Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அஹ்மது நபியின் அழகிய நூரால்
அகிலம் ஒளியாய் ஜொலிக்கும்
 எண்ணத்தில் தவழும் அணையா தீபம்
 ஏகாந்தான் அருளாய் அளித்தான்

1. நற்குணத்தின் தாயகம் நீங்கள்தான் என்றே
 நாயனும் நவின்றான் அன்றே
இறையவன் மறைபோல் இனிதாங் குணமாம்
 இரஸூல் நபியை படைத்தான்

2. ஆமினாவின் வயிற்றில் ஆற்றல்மிகும் அன்பாளன் அருட்சுடர் நேசரை அமைத்தான்
ரஹ்மத்துலில் ஆலமீன் ராஜரை போற்றி
 ரஹ்மான் மறையில் புகழ்ந்தான்

3. அண்ணலே தாங்கள் அவனியில் வந்ததால் நிமலோன் நிலத்தினை அமைத்தான்
ஆதி நபி ஆதம் முதல் ஈஸா நபி வரையில்
 ஆலத்தை அஹதோன் படைத்தான்

4. மங்களங்கள் பொங்கிடும் தங்கள் ஒளிமுகத்தை எங்கள் இரு கண்களால் காண
அங்கங்கள் தங்கமாய் இலங்கிடும் தங்களை
 பங்கங்கள் நீங்கவே பார்க்கணும்

5. வஞ்சனைகள் சஞ்சலங்கள் வாகாய் நீங்கிடும் வாஞ்சை நபிகள் வந்த நாள்
அஞ்சிடும் நெஞ்சமும் தஞ்சமே தந்திடும் பிஞ்சு மனம் கொண்ட சிங்கம் பிறந்த நாள்

 

 

 

 

 

 

Edited by உடையார்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயேசுவின் இருதயமே என்றும்; இரங்கிடும் அருள் மயமே 
உந்தன் ஆசியும் அருளும் சேர்த்து வந்தால் 
எங்கள் ஆனந்தம் நிலைபெறுமே - 2

1. இறைவனுக்கிதயம் உண்டு - அந்த 
இதயத்தில் இரக்கம் உண்டு - 2 - என்றும் 
இரங்கிடும் இறைவன் இருப்பதனால் 
எங்கள் அனைவர்க்கும் மகிழ்ச்சி உண்டு - 2

2. கடவுளின் கருணை உண்டு அந்த 
கருணைக்கும் உருவம் உண்டு -2 
என்றும்; உருவத்தில் உதித்தேழும் உயிர் அதனால் 
எங்கள் உள்ளத்தில் உவகை உண்டு

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்புங்கள் செபியுங்கள் நல்லது நடக்கும்

துன்பங்களோ துயரங்களோ 
சோதனையோ வேதனையோ
பதுவை புனிதர் பரிந்துரைப்பார்
எல்லாம் வல்லவர் நடத்தி வைப்பார்

மனச்சுமையோ பாரங்களோ
உடற்பிணியோ ஊனங்களோ
பதுவை புனிதர் பரிந்துரைப்பார்
எல்லாம் வல்லவர் நலம் தருவார்

வறியவரோ சிறியவரோ
முதியோரோ இளையோரோ
பதுவை புனிதர் பரிந்துரைப்பார்
எல்லாம் வல்லவர் அணைத்துக் கொள்வார்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துஞ்சலும் துஞ்சல் - நால்வர் அருளிய நமசிவாய பதிகங்கள் | சோலார் சாய் | சிவலோகம் | பக்தி டிவி

துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின், நாள்தொறும்;
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த, வந்த கூற்று
அஞ்ச உதைத்தன, அஞ்சு எழுத்துமே.

நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
நமச்சிவாய 

மந்திரம் நான்மறை ஆகி, வானவர்
சிந்தையுள் நின்று, அவர்தம்மை ஆள்வன;
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்சு எழுத்துமே.

நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
நமச்சிவாய 

ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண்சுடர்
ஞான விளக்கினை ஏற்றி, நன்புலத்து
ஏனை வழிதிறந்து ஏத்துவார்க்கு, இடர்
ஆன கெடுப்பன, அஞ்சு எழுத்துமே.

நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
நமச்சிவாய 

நல்லவர் தீயர் எனாது, நச்சினர்
செல்லல் கெடச் சிவமுத்தி காட்டுவ;
கொல்ல நமன்தமர் கொண்டு போம் இடத்து
அல்லல் கெடுப்பன, அஞ்சு எழுத்துமே.

நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
நமச்சிவாய 

கொங்குஅலர் வன்மதன் வாளிஐந்து; அகத்து
அங்குள பூதமும் அஞ்ச; ஐம் பொழில்
தங்கு அரவின் படம் அஞ்சும்; தம் உடை
அங்கையில் ஐவிரல்; அஞ்சு எழுத்துமே.

நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
நமச்சிவாய 

தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்,
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்,
இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்
அம்மையினும் துணை அஞ்சு எழுத்துமே.

நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
நமச்சிவாய 

வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்;
பீடை கெடுப்பன; பின்னை நாள்தோறும்
மாடு கொடுப்பன; மன்னு மாநடம்
ஆடி உகப்பன, அஞ்சு எழுத்துமே.

நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
நமச்சிவாய 


வண்டு அமர் ஓதி மடந்தை பேணிண,
பண்டை இராவணன் பாடி உய்ந்தன;
தொண்டர்கள் கொண்டு துதித்தபின், அவர்க்கு
அண்டம் அளிப்பன அஞ்சு எழுத்துமே.

நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
நமச்சிவாய 

கார்வணன், நான்முகன், காணுதற்கு ஓணாச்
சீர்வணச் சேவடி செவ்வி, நாள்தோறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர்வணம் ஆவன, அஞ்சு எழுத்துமே.

நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
நமச்சிவாய 

புத்தர், சமண் கழுக்கையார், பொய்கொளாச்
சித்தத் தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறு அணிவார் வினைப் பகைக்கு
அத்திரம் ஆவன அஞ்சு எழுத்துமே.

நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
நமச்சிவாய 


நற்றமிழ் ஞானசம்பந்தன், நால்மறை
கற்றவன் காழியார் மன்னன் உன்னிய
அற்றம்இல் மாலை ஈர்ஐந்தும் அஞ்சு எழுத்து
உற்றன் வல்லவர் உம்பர் ஆவரே


நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
நமச்சிவாய

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலவனுக்கு மூத்தவனே விக்கன விநாயகனே

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா

கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா

சென்னிமலை சுப்ரமணிய சாமிக்கு . . . அரோகரா . . .

நின்றருளும் அருணாச்சலன் பிள்ளையல்லவா

தாயும் தந்தையும் நீயல்லவா

எனக்கு தாயும் தந்தையும் நீயல்லவா

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைகுண்டஏகாதசி - ஸ்ரீரங்கநாதர் பாடல்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க 🙏

கோமான் நபிகள் தோன்றாவிட்டால் குர்ஆன்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறைவான மனதில்
மறைவான ஏக்கம்
திரையாக வந்து
தினம் என்னை தாக்கும்
கருவாக நெஞ்சில்
உருவான பாசம்
கற்பனைகள் கோடி
தினம் அள்ளி வீசும்


ஒரு நாள் என் நெஞ்சில்
ஆழ்ந்தது துன்பம்
அடைக்கலம் வேண்டி 7.
அழுதது கொஞ்சம்
அப்போது அண்ணலை
உள் மனதில் ஏத்தி
கற்பனை உலகில்
நான் மூழ்கி போனேன்


நம் ஊரின் எல்லையை
எம் வேந்தர் அடைந்தார்
என்றொரு செய்தியை
கேட்டு எந்தன் செவிகள்
கனவெல்லாம் வாடி 
கரை ந்தோடி நானும்
மன்னரை நாடி
நான் போனேன் தேடி

கடும் வெயிலும் மழையும்
தடை விரித்த போதும்
காருண்யர் அன்பு 
குடையாக மாறி
கண்ணுக்கு சுர்மா கல்புக்கு கலிமா நாவுக்கு ஸலவாத் அலங்காரமாகி

நெடும் பாதை ஓரம்  விரைந்தோடும் நேரம்
கலைத்தாலும் தேகம் 
குறையாத வேகம்
ஏக்கங்கள் பலமாய் எனை வாட்டினாலும்
எண்ணங்கள் பலதாய் மனக் கண்ணில் மோதும்

எம் நெஞ்சில் வாழும் 
பூமானை நோக்கி
பேராவலுடன் ஸலாம் 
உரைக்க வேண்டும்
உள்ளத்தில் தேங்கிய உளைச்சல்கள் நீங்க
உத்தமருடன் உரையாட வேண்டும்

பெருமானின் பேச்சில் நிறைவான மூச்சில்
பெரும் பாவச் சுமையும் பறந்தோட வேண்டும்
விடை பெறும் நேரம் விரைந்தாலும் உம்மை
விலகாமல் என்னுயிர் கறைந்தோட வேண்டும்

பலவாறு எண்ணம்
 சுமந்தது உள்ளம்
அடைந்தேனே நானும் 
நம் ஊரின் எல்லை
அங்கிங்கும் அலைந்தேன் அன்பரை தேடி
மனம் உடைந்து போனேன் காணாமல் வாடி

பெரும் பாவம் இழைத்தேன் பாக்கியம் இழந்தேன்
என் வாழ்க்கை வீணே என்றெண்ணி அழுதேன்
கண்ணிமைகள் நனைய  திடுக்கிட்டு எழுந்தேன்
கண்டவை அனைத்தும் கனவென்று உணர்ந்தேன்

இறைவா என் ஆசையில் தவறேதும் உண்டா
நான் கொண்ட காதலில் குறையேதும் உண்டா 
குறையேதும் இருப்பின் அடியோடு நீக்கி
பெருமானின் காட்சி நொடியேனும் தருவாய்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழிகாட்டும் என் தெய்வமே
துணையாக எனில் வாருமே (2)
நதிமீது அலைந்தாடும் அகல்போலவே
கதியேதும் தெரியாமலே - நான்
தடுமாறும் நிலைபாறுமே

அன்பாகி அருளாகி என்னோடு ஒன்றாகி
துயரோடு போராடும் என்வாழ்வின் நலமாகி
எனைத்தாங்கும் என் தெய்வமே - என்
நிழலாக எழும் தெய்வமே

எந்நாளும் உனைத்தேடும் வரம்கேட்கிறேன்
உன்பாத நிழல்நாடும் மனம் கேட்கிறேன்
நீரின்றியே மண்ணில் வளமில்லையே
நிலமின்றியே உயிர் வாழ்வில்லையே
எந்நாளும் உனைத்தேடும் வரம்கேட்கிறேன்
உன்பாத நிழல்நாடும் மனம் கேட்கிறேன்

எனைக்காக்கும் என் தெய்வமே - என் 
உயிராக எழும் தெய்வமே

நிலவெங்கும் ஒழிந்தாலும் விழிமூடி பயனேது
துயர் மூடும் மனமுந்தன் அருள் காணும் வகையேது 
பலனாக கைமீது வா இங்கு புலனாகும் இறையாக வா

என் பாதை முடிவாகும் உம் தாளிலே 
என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே 
உன் வார்த்தைகள் என் வாழ்வாகுமோ 
உன் பார்வைகள் என் வழியாகுமோ 
என் பாதை முடிவாகும் உம் தாளிலே 
என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே
 
இருள் நீக்கும் விளக்காகவே - நான் 
சுடர்வீச எனை ஏற்றவா 

ஆல்போல வளர்ந்தாலும் ஆரம்பம் முளைதானே 
விண்வாழ்வின் உயர்வெல்லாம் இவ்வாழ்வின் பலன்தானே 
நிறைவாழ்வின் விதையாகவே எங்கள் நிலவாழ்வு பயன்காணவா

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேரடியில் கலையிலே நான் அழுத வேளையிலே நீ திரும்பி பார்க்கவில்லை முருகா

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க🙏

அஹ்மது நபி ﷺ அவர்களின் அழகிய திருநாமங்கள் | அஸ்மாவுன் நபி ﷺ

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல
உம்மை நம்பியே நானும் வாழ்கிறேன்
உம்மைத் தேடியே ஒடி வருகிறேன்
பாரும் இயேசுவே என்ன பாரும் இயேசுவே
கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே
   இயேசுவே எனக்கு......... 

I
கவலை என்னில் பெருகும் போது கலங்கி போகின்றேன்   
வெளியில் சொல்ல முடியாமல் எனக்குள் அழுகின்றேன்
யாரும் இல்லை தேற்றிட
யாருமில்லை உதவிட
பாரும் இயேசுவே – என்ன
பாரும் இயேசுவே        
கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே
   இயேசுவே எனக்கு......... 

II
உலகம் என்னை வெறுக்கும் போது உடைந்து போகின்றேன்  
நம்பும் மனிதர் விலகும் போது நெஞ்சம் வலிக்குதே
யாரும் இல்லை தேற்றிட
யாருமில்லை உதவிட
பாரும் இயேசுவே – என்ன
பாரும் இயேசுவே        
கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே
   இயேசுவே எனக்கு.........

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 உண்ணாமல் இருப்பேனா உறங்காமல் இருப்பேனா உன்னை எண்ணாமல் இருப்பேனோ என் இணுவை விநாயகனே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏

இருலோகம் போற்றும் இறைதூதராம்
இசுலாத்தை தந்த நபிநாதராம்

அருள் வடிவானவர் அண்ணல் மஹமூதர்
இருள் நீக்க வந்தவர்
எங்கள் நபிநாதர், நபிநாதர்
அருள் வடிவானவர் அண்ணல் மஹமூதர்

கோடி கோடி இன்பம்
எங்கள் கோமான் நபி சென்ற வழியில்
பாடி பாடி மகிழ்வோம்
எங்கள் பயஹம்பர் பகர்ந்த பொன் மொழியில்
இன்னும் சொல்லவா அவர் பெருமை....
அருள் வடிவானவர் அண்ணல் மஹமூதர்
இருள் நீக்க வந்தவர் எங்கள் நபிநாதர்


ஆதி இறை தந்த வடிவம்
அன்னை ஆமினார் ஈன்றேடுத்த செல்வம்
நீதி நிலை நாட்டி என்றும்
நம்மை நெறியோடு வாழவைத்த நெஞ்சம்
இன்னும் சொல்லவா அவர் மகிமை...
அருள் வடிவானவர் அண்ணல் மஹமூதர்
இருள் நீக்க வந்தவர் எங்கள் நபிநாதர்

வானமும் வையமும் போற்றும்
நல்ல வழிகாட்டும் உயர் மார்க்கம் தந்தார்
தீன் மழை பெய்திட எங்கும்
நபி திருவேத மறை அளித்துச்சென்றார்
இன்னும் சொல்லவா அவர் புகழை...
அருள் வடிவானவர் அண்ணல் மஹமூதர்
இருள் நீக்க வந்தவர்
எங்கள் நபிநாதர்..நபிநாதர்
அருள் வடிவானவர் அண்ணல் மஹமூதர்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொல்லா நோயும் நில்லாமல் ஓடும் உங்கள் நாமம் சொன்னால் போதும்

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.