Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்
குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்

ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன்
உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்
ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன்
உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்

குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்

கண்ணனின் மேனி கடல் நீலம்
அவன் கண்களிரண்டும் வான் நீலம்
கண்ணனின் மேனி கடல் நீலம்
அவன் கண்களிரண்டும் வான் நீலம்

கடலும் வானும் அவனே என்பதைக்
காட்டும் குருவாயூர்க் கோலம்

குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்

சந்தியா காலத்தில் நீராடி அவன்
சந்நிதி வருவார் ஒரு கோடி

நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண

நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண

சந்தியா காலத்தில் நீராடி அவன்
சந்நிதி வருவார் ஒரு கோடி
மந்திர குழந்தைக்கு வாகை சாட்டு
மாலைகள் இடுவார் குறை ஓடி

குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்

உச்சிக்காலத்தில் சிருங்காரம் அவன்
அவன் ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம்
உச்சிக்காலத்தில் சிருங்காரம் அவன்
அவன் ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம்
பச்சைக் குழந்தையைப் பார்க்கும் போதே
பாவையர் தாய்மை ரீங்காரம்

நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண

நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண

குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்

மாலை நேரத்தில் ஸ்ரீ வேலி
அவன் மாளிகை முழுவதும் நெய்வேலி
மாலை நேரத்தில் ஸ்ரீ வேலி
அவன் மாளிகை முழுவதும் நெய்வேலி
நெய்விளக்கேற்றி பொய் இருள் அகற்று
நித்தம் தருவாள் ஸ்ரீதேவி

நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண

நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண

சாத்திரம் தந்த கண்ணனுக்கு
ராத்திரி பூஜை ஜகஜோதி
பாத்திரம் கண்ணன் பால் போல்
மக்கள் பக்தியில் பிறந்த உயர் நீதி

குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்
ஒரு வாய் சோறு ஊட்டும் தாய்முன்
உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்

குருவாயூருக்கு வாருங்கள்
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்

நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண

நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண

நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண

நாராயண நாராயண ஹரி ஹரி
நாராயண நாராயண

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்பி வந்தேன் மேசியா
நான் நம்பிவந்தேனே – திவ்ய
சரணம்! சரணம்! சரணம் ஐயா
நான் நம்பிவந்தேனே

1. தம்பிரான் ஒருவனே
தம்பமே தருவனே – வரு
தவிது குமர குரு
பரமனுவேலே நம்பிவந்தேனே – நான்

2. நின் பாத தரிசனம்
அன்பான கரிசனம் – நித
நிதசரி தொழுவ திதம் எனவும்
உறுதியில் நம்பிவந்தேனே – நான்

3. நாதனே கிருபைகூர்
வேதனே சிறுமைதீர் – அதி
நலம் மிகும் உனதிரு
திருவடி அருளே நம்பிவந்தேனே – நான்

4. பாவியில் பாவியே
கோவியில் கோவியே – கன
பரிவுடன் அருள்புரி
அகல விடாதே நம்பிவந்தேனே – நான்

5. ஆதி ஓலோலமே
பாதுகாலமே – உன
தடிமைகள் படுதுயர் அவதிகள்
மெத்த – நம்பிவந்தேனே – நான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன மோகனா…
ஆஆ மன மோகனா… ஆ
ஆ என் உயிர் கண்ணா
ஆஹா கார்முகில் வண்ண
வாராயோ கோதையின்
குரலை கேளாயோ

விடை பெற்று
வாராய் காசி மதுர விடை
சொல்ல வாராய் வாழ்க்கை
புதிரா

நீயின்றி சுயம்
வரமா கார்முகில் வண்ணா
வாராயோ கண்ணா கோதையின்
குரலை கேளாயோ

                      துவாரகனே
இருளும் ஒளியும் இரு
விழி அருகே துரத்திடுதே
இருதயத்தில் துணையாக
நீ இருக்க மாட்டாயா

                  இரு வழிகள்
சந்திக்கும் இடத்தில்
கால்கள் ரெண்டும்
குழம்பிடுதே என்
பாதை சொல்வாயா

தேவகியின்
நாதலாலா திசை ஏது
சொல்வாயா

 பிருந்தாவன
நந்தகுமாரா சகியின்
வேண்டுதல் அறிவாயா
நீங்காமல் வருவாயா
நகம் போல பிரிவாயா

 நவனீதா முரளி
மனோகரா நங்கையின்
மனதை புரிவாயா
புறக்கணித்தே செல்வாயா

என்சோகங்கள்
தீர்ப்பாயா நீ ராகங்கள்
தீர்ப்பாயா

 மன மோகனா ஆஆ
மன மோகனா ஆஆ ஆ மன
மோகனா ஆஆ மன மோகனா
ஆஆ ஆ என் உயிர் கண்ணா
ஆஹா கார்முகில் வண்ண
வாராயோ கோதையின்
குரலை கேளாயோ

புருஷோத்தமனே
உன் உதட்டில் புல்லாங்குழலாய்
தவழ்வேனா உன் சுவாச காற்றாகி
உயிர் பெற்று வாழ்வேனா

 பார்த்திபனே உன்
பார்வையிலே பார் கடல்
அமுதம் பெறுவேனா பசி
தாகம் மறப்பேனா கோகுல
தோட்டத்திலே கோபியர்
ஆவேனா

 வாழ்க்கை என்னும்
கடலில் தினமும் வலையின்
மேலே அலை அடிக்க இதயம்
என்னும் படகு அதில் தடுமாறி
மோதிடுதே

 தூயவனே துடுப்புகள்
போட்டு கரையினில் ஏற்றி
விடுவாயா நடு கடலில்
விடுவாயா வசீகரா
மன்னவனே என் வேதனை
தீராயோ

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
 மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
 பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
 வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக
ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம் ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம் மெய்யுணர்வின் நல்லடியார் மேதினியில் வாழ்வர்க்கே ஐய்யமற வழி காட்டும் ஆண்டவனின் திருமறையாம் மக்கா நகர் அருகிருக்கும் மலைக் குகையாம் ஹீராவில் தக்க நபி மனம் குளிர தழைத்துயர்ந்த திருமறையாம் ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம் வான் கமழும் ரமலானாம் வளம் கொழிக்கும் திங்களிலே தீன் கமழ வந்துற்ற திகழொளியின் திருமறையாம் ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம் கதி அளிக்கும் லைலத்துல் கதிர் இரவில் இறை அளித்த நிதி அனைத்தும் கொண்டிலங்கும் நிகரில்லா திருமறையாம் ஆதி அருள் கனிந்திலங்கி அமரர் ஜிபுரீல் வழியாக நீதி நபி மாமணிக்கு நிறைவளித்த குறுஆனாம்...

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனின் ஆலோசனை வீணானது
தேவனின் ஆலோசனை மேலானது

1. நடந்திடும் என்று மனிதன் கூறுவான்
தேவன் நிறுத்தி வைப்பார்
நிறுத்துவோம் என்று மனிதன் கூறினால்
தேவன் நடத்தி வைப்பார்

2. அறிவினால் உன் பெலத்தினால்
நடத்திட முடியாது
ஜெபத்தினால் அவர் கிருபையால்
நடக்கும் தவறாது

3. இதைச் செய்வேன் நான் அதைச் செய்வேன்
மனதிலே எண்ணம் உனக்கு
நடந்ததும் இனி நடப்பதும்
இறைவன் மனக்கணக்கு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படமுடியாது இ னித் துயரம் பட முடியாது அரசே

பட்டதெல்லாம் போதும் இந்த பயம் தீர்ந்து இப்பொழுதே என்

உடல் உயிர் ஆதியை எல்லாம் நீ எடுத்துக்கொண்டு உன்

உடல் உயிர் ஆதியை எல்லாம் உவந்து எ னக்கே அளிப்பாய்

வடலூரு சிற்றம்பலத்தே வாழ்வாய் என் கண்ணுள்

மணியே, குரு மணியே, மாணிக்க மணியே

நடன சிகாமணியே என் நவமணியே, ஞான

நன் மணியே, பொன் மணியே, நடராஜ மணியே
வாழையடி வாழையென வந்த திருக் கூட்ட

மரபினில் யான ஒருவன் அன்றோ வகை யறியேன் இந்த 

எழைபடும் போடு உனக்குத் திருவுளச சம்மதமோ 

இது தகுமோ இது முறையோ இது தருமந்தானோ 

மாழை மணிப பொதுவில் நடஞ்செய் வள்ளால் யான் உமக்கு 

மகன் அலனோநீ எனக்கு வாய்த்த தந்தை யலையோ

கோழை உலக உயிர்த் துயரம் இனிப பொறுக்க மாட்டேன் 

கொடுத்தருள் நின அருள் ஒளியைக் கொடுத்தருள் இப்பொழுதே .!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா
கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா
சென்னிமலை சுப்ரமணிய சாமிக்கு . . . அரோகரா . . .

குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா
கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா
நின்றருளும் அருணாச்சலன் பிள்ளையல்லவா
தாயும் தந்தையும் நீயல்லவா
எனக்கு தாயும் தந்தையும் நீயல்லவா

முருகா சரணம் குமரா சரணம் குகனே சரணம் கந்தா சரணம்
முருகா சரணம் குமரா சரணம் அருளாரமுதே சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம் சரணம்

குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா
கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா
முருகா முருகா முருகா முருகா

பரிமலத்திருநீறும் உடல் மணக்கும்
ஆதி பழனி ஆண்டவன் புகழ் மணக்கும்
சிரகிரிவேலவன் சன்னிதியே
நாடி வருவோர்க்கு அருள்வான் பொன்நிதியே

முருகா சரணம் குமரா சரணம் குகனே சரணம் கந்தா சரணம்
முருகா சரணம் குமரா சரணம் அருளாரமுதே சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம் சரணம்
சென்னிமலை முருகனுக்கு . . . அரோகரா . . .

குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா
கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா
முருகா முருகா முருகா முருகா

அடியார்கள் கூடினார் ஆயிரம் கோடி
தேடினார் முருகனை கவசம் பாடி
ஆடினார் காவடி உன் பாதம் நாடி
நீ வாடிய எனைக்கண்டு வந்தாய் ஓடி
முருகா வந்தாய் ஓடி முருகா வந்தாய் ஓடி

முருகா சரணம் குமரா சரணம் குகனே சரணம் கந்தா சரணம்
முருகா சரணம் குமரா சரணம் அருளாரமுதே சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம் சரணம்
சென்னிமலை சுப்ரமணிய சாமிக்கு . . . அரோகரா . . .

குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா
கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா
முருகா முருகா முருகா முருகா

சென்னிமலை மகிமை அற்புதங்கள்
அவை சொல்லி மாளாத அதிசயங்கள்
கணப்பொழுதும் தவறாத உன்நாமங்கள்
கண்கொள்ளா முருகனின் அலங்காரங்கள்

முருகா சரணம் குமரா சரணம் குகனே சரணம் கந்தா சரணம்
முருகா சரணம் குமரா சரணம் அருளாரமுதே சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம் சரணம்
சென்னிமலை முருகனுக்கு . . . அரோகரா . . .

குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா
கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா
நின்றருளும் அருணாச்சலன் பிள்ளையல்லவா
தாயும் தந்தையும் நீயல்லவா
எனக்கு தாயும் தந்தையும் நீயல்லவா
முருகா முருகா முருகா முருகா

சென்னிமலை சுப்ரமணிய சாமிக்கு . . . அரோகரா . . .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலிலேயா கடற்கரையோரம்
ஓர் மனிதர் நடந்து சென்றார்
அவர்தான் இயேசு இரட்சகர்
உன் பாவத்தைப் போக்கும் உத்தமர்

1.காரிருள் சூழ்ந்தாலும் பெருங்கவலைகள்
தொடர்ந்தாலும் கண்ணீர் வடித்தாலும்
பெரும் கலக்கங்கள் பிடித்தாலும்
கர்த்தரின் குரல் உன்னை அழைக்கிறது
உன் கவலையை மாற்றிட துடிக்கிறது

நெஞ்சமே நினைத்திடு அவர்
அன்பினை ருசித்திடு

2.நண்பர்கள் பகைத்தாலும் – இந்த
நானிலம் வெறுத்தாலும்
பெற்றோர்கள் மறந்தாலும் உன்
உற்றார்கள் பிரிந்தாலும்
நாயகர் இயேசு உன்னை அறிந்திடுவார் – அவர்
நமையினால் வழி நடத்திடுவார் – நெஞ்சமே

3.ஏன் இந்த வேதனைகள்
என்று ஏங்கிடும் மனிதர்களே
என் இயேசுவின் போதனையை
ஏன் இன்று மறந்தீர்களோ
வேதனை தீர்த்திடும் வேந்தனவர் – மன
பாரத்தை போக்கிடும் தேவனவர் – நெஞ்சமே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. மருந்தறியேன் மணியறியேன் மந்திர மொன் றறியேன்
மதியறியேன் விதியறியேன் வாழ்க்கைநிலை யறியேன்
திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்
செய்தறியேன் மனமடங்குந் திறத்தனிலோ ரிடத்தே
இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்
எந்தைபிரான் மணிமன்றம் எய்தவறி வேனோ?
இருந்திசை சொலவறியேன் எங்ஙனம் நான் புகுவேன்?
யார்க்குரைப்பேன் என்ன செய்வேன் எதுமறிந் திலனே!

2. அகங்காரக் கொடுங்கிழங்கை அகழ்ந்தெறிய அறியேன்
அறிவறிந்த அந்தணர்பாற் செறியுநெறி அறியேன்
நகங்காண முறுதவர்போல் நலம்புரிந்து மறியேன்
நச்சுமரக் கனிபோலே இச்சைகனிந் துழன்றேன்;
மகங்காணும் புலவரெலாம் வந்துதொழ நடிக்கும்
மணிமன்றந் தனையடையும் வழியுமறி வேனோ?
இகங்காணத் திரிகின்றே னெங்ஙனநான் புகுவேன்?
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதுமறிந் திலனே!

3. கற்குமுறை கற்றறியேன்: கற்பனகற் றறிந்த
கருத்தர்திருக் கூட்டத்திற் களித்திருக்க அறியேன்:
நிற்குநிலை நின்றடியே னின்றாரி னடித்தேன்:
நெடுங்காமப் பெருங்கடலை நீந்தும்வகை அறியேன்:
சிற்குணமாம் மணிமன்றிற் றிருநடனம் புரியுந்
திருவடியென் சென்னிமிசைச் சேர்க்கவறி வேனோ?
இற்குணஞ்செய் துழல்கின்றே னெங்ஙனநான் புகுவேன்
யார்க்குரைப்பே னென்செய்வே னேதுமறிந் திலனே!

4. தேகமுறு பூதநிலைத் திறஞ்சிறிது மறியேன்
சித்தாந்த நிலையறியேன் சித்த நிலையறியேன்:
யோகமுறு நிலைசிறிது முணர்ந்தறியேன் சிறியேன்
உலகநடை யிடைக்கிடந்தே உழைப்பாரிற் கடையேன்:
ஆகமுறு திருநீற்றி னொளிவிளங்க அசைந்தே
அம்பலத்தி லாடுகின்ற அடியையறி வேனோ?
ஏகவனு பவமறியே னெங்ஙனநான் புகுவேன்?
யார்க்குரைப்பே னென்செய்வே னேதுமறிந் திலேன்!

5. வரையபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன்
மரணபயந் தவிர்த்திடுஞ்சன் மார்க்கமதை அறியேன்:
திரையறுதண் கடலறியேன் அக்கடலைக் கடந்தே
தெள்ளமுத முணவறியேன் சினமடக்க அறியேன்:
உரையுணர்வு கடந்துதிரு மணிமன்றந் தனிலே
ஒருமைநடம் புரிகின்றார் பெருமையறி வேனோ?
இரையுறுபொய் யுலகினிடை யெங்ஙனநான் புகுவேன்?
யார்க்குரைப்பே னென்செய்வே னேதுமறிந் திலனே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியம் சிவம் சுந்தரம் ஆ....
சரவணன் திருப்புகழ் மந்திரம்
.
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் ஆ...
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
அவன் அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்
அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
அவன், அருளைப்பெறுவதற்கே உயிர் வளர்த்தேன் ஆ... 

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
.
பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே ஆ..
பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே
கனி கொய்யும் வேளையிலே கன்னி மனம் கொய்து விட்டான்
பன்னிரண்டு கண்ணழகை பார்த்திருந்த பெண்ணழகை
வள்ளல்தான் ஆள வந்தான் பெண்மையை வாழ வைத்தான்
பெண்மையை வாழ வைத்தான் ஆ... 

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
.
மலை மேல் இருப்பவனோ மயில் மேல் வருபவனோ

மெய்யுருகிப் பாட வந்தால் தன்னைத் தான் தருபவனோ

அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
ஐயன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்
அழகுக்கு அழகானேன் ஆ...

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீராடும் கண்கலோடு நெஞ்சம் இறை பாசத்தோடு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதவன் உதிக்கும் முன் எழுவீர்,
நம் ஆண்டவர் தோன்றி விட்டார்,
இயேசு ஆண்டவர் தோன்றி விட்டார்!

காற்றாய் அலையாய் கடலாய் நதியாய்
வூற்றாய் உயிராய் உலகத்தின் ஒளியாய்
உத்தமர் தோன்றி விட்டார்!
நம் உத்தமர் தோன்றி விட்டார்!!

ஆதவன் உதிக்கும் முன் எழுவீர் – நம்
ஆண்டவர் தோன்றி விட்டார் – இயேசு
ஆண்டவர் தோன்றி விட்டார்
காலை ஜெபத்தினில் கடவுள் வடிவினில்
கர்த்தர் தோன்றி விட்டார் – நம்
கர்த்தர் தோன்றி விட்டார்!!![

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராகம்: நாட்ட குறுஞ்சி 
இயற்றியவர் : ஊத்துக்காடு  வேங்கட  சுப்பையர்                

பால்வடியும் முகம் நினைந்து
நினைந்து உள்ளம் பரவசம் மிக வாகுதே 

நீலக்கடல் போலுன் நிறத்தழகா கண்ணா 
எந்தன் நெஞ்சம் குடி கொண்டு 
அன்று முதல் என்றும் சிந்தனை செய்யதொழிய (பால்வடியும்)

வானமுகத்தில் சட்று  மனம் வந்து நோகினும்
மோன முகம் வந்து தோணுதே 
தெளிவான தண்ணீர் தடத்தில் சிரித்த முகம் வந்து காணுதே 
கான குயில் குரலில் கருத்தமைந்திடினும் 
கான குழலோசை மயக்குதே 

கருத குழலோடு நிறுத்த மயிலிரகிருக்கி  அமைத்த திரத்திலே
கான மயிலாடும் மோன குயில்பாடும் நீல நதி ஓடும் வனத்திலே
குழல் முதல் எழில் இசை குழைய வரும்
இசையின் குழலோடு மிளிரில கரத்திலே 
கதிருமதியும் என நயன விழிகளிரு நளினமான சலனத்திலே 
காளிங்கன் சிரத்திலே கதித்த பதத்திலே 
ஏன் மனதை இறுதி கனவி நனவினோடு பிறவி
பிறவி தோறும் கனித்துருக வரம் தருக (பால்வடியும்)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த வேலு வந்தாலும் காந்தவேலு முன்னாடி சரணம் சரணம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினாற் கண்ணிற் பணிவில் கனிந்து
விநாயகனே வினை தீர்ப்பவனே
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே

குணாநிதியே குருவே சரணம்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்
குறைகள் களைய இதுவே தருணம்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே

உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய்
ஆஆஆஆஆஆஆஆஆ
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய்
கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹர ஹர சிவமாய் ஈஸ்வர லிங்கம்

அன்பே வடிவாய் அமர்ந்திட்ட லிங்கம்

ப்ரம்மா முராரியர் போற்றிடும் லிங்கம்

நிர்மல நல்ளொளி தேற்றிடும் லிங்கம்

கர்ம துக்க வினை நீக்கிடும் லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

பவித்திர லிங்கம் பரமேஸ லிங்கம்

பசுபதி லிங்கம் பரமாத்ம லிங்கம்

பக்தியை தந்திடும் பரம லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

தேவர்கள் முனிவர்கள் போற்றிடும்
லிங்கம்

காமதகனக் கருணாகர லிங்கம்

ராவண தர்ப்பம ருத்திடும் லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

பருவ லிங்கம் சுவரூப லிங்கம்

குபேர லிங்கம் குருபர லிங்கம்

முக்தியை தந்திடும் ஸ்ரீமூர்த்தி
லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

நினைப்பதை எல்லாம் கொடுத்திடும்
லிங்கம்

நினைப்பவர் உள்ளத்தில் ஜொலித்திடும்
லிங்கம்

நிரந்தர சுகம் தரும் நித்திய லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

பரப்ப்ரம்ம லிங்கம் சதாசிவ லிங்கம்

திகம்பர லிங்கம் ப்ராபகர லிங்கம்

நலம் பல செய்திடும் நாகேஸ லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

கனக மகாமணி பூஜைக்குள் லிங்கம்

மங்கல தாமரை மாலைக்குள் லிங்கம்

வஞ்சனை பாவம் அகற்றிடும் லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

வேதாந்த லிங்கம் நாதாந்த லிங்கம்

பரம லிங்கம் பிரணவ லிங்கம்

அச்சம் தவிர்த்திடும் அச்சுத லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

தேவகனங்களும் போற்றிடும் லிங்கம்

தேயுறு பக்தியும் ஈவது லிங்கம்

சாம்பலின் தத்துவம் விண்ணூற்ற லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

காசி லிங்கம் கைலாச லிங்கம்

கற்பக லிங்கம் காயத்ரி லிங்கம் 

காற்றுருவாகிய வாயு லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

வரங்களை கொடுத்திடும் ஸ்ரீ ஹர லிங்கம்

வந்தெம்மை காத்திடும் வடமகை லிங்கம்

சித்தி அளித்திடும் பவித்திர லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

கரியம லிங்கம் ஸ்ரீ வர்ம லிங்கம்

நாகலிங்கம் பூஜிதலிங்கம்

பித்துகள் போக்கிடும் பித்தளை லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

அரூப லிங்கம் அருள்தரும் லிங்கம்

சுவரூப லிங்கம் சுவர்ண லிங்கம்

அன்பர்கள் மனதினில் அமர்ந்திட்ட
லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

வியாழனும் தேவரும் போற்றிடும் லிங்கம்

வில்வமதை மலர் மாலைக்குள் லிங்கம்

அன்புடன் அருளைக் கொடுத்திடும் லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

ஜம்பு லிங்கம் தத்துவ லிங்கம்

சங்கர லிங்கம் சதாசிவ லிங்கம்

சங்கடம் தவிர்த்திடும் சுந்தர லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

குங்கும சந்தன ஹேபித லிங்கம்

குறைகளைக் தீர்த்திடும் ஷோபித லிங்கம்

சஞ்சலம் தீர்க்கும் சதாசிவ லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

ஆத்ம லிங்கம் அருள் தரும் லிங்கம்

அபூர்வ லிங்கம் மாணிக்க லிங்கம்

இன்பத்தைக் கொடுத்திடும் ஈஸ்வர லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

எட்டொடு பத்தெனும் தத்துவ லிங்கம்

எனைத்துமாம் தோற்றமும் காரண லிங்கம்

எட்டெனும் வறுமைகள் நீக்கிடும் லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

ஓங்கார லிங்கம் ஒளி தரும் லிங்கம்

சந்திர லிங்கம் சதாசிவ லிங்கம்

சுடரொளியான வினாசக லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

வேதத்தின் சாரத்தை உணர்த்திடும்
லிங்கம்

வேண்டும் வரங்களை கொடுத்திடும் லிங்கம்

வலம்பெற வாழ்க்கையைத் தந்திடும்
லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

சங்கர லிங்கம் சதாசிவ லிங்கம்

இமய லிங்கம் ஈஸ்வர லிங்கம்

சிதையாத நெஞ்சினில் சிலையான லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

மொத்த சுகத்தையும் தந்திடும் லிங்கம்

புத்தி மிகுந்தருள் காரண லிங்கம்

சோதனை போக்கிடும் சோமநாத லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

ஜலேஸ்வர லிங்கம் ஜகம் புகழ் லிங்கம்

பழ மழை லிங்கம் பார்புகழ் லிங்கம்

மகிமை புரிந்திடும் மண்ணு லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

மங்களம் அருளும் மாசற்ற லிங்கம்

ஐஸ்வர்யம் அளிக்கும் ஐஸ்வர்ய லிங்கம்

ஓங்கார வடிவாய் ஒலி தரும் லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

கலியுக லிங்கம் காரண லிங்கம்

சத்திய லிங்கம் நித்திய லிங்கம்

அமரரை காத்திட்ட அச்சுத லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆணி கொண்ட உம் காயங்களை
அன்புடன் முத்தி செய்கின்றேன் (2)
பாவத்தால் உம்மைக் கொன்றேனே -2
ஆயனே என்னை மன்னியும்

1. வலது கரத்தின் காயமே -2
அழகு நிறைந்த ரத்தினமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

2. இடது கரத்தின் காயமே -2
கடவுளின் திரு அன்புருவே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

3. வலது பாதக் காயமே -2
பலன் மிகத் தரும் நற்கனியே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

4. இடது பாதக் காயமே -2
திடம் மிகத்தரும் தேனமுதே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

5. திருவிலாவின் காயமே -2
அருள் சொரிந்திடும் ஆலயமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.