Jump to content

தனிமை கூட இனிமையே…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தனிமை கூட இனிமையே…

உன்னையே நினைத்துக் கொண்டிருப்பதால்
என் தனிமை கூட இனிமையே
நான் தனிமையாய் இருப்பதாய்
பிறர் நினைக்கலாம்
என் இல்லம் முழுவதும்
நீ நிறைந்திருக்க
என் உள்ளம் முழுவதும்
நீ குடியிருக்க
என் நிழலாக நீயும்
உன் நினைவாக நானும்
வாழும் இவ் வாழ்வில்
என் தனிமைக்கேது கொடுமை
உன் நினைவு மட்டுமே இனிமை.

நூன் அழகாக உடுத்துகையில்
நீ அருகிருந்து  ரசிப்பதாய்
நான் மகிழ்வாகச் சிரிக்கையில்
நீ மன நிறைவாய்ப் பார்ப்பதாய்
நான் தனிமையில் இருக்கையில்
என் தலை வருடி நெகிழ்வதாய்
நான் மனம் சோரும் வேளையில்
நீ கனிவாக அணைப்பதாய்
என் அழுகையில் என் சிரிப்பில்
என் உணர்வினில் என் உயிரில்
அத்தனையிலும் நீ துணையிருக்க
என் தனிமைக்கேது கொடுமை
உன் நினைவு மட்டுமே இனிமை
என் சமையலறை மேடையில்
நீ குடித்த தேநீர்க் கோப்பை
என் ஆடை அலுமாரியிலோ
நீ அணிந்த கைக்கடிகாரம்
என் படு;க்கை அருகினிலே
நீ பார்த்தபடி உன் நிழற்படம்
எப் பக்கம் திரும்பினும்
உன் நினைவாக ஞாபகங்கள்
என் கூட நிழலாக
எம் பிள்ளைகள் நால்வர்
அத்தனையிலும் நீ துணையிருக்க
என் தனிமைக்கேது கொடுமை
உன் நினைவு மட்டுமே இனிமை

என் கழுத்திலே தொங்குவதோ
நீ கட்டி விட்ட மாங்கல்யம்
என் கை விரலில் தழுவுவதோ
நீ அணுவித்த கணையாழி
மனம் முழுதும் மலருவதோ
உன் இனிய நினைவலைகள்
உன் மடியில் தவழாத
நீ பார்த்து மகிழாத
எம் பேரக் குழந்தைகள்
என் மடியில் தவழுகையில்
என் தனிமைக்கேது கொடுமை
உன் நினைவு மட்டுமே இனிமை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி தனிமையால் டாக்ரரை நாடுபவர்கள் உலகில்
தனிமையை இனிமையாக்கி இருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிமைக்கு  மருந்து  சொன்னீர்

வாழ்க நலமுடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை உங்களை பார்த்து மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். "மறந்தால் தானே நினைப்பதற்கு" என்பார்கள் . நினைவே  அவராக இருக்கையில்  தனிமையும் இனிமையே ..தனிமையை இனிமையாக்குவது அவரவர்   திறமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/6/2020 at 15:55, Kavallur Kanmani said:

என் கழுத்திலே தொங்குவதோ
நீ கட்டி விட்ட மாங்கல்யம்
என் கை விரலில் தழுவுவதோ
நீ அணுவித்த கணையாழி
மனம் முழுதும் மலருவதோ
உன் இனிய நினைவலைகள்
உன் மடியில் தவழாத
நீ பார்த்து மகிழாத
எம் பேரக் குழந்தைகள்
என் மடியில் தவழுகையில்
என் தனிமைக்கேது கொடுமை
உன் நினைவு மட்டுமே இனிமை.

இத்தனை இனிமையோடு வாழும் உங்களுக்கு தனிமை ஏது சகோதரி.கடல் அலை போல் தமிழ் அலைகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.