Jump to content

திருக்குறளை ஜனரஞ்சகப்படுத்தும் சிங்கை இளைஞர்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருக்குறளை ஜனரஞ்சகப்படுத்தும் சிங்கை இளைஞர்கள்!

thirukkural  

நம்முடைய வாழ்வின் ஏற்றங்கள், தடுமாற்றங்கள், பிரச்சினைகளில் முடிவெடுக்க திணறும் தருணங்கள்.. இப்படி நம் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் உதவுவதற்கு உலகத்தின் பொதுமறையாக மதிக்கப்படும் திருவள்ளுவரின் திருக்குறளுக்கு பெரும்பங்கு இருக்கிறது.

ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும்? ஒரு நாட்டின் அரசன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும்? கல்வியின் முக்கியத்துவம் என்ன? மனிதன் வாழ்வதற்கு செல்வம் எந்தளவுக்கு அவசியம்? நாவடக்கம் மனிதனுக்கு எவ்வளவு முக்கியம்? இப்படி உலகம் முழுவதும் வாழும் ஒட்டுமொத்த மனித குலமும் எதிர்கொள்ளும் கேள்விகளுக்கான பதில்களை சிந்தித்து தீர்வுகளை முன்வைக்கிறது திருக்குறள்.

நடைமுறை வாழ்க்கையின் ஒவ்வொரு செயலிலும்கூட திருக்குறளை கடைப்பிடிக்கத் தேவையான உத்வேகத்தை ஆர்வத்தை அதிகரிப்பதற்காக சிங்கப்பூரிலிருந்து செயல்படுகிறது KURAL4ALL `அனைவருக்கும் குறள்’ என்னும் பொருளில் அமைந்திருக்கும் (fb.me/kural4all) முகநூல் பக்கம்.

இணைய வாகனத்தில் திருக்குறள்

ரத்தினச் சுருக்கமாக ஏழு சீர்களில் எழுதப்பட்டிருக்கும் திருக்குறளின் பெருமைகளை ஏழு வழிகளில் பிரபலங்கள், குழந்தைகள், இளைஞர்கள் இப்படிப் பலரும் பேசிப் பகிர்வதன்மூலம், திருக்குறள் குறித்த விழிப்புணர்வை இளையோர்களிடமும் குழந்தைகளிடமும் ஏற்படுத்தும் லட்சியத்தோடு இந்த முகநூல் பக்கத்தை கடந்த ஆண்டு தொடங்கியிருக்கின்றனர் உமாசங்கர், கார்த்திக், ஹரிபாபு, சரவணகுமார் ஆகிய இளைஞர்கள். இவர்கள் அனைவருமே தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியில் இருப்பவர்கள்.

மழலைக் குறள், குறளின் குரல், கதைக் குறள், கவிதைக் குறள், மீம் குறள், குறள் ஒலி எனும் ஏழு விதங்களில் திருக்குறளை இணைய வாகனத்தில் ஊர்வலம் எடுத்துவருவதே தங்களின் நோக்கம் என்கின்றனர் இந்த இளைஞர்கள்.

15929744881138.png

குழந்தைகள் திருக்குறளைக் கூறி, அதற்கான விளக்கத்தை அளிப்பது, ஒருவர் தனக்குப் பிடித்தமான குறளைக் கூறி அதற்கான விளக்கத்தை அளிப்பது, குறளின் நெறியை கதை, நாடகத்தின் மூலமாக வெளிப்படுத்துவது, குறளின் கருத்துகளை மையப்படுத்திய கவிதைகளை வாசித்து அனுப்புவது,

இளையோர்களால் பெரிதும் விரும்பப்படும் மீம் உருவாக்கங்களை குறளின் கருத்துகளை மையப்படுத்தி செய்வது, குறள் சார்ந்த கருத்துகளையோ விவாதத்தையோ பேசிப் பதிவு செய்து, அதை ஒலியோடையாகவும் இந்த முகநூலில் பதிவு செய்வதற்கான வழிகளை உண்டாக்கியிருக்கின்றது `அனைவருக்கும் குறள்’ அமைப்பு.

முகநூலில் திருக்குறள் பட்டிமன்றம்

முதலாம் ஆண்டு நிறைவையொட்டி குறள் நெறி சார்ந்த சிறப்பு பட்டிமன்றத்தை அண்மையில் நடத்தியிருக்கின்றனர். அமைப்பைத் தொடங்கியவர்களில் ஒருவரான சரவணகுமார் நம்மிடம் பேசியதிலிருந்து…

“நண்பர்கள் நாங்கள் நால்வரும் தமிழகத்தை சார்ந்தவர்கள். சிங்கையில் பணிபுரிகிறோம். மலேசியாவில் கடந்த ஆண்டு நடந்த "உலக திருக்குறள் மாநாட்டில்" KURAL4ALL முகநூல் பக்கத்திற்கான சிந்தனை துளிர்த்தது.

எங்கள் நோக்கம் திருக்குறளை மற்ற மொழியினருக்கும், இனத்தவருக்கும் கொண்டு செல்வது. என்னுடைய சீன நண்பர்கள் சிலரும் தங்களின் திருக்குறள் கானொலியை பகிர உள்ளனர். இது எங்கள் அமைப்பின் நோக்கத்திற்குக் கிடைத்த வெற்றி.

சென்ற வருடம் "குடும்ப குறள்" போட்டி ஒன்றையும் நடத்தினோம். குடும்ப உறுப்பினர்கள் குழுவாக குறளையும் அதன் பொருளையும் விளக்கினர். மேலும், எங்கள் அமைப்பின் முதலாமாண்டு கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக "இன்றைய காலகட்டத்திற்கு பெரிதும் அவசியமானது… திருக்குறளின் அறமா? பொருளா?" என்னும் தலைப்பில் மூன்று தலைமுறையினர் பங்குபெற்ற சிறப்பு பட்டிமன்றத்தையும் எங்கள் முகநூல் (fb.me/kural4all) நேரடி காணொளி வாயிலாக நடத்தினோம்.

15929748641138.png

பிரபலங்களின் பங்களிப்பு

சண்முக வடிவேல், டாக்டர் பர்வீன் சுல்தானா, டாக்டர் அப்துல் காதர், அ. கி . வரதராசன், மா.அன்பழகன் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களின் குறள் சிந்தனைகளை எங்களின் முகநூலில் பகிர்ந்திருக்கின்றனர்.

திருக்குறளை அவரவர்க்கு உரிய வகையில் பரப்புவதை கடமையாகக் கொள்ள வேண்டும். நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் அரசு அலுவலகங்களில், "பல்லவன்" பேருந்தில், தேநீர் கடைகளில் மற்றும் சிலரின் வீட்டு வரவேற்பறையிலும் திருக்குறளை எழுதி வைத்திருப்பார்கள். இன்றும் பலர் திருக்குறள் வகுப்புகள், நிகழ்ச்சிகள் படைப்பது தொடர்கிறது.

சமீபத்தில் நான் படித்த செய்தி, தமிழகத்தில் ஒரு பள்ளி மாணவி தினமும் ஒரு திருக்குறள் மற்றும் அதன் விளக்கத்தை தன் வீட்டின் வாயிலுள்ள கரும்பலகையில் எழுதுகிறார். திருவள்ளுவரின் திருக்குறள் எக்காலத்துக்கும் பொருந்துவது என்பதை அடுத்த தலைமுறையினருக்கு சமூக வலைதளத்தின் வழியாக கடத்துவதற்கான சிறு முயற்சியே எங்களின் இந்த முகநூல் பக்கம்” என்றார் அவரின் ஈற்றடி உதடுகளில் புன்னகையை நழுவவிட்டபடி!

https://www.hindutamil.in/news/blogs/560882-thirukkural-4.html

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.