Jump to content

ஆழ்மனதின் கேள்விகளுக்கு விடையளித்த `தி ஆல்கெமிஸ்ட்'


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்மனதின் கேள்விகளுக்கு விடையளித்த `தி ஆல்கெமிஸ்ட்'

Representational Image

ஒரு ஜிப்ஸியாக வாழ்வதை ஒவ்வொரு மனிதனும் விரும்பலாம். ஆனால் ஜிப்ஸியாக இருப்பது அவ்வளவு சுலபமல்ல.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

வாழ்க்கை குறித்து சற்று ஆழமாகச் சிந்திக்கும் போதெல்லாம் பல பதிலற்ற கேள்விகள் காற்று போன்று விடாமல் மனிதர்களைத் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

நமக்குக் கிடைத்துள்ள வாழ்வை நன்றாக அனுபவித்து ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமா? அல்லது குறிப்பிட்ட குறிக்கோளை அடைவதை நோக்கமாகக்கொண்டு வாழ்ந்து சிறப்பான சாதனைகள் புரியவேண்டுமா? இந்த இருவகையான வாழ்வு முறைகளில் எது அர்த்தமுள்ளதாக இருக்கும்? இதுவும் இது போன்றும் இன்னும் பல பல கேள்விகள் வாழ்க்கை குறித்த ஆழமான சிந்தனைகளின் போது நம் மனதில் ரீங்காரமிடும்.

Representational Image

 

பிரேசில் எழுத்தாளரான பவுலோ கோய்லோ (Paulo Coelho) எழுதிய தி ஆல்கெமிஸ்ட் (The Alchemist) நாவல் இத்தகைய பல கேள்விகளுக்கும் பொருத்தமான பதில் அளிப்பதாய் அமைந்துள்ளது.

தி ஆல்கெமிஸ்ட் நாவல் உலகம் முழுவதும் ஜிப்ஸியாகப் பயணம் செய்வதற்கும், புதையல்களைக் கண்டுபிடிப்பதற்கும் கனவு காணும் சாண்டியாகோ என்ற ஆடுமாடுகளை மேய்க்கும் சிறுவன் குறித்த கதை. ஒரு ஜிப்ஸியாக வாழ்வதை ஒவ்வொரு மனிதனும் விரும்பலாம்.

ஆனால் ஜிப்ஸியாக இருப்பது அவ்வளவு சுலபமல்ல. எதிர்பார்ப்புகள் ஏதுமற்று, கிடைப்பதை மகிழ்வுடன் ஏற்கும் ஒரு துறவியின் மனநிலை அதற்கு வேண்டும் என்கிறார் கோய்லோ.

 

கதையில், மனதின் தேடல் குறித்து கோய்லோ கூறும்போது, "துன்பத்தின் பயம் துன்பத்தைவிட மோசமானது என்று உங்கள் இதயத்திற்குச் சொல்லுங்கள்.

மேலும் கனவுகளைத் தேடும்போது எந்த இதயத்திற்கும் முன்மாதிரி எதுவுமில்லை.

ஏனெனில் தேடலின் ஒவ்வொரு நொடியும் கடவுள் மற்றும் நித்தியத்துடன் நமது இரண்டாவது சந்திப்பாகும்" என்கிறார்.

நாவலின் ஓரிடத்தில் தேசாந்திரியாகத் திரியும் நாயகன் தன் பயணத்தின் வழியில் ஒரு துறவியைச் சந்திக்கிறான்.

Representational Image
 
Representational Image

அவரிடம் அவன் வாழ்வு குறித்து பலவாறும் வினவுகிறான். அவனிடம் ஒரு தேக்கரண்டியைக் (டீஸ்பூன்) கொடுத்து அதில் கொஞ்சம் எண்ணையையும் ஊற்றிய அந்தத் துறவி, எண்ணெய் சிந்திவிடாதபடி அந்தக் கரண்டியை எடுத்துக்கொண்டு ஊரைச் சுற்றி வரச் சொல்கிறார்.

அப்படியே கவனமாக அந்த எண்ணெய் உள்ள கரண்டியுடன் சென்று ஊரைச் சுற்றி வருகிறான் நாயகன்.

 

அவன் அவரிடம் திரும்பியதும் அந்தக் கரண்டியில் எண்ணெய் அப்படியே இருப்பதைப் பார்த்த அவர், அவனிடம் ஊரில் உள்ள சில அழகான இடங்களைக் குறிப்பிட்டு அவற்றையெல்லாம் ரசித்துப் பார்த்தாயா என்று புன்னகையுடன் கேட்கிறார்.

அவன் தன்னால் அவற்றையெல்லாம் சரியாகப் பார்க்க முடியவில்லை என்றும், தன் கவனமெல்லாம் எண்ணெய் சிந்திவிடாமல் இருக்க வேண்டும் என்பதிலேயே இருந்ததாகவும் கூறுகிறான்.

Representational Image
 
Representational Image

துறவி அவனை மீண்டும் கரண்டியுடன் சென்று அவர் குறிப்பிட்ட அழகான இடங்களை எல்லாம் நன்றாகக் கண்டு களித்து வரச் சொல்கிறார்.

அவ்வாறே அவனும் சென்று அவர் சொன்ன இடங்கள் அனைத்தையும் நன்றாக ரசித்து வருகிறான்.

மகிழ்வுடனும், உற்சாகத்துடனும் தான் கண்டுகளித்த இடங்களின் அழகை அவன் துறவியிடம் வர்ணிக்கிறான்.

அவன் கூறியதைச் செவியுற்ற துறவி அவனிடம் புன்முறுவலுடன் அமைதியாகக் கேட்கிறார்.

"சரி நான் கொடுத்த எண்ணெய் எங்கே?"

 

அப்போதுதான் அந்தக் கரண்டியில் சுத்தமாக எண்ணெய் இல்லாததை அவன் கவனிக்கிறான்.

துறவி நாயகனிடம், "ஊரின் அழகை ரசிப்பது மற்றும் கரண்டியில் உள்ள எண்ணெய் சிந்தாமல் இருப்பது இந்த இரண்டையும் ஒரு மனிதன் சமநிலைப்படுத்த வேண்டும். அவ்வாறே வாழ்வை ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியாக அனுபவிப்பதும், குறிப்பிட்ட குறிக்கோளுடன் வாழ்ந்து சிறப்பான சாதனை புரிவதும். இந்த இரண்டில் ஒன்று நிறைவேறாவிட்டாலும் நாம் உண்மையான மகிழ்ச்சியையும் நிறைவையும் வாழ்க்கையில் பெற முடியாது.

Representational Image
 
Representational Image

எனவே வாழ்க்கையைக் கொண்டாடி ரசித்து, ருசித்து வாழ்வோம். அதேநேரத்தில் அர்த்தமுள்ள குறிக்கோளில் இருந்து நமது கவனம் எந்தக் கணத்திலும் சிதறிவிடாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்வோம்" என்கிறார்.

இந்த விளக்கம் வாழ்வு குறித்த நமது பல்வேறு வினாக்களுக்கும் விடையளிப்பதாக உள்ளது.

இது மட்டுமல்லாது நாவலில் ஆங்காங்கு வாழ்க்கைப் பாடத்தைப் போகிற போக்கில் தூவிக்கொண்டே போகிறார் பவுலோ கோய்லோ.

தி ஆல்கெமிஸ்ட் நாவலில் சில சிந்தனைச் சிதறல்கள்:

# ஒரு வெற்றிகரமான மற்றும் திருப்திகரமான வாழ்க்கையை வாழ்வதற்குத் தனிப்பட்ட புனைவு முக்கியமானது. ஏனெனில் இது ஒருவர் கனவு காணும் விதி.

# தனிப்பட்ட புனைவுகளைப் பின்பற்ற சூழ்நிலைகள் அவ்வப்போது அமைகின்றன.

# மனிதனது கனவிற்கான தேடலும், கனவை நிறைவு செய்வதற்கான தேடலும் மாறுபட்டவை.

# பயணத்தை நம்பினால் சாதாரண வாழ்க்கையைத் தங்கமயமாக மாற்றலாம்.

# கனவை அடையும் நேரம் வரும்போது மனிதனுக்குக் கிடைத்துள்ள உண்மையான காதல் ஒரு சிறந்த தூண்டுதலாக இருக்கும்.

# தோல்வியின் பயம் நம்முடைய விதியை வாழ வைக்கிறது. இதை வெல்வது ஒரு பெரிய வெற்றியாகும்.

# ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவர் புரிந்துகொள்ளத் தவறும் ஒரு பெரிய கனவு எப்போதும் இருக்கிறது.

# உங்கள் கனவையும், குறிக்கோளையும் பின்பற்றி அதை அடைவது வாழ்க்கையின் வெற்றி.

Representational Image
 
Representational Image

# வாழ்வதற்கு ஏதேனும் ஒரு நோக்கத்தைக் கண்டுபிடிப்பது அவசியம்.

# நமது கனவுகளை வாழாமல் இருப்பது பாதகமான விளைவினை ஏற்படுத்தும். மேலும் கனவுகளைத் தேடும் எண்ணம் அற்புதமானது. நமது கனவைப் பின்தொடரவும், அதில் ஈடுபடவும், நாம் விரும்பியதை நமக்குக் கொடுக்கவும் முழுப் பிரபஞ்சமும் சதி செய்கிறது.

# ஒவ்வொரு நாளும் காலையில் புதியதாகவும், இரவில் திருப்திகரமாகவும் இருக்கிறது.

# வாழ்க்கையின் தேடல் முழுவதும் வாழ்க்கையை உருவகப்படுத்துவதாக நாம் உணரமுடியும்.

# மனிதன் தன்கனவை அடைய அன்பு ஒரு சிறந்த துணைக் கருவியாக உள்ளது.

# சாதாரண நம்பிக்கைகள் கொண்ட ஒரு சாதாரண சிறுவனின் கண்கவர் கதையின் குறியீட்டு விளக்கத்தின் மூலம் ஆன்மிகம், நம்பிக்கை மற்றும் அன்பின் மதிப்புகளை இந்தக் கதை வலியுறுத்துகிறது.

# வாசகர்களுக்கு மிகவும் நுட்பமான மற்றும் பயனுள்ள வழியில் நேர்மறையின் சக்தியை நாவல் கற்பிக்கிறது.

# மூன்றாம் நபர் கதை பாணியைக் கொண்ட புத்தகத்தின் மொழி எளிமையானது மற்றும் தெளிவானது.

# வாழும்முறையை உணர்ந்து கொள்வது ஒரு மனிதனின் ஒரே உண்மையான கடமையாகும் என்று கதையின் மையம் கூறுகிறது.

# நாம் புத்தகத்தை வாசிக்கும்போது நமது தாத்தா தனது கதையைக் குழந்தைப் பருவத்திலிருந்து நிஜம் போல நம்மிடம் கூறுவதாகக் கற்பனை செய்துகொள்ள முடிவது இந்தக் கதையில் விரவியுள்ள நடையின் பலமாகும்.

மனித வாழ்க்கை ஒரு கனவு போன்றது - நமது கனவுதான் வாழ்க்கை என்று வித்தியாசமான முறையில் கற்றுத்தருகிறார் பவுலோ கோய்லோ.

"நாம் எதையாவது உண்மையாக விரும்பும்போது, அதை அடைய நமக்கு உதவ இந்தப் பிரபஞ்சம் முழுக்க சதி செய்கிறது" என்னும் தி ஆல்கெமிஸ்டின் மையக்கரு வாழ்வு குறித்த சரியான பார்வையை நமக்கு நிச்சயம் அளிக்கும்!

 

https://www.vikatan.com/oddities/miscellaneous/review-of-the-alchemist-novel

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.