Jump to content

மாற்றுத் தலைமைகளைத் தோற்கடிக்க வேண்டும் என்ற பரப்புரையின் பின்னணியில் பாரிய சதி ; அருந்தவபாலன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுத் தலைமைகளைத் தோற்கடிக்க வேண்டும் என்ற பரப்புரையின் பின்னணியில் பாரிய சதி ; அருந்தவபாலன்

 
June 26, 2020

%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் உட்பட அதன் தலைவர்கள் மாற்று அணியினரைத் தோற்கடிக்க வேண்டும் என்று செய்துவரும் பரப்புரையின் பின்னால் எம்மக்களுக்கெதிரான பாரிய சதித்திட்டம் ஒன்று பின்னிக் காணப்படுகின்றது” எனக் கூறியிருக்கின்றார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளரும், அதன் யாழ். மாவட்ட வேட்பாளருமான க.அருந்தவபாலன்.

கிளிநொச்சி விவேகானந்த நகர் மக்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார். இங்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் தெரிவித்தாவது:

 

“இவர்களின் இவ்வாறான கருத்துக்கள மூலம் தாம் வெற்றி பெற்று தமது பாராளுமன்ற கதிரைகளைத் தக்கவைப்பது மட்டும் அவர்களது நோக்கமல்ல. அதற்கும் மேலாக இலங்கையில் ஆட்சியாளர்களால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை விடயத்தை சர்வதேச அரங்கிற்குக் கொண்டு சென்று எம் மக்களுக்கான நீதி தேடும் முயற்சிகளை முறியடிப்பதும்தான் இதன் பின்னாலுள்ள திட்டமாகும்.

 

உங்களுக்குத் தெரியும் வடக்கு மாகாண சபையில் இனப்படுகொலைத் தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு பல வழிகளிலும் முட்டுக்கட்டை போட்டவர்கள் சம்பந்தனும் சுமந்திரனுமே. .எனினும் அவ் வரலாற்றுத் தீர்மானம் நீதியரசர் விக்கனேஸ்வரன் தலமையில் நிறைவேற்றப்பட்டது. இத் தீர்மானத்தை சர்வதேச அரங்கிற்கு முன் கொண்டு சென்று அதன் மூலம் எம் மக்களுக்கு நீதி தேடுவதை விடுத்து அத் தீர்மானத்துக்கு மாறாக இங்கு நடந்தது இனப்படுகொலை இல்லை என்ற நிறுவுவதிலேயே ஆட்சியாளர்களுடன் இணைந்து சுமந்திரன் தனது சட்ட அறிவை பயன்படுத்தி வருகிறார். இதன் மூலம் தமக்கு வாக்களித்த மக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாரிய துரோகமிழைத்து வருகின்றனர்.

 

ஆட்சியிலிருந்த கடந்த ரணில் அரசுடன் “டீல்” போட்டு ஐ.நா சபை தீர்மானத்தை நீர்த்து போக உதவியதுடன் அதன் தொடர்ச்சியாக இன்று மகிந்த ஆட்சியுடன் “டீல்” போட்டு எமது மக்கள் நீதி பெறுவதற்கான சர்வதேச கதவுகளை அடைப்பதற்கு உதவும் நோக்குடன் மாற்று அணியினர் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற கோசத்தை முன் வைத்து வருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் என்பது முடிவல்ல. அது எமது இனத்தின் இன்னொரு வரலாற்றுத் தொடக்கம். தமிழ் மக்களுக்கான நிலைமாறுகால நீதியையும் தன்னாட்சி அதிகாரத்தையும் பெறுவதற்கான அரியதொரு வாய்ப்பாக இனப்படுகொலை மற்றும் போர்க்குற்ற விசாரணை என்பன காணப்படுகிறன்றன.

 

இதனையே எமது புத்திஜீவிகளும் அரசியல் ஆய்வாளர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.அதனால்தான் இனப்படுகொலை புரிந்த ஆட்சியாளர்களும் அவர்களின் அரசியலறிஞர்களும் இதனை முறியடித்துஇ மூடி மறைத்துஇ சர்வதேச அரங்கிலிருந்து அகற்ற முயற்சிக்கினறனர். இவ்வாறு முயற்சிக்கும் இனப்படுகொலையாளரை தப்ப வைப்பதற்கு தமிழ்த் தேசிய கூட்டமப்பினர் தொடர்ந்து உதவி வருகின்றனர்.

தமிழ் மக்களுக்கெதிரான இந்த மகிந்த – கூட்டமைப்பு “டீலை” உடைத்து இனப்படுகொலை தீர்மானத்தைத் சர்வதேச அரங்கில் நிலை நிறுத்துவதன் மூலமே ஆட்சியாளர்க்கு அழுத்தங்களைப் பிரயோகித்து எம் மக்களுக்கான விடிவைப் பெறமுடியும்.அதனை செய்யக்கூடிய ஆற்றலும் உறுதியும் நிதியரசர் விக்னேஸ்வரன் தலைமையிலான எமது தமிழ்மக்கள் தேசியக் கூட்டணியினரிடமே இன்று காணப்படுகின்றது.

 

எனவே எமது மக்களை தொடர்ந்து ஏமாற்றிவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்து தமிழ் மக்கள் தேசிய கூட்டணியை வலுப்படுத்துவதன் மூலமே இது சாத்தியமாகும்.”
 

http://thinakkural.lk/article/49373

Link to comment
Share on other sites

7 hours ago, கிருபன் said:

இனப்படுகொலை புரிந்த ஆட்சியாளர்களும் அவர்களின் அரசியலறிஞர்களும் இதனை முறியடித்துஇ மூடி மறைத்துஇ சர்வதேச அரங்கிலிருந்து அகற்ற முயற்சிக்கினறனர். இவ்வாறு முயற்சிக்கும் இனப்படுகொலையாளரை தப்ப வைப்பதற்கு தமிழ்த் தேசிய கூட்டமப்பினர் தொடர்ந்து உதவி வருகின்றனர்.

தமிழ் மக்களுக்கெதிரான இந்த மகிந்த – கூட்டமைப்பு “டீலை” உடைத்து இனப்படுகொலை தீர்மானத்தைத் சர்வதேச அரங்கில் நிலை நிறுத்துவதன் மூலமே ஆட்சியாளர்க்கு அழுத்தங்களைப் பிரயோகித்து எம் மக்களுக்கான விடிவைப் பெறமுடியும்.

10+ வருடங்களை தமிழினப் படுகொலைகாரர்களுக்கு முண்டுகொடுத்து கொலைகாரர்களை காப்பாற்றியது மட்டுமல்லாது தமிழரின் உரிமைப் போராட்டங்களை கொச்சைப்படுத்தி வந்த சம்மந்தன்-சுமந்திரன் கும்பலின் தமிழின விரோத செயற்பாடுகளை முறியடிக்குமளவுக்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பரப்புரைகள் இடம்பெறவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • 0.50 ஈரோ பொருளை 2 ஈரோவுக்கு விற்றது சப்பை மேட்டர்தான்….. இது எழுதாமலே விளங்க வேணும்…. எழுதியிம் விளங்கவில்லை எண்டால் கஸ்டம்தான்🤣. ————— அம்சமான ஹம்சமாலி ரேஞ் ரோவரில் சுத்துறா…. அர்ஜூன் மகேந்திரன் அப்பீட்டு…. இலங்கை கிரிகெட்டில் கொள்ளை ரிப்பீட்டு…. திறைசேரியிலே திருட்டு…. ஷப்டர் தன் கழுத்தை தானே நெரித்தார்……. இதெல்லாம்தான் சப்பை மேட்டர்….80 ரூபா வடை அல்ல🤣. பிகு அது சரி எங்க நம்மட குட்டி சிறிதரன்? ஒரு கேள்வியோடு ஓடினவர்தான் - 2 நாளா தலை கறுப்பை காணோம்🤣 @பையன்26 பாருங்கோ சிறி அண்ணாவும் இது இப்ப நடந்தது என்கிறார்.
    • இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை........ ஆயினும் எங்கு பார்த்தாலும் ஆண்கள் குடித்துவிட்டு புரளுவதும் பெண்கள் ஆலயம் ஆலயமாய் அலைவதும்தான் எல்லோருக்கும் தெரிகின்றது ......அதுதான் ஆண்களின் சார்பாய் எனக்கு வேதனை தருகின்றது.......!  😁
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.