களின் விபரம்.....

🔻1, இன்ஷா அல்லாஹ், இன்ஷா அல்லாஹ்
ஏகன் அல்லா கட்டளை ஏற்று,
🔻2,எத்தனை ஆயிரம் நபிகள் வந்தனர் இப்புவிமீதிலே,
🔻3, தென்னகத்தின் திருவிளக்கு,
🔻4, அருளான அன்பான அல்லாஹூவே,
🔻5, அல்லா அல்லா எல்லாம் வல்ல இறைவன் ஒருவன் நீதானே,
🔻6, வானில் உதித்த வெண்மதிபோல் தீனில் உதித்த ஜோதியே,
🔻7, இருள் சூழ்ந்த நேரம்( நபிமணியே எங்கள் நாயகமே),
🔻8, வான்மேவும் வல்லோனின் புகழ் பாடுவோம்,
🔻9, அல்லாவை தவிர யாரிடமும் கையேந்தி விடாதீர்கள்,
🔻10,ஏங்கி நிற்கின்றேன் ( எஜமானே எங்கள் நாகூரா),
🔻11, அல்லாவின் தூதே அருள் தீபமே எங்கள் யாநபி,
🔻12, செல்வோம் செல்வோம் செம்மல் நபியை கண்டு வருவோம். சிந்தைத் திகழ் மதினா......
என்ன நண்பர்களே இப்போது இந்த பாடல்கள் உங்கள் இதய வானொலியில் ஒலிக்க தொடங்கி இருக்குமே.உங்கள் எண்ணச் சுடரை பதியுங்கள்...

+++++++++++++++++++
கவிஞர் நாகூர் காதர்ஒலி

 

Edited by உடையார்
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா உன் பிள்ளை தவறு செய்தேன்

மன்னிப்பு மன்னிப்பு மன்னிப்பு தேவா

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடல் அலை

சுருளிமலை பாலனே அரோகரா முருகய்யா
ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா
நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா
இலஞ்சி நில பாலனே அரோகரா முருகய்யா
ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா
நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா
குன்றக்குடி பலனே அரோகரா முருகய்யா
ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா
நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா
விராலிமலை பாலனே அரோகரா முருகய்யா
ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா
நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா
வயலூரின் பாலனே அரோகரா முருகய்யா
ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா
நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா
வைத்தீஸ்வரன் பாலனே அரோகரா முருகய்யா
ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா
நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா
திருத்தணிகை பாலனே அரோகரா முருகய்யா
ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா
நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா
திருப்போரூர் பாலனே அரோகரா முருகய்யா
ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா
நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா
திருக்கயிலை பாலனே அரோகரா முருகய்யா
ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா
நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா
மருதமலை பாலனே அரோகரா முருகய்யா
ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா
நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா
வல்லக்கோட்டை பாலனே அரோகரா முருகய்யா
ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா
நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா
வடபழனி பாலனே அரோகரா முருகய்யா
ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா
நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா
வள்ளிமலை பாலனே அரோகரா முருகய்யா
ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா
நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா
மயிலமலை பாலனே அரோகரா முருகய்யா
ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா
நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா
எட்டுக்குடி பாலனே அரோகரா முருகய்யா
ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா
நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா
கழுகுமலை பாலனே அரோகரா முருகய்யா
ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா
நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா
கந்தக்கோட்ட பாலனே அரோகரா முருகய்யா
ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா
நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா
கதிர்காம பாலனே அரோகரா முருகய்யா
ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா
நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா
பத்துமலை பாலனே அரோகரா முருகய்யா
ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா
நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா
தண்ணிமலை பாலனே அரோகரா முருகய்யா
ஆறுமுக வேலய்யா மயிலோனே கந்தய்யா
நின் சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா
சேவையில்லாமல் நாங்கள் இங்கு ஏதய்யா
வேலனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா கடம்பனுக்கு அரோகரா
பாலனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
கடம்பனுக்கு அரோகரா பாலனுக்கு அரோகரா

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதயம் அன்பு இதயம் இயேசுவின் அன்பு இதயம் -2
ஓராயிரம் நெஞ்சம் புகழும்
இதயத்தின வேன்தே வாழி உதயத்தின் ஒளியே வாழி
அன்பினில் இருந்திடும் இதயத்தின் தலைவா 
என்றும் நீ வாளீ
ஒராயிரம் நெஞ்சம் புகழும் ஈடில்லா அன்பு இதயம்

1. கல்லான இதயம் கரைய செந்நீர் ஊறும் இதயம்
சுமைகள் சுமந்து சோர்ந்தால் ஆறுதல் கூறும் இதயம்
தொலைந்த ஆட்டைத்தேடி மகிழும் ஆயன் இதயம்
திருந்தி திரும்பும் மகனைத் தழுவும் தந்தை இதயம்
நம் இயேசுவின் அன்பு இதயம்
மேய்ப்பன் 
ஊற்றும் 


2. சிலுவைப் பாடுகள் வழியே மீட்ப்பு நல்கும் இதயம்
மண்ணுயிர் வாழ அன்று தன்னுயிர் ஈந்த இதயம்
நன்றி மறந்த நம்மை மன்னிக்கும் நல்ல இதயம்
பாவி என்றே தெரிந்தும் கருணை பொழியும் இதயம் - நம்
ஈடில்லா அன்பு இதயம்

ஒரு கோடி ஜென்மம் இருந்தாலும் 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

முன் எப்போதும்

வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
     குகனுண்டு குறையில்லை மனமே
          கந்தனுண்டு கவலையில்லை மனமே) ...... (வேலுண்டு)

நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
     நெருப்பு வடிவாகத் தோன்றி
          நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் ... முருகன் ...... (வேலுண்டு)

விழிகளொரு பன்னிரண்டு
     உடையவனே என்று சொல்லி
          விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன் ... முருகா ...... (வேலுண்டு)

உலகமென்னும் கடல் தனிலே
     உடல் என்னும் ஓடமது
          உன்னடிக் கரை அடைய அருளுவாய் ... முருகா ...... (வேலுண்டு)

ஓயாது ஒழியாது
     உன் நாமம் சொல்பவர்க்கு
          உயர் கதிதான் தந்திடுவாய் ... முருகா ...... (வேலுண்டு)

கருணையே வடிவமான
     கந்தசாமித் தெய்வமே உன்
          கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் ... கந்தனே ...... (வேலுண்டு)

நெற்றியிலே நீறணிந்து
     நெறியாக உனை நினைந்து
          பற்றினேன் உள்ளமதில் உன்னடி ... முருகா ...... (வேலுண்டு)

நெஞ்ச மதில் வஞ்சமின்றி
     நிர் மலனே நின்னடியைத்
          தஞ்சமென நெஞ்சமதில் எண்ணினேன் ... முருகா ...... (வேலுண்டு)

ஆறுபடை வீட்டினிலே
     ஆறுமுக வேலவனே
          ஆதரித்து எனை ஆளும் ஐயனே ... முருகா ...... (வேலுண்டு)

திருப்புகழைப் பாடி உந்தன்
     திருவடியைக் கைதொழுது
          திருவருளைப் பெற்றிட நான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)

கந்தர நுபூதி பாடி
     கந்தனே உன் கழலடியைக்
          கைதொழுது கரைசேர வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)

வேலவனே என்றுபாடி
     வேண்டிடும் அடியவர்க்கு
          வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு)

மந்திரமும் தந்திரமும்
     மருந்துமாக நின்ற உந்தன்
          மலரடியைக் காணவேதான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)

தெள்ளு தினை மாவும்
     தேனும் பரிந்தளித்த
          வள்ளிக்கு வாய்த்தவனே ... முருகா ...... (வேலுண்டு)

வடிவேலா என்று தினம்
     வாழ்த்துகின்ற அடியவர்க்கு
          கொடிய வினை தீர்த்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு)

பரங்குன்று செந்திலும்
     பழனி மலை ஏரகம்
          பலகுன்று பழமுதிரும் சோலையாம் ... முருகா ...... (வேலுண்டு).
 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறையாத அன்பு கடல் போல வந்து

 

சுவாசம் நீயே இறைவா நேசம் நீயேதலைவா

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்

பாதி மதி நதி

 

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.