Jump to content

சீன ராணுவம் நடத்தும் இணைய தாக்குதல்: மத்திய உள்துறை எச்சரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீன ராணுவம் நடத்தும் இணைய தாக்குதல்:  மத்திய உள்துறை எச்சரிக்கை

computer-emergency-response-team-india-cert-in-has-issued-an-advisory-regarding-a-potential-cyber-offensive-attack-from-the-chinese-army  

இந்தியாவில் உள்ள பெரு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனி நபர்களை குறிவைத்து தகவலை திருடும் ஃபிஷிங் தாக்குதல் நடத்தவும், இலவச கோவிட் 19 சோதனை பெயரில் வலை விரிக்கும் சீன இணையதளங்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்தின் அவசர கால பணிக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய சீன உறவு லடாக் தாக்குதல் மூலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சீன பொருட்களை புறக்கணிப்போம், சீன இணையதளங்கள், செயலிகளை புறக்கணிப்போம் என்கிற கோஷம் வலுத்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் உள்ள பெரு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களை முடக்கும் வகையிலும், பொதுமக்களை கவர்ந்திழுக்கும் வகையில் கோவிட் இலவச பரிசோதனை(Free Covid-19Test), அரசு பெயரில் இணையதளம், ( ncov2019@gov.in) என வலைவிரிக்கும் இணையங்களிடம், இ.மெயில், மெசேஜ் உள்ளிட்டவைகளிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் பிரிவின் அவசரகால கணினி பணிக்குழு இந்தியாவில் உள்ள அனைத்து தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனங்களுக்கு எச்சரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

1592902645110.jpg

இதுகுறித்த அவர்களது எச்சரிக்கை பதிவு வருமாறு:

எவ்வாறெல்லாம் தாக்குதல் வரும்:

* வலைவிரிக்கும் பிரச்சாரம் மூலம் ( Phishing campaign) அரசு நிறுவனங்கள், துறைகள், வியாபார நிறுவனங்கள் மூலம் அரசின் நிதி கிடைப்பதுபோன்று ஆள்மாறாட்டம் செய்வது.

* ஏமாற்றும் வகையில் வலைவிரிக்கப்படும் கரோனா வைரஸ் இலவச சிகிச்சை பிரச்சாரங்கள் மூலம் நிறுவனங்களின், பொதுமக்களின் தகவல்களை திருடும் வேலை. உதாரணமாக அரசு சார்ந்த இணையம் போல் உருவாக்கி ஈர்ப்பது (ncov2019@gov.in.)

* சென்னை, டெல்லி, மும்பை, ஹைதராபாத், அஹமதாபாத்தில் இலவச கரோனா பரிசோதனை என ஆசை வலை விரிக்கும் இணையதளம் மூலம் ஈர்ப்பது.

தீங்கிழைக்கும் இத்தகைய குழுக்கள் 20 லட்சம் தனிப்பட்டவர்களின் இமெயில் முகவரிகளை குறிவைத்து ஜூன் 21 முதல் பிரச்சாரத்தை துவக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

1592902664110.jpg

தடுக்கும் முறைகள் என்ன?

* சமூக வலைதளங்களில், செய்திகள் இடையே அழைக்கும் தகவல்களை, இமெயில், இணையதள பக்கம், எஸ்.எம்.எஸ்களை தயவு செய்து க்ளிக் செய்து திறக்கவேண்டாம். அவை உங்கள் தகவலை திருடும் ஹேக்கர்களின் பக்கமாக இருக்கலாம்.

* இதுபோன்ற இணைய பக்கங்கள், மெசேஜ்களை உங்களுக்கு ஷேர் செய்யும் நபர் தெரிந்த நபராக இருந்தாலும், அந்தப்பக்கங்களை திறப்பதில் அதிக கவனமுடனும், எச்சரிக்கையுடனும் இருங்கள்.

* மின்னஞ்சல் முகவரிகள், மின்னஞ்சல்கள், வலைத்தளங்கள் மற்றும் அறிமுகமில்லாத மின்னஞ்சல்களில் சிறிய எழுத்து மாறுதல்களுடன் வரும் இமெயில்களில் ஜாக்கிரதையாக இருங்கள்.

* அறிமுகமில்லாத அல்லது நீங்கள் அறியாத வலைத்தளங்கள் / இணைப்புகளில் உங்களது தனிப்பட்ட நிதி விவரங்களை கையாளும் எந்த தகவலையும் சமர்ப்பிக்க வேண்டாம்.

* உங்கள் ஆசையைத்தூண்டும் இலவச கரோனா பரிசோதனை, நிதி உதவி, நிவாரண உதவி, வெற்றிபெற்றதாக பரிசுத்தொகை அளிப்பது, வெகுமதிகள், பணம் வரும் என ஆசைகாட்டும் மின்னஞ்சல், மெசேஜ்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவும்.

* ஒரு இணைய தளத்திற்குள் செல்லும் முன் அதன் பக்கத்தின் நம்பகத்தன்மையை (URL)சரிபார்த்தப்பின் நுழையவும்.

* உங்கள் கணினியை பாதுகாக்கவும், பாதுகாப்பாக இணையத்தை அணுகும் விதத்தில் வைரஸ் தடுப்பு செயலிகள், பாதுகாப்பான இணைய பக்கங்கள், பாதுகாக்கும் செயலிகள் (antivirus and content-based filtering) நிறுவுவது, அவ்வப்போது வரும் ஸ்பாம் தடுப்புகளை (Update spam filters with latest spam) புதுப்பிப்பதன் மூலம் பாதுகாப்பான இணைய தேடலை உறுதிப்படுத்தவும்.

* மின் அஞ்சல் தகவல் தொடர்புகளில் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள். இணையத்தில், தங்கள் சொந்த விவரங்கள், ஆவணங்கள், டேட்டாக்கள் பாதுகாப்புடன் இருக்கும் வகையில் வேண்டிய நடவடிக்கை எடுக்க மின் அஞ்சல் பயனர்களுக்கு வேண்டிய அறிவுரையை வழங்குங்கள்

1592902715110.jpg

* இணையதளம், மின் அஞ்சல் பயன்பாட்டின்போது வழக்கத்துக்கு மாறான நடைமுறை, சந்தேகிக்கும் வண்ணம் தவறான அழைப்புகள், மின் அஞ்சல்கள் குறித்து உணர்ந்தால் அதுகுறித்து உடனடியாக incident@certin.org.in. என்கிற இணையதளத்துக்கு தகவல் தெரிவிக்கவும்.

தொடர்புடைய பதிவுகள், தாக்குதல்கள் குறித்து அறியவும், பகுப்பாய்வு செய்வதற்கும் மேலும் பாதுகாப்பாக பயன்படுத்தவும் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு உதவும்.

* மேலே உள்ள அனைத்தையும் கருத்தில் கொண்டு, உங்கள் கீழ் உள்ள அனைத்து சாத்தியமான தொடர்புள்ளவர்கள், நிறுவனங்கள், பொதுமக்களிடையே பாதுகாப்பாக இணையங்களை, மின் அஞ்சல்களை இயக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட எச்சரிக்கை அடிப்படையில் சாத்தியமான சைபர் தாக்குதல் தாக்குதல் / வலைவிரிக்கும் ஃபிஷிங் தாக்குதல் பிரச்சாரம் தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும், தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்கவும்.

அதேபோன்று அது குறித்த விரிவான விழிப்புணர்வு பரப்புரையை அனைத்து சாத்தியமான உங்கள் படைப்பிரிவு நடவடிக்கை மூலம் அனைத்து படைவீரர்களுக்கு அவரது குடும்பத்தாருக்கும் படைப்பிரிவு கூட்டம், தினசரி ஆலோசனை கூட்டம் போன்றவை மூலம் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.

இதன் மூலம் நன்கு அறிந்த, விழிப்புணர்வு பெற்ற/ விழிப்புணர்வுள்ள ஒருவர் மூலம் இதுபோன்ற சைபர் தாக்குதலிலிருந்து தற்காத்து மீள முடியும். இதன் மூலம் தினமும் மேற்கண்ட விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் தடுப்பு எச்சரிக்கை தகவல்களை படைப்பிரிவுக்கும், தனிப்பட்ட நபர்களுக்கும் தொடர்ந்து அளித்திட வேண்டும்.

இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

 

https://www.hindutamil.in/news/india/560755-computer-emergency-response-team-india-cert-in-has-issued-an-advisory-regarding-a-potential-cyber-offensive-attack-from-the-chinese-army-6.html

Link to comment
Share on other sites

மிகச் சரியான பார்வை.. நேரம் இல்லாதவர்கள் 31:00 நிமிடத்தில் இருந்து கேளுங்கள். நாடுகள் இயங்கும் தன்மைகள் குறித்து விளக்கியுள்ளார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சண்டை வந்து இந்தியா அழியத்தான்  வேணும் ஆனால் மெட்றாஸ்  ரெஜிமென்ட் தான் முன்னணியில் போலி ஹிந்தி தேசிய வெறி ஊட்டப்பட்டு நிக்க வைக்கப்பட்டு உள்ளார்கள் கிந்தியர்கள் வழக்கம்போல் கலர் மாவை பெண்பிள்ளைகளுக்கு எறிந்து  பெட்டை  விளையாட்டு விளையாடிக்கொண்டு இருப்பார்கள் . சாவது நம்ம தமிழர்கள் தான் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.