Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கபசுரக் குடிநீரை யார், எவ்வளவு பருகலாம்? - விரிவான விளக்கம்

கபசுரக் குடிநீரை யார் எவ்வளவு பருகலாம்? படத்தின் காப்புரிமை Muralinath / getty images

கொரோனா தொற்றின் பிரதான அறிகுறியான காய்ச்சல் மற்றும் சளியை சமாளிக்க அருந்தப்படும் சித்த மருத்துவ குடிநீரான கபசுரக் குடிநீர் பருகும் அளவு ஒவ்வொருவருக்கும் வேறுபடும் என்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படியே பொது மக்கள் அதை அருந்தவேண்டும் என்றும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் கபசுரக்குடிநீரின் பயன்பாடு குறித்த விரிவான ஆய்வு நடைபெற்றுவருகிறது.

ஆரோக்கியமான குழந்தைகள், முதியவர்கள், இளம் வயதினர், கொரோனா நோயாளிகள் என ஒவ்வொருவருக்கும் கபசுரக்குடிநீரை பருகுவதற்கான அளவை மருத்துவர்கள் வகுத்துள்ளனர்.

இதுகுறித்து பிபிசி தமிழின் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணனினிடம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் மீனாகுமாரி விரிவாக பேசினார். பேட்டியிலிருந்து:

கபசுரக்குடிநீரை யார் எவ்வளவு பருகலாம்?

கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் தினமும் கபசுரக் குடிநீர் பருகவேண்டும். மற்றவர்கள் எடுத்துக்கொள்ளவேண்டிய அளவு மாறுபடும். ஒரு வியாதியின் தாக்கம் எல்லோருக்கும் ஒரே மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தாது. ஒவ்வொருக்கும் உடல்நிலை வித்தியாசமானது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிகுறிகள் தென்படும் நபர்கள் ஆகியோர் தினமும் மூன்று வேளை 40 எம்.எல்(ml) பருகவேண்டும்.

கொரோனா வைரஸ்: கபசுர குடிநீர் என்பது என்ன?அது கொரோனாவை குணப்படுத்துமா?

மருத்துவர்கள், மருத்துவமனையில் பணிபுரிவோர், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் என அதிகளவிலான பொது மக்களோடு அன்றாடம் பணிபுரிவோர், பாதிக்கப்பட்டவர்களோடு அதிக நேரம் செலவிடுவோர்கள் தினமும் ஒரு வேளை 40 முதல் 50 எம்.எல் பருகலாம்.

பாதிக்கப்பட்டவர்களோடு நேரடி தொடர்பில் இருப்பவர்கள், பாதிப்புக்கு ஆளாகக்கூடும் என்ற நிலையில் இருப்பவர்கள் தினமும் இருவேளை 40 முதல் 50 எம்.எல் பருகலாம்.

Banner image reading 'more about coronavirus' Banner

ஆரோக்கியமானவர்கள், கொரோனா அறிகுறிகள் வருவதை தடுக்க முதலில், தொடர்ச்சியாக ஒரு வாரம் பருகலாம். உணவுக்கு பின்னர் ஒரு வேளை 40 முதல் 60 எம்.எல் வரை பருகலாம். இரண்டாவது வாரம் முதல், ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை ஒரு வேளை அதே அளவு பருகலாம்.

குழந்தைகளுக்கு கொடுக்கும்போது, ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பத்து எம்.எல். கொடுக்கலாம். ஐந்து முதல் 10 வயதுள்ள குழந்தைகளுக்கு 20 எம்.எல் அளவும், 10 வயதில் இருந்து 18 வயது வரை உள்ளவர்களுக்கு 30 எம்.எல் வரை கொடுக்கலாம்.

கொரோனாவின் அறிகுறிகளை தடுப்பதற்காக கபசுரக்குடிநீரை பருகலாம் என தமிழக அரசு அறிவித்தது. கபசுரக்குடிநீர் புதிய மருந்தா? இதன் பயன்பாடு எப்போது தொடங்கியது?

கொரோனா பரவலுக்கு முன்பே கபசுரக்குடிநீர் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவுவதற்கு முந்தைய காலத்தில், காய்ச்சல் மற்றும் சளியை குறைக்க நோயாளிகளுக்கு இந்த மருந்தை அளித்தோம்.

கொரோனா வைரஸ்

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து இல்லை என்ற நிலையில், அதன் அறிகுறிகளை கட்டுப்படுத்தினால் கொரோனா தாக்கம் குறையும் என்பதால் கபசுரக் குடிநீரை பரிந்துரைத்தோம். டெங்கு தாக்கத்தின் போது நிலவேம்பு குடிநீர் அறிமுகம் ஆனது போலவே, பொது மக்களிடம் தற்போது கபசுரக் குடிநீரின் பயன்பாடு தொடங்கியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் கபசுரக் குடிநீரின் ஆற்றல் குறித்த ஆய்வுக்காக எலிகளுக்கு அந்த மருந்து அளிக்கப்பட்டது. விலங்கு நல குழுமத்தின் அனுமதியோடு ஆய்வு செய்தோம். 2000 எம்.எல். அளவு வரை பருகிய எலிகளுக்கு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை.

இந்த சோதனை நல்ல முடிவுகளை தந்ததால், பின்னர் சித்த மருத்துவ நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 450 பேர் தற்காப்புக்காக அருந்தினோம். அதன் பலனால் நாங்கள் தற்காப்போடு உள்ளோம்.

இதனை தொடர்ந்து, கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு கபத்தை குறைக்க கபசுரக் குடிநீர் அளிக்கப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் 13 மையங்களில் 20,000 நபர்களுக்கு கபசுரக் குடிநீர் அளிக்கப்பட்டு, அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களை ஆவணப்படுத்தி வருகிறோம்.

கபசுரக்குடிநீர் அல்லாமல் பிற மூலிகை கஷாயங்களின் பயன்பாடு குறித்து சொல்லுங்கள்.

சித்த மருத்துவத்தை பொறுத்தவரை, உணவே மருந்து என்பதை அடிப்படையாக கொண்டது. மூலிகை செடிகளில் இருந்து எடுக்கப்படும் பொருட்களை கொண்டு மருந்து தயாரிக்கிறோம். மூலிகை கலவைகளை பலவிதமாக பகுத்து சோதனை செய்த பின்னர்தான் ஒரு மருந்தை தர முடியும். இதற்கென நிபுணர் குழு உள்ளது.

தற்போது கபசுரக் குடிநீர் குறித்த ஆய்வு நடைபெறுகிறது. அதேபோல 15 விதமான மருந்து கலவைகளை கொண்டு ஆய்வு செய்கிறோம். வேப்பிலை மற்றும் மஞ்சளின் கலவையின் பரிசோதித்து வருகிறோம்.

கொரோனாவுக்கு முக்கிய அறிகுறிகள் காய்ச்சல் மற்றும் சளி. மூச்சுக் காற்று சீராக இருக்கவேண்டும். மூச்சுக் குழாய் செயல்பாடு சீராக இருக்கவேண்டும். கபசுரக் குடிநீர் போலவே ஆடாதோடை மணப்பாகு பயன்படுத்தலாம்.

பொது மக்கள், வீட்டில் இஞ்சி, எலுமிச்சை கலவை சாரை தினமும் இருவேளை தேநீருக்கு பதிலாக அருந்தலாம். பலவகையான மூலிகைகளை அதுகுறித்த விவரங்கள் தெரியாமல் அருந்தகூடாது. இந்திய ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதல் மற்றும் மருத்துவரின் துணையோடு ஒவ்வொருவரின் உடலுக்கு ஏற்றவாறு மூலிகை கஷாயங்களை பயன்படுத்துவது நல்லது.

https://www.bbc.com/tamil/science-53151769?at_custom3=BBC+Tamil&at_custom4=3BA9D694-B54F-11EA-9656-B8E7C28169F1&at_medium=custom7&at_custom1=[post+type]&at_custom2=facebook_page&at_campaign=64&fbclid=IwAR2mBgKjskdyzcjMEnfdnNKD1Cp0o1fk0tH2GDu6GvEpi2eAoKmTuwDcdZw

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.