Jump to content

கண்ணுமில்லை மண்ணுமில்லை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ

கண்ணுமில்லை மண்ணுமில்லை
கருவிலை சுமந்தேன் உன்னை
உயிர் தந்தேன் உறவும் வளர்த்தேன்
கண்ணாகத்தான் உன்னை வளர்த்தேன்
என் கண்ணாகத்தான் உன்னை வளர்த்தேன்
உன் உசுரு போகிறத உணர வந்தேன் நான்
என் மகனே …..
உன் உசுரு போகிறத உணர வந்தேன் நா(ன் )

ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ

கருவறை கடந்தவனே
சிறையறை போகையிலே
நான் சிந்திய கண்ணீரு
கடல் நீரா போனதடா
சிலையாட்டம் என் புள்ளை
சிறைப்படும் சேதி கேட்டு
சாகாம நிக்குறேன் சாகாம நிக்குறேனே

ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ

என் மகனே …..
சாமிக்கும் கண்ணில்லையா

வயித்தில சொமந்த புள்ள
கயித்தில தொங்கும் முன்னே
தாலாட்டு பாடிடவா நான் வந்தேன்
தாலாட்டு பாடிடவா நான் வந்தேன்

ஒத்தை மகனா பொறந்ததால
உனக்கிந்த நிலைமையடா
ஊரு சனம் கலங்குதடா
ஊரு சனம் கலங்குதடா

ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ

ஊருக்கே படிக்கிறேன்
யார் யாருக்கோ படிக்கிறேன்
உனக்கு பாடாயில
நான் பாடாயில போகலியே
என் உசிரு போகலியே
இந்த குருட்டு பாவி வாழ்கை
இருட்டா போனதடா
ஈர கொலை நடுங்குதடா
பெத்த வயிறு எரியுதடா
அது பத்தித்தான் எரியுதடா

ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ

கண்ணான கண்மணியே
கண் மூடும் வேளையிலே
கல்லறையில் நானிருப்பேன்
நீ ஆறடியில் ஏறும் முன்னே
உன் காலடியில் நான் இருப்பேன்

 

Link to comment
Share on other sites

  • Replies 87
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள அப்பா அப்பா யாருமே உன் போல் இல்லை மண் மேலே.... அன்புள்ள அப்பா அப்பா என்னை அநாதையா ஆக்கி சென்றுவிட்டாயே மண் மேலே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா ஒத்த புள்ள பெத்தாங்கலே அது யாரு ஒங்க அப்பா ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா ஒத்த புள்ள பெத்தாங்கலே அது யாரு ஒங்க அப்பா பொத்தி பொத்தி வளர்த்தாங்க பாசத்த காட்டி நிலா வாங்கி தாரேன்னாங்க சாதத்த ஊட்டி நடந்து பழக சொன்னாங்களே நட வண்டி ஓட்டி மவராசா 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய்மையை போர்ட்டும் ஆயிரம் பாடல்கள் உண்டு ஆனால் அப்பாவிற்கு இதுபோல் ஒரு சில பாடல்கள் தான்

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்
ச்சீ.. 

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்

உயிரைக் கிள்ளாத உறவைக் கேட்டேன்
ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன்
வலிகள் செய்யாத வார்த்தை கேட்டேன்
வயதுக்குச் சரியான வாழ்க்கை கேட்டேன்

இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்
இளமை கெடாத மோகம் கேட்டேன்
பறந்து பறந்து நேசம் கேட்டேன்
பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்

புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன்
பூவின் மடியில் படுக்கை கேட்டேன்
தானே உறங்கும் விழியைக் கேட்டேன்
தலையைக் கோதும் விரலைக் கேட்டேன்

நிலவில் நனையும் சோலை கேட்டேன்
நீலக் குயிலின் பாடல் கேட்டேன்
நடந்து போக நதிக்கரை கேட்டேன்
கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன்

தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன்
எட்டிப் பறிக்க விண்மீண் கேட்டேன்
துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்
தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன்

பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்
பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்
மனிதர்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்
பறவைக்கெல்லாம் தாய்மொழி கேட்டேன்

உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்
ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்
வானம் முழுக்க நிலவைக் கேட்டேன்
வாழும் போதே சொர்க்கம் கேட்டேன்

எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன்
எரியும் தீயாய் கவிதை கேட்டேன்
கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்
காமம் கடந்த யோகம் கேட்டேன்

சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்
சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்
உச்சந் தலை மேல் மழையைக் கேட்டேன்
உள்ளங்காலில் நதியைக் கேட்டேன்

பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன்
பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன்
நன்றி கெடாத நட்பைக் கேட்டேன்
நடுங்க விடாத செல்வம் கேட்டேன்

மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன்
மழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன்
நிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன்
நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன்
விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன்
அழுதால் மழை போல் அழவே கேட்டேன்

ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்
எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்
பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்
சூரியன் போல் ஒரு பனித் துளி கேட்டேன்

ராஜராஜனின் வாளைக் கேட்டேன்
வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்
பாரதியாரின் சொல்லைக் கேட்டேன்
பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்
மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன்
மதுரை மீனாட்சி கிளியைக் கேட்டேன்

சொந்த உழைப்பில் சோற்றைக் கேட்டேன்
தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன்
மழையைப் போன்ற தூய்மை கேட்டேன்
புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன்

புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்
இடியைத் தாங்கும் தோள்கள் கேட்டேன்
இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்
துரோகம் தாங்கும் வலிமைக் கேட்டேன்

தொலைந்து விடாத பொறுமை கேட்டேன்
சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்
சொன்னால் சாகும் வேகம் கேட்டேன்
கயவரை அறியும் கண்கள் கேட்டேன்

காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்
சின்ன சின்னத் தோல்விகள் கேட்டேன்
சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்
மூடியில்லாத முகங்கள் கேட்டேன்
போலியில்லாத புன்னகை கேட்டேன்
தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன்

தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்
ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன்
ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்
காசே வேண்டாம் கருணை கேட்டேன்

தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன்
கூட்டுக் கிளி போல் வாழக் கேட்டேன்

குறைந்த பட்ச அன்பைக் கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
இதிலே எதுவும் நடக்கவில்லை
வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று
மரணம் மரணம் மரணம் கேட்டேன்...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்
எந்த வண்டி ஓடும்
உனை போலே அளவோடு உறவாட வேண்டும்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
இது கணவன் சொன்னது.. இதில் அர்த்தம் உள்ளது

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்.
வானம் எங்கும் அந்தப் பிம்பம் வந்து வந்து விலகும்.
மோகம் என்னும் மாயப் பேயை நானும் கொன்று போட வேண்டும்.
இல்லை என்றபோது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும்.
தேகம் எங்கும் மோகம் வந்து யாகம் செய்யும் நேரம் நேரம்.
தாயே இங்கு நீயே வந்து தண்ணீர் ஊற்ற வேண்டும் வேண்டும்.
மனதில் உனது ஆதிக்கம்,
இளமையின் அழகு உயிரை பாதிக்கும்.
விரகம் இரவை சோதிக்கும்,
கனவுகள் விடியும் வரையில் நீடிக்கும்.
ஆசை என்னும் புயல் வீசி விட்டதடி!
ஆணி வேர் வரையில் ஆடிவிட்டதடி...!
காப்பாய் தேவி...! காப்பாய் தேவி...!

தானம்த தானத்தம்தம்தம்...! தானம்த தானத்தம்தம்தம்...!
ஆனந்தம்...!
தானம்த தானத்தம்தம்தம்...! தானம்த தானத்தம்தம்தம்...!
ஆனந்தம்...!
தொம்த தொம்தனன தொம்த தொம்தனன தொம்த தொம்தனன
தொம்தன தனனன....
தொம்த தொம்தனன தொம்த தொம்தனன தொம்..!

தொம் தொம் தொம் தொம் தொம் தொம் தன தொம்...!
தொம்தன தன தொம்...!
தொம்த தொம்தனன தொம்த தொம்தனன தொம்..!
ஆ......!
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ ஆ ஆ ஆஅ ஆ ஆ........

ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே
வாழும் காலம் யாவும் உனக்காக நான் தான்
காவிய வீணையில் சுவரங்களை மீட்டுவேன்
கானம்... கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே

ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே...

ஏதோ ராகம் எனது குரலின் வழி
தாளம் பாவம் இரண்டும் இணைந்து வர
கேட்கும் யாரும் உருகி உருகி விழ
காதில் பாயும் புதிய கவிதை இது
அழகு மொழியில் ஒரு அமுத மழையும் வர
நினைவும் மனமும் அதில்
நனைய நனைய சுகமோ...
ஏனோ...
நாளெல்லாம் சந்தோஷம்
நெஞ்செல்லாம் சங்கீதம்
உயிரே உயிரே...

ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே...


கையில் ஏந்தும் மதுவின் மயக்கமுண்டு
கண்ணில் நீந்தும் கனவில் இனிமையுண்டு
நெஞ்சே நெஞ்சே எதையும் மறந்துவிடு
போதை ஆற்றில் மனதை மிதக்கவிடு
உறவு எதுவுமில்லை கவலை சிறிதுமில்லை
தனிமை கொடுமையில்லை இனிமை இனிமை இதுதான்
நான் தான்...
பாசங்கள் கொள்ளாத பந்தங்கள்
இல்லாத மனிதன் மனிதன்

ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே
வாழும் காலம் யாவும் உனக்காக நான் தான்...
காவிய வீணையில் சுவரங்களை மீட்டுவேன்
கானம்... கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே

ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் : { தகிடததிமி தகிடததிமி
தம்தானா இதய ஒலியின்
ஜதியில் எனது தில்லானா } (2)
{ இருதயம் அடிக்கடி இறந்தது
என்பேனா என் கதை எழுதிட
மருக்குது என்பேனா } (2)
சுருதியும் லயமும் ஒன்று சேர

ஆண் : { தகிடததிமி தகிடததிமி
தம்தானா இதய ஒலியின்
ஜதியில் எனது தில்லானா } (2)

ஆண் : { உலக வாழ்க்கை
நடனம் நீ ஒப்புக் கொண்ட
பயணம் அது முடியும் போது
தொடங்கும் நீ தொடங்கும்
போது முடியும் } (2)
மனிதன் தினமும் அலையில்
அலையும் குமுளி தெரியும்
தெரிந்தும் மனமே கலங்காதிரு
நீ மனிதன் தினமும் அலையில்
அலையும் குமுளி தெரியும்
தெரிந்தும் மனமே லாலா லாலா
தாளம் இங்கு தப்பவில்லை
யார் மீதும் தப்பு இல்லை
கால்கள் போன பாதை
எந்தன் எல்லை

ஆண் : தகிடததிமி தகிடததிமி
தம்தானா இதய ஒலியின்
ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி இறந்தது
தரிகிடதோம் தரிகிடதோம்
தரிகிடதோம் என் கதை எழுதிட
மருக்குது ஆஆ ஆஆ ஆஆ
தகிடததிமி தகிடததிமி
தம்தானா இதய ஒலியின்
ஜதியில் எனது தில்லானா

ஆண் : { பழைய ராகம் மறந்து
நீ பறந்ததென்ன பிரிந்து
இரவு தோரும் அழுது என்
இரண்டு கண்ணும் பழுத்து } (2)
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும்
ஓடம் நானே இது ஒரு ரகசிய
நாடகமே அலைகளில் குலுங்கிடும்
ஓடம் நானே பாவம் இங்கு பாவம்
இல்லை வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்கவில்லை

ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கீத ஜாதி முல்லை
ஆ... ஆ....
ஆ... ஆ.... ஆஆஆ.... ஆஆஆ.... ஆ....
ஆஆஆ.... ஆ....
ஆ... ஆ.... ஆ....ஆ....ஆ....
ஆஆஆ.....  ஆஆஆஆஆ.....  ஆ....
தம் நம்த நம்த நம் தம்.... நம்த நம் தம்...
நம்த நம் தம்...
நம்த நம் தம்...
நம்த நம் தம்... நம்த நம் தம்... நம்த நம் தம்...
நம்தம்த நம் தம்...
நம்தம்த நம் தம்...
நம்தம்த நம் தம்... நம்தம்த நம் தம்...
என் நாதமே வா... ஆ....

சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
கண்கள் வந்தும் பாவை இன்றி  பார்வையில்லை
ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை
சாவொன்று தானா நம் காதல் எல்லை
என் நாதமே வா.... ஆ....
சங்கீத ஜாதி முல்லை காணவில்லை

திருமுகம் வந்து பழகுமோ
அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிகள் வழியுமோ
அது சுடுவதை தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரில் உறவாகி
விடிகையில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ

திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி... கன்னி நதி... ஜீவ நதி...
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி
இசை என்னும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்
ஞாபக வேதனை மீறுமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள்
ஆடிடுமோ... பாடிடுமோ... ஆடிடுமோ... பாடிடுமோ...

ராஜ தீபமே....
எந்தன் வாசலில் வாராயோ
குயிலே... குயிலே... குயிலே குயிலே...
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்
ராஜ தீபமே...

நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு
அவள் நீதானே... நீதானே...
மனக்கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள்
நீதானே... நீதானே... நீதானே...
விழி இல்லை எனும் போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
விழி இல்லை எனும் போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்

நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்தி செல்லும் முத்து சிற்பம்
கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
இன

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வே மாயம்! இந்த
வாழ்வே மாயம்!
வாழ்வே மாயம்! இந்த
வாழ்வே மாயம்!

தரை மீது காணும்
யாவும், தண்ணீரில்
போடும் கோலம்!
நிலைக்காதம்மா...!
யாரோடு யார் வந்தது?
நாம் போகும்போது,
யாரோடு யார் செல்வது?

வாழ்வே மாயம்! இந்த
வாழ்வே மாயம்!

யாரார்க்கு என்ன வேஷமோ?
இங்கே
யாரார்க்கு எந்த
மேடையோ?
ஆடும் வரைக் கூட்டம்
வரும்,
ஆட்டம் நின்றால்
ஓட்டம் விடும்!
தாயாலே வந்தது தீயாலே
வெந்தது!
தாயாலே வந்தது தீயாலே
வெந்தது!
மெய் என்று மேனியை யார்
சொன்னது?

வாழ்வே மாயம்! இந்த
வாழ்வே மாயம்!

பிறந்தாலும் பாலை
ஊற்றுவார், இங்கே
இறந்தாலும் பாலை
ஊற்றுவார்
உண்டாவது ரெண்டாலதான்!
ஊர்போவது நாலாலதான்!
கருவோடு வந்தது,
தெருவோடு போவது!
கருவோடு வந்தது,
தெருவோடு போவது!
மெய் என்று மேனியை யார்
சொன்னது?

வாழ்வே மாயம்! இந்த
வாழ்வே மாயம்!

நாடகம் விடும்
நேரம்தான் உச்சக்
காட்சி நடக்குதம்மா!
வேஷம் கலைக்கவும்
ஒய்வு எடுக்கவும் வேலை
நெருங்குதம்மா!
பாதைகள் பல மாறியே வந்த
பயணம் முடியுதம்மா!
தாய் கொண்டு வந்ததை,
தாலாட்டி வைத்ததை,
நோய் கொண்டு போகும்
நேரமம்மா!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று


மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டோம் வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்
மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது
அழுது லாபம் என்ன அவன் ஆட்சி நடக்கின்றது

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
கூட்டைத் திறந்து விட்டால் அந்தக் குருவி பறந்து விடும்
காலில் விலங்கு இட்டோம் கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம் நாட்டியமாடுகின்றோம்

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா
கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.