Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சித்தன்குறிச்சி ஊரின் ஸ்ரீ முருகா

மூர்த்தியே எங்கள்  சித்தம் நிறைந்திருக்கும்

கருணை ஒளி கீர்த்தியே கோயில் கொண்டு

குடியமர்ந்து வாழ வந்த சாமியே

சின்ன கையியல்வேலை காவி உறைகாக்கும் கந்த சாமியே

மண்ணில் சிலை கொண்ட ஸ்ரீ முருகா
சித்தர் வரம் பொருளாய் கொலு அமர்ந்த சீர் அழகா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓசை யொலியெலா மானாய் நீயே
உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலா மானாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலா மானாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாறார் ஐயா வாறாரு கறுப்பர் சாமி வாறாரு
வாறார் ஐயா வாறாரு கறுப்பர் சாமி வாறாரு
வாறார் ஐயா வாறாரு கறுப்பர் சாமி வாறாரு
வாறார் ஐயா வாறாரு கறுப்பர் சாமி வாறாரு

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்போது நீயறி வாயோ மனமே
அப்போதே சாந்தி யடைவாய்
இப்பாரி லெப்போதும் எல்லா மிறையருளால்
தப்பா தணுவளவுஞ் சரியாய் நடப்பதாக (எப்போது…)

முற்போது தர்மமென்றும் தற்போ ததர்மமென்றும்
முயன்றேசீர் திருத்திட முடியுமுன் னாலேயென்றும்
அற்பாகந் தைச்செருக்கால் அலையாம லேயடங்கி
ஆண்டவன் ஆட்சியில் அதர்மமே யில்லையென்றே (எப்போது…)

எழுந்தவுன் னெழுச்சியா லெண்ணம் செயல்சொல்லாக
இயற்றிய கர்மமெல்லாம் இறைவனை நீங்குவதே
அழுந்தி யகமூலத்தி லகந்தை யழிவதொன்றே
அரிய க்ருதக்ருத்திய ஆன்மானு பவமென்றே (எப்போது…)

இப்பாரி லெப்போதும் எல்லா மிறையருளால்
தப்பா தணுவளவுஞ் சரியாய் நடப்பதாக (எப்போது…)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை தெய்வம் என்பதா
குருநாதன் என்பதா  
உன்னை பார்த்து  பார்த்து நடப்பதினால் மனிதன் என்பதா
உன்னை தெய்வம் என்பதா
குருநாதன் என்பதா
உன்னை கடவுளென்பதா கருணைவடிவமென்பதா
உன்னை கடவுளென்பதா
கருணைவடிவமென்பதா
ஐயா ஞானாராகம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவு உலாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகாளும் ஒளியாகி எமை ஆளும் கரமாகி
பெரும் வாழ்வை தருவாயே தாயே
கலயாடும் உள்ளங்கள் திருநாவில் வந்தேறி
அருள்வாக்கு சொல்வாயே தாயே
 லூர்ச்சேனின் அலையில் அருளாட்ச்சி புரியும்
திரிசூல காளி நிதானம்மா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமெனும் பிரணவ பொருளுடையோன்
பிள்ளையார் உள்ளமதில் அருள் ஞான வடிவுடையான்
சிலாவத்தை பதியினிலே இருந்து
எம் சிந்தைதனில் அருள்விருந்தாய் தினம் வந்து
உலகத்தை காத்துநின்றாய் முன்னின்று
உலகத்தை காத்துநின்றாய் முன்னின்று
அப்பா உன் அருள்தானப்பா அருள் மருந்து

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகிலத்தை காக்கும் அரும் பொருளே
அதிசயம் காட்டும் பரம்பொருளே
எங்கும்சிவமே எதிலும் சிவனே
உலகினில் அற்புதம் காண்பதும் வரமே
எங்கும் சிவமே எதிலும் சிவனே
மயக்குது மாலையோ மயக்கிடும் இடமே 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மங்கலத்து தாழ்வாரம் பனிவிழும் பொன்நேரம்

சந்தானத்து பூஞ்சிலயே சாய்ந்தாடு மணிகண்டா

பச்சை பசுங்கொடியாகும்

அச்சுதனார் அவர் ரூபம் அதை

அஅரஹரா காற்றசைக்க

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கைக் காண

கண் ஆயிரம் வேண்டாமோ (இரண்டு முறை)

 

நாடித்துதிப்பவர் பண்பில் உறைபவர் (இரண்டு முறை)

நம்பித் திருச் செம்பொன் அம்பலவாணர் ஆடி

 

ஆரநவமணி மாலைகள் ஆட

ஆடும் அரவம் படம் விரித்தாட (இரண்டு முறை)

 

சீரணிக் கொன்றைமலர்த்தொடை ஆட

சிதம்பர்த் தேராட பேரணி வேதியர்

 

தில்லை மூவாயிரம் பேரும் பூஜித்துக் கொண்டு நின்றாட

காரணகாளி எதிர்த்து நின்றாட கனகசபைதனிலே… (ஆடிக்கொண்டார்)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னையே பத்ர காளியம்மா
உன்னையே பணிந்தோம் அருள்வாயே
அன்னையே பத்ர காளியம்மா
உன்னையே பணிந்தோம் அருள்வாயே
நன்னகர் தலமாம் சங்குவேலி
என்னும் பத்ர காளியம்மா
அன்பாய் எமையே ஆதரிப்பதை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ளம் கொண்ட அய்யப்பனுக்கு
பக்தன் எழுதும் கடிதம்
எதோ நானும் இருக்கிறேன்
வறுமையிலை  தவிக்கிறேன்
யாருமில்லை எனக்கு தினம்
அய்யப்பனைதான் நினைக்கிறன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன் ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரவசம் தருகிறதே உந்தன்
பாதச்சிலம்பின் ஒலி
அருள்தரும் கண்ணகியே
என்றும் நீதான் எங்கள் கதி
சிந்தை தணிந்து வந்து ஆறிய பூமி
இவள் வந்தாறுமூலை வந்த மாபெரும் சாமி 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காரைக்காலில் அய்யா உன் அருளாட்ச்சி
விசாலாட்சி சமேதராய்
எங்கும் உன் திருக்காட்ச்சி
இணுவைமண்ணின் பெருமையல்லவா
இக்காட்சி விஸ்வநாதர் எம்மனம் என்றும் உன் ஆட்சி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூரிச்சின்  அய்யனே சுகம் யாவும் தருபவனே
உன் புகழ் பாட நின்னருள் தாருமய்யா
அய்யப்பா நின்னருள் தாருமய்யா
மணிகண்டன் மலர்ப்பாதம் எந்நாளும்
என் தஞ்சம் அய்யனே உன் முகம் காண
என்மனம் தினம் தினம் ஏங்குதே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருள் தாரும்  எங்கள் லுசெனில் வீற்றிருக்கும்
அன்னை எங்கள் துர்க்கையம்மா வினை இங்கே உனக்கேதம்மா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்குவேலி பதியினிலே வந்தமர்ந்து கோவில் கொண்ட
மங்களம் சேர் நாயகியே பத்ரகாளி
 மலரடியே நீ அருள்வாய் பத்ரகாளி
பாலும் இளநீராலும் பன்னிர் தேனபிசேகம்
பக்த்தியுடன் செய்து வைத்தோம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்பக விருட்ச்சம் உயர் சோலைதனிலேகீ
காவல்புரி  சின்னரர்கள் சூளவளர் வாவி
அற்புதமோடு இப்புவியை ஆளாவேன் எண்ணி ஆதிசிவனிடம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பனே ஈசனே சங்கரனே தில்லையில் கூத்தாடிய பெருமானே
பேண்ஞான லிங்கேஸ்வரனே ஓம் நமச்சிவாய  ஓம் நமச்சிவாய
 கூத்தனே உன்னை கும்பிடவந்தோம் குறைவில்லாதரூல் தருவாயே 

 

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.