Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆனைமுக ஐகரனே வாருமப்பா
அறியாத பாலன் நான் அழைக்கின்றேன்
நயினைத்தீவு நாகபூசணியை
நாவில் பாட நாடியே வந்தெனக்கு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உரப்பனை விநாயகரே உலகறியும் விநாயகனே
ஒரு குறையும் வாராமல் காக்கவேண்டும்
குரந்தயடி முன் மாரி அதில் கோவில் கொண்ட
குணக்குன்றே அருள்க்கடலே காப்பாய் அப்பா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகனே மாமன் மகள் வெண்கருப்பி

என் மகனே  வெண்கருப்பி

உனக்கு மணமுடிக்க வேணுமடா

என் மகனே வேணுமடா

சிவ சிவ சிவ  ஆமா ஆமா மெய்தான் மெய்தான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களை காத்திடும்  வேம்படி கந்தா
உன் திருக்கோவில் எத்தனை எத்தனை ஐயா
மட்டுவில் பதியினிலே வாள்பவன் நல்லோயோஜம்
மன்னவா உன் நாமம் எத்தனை ஐயா

பாடல்   Engalai kaaththidum

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈரூணுவை வாழுகின்ற குமரா
ஆடுகின்றான்  அருணகிரி குடமுழுக்கு
ஈரூணுவை வாழுகின்ற குமரா
ஆடுகின்றான்  அருணகிரி குடமுழுக்கு
வரம் தரும் வடிவேலன் பார்வதி சிவபாலன்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைரவா வைரவா ஸ்ரீ ஞான வைரவா
வைரவா வைரவா ஸ்ரீ ஞான வைரவா
அரியாலை மத்தியிலே ஆனந்தன் வீதியிலே
 நாவல் மரத்தடியில் வீற்றிருக்கும்
எங்கள் ஞான வைரவா ஞான வைரவா
 சித்திரை சிங்காரமாய் பத்து தினங்கள்  ஞான வைரவரே


 அரியாலை ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பாடல்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாளே உந்தனது அருளை  தாதா
அடியார்கள் வர்க்கம் நீ நெருங்கி வா வா
வம்பான வேதனையில் வாடுகின்றேன் வந்தெனக்கு
அருள் செய்ய ஓடி வா வா
தென்பான வார்த்தை சொல்ல யாருமேயில்லை
தேவியே உன்னடியயை தேடிவந்தேன்     

 களுவாஞ்சிகுடி கண்ணகி அம்மன் பத்து

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூரிச் மாநகரின் சுந்தரரே உனை நினைந்து
வாரிச்சுரக்கும் வார்த்தைகளில் பூத்தொடுத்து
பூரிப்படைந்ததையா உன்மனது
உன் புகழை பாடுவேன்
ஈழ தாயவள் மடிமீதிருந்து

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதிர்வேலாயுதசுவாமிக்கு அரோஹரா
திரு வளர்க்கும் சான்றோர் வாழ் சுவிர்ச்சுலாந்தில்

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள் ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேச வேண்டும் பொய்மை
பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை
மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும் நின் கருணைநிதி வேண்டும் நோயற்ற
வாழ்வில் நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே
தண் முகத்துய்ய மணி உண் முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கடங்கள் தீர்க்கின்ற  சதுர்த்தி நாயகனே
சந்தன கணபதியே நலம் தருவாயப்பா

கல்வாழை நாயகனே அருள்தருவாயப்பா

பாலும் இளநீரும் பஞ்சாமிர்தமும்

நாளும் அபிசேகம் நன்மை பெருகவும்

தூப தீபமும் பூமணி மாலையும்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவல் தெய்வம் வைரவா
கருணையின் வடிவம் அல்லவா
காவல் தெய்வம் வைரவா
கருணையின் வடிவம் அல்லவா
உன் திருவடி தொழுதலிட தினம் அருள் தந்திடுவாய்
உடுவை பதிதனிலே காவல் பணி கொண்டவரே
நம் நிலம் ஆளுகின்ற ஈசன் அருகே நின்றவரே

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தா உன்னை மறந்திருப்பேனோ
வேந்தா  உன்னை பிரிந்திருப்பேனோ
ஆறுபடை வீடுடைய ஆண்டவா
என்னை அனுசரித்து அருள் தந்தவா

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைகாசி மாதம் வைகறை நேரம்
மிளிர்கின்ற முழுமதி நிலவு
அன்னை பொழிகின்ற தெய்வீக நிகழ்வு
அருளை பொழிகின்ற ஆன்மிக நிறைவு
வழக்குரை செய்து வாதாடி வென்று
வாய்மையை நிலைநாட்டி நின்றார்
தாயார் வழுதியின் தவறுணர செய்தார்
அழகான நகரை அனலிட்ட கோபம்
ஆரையம்பதி வந்து தணிவார்
அம்பாள் அறவழியில் எமைவாளா வைப்பாள்
அம்பாள் அனைவரையும்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாளே உந்தனது அருளை தாதா
அடியார்கள் பக்கம் நீ நெருங்கி வா வா
வம்பான வேதனையில் வாடுகின்றேன்
வந்தெனக்கு அருள் செய்ய ஓடி வா வா
தெம்பான வார்த்தை சொல்ல யாருமே இல்லை
தேவியே உன்னை தேடியே வந்தேன்

மட் பெரியகல்லாறு உதயபுரம் அருள்மிகு ஶ்ரீ வட பத்திரகாளி அம்மன் பாடல்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூலம் கபாலம் ஏந்திய சூலிக்கு
ஞாலம் கரமுள நாக பாச அங்குசம்
கடற்கரையோரம் காற்றலை பேசும்
காளி  உன் நாமம் கணமே ஆகும்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதய புரத்தில் ஒர் அம்மன் ஆலயம்
அவளை காண வரும் பக்த்தர் வெள்ளமே
உதய புரத்தில் ஒர் அம்மன் ஆலயம்
அவளை காண வரும் பக்த்தர் வெள்ளமே
கடற்கரையின் ஓரமே கதவு திறக்குமே கனவுகள் பலித்திடுமே
நாம் நினைத்ததெல்லாம் நடக்கும் நேரமே நிச்சயம் கிடைத்திடும்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்களிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே
காரிகை யார்கள்தம் வாழ்வில் என் வாழ்வு கடைப்படும் ஆகாதே
மண்களில் வந்து பிறந்திடு மாறி மறந்திடும் ஆகாதே
மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே
பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடும் ஆகாதே
பாண்டிநன்னாடுடை யான்படை யாட்சிகள் பாடுதும் ஆகாதே
விண்களி கூர்வதோர் வேதகம் வந்துவெளிப்படும் ஆகாதே
மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே.    

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்க தமிழ் இசைக்கிறது வாழிய தாயே  
பொங்கும் புனல் தவழ்கிறது வாழிய தாயே
தங்க தமிழ் இசைக்கிறது வாழிய தாயே  
பொங்கும் புனல் தவழ்கிறது வாழிய தாயே    
இங்கும் அருள் நிகழ்கிறது வாழிய தாயே
மங்களங்கள் மலர்கிறது கண்ணகித்தாயே    

கண்ணகி அம்மன் பாடல்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூநகரி ஊர் பொதிகையில் கொலு அமர்ந்த வைரவனே
பச்சை வயல் நடுவினிலே கோவில் கொண்ட வைரவனே
கை  பிடித்த சூலத்தோடு ஊரை காவல் காப்பவனே
இந்த வையத்தில் வாழும் 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்நிதியில தேர்த்திருவிழா சந்நிதியில தேர்த்திருவிழா ஓம் முருகா  
சந்நிதியில தேர்த்திருவிழா சந்நிதியில தேர்த்திருவிழா ஓம் முருகா  
அன்னதான கந்தனுக்கு  தேர்த்திருவிழா அரோஹரா
ஆடிவரும் வேலனுக்கு தேர்த்திருவிழா ஆறுபடை முருகனுக்கு தேர்த்திருவிழா

 

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.