Jump to content

எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.. உனக்கு ஓகே வா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உனக்கு ஓகேவா.. எனக்கு பிடிச்சிருக்கு".. தாத்தாவின் சேட்டை.. சிறுமிக்கு "லெட்டர்".. தூக்கிய போலீஸ்!

கோவை: "எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.. உனக்கு ஓகே வா" என்று கேள்வி கேட்டு, சிறுமிக்கு லவ் லட்டரும் தந்த முகமது தாத்தாவை தூக்கி உள்ளே வைத்துள்ளனர் நம் போலீசார்!! கோவை அடுத்த போத்தனூர் அருகே பஜன கோயில் தெருவில் வசிப்பவர் முகமது பீர் பாஷா.. இவருக்கு 66 வயதாகிறது.. இதே பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். சிறுமியை அடிக்கடி பார்க்கும்போதெல்லாம் முகமது தாத்தாவுக்கு சபலம் ஏற்பட்டு வந்துள்ளது.. அதனால் இதை மனசுக்குள்ளேயே பூட்டி வைக்க அவருக்கு விருப்பமில்லை.. உடனே ஒரு லவ் லட்டர் எழுதினார்.. "எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.. உனக்கு ஓகே வா" என்று ஸ்டெரியிட்டா விஷயத்துக்கு வந்தார்.

66 year old man arrested for giving love letter to 16 year old girl in coimbatore

அந்த லட்டரை கொண்டுபோய் சிறுமியிடம் தந்தார்.. அந்த சிறுமியோ அதை எடுத்து கொண்டு போய் அவரது அம்மாவிடம் தந்துள்ளார்.. அவரது அம்மாவோ மொத்த சொந்தக்காரர்களையும் வரவழைத்து லட்டரை காட்டினார்.. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், முகமது தாத்தாவை சந்தித்து கண்டித்துள்ளனர்.. ஆனால் தாத்தா அதை காதிலேயே வாங்கவில்லை.. திரும்பவும் சிறுமியை சந்தித்து, "நான் தந்த லட்டருக்கு என்ன பதில்?" என்று கேட்டு மிரட்டி உள்ளார்.. அவர் மிரட்டிவிட்டதால் பயந்துபோன சிறுமி வீட்டுக்குள் போய் ஒளிந்துகொண்டார்.. முகமதுக்காக வீட்டை விட்டு வெளியே வராமலேயே இருந்திருக்கிறார்.

இப்படியே விட்டால் சரிப்படாது என்று நினைத்த சிறுமியின் பெற்றோர், மகளிர் போலீசில் புகார் தந்தனர்.. இந்த புகாரை போலீசார் விசாரித்ததில், சிறுமியை மிரட்டியது உண்மை என்று தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ததுடன், கொத்தாக கொண்டு போய் முகமது தாத்தாவை ஜெயிலில் வைத்துள்ளனர் போலீசார்!

Read more at: https://tamil.oneindia.com/news/coimbatore/66-year-old-man-arrested-for-giving-love-letter-to-16-year-old-girl-in-coimbatore-389269.html?utm_source=vuukle&utm_medium=talk_of_town

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை ஊரில 50 வயதில சினிமாப்பாட்டு கேட்டாலே இங்க பாருடா அவர் கேக்கிற பாட்டை என்டு சொல்லுறாங்காள்.அப்படியான இடத்தில் இவர் மாட்டினால்  யோசிச்சு பாக்கவே பக் என்டு இருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான வருத்தம் எங்கள் ஊர் கிழடுகளுக்கு வராது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இப்படியான வருத்தம் எங்கள் ஊர் கிழடுகளுக்கு வராது

No... no... noop... 😎

இப்பதான் கண பேர் பிடிபட்டு, நீதிமன்று கொண்டு செல்லப்பட்டு இருக்கினம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இப்படியான வருத்தம் எங்கள் ஊர் கிழடுகளுக்கு வராது

  என்ன கதைக்கிறியள்? அங்கையும் ஊருக்கொரு குசும்பு கிழடு கட்டாயம் இருக்கும். 😎

Link to comment
Share on other sites

7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இப்படியான வருத்தம் எங்கள் ஊர் கிழடுகளுக்கு வராது

 

6 hours ago, குமாரசாமி said:

  என்ன கதைக்கிறியள்? அங்கையும் ஊருக்கொரு குசும்பு கிழடு கட்டாயம் இருக்கும். 😎

எல்லாருக்கும் மற்றவையை பார்த்து கிழடு எண்டு சொல்லுறதில ஒரு சந்தோசம் போல... எங்கட யாழ்கள கி...ள் 16, 17 வயது நடிகைகளின் படங்களை களத்தில் போட்டு படும்பாட்டை யாரிடம் சொல்லி அழ 😜- எங்கே எங்கள் பையன்26? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

66 year old man arrested for giving love letter to 16 year old girl in coimbatore

அட... "லவ் லெட்டர்"  கொடுத்த,  முகமது பீர் பாஷா....
"சேவ்" எடுத்து, நரைச்ச  தாடியை மறைத்து... 
தலைக்கு "டை" அடித்து, குடுப்பம் எண்டில்லை... 
"மார்ச்சுவரி"யிலை, கிடக்கிற பிணம் மாதிரி, 
மூஞ்சையை... வைத்துக் கொண்டு... கொடுத்ததை பார்க்க, ஆத்திரம் வருகுது. 😎 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐம்பதிலும் ஆசை வரும்
ஆசையுடன் பாசம் வரும்
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா...
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Nathamuni said:

No... no... noop... 😎

இப்பதான் கண பேர் பிடிபட்டு, நீதிமன்று கொண்டு செல்லப்பட்டு இருக்கினம். 

ஓ அது வேறையா ???

15 hours ago, குமாரசாமி said:

  என்ன கதைக்கிறியள்? அங்கையும் ஊருக்கொரு குசும்பு கிழடு கட்டாயம் இருக்கும். 😎

நாங்கள் உதுகளை அங்கே கேள்விப்படாததால எல்லாரும் நல்லதுகள் எண்டு நினைச்சிட்டன்  😂

9 hours ago, கற்பகதரு said:

 

எல்லாருக்கும் மற்றவையை பார்த்து கிழடு எண்டு சொல்லுறதில ஒரு சந்தோசம் போல... எங்கட யாழ்கள கி...ள் 16, 17 வயது நடிகைகளின் படங்களை களத்தில் போட்டு படும்பாட்டை யாரிடம் சொல்லி அழ 😜- எங்கே எங்கள் பையன்26? 

இருக்கிறதே ஆறேழு பேர். எல்லாரும் படம் போட்டிருக்கிறம்.

உ து என்ன கதை . முதல்ல நீங்கள் உங்கட படத்தைப் போட்டுட்டு போடாதவை பற்றிக் கதையுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஓ அது வேறையா ???

போர்காலத்திலை, கண இளந்தாரிகள், யுத்தம், பல்கலைக்கழகம், இந்தியா, தென்பகுதி, வெளிநாடு, மத்தியகிழக்கு எண்டு ஓட, 45 - 50 வயசுக்காரர்கள், இருந்த சின்ன வயசுப்பிள்ளையளை கலியாணம் செய்துகொண்டெல்லோ திரிஞ்சவயள்.

அந்த பழக்கத்தில 63 வயசுக்காரர், ஒரு 16 வயசு பிள்ளையை, வலிகாமம் பகுதியில் இருந்து, வன்னிக்கு கொண்டு போய், தன் குடும்பத்துக்கு தெரியாமல் தனிக்குடித்தனம் வைத்து, மூன்று மாத கர்ப்பவதியாகிய நிலையில், பெண் குடுப்பதார் தேடி, பிடித்து, போலீசை அழைத்து, நீதிமன்றில் நிறுத்தப்பட்டு கைதியான கதை 3 அல்லது 4 வருசத்துக்கு முன்னர் வந்ததே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

போர்காலத்திலை, கண இளந்தாரிகள், யுத்தம், பல்கலைக்கழகம், இந்தியா, தென்பகுதி, வெளிநாடு, மத்தியகிழக்கு எண்டு ஓட, 45 - 50 வயசுக்காரர்கள், இருந்த சின்ன வயசுப்பிள்ளையளை கலியாணம் செய்துகொண்டெல்லோ திரிஞ்சவயள்.

அந்த பழக்கத்தில 63 வயசுக்காரர், ஒரு 16 வயசு பிள்ளையை, வலிகாமம் பகுதியில் இருந்து, வன்னிக்கு கொண்டு போய், தன் குடும்பத்துக்கு தெரியாமல் தனிக்குடித்தனம் வைத்து, மூன்று மாத கர்ப்பவதியாகிய நிலையில், பெண் குடுப்பதார் தேடி, பிடித்து, போலீசை அழைத்து, நீதிமன்றில் நிறுத்தப்பட்டு கைதியான கதை 3 அல்லதை 4 வருசத்துக்கு முன்னர் வந்ததே.

கடவுளே இந்தக் கொடுமையெல்லாம் நான் கேள்விப்படவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இப்படியான வருத்தம் எங்கள் ஊர் கிழடுகளுக்கு வராது

ஏன் வராது. உங்களுக்குத் தெரியாது எண்டு சொல்லுங்கோ 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கற்பகதரு said:

எல்லாருக்கும் மற்றவையை பார்த்து கிழடு எண்டு சொல்லுறதில ஒரு சந்தோசம் போல... எங்கட யாழ்கள கி...ள் 16, 17 வயது நடிகைகளின் படங்களை களத்தில் போட்டு படும்பாட்டை யாரிடம் சொல்லி அழ 😜- எங்கே எங்கள் பையன்26? 

பொது வெளியிலை அல்லாவுக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியாது எண்டுவினம்.
யாழ்களத்திலை எங்கடை கற்பகத்துக்கும் ஒரு கோதாரியும் தெரியாது. 🙃

Link to comment
Share on other sites

11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இருக்கிறதே ஆறேழு பேர். எல்லாரும் படம் போட்டிருக்கிறம்.

உ து என்ன கதை . முதல்ல நீங்கள் உங்கட படத்தைப் போட்டுட்டு போடாதவை பற்றிக் கதையுங்கோ

spacer.png

இந்த மகிந்த ராஜபக்‌ஷ வர்ண விளையாட்டெல்லாம் காட்டி படம் போட்டால்... எங்களுக்கு எப்பிடி தெரியும்?😇

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.