Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சித்தன்குறிச்சி ஊரின் ஸ்ரீ முருகா

மூர்த்தியே எங்கள்  சித்தம் நிறைந்திருக்கும்

கருணை ஒளி கீர்த்தியே கோயில் கொண்டு

குடியமர்ந்து வாழ வந்த சாமியே

சின்ன கையியல்வேலை காவி உறைகாக்கும் கந்த சாமியே

மண்ணில் சிலை கொண்ட ஸ்ரீ முருகா
சித்தர் வரம் பொருளாய் கொலு அமர்ந்த சீர் அழகா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓசை யொலியெலா மானாய் நீயே
உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலா மானாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலா மானாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாறார் ஐயா வாறாரு கறுப்பர் சாமி வாறாரு
வாறார் ஐயா வாறாரு கறுப்பர் சாமி வாறாரு
வாறார் ஐயா வாறாரு கறுப்பர் சாமி வாறாரு
வாறார் ஐயா வாறாரு கறுப்பர் சாமி வாறாரு

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்போது நீயறி வாயோ மனமே
அப்போதே சாந்தி யடைவாய்
இப்பாரி லெப்போதும் எல்லா மிறையருளால்
தப்பா தணுவளவுஞ் சரியாய் நடப்பதாக (எப்போது…)

முற்போது தர்மமென்றும் தற்போ ததர்மமென்றும்
முயன்றேசீர் திருத்திட முடியுமுன் னாலேயென்றும்
அற்பாகந் தைச்செருக்கால் அலையாம லேயடங்கி
ஆண்டவன் ஆட்சியில் அதர்மமே யில்லையென்றே (எப்போது…)

எழுந்தவுன் னெழுச்சியா லெண்ணம் செயல்சொல்லாக
இயற்றிய கர்மமெல்லாம் இறைவனை நீங்குவதே
அழுந்தி யகமூலத்தி லகந்தை யழிவதொன்றே
அரிய க்ருதக்ருத்திய ஆன்மானு பவமென்றே (எப்போது…)

இப்பாரி லெப்போதும் எல்லா மிறையருளால்
தப்பா தணுவளவுஞ் சரியாய் நடப்பதாக (எப்போது…)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை தெய்வம் என்பதா
குருநாதன் என்பதா  
உன்னை பார்த்து  பார்த்து நடப்பதினால் மனிதன் என்பதா
உன்னை தெய்வம் என்பதா
குருநாதன் என்பதா
உன்னை கடவுளென்பதா கருணைவடிவமென்பதா
உன்னை கடவுளென்பதா
கருணைவடிவமென்பதா
ஐயா ஞானாராகம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவு உலாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகாளும் ஒளியாகி எமை ஆளும் கரமாகி
பெரும் வாழ்வை தருவாயே தாயே
கலயாடும் உள்ளங்கள் திருநாவில் வந்தேறி
அருள்வாக்கு சொல்வாயே தாயே
 லூர்ச்சேனின் அலையில் அருளாட்ச்சி புரியும்
திரிசூல காளி நிதானம்மா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமெனும் பிரணவ பொருளுடையோன்
பிள்ளையார் உள்ளமதில் அருள் ஞான வடிவுடையான்
சிலாவத்தை பதியினிலே இருந்து
எம் சிந்தைதனில் அருள்விருந்தாய் தினம் வந்து
உலகத்தை காத்துநின்றாய் முன்னின்று
உலகத்தை காத்துநின்றாய் முன்னின்று
அப்பா உன் அருள்தானப்பா அருள் மருந்து

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகிலத்தை காக்கும் அரும் பொருளே
அதிசயம் காட்டும் பரம்பொருளே
எங்கும்சிவமே எதிலும் சிவனே
உலகினில் அற்புதம் காண்பதும் வரமே
எங்கும் சிவமே எதிலும் சிவனே
மயக்குது மாலையோ மயக்கிடும் இடமே 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மங்கலத்து தாழ்வாரம் பனிவிழும் பொன்நேரம்

சந்தானத்து பூஞ்சிலயே சாய்ந்தாடு மணிகண்டா

பச்சை பசுங்கொடியாகும்

அச்சுதனார் அவர் ரூபம் அதை

அஅரஹரா காற்றசைக்க

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கைக் காண

கண் ஆயிரம் வேண்டாமோ (இரண்டு முறை)

 

நாடித்துதிப்பவர் பண்பில் உறைபவர் (இரண்டு முறை)

நம்பித் திருச் செம்பொன் அம்பலவாணர் ஆடி

 

ஆரநவமணி மாலைகள் ஆட

ஆடும் அரவம் படம் விரித்தாட (இரண்டு முறை)

 

சீரணிக் கொன்றைமலர்த்தொடை ஆட

சிதம்பர்த் தேராட பேரணி வேதியர்

 

தில்லை மூவாயிரம் பேரும் பூஜித்துக் கொண்டு நின்றாட

காரணகாளி எதிர்த்து நின்றாட கனகசபைதனிலே… (ஆடிக்கொண்டார்)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னையே பத்ர காளியம்மா
உன்னையே பணிந்தோம் அருள்வாயே
அன்னையே பத்ர காளியம்மா
உன்னையே பணிந்தோம் அருள்வாயே
நன்னகர் தலமாம் சங்குவேலி
என்னும் பத்ர காளியம்மா
அன்பாய் எமையே ஆதரிப்பதை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ளம் கொண்ட அய்யப்பனுக்கு
பக்தன் எழுதும் கடிதம்
எதோ நானும் இருக்கிறேன்
வறுமையிலை  தவிக்கிறேன்
யாருமில்லை எனக்கு தினம்
அய்யப்பனைதான் நினைக்கிறன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன் ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரவசம் தருகிறதே உந்தன்
பாதச்சிலம்பின் ஒலி
அருள்தரும் கண்ணகியே
என்றும் நீதான் எங்கள் கதி
சிந்தை தணிந்து வந்து ஆறிய பூமி
இவள் வந்தாறுமூலை வந்த மாபெரும் சாமி 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காரைக்காலில் அய்யா உன் அருளாட்ச்சி
விசாலாட்சி சமேதராய்
எங்கும் உன் திருக்காட்ச்சி
இணுவைமண்ணின் பெருமையல்லவா
இக்காட்சி விஸ்வநாதர் எம்மனம் என்றும் உன் ஆட்சி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூரிச்சின்  அய்யனே சுகம் யாவும் தருபவனே
உன் புகழ் பாட நின்னருள் தாருமய்யா
அய்யப்பா நின்னருள் தாருமய்யா
மணிகண்டன் மலர்ப்பாதம் எந்நாளும்
என் தஞ்சம் அய்யனே உன் முகம் காண
என்மனம் தினம் தினம் ஏங்குதே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருள் தாரும்  எங்கள் லுசெனில் வீற்றிருக்கும்
அன்னை எங்கள் துர்க்கையம்மா வினை இங்கே உனக்கேதம்மா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்குவேலி பதியினிலே வந்தமர்ந்து கோவில் கொண்ட
மங்களம் சேர் நாயகியே பத்ரகாளி
 மலரடியே நீ அருள்வாய் பத்ரகாளி
பாலும் இளநீராலும் பன்னிர் தேனபிசேகம்
பக்த்தியுடன் செய்து வைத்தோம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்பக விருட்ச்சம் உயர் சோலைதனிலேகீ
காவல்புரி  சின்னரர்கள் சூளவளர் வாவி
அற்புதமோடு இப்புவியை ஆளாவேன் எண்ணி ஆதிசிவனிடம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பனே ஈசனே சங்கரனே தில்லையில் கூத்தாடிய பெருமானே
பேண்ஞான லிங்கேஸ்வரனே ஓம் நமச்சிவாய  ஓம் நமச்சிவாய
 கூத்தனே உன்னை கும்பிடவந்தோம் குறைவில்லாதரூல் தருவாயே 

 

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" - பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்     "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"   "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"   "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?"   "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"   "உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ? உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம் உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"   "ஊடல் கொண்டு சென்ற மனைவியால் ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"   "எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"   "ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"   "ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"   "ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து ஒழுங்காக தினம் செயல்கள் செய்து ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?"   "ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை ஓலம்பாட என்னை வைத்தது எனோ? ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?"   "ஔவை வாக்கை மருந்தாக கொண்டு ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈறிலி - கடவுள் எரிவனம் - சுடுகாடு ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன் ஓலாட்டு - தாலாட்டு ஔதாரியம் - பெருந்தன்மை ஔரசன் - உரிமை மகன் ஔடதம் - மருந்து     
    • சிறி அண்ணா 50% சரி. ரணில் தன் மினியை பார்க் பண்ணுவது, உதவியாளராக இருக்கும் ஒரு பையனின் வீட்டு கொல்லை புறத்தில்🤣.
    • @goshan_che கேட்ட கேள்விக்கு... நான் பதில் சொல்லி விட்டேன்.  விசுகர், உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். 😂
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]     "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!"   "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"   "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"   "ஈடணம் விரும்பா சாதாரண மகனே ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் ஈமத்தாடி குடி கொண்ட சுடலையில்?"   "உலகத்தில் பரந்து வாழும் பலரின் உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உடன்பாட்டிற்கு வர முடியாமல் உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"   "ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல் ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"   "எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து எழுதுகோல் எடுத்து உலகை காட்டி எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?"   "ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல் ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?"   "ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"   "ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து ஒழிக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!"   "ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"   "ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈடணம் - புகழ் ஈடிகை - எழுதுகோல் ஈமத்தாடி - சிவன் உணக்கம் - உலர்ந்ததன்மை ஊறு - இடையூறு ஊனம் - உடல் குறை, இயலாமை எய்யாமை - அறியாமை ஏகாகாரம் - சீரான முறை ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு ஏகாந்தம் - தனிமை ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, காமவெறியின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன் ஓகை - உவகை, மகிழ்ச்சி ஔவியம் - பொறாமை, அழுக்காறு ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன் ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை. ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்   [my own eulogy / A tribute written by myself to my death]        
    • ஏன் ராசா ஏன்??  ஆனால் கேள்விக்கு பதில் சொல்லாமல் போவது நன்றன்று. இல்லை இல்லை இல்லை 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.