Jump to content

மதுரையை அசத்தி வரும் "விசுகொத்து தேத்தண்ணீர் கோப்பை" புது முயற்சிக்கு மதுரை மக்கள் கொடுக்கும் அதிர்ச்சி.!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மதுரையை அசத்தி வரும் "விசுகொத்து  தேத்தண்ணீர் கோப்பை" புது முயற்சிக்கு மதுரை மக்கள் கொடுக்கும் அதிர்ச்சி.!!

biscut-tea-jpg.jpg

உணவு, அரசியல் இரண்டிற்கும் பிறப்பிடமாக தோன்றும் இடம்  மதுரை .  இந்த புதிய வரலாற்றை படைப்பதும் மதுரை தான். உணவுக்கு மதுரை மிஞ்ச எந்த ஊரும் இல்லை.அந்த வகையில் விசுகொத்து தேத்தண்ணீர் கோப்பையை அறிமுகம் செய்து அசத்தி வருகிறது மதுரை.

கோன் வகை பனி கூழ்  சாப்பிடுவது போல தேத்தண்ணீர் அல்லது கொப்பியைக் குடித்தவுடன் கோப்பையும் ருசித்து சாப்பிடும் வகையில்  உணவு வகையான "விசுகொத்து கோப்பை" என்ற புது தேத்தண்ணீர் வகையை வாடிக்கையாளா்களிடையே அறிமுகப்படுத்தி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ஆா்.எஸ்.பதி நிறுவனம் மதுரை மேலமாசி வீதியில் உள்ள கொப்பி கடையில் இந்த  விசுகொத்து தேத்தண்ணீர் கோப்பையை அறிமுகம் செய்திருக்கிறது. அறிமுகம் செய்த இரு நாள்களிலேயே கோப்பைகள் அனைத்தும் முழுமையாக தீா்ந்து போகும் அளவுக்கு வாடிக்கையாளா்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்த விசுகொத்து கோப்பை 10 நிமிடங்கள் வரை சூடு தாங்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆா்.எஸ்.பதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநா் விவேக் சபாபதி பேசும் போது.. "மதுரை மேலமாசி வீதியில் எங்களது கடை 5 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. ஒருமுறை பயன்படுத்தும் தேத்தண்ணீர் கோப்பைகளுக்கு பதிலாக விசுகொத்து தேத்தண்ணீர் கோப்பை அறிமுகம் செய்துள்ளோம். கோன் வகை பனி கூழ் தயாரிப்பைப் போன்று இருந்தாலும், தேத்தண்ணீர் அல்லது கொப்பியின் சூடு தாங்கும் வகையில் 'வேபா் விசுகொத்து' தயாரிக்கும் மூலப் பொருள்களைக் கொண்டு இந்த கோப்பை வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள நிறுவனம் எங்களுக்கு இந்த கோப்பையை வழங்குகிறது. இரு நாள்களுக்கு முன்பு விசுகொத்து தேத்தண்ணீர் கோப்பையை அறிமுகம் செய்தோம். வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. தேத்தண்ணீர் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வாடிக்கையாளா்களிடையே அதிகரித்த வரவேற்பு காரணமாக, ஒரு வாரத்துக்கு வைத்திருந்த கோப்பை இருப்பு இரு நாள்களிலேயே தீா்ந்துவிட்டன. ஏற்கெனவே இவ்வகை கோப்பைக்கு ஒடா் செய்திருந்தும், சென்னையில் பொது முடக்கம் காரணமாக, வந்து சேருவதற்கு தாமதமாகி வருகிறது. ஆகவே, வரும் நாள்களில் கோப்பை கிடைத்த பிறகே வாடிக்கையாளா்களுக்கு அதில் வழங்க முடியும் என்றார்.

https://tamil.asianetnews.com/life-style/he-biscuit-tea-cup-in-madurai-is-a-shock-to-the-people-of-madurai--qc8cko

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மதுரையை அசத்தி வரும் "விசுகொத்து  தேத்தண்ணீர் கோப்பை" புது முயற்சிக்கு மதுரை மக்கள் கொடுக்கும் அதிர்ச்சி.!!

 

நல்ல முயற்ச்சி👍

சுட சுட குடிச்சிடனும் 10 நிமிடத்துகுள் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிளாஸ்ரிக் பொருட்களை.... தவிர்ப்பதற்கு, நல்லதொரு முயற்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி இது. தலைப்புக்கு சிறிதும் தொடர்பில்லையே இதில் எங்கே வருகிறது அதிர்ச்சி?????😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நல்ல முயற்சி இது. தலைப்புக்கு சிறிதும் தொடர்பில்லையே இதில் எங்கே வருகிறது அதிர்ச்சி?????😡

இந்த செய்தியை வாசிப்பதற்கு உங்களுக்கு கொடுக்கப்பட்டது...😆

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.