Jump to content

கண்ணுமில்லை மண்ணுமில்லை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உச்சி வகுந்தெடுத்து
பிச்சிப் பூ வச்ச கிளி

பச்ச மலப் பக்கத்துல
மேய்துன்னு சொன்னாங்க

மேய்துன்னு சொன்னதுல
நாயமென்ன கண்ணாத்தா

உச்சி வகுந்தெடுத்து
பிச்சிப் பூ வச்ச கிளி

பச்ச மலப் பக்கத்துல
மேய்துன்னு சொன்னாங்க

மேய்துன்னு சொன்னதுல
நாயமென்ன கண்ணாத்தா

ஏ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரீராரீ ஆரீராரோ
ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ

பட்டில மாடு கட்டி பாலக் கறந்து வச்சா
பால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்க

சொன்னவங்க வார்த்தையிலே சுத்தமில்ல
அடி சின்னக் கண்ணு நானும் அத ஒத்துக்கல


உச்சி வகுந்தெடுத்து
பிச்சிப் பூ வச்ச கிளி

பச்ச மலப் பக்கத்துல
மேய்துன்னு சொன்னாங்க

வட்டுக் கருப்பட்டிய
வாசமுள்ள ரோசாவ
கட்டெறும்பு மொய்ச்சுதுன்னு சொன்னாங்க

கட்டுக் கத அத்தனயும் கட்டுக் கத
அத சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல


உச்சி வகுந்தெடுத்து
பிச்சிப் பூ வச்ச கிளி

பச்ச மலப் பக்கத்துல
மேய்துன்னு சொன்னாங்க


ஆனானனானனா ஏஏஏ னாஆஆ ஏஏஏ
னானானனானானானா ஏ

பொங்கலுக்குச் செங்கரும்பு
பூவான பூங்கரும்பு
செங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்க

செங்கரையான் தின்னுருக்க நாயமில்ல
அடி சித்தகத்தி பூ விழியே நம்பவில்ல

உச்சி வகுந்தெடுத்து
பிச்சிப் பூ வச்ச கிளி

பச்ச மலப் பக்கத்துல
மேய்துன்னு சொன்னாங்க

மேய்துன்னு சொன்னதுல
நாயமென்ன கண்ணாத்தா


உச்சி வகுந்தெடுத்து
பிச்சிப் பூ வச்ச கிளி

பச்ச மலப் பக்கத்துல
மேய்துன்னு சொன்னாங்க

மேய்துன்னு சொன்னதுல ஹ
நாயமென்ன கண்ணாத்தா

 

Link to comment
Share on other sites

  • Replies 87
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
 கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்
 ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்
 ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்
 படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்
 ல ல லாலாலல லா
 ல ல லாலாலல லா

 கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது
 காசும் பணமும் ஆசையும் இங்கே யார் தந்தது 
 காசும் பணமும் ஆசையும் இங்கே யார் தந்தது 

எல்லை இல்லா நீரும் நிலமும் நான் தந்தது
எந்தன் சொந்தம் என்னும் எண்ணம் ஏன் வந்தது
இறைவனுக்கே இது புரியவில்லை
மனிதனின் கொள்கை தெரியவில்லை
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்
ல ல லாலாலல லா
ல ல லாலாலல லா

 கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
 கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்
 ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்
 ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்
 படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்
 ல ல லாலாலல லா
 ல ல லாலாலல லா

 பள்ளி கூடம் செல்லும் வழியில் கடவுள் நின்றாராம்
 பச்சை பிள்ளை மழலை மொழியில் தன்னை கண்டாராம்
 உள்ளம் எங்கும் செல்லம் பொங்கும் அன்பை தந்தாராம்
 உண்மை கண்டேன் போதும் என்று வானம் சென்றாராம்
 ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்
 படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்
 ல ல லாலாலல லா
 ல ல லாலாலல லா 

 கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
 கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்
 ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்
 ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்
 படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்
 ல ல லாலாலல லா
 ல ல லாலாலல லா.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ: பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி
பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி
நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு
நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு
செல்லம்மா எந்தன் செல்லம்மா செல்லம்மா எந்தன் செல்லம்மா....


ஆ: சட்டமும் நானுறைத்தேன் தைரியமும் நான் கொடுத்தேன்
சட்டமும் நானுறைத்தேன் தைரியமும் நான் கொடுத்தேன்
பட்டம் மட்டும் வாங்கி வந்து பாய்ந்து செல்ல பாக்குதடி
பட்டம் மட்டும் வாங்கி வந்து பாய்ந்து செல்ல பாக்குதடி
செல்லம்மா எந்தன் செல்லம்மா
பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி
நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு
செல்லம்மா எந்தன் செல்லம்மா.....


ஆ: நீதிக்கே துணிந்து நின்றேன் நினைத்ததெல்லாம் ஜெயித்து வந்தேன்
நீதிக்கே துணிந்து நின்றேன் நினைத்ததெல்லாம் ஜெயித்து வந்தேன்
வேதனைக்கு ஒரு மகனை வீட்டினிலே வளர்த்து வந்தேன்
வேதனைக்கு ஒரு மகனை வீட்டினிலே வளர்த்து வந்தேன்
செல்லம்மா என்தன் செல்லம்மா செல்லம்மா எந்தன் செல்லம்மா
பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி
நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு
செல்லம்மா எந்தன் செல்லம்மா....


ஆ: ஆண்டவன் சோதனையோ யார் கொடுத்த போதனையோ
ஆண்டவன் சோதனையோ யார் கொடுத்த போதனையோ
தீயினிலே இறங்கி விட்டான் திரும்ப வந்து தாழ்பணிவான்
தீயினிலே இறங்கி விட்டான் திரும்ப வந்து தாழ்பணிவான்
சத்தியம் இது சத்தியம் செல்லம்மா எந்தன் செல்லம்மா
பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி
நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு
செல்லம்மா எந்தன் செல்லம்மா செல்லம்மா எந்தன் செல்லம்மா....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் 
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம் 
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் 
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம் 

பிறப்புக்கும் முன்னால் இருந்தது
என்ன உனக்கும் தெரியாது 
இறந்த பின்னாலே நடப்பது
என்ன எனக்கும் புரியாது 
இருப்பது சில நாள் அனுபவிப்போமே

எது தான் குறைந்து விடும் 
எது தான் குறைந்து விடும்.. (இரவினில்)

பாவமென்றால் ஒரு பெண்ணையும்
ஆணையும் இறைவன் படைப்பானா 
பயணம் போகும் பாதையில் திராட்சை
கொடியை வளர்ப்பானா 
ஆனது ஆகட்டும் போனது போகட்டும்
அருகே வரலாமா அருகே வரலாமா… ஆ..ஆ. (இரவினில்)

கவிஞன் பாடிய காவியம் படித்தால்
போதை வரவில்லையா 
கல்லில் வடித்த சிலைகளை பார்த்தால்
மயக்கம் தரவில்லையா 
எதிலே இல்லை யாரிடம் இல்லை

எவர் இதை மறந்து விட்டார் 
எவர் இதை மறந்து விட்டார். (இரவினில்)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரோடு யாரென்ற கேள்வி
விதி வந்து விடை சொல்லுமா
கடலோடு நதிகூட காயும்
என் கண்ணீர் காயாதம்மா

யாரோடு யாரென்ற கேள்வி
விதி வந்து விடை சொல்லுமா
கடலோடு நதிகூட காயும்
என் கண்ணீர் காயாதம்மா

நேற்று என் நெஞ்சில் பூ வைத்தவள்
இன்று என் நெஞ்சில் தீ வைப்பதா
நேற்று என் வீட்டில் பால் வைத்தவள்
நாளை வாழ்வுக்கு நாள் வைப்பதா

நிழல் தேடி வந்தாள் நிஜமாகினாள்
நிஜம் வந்த நேரம் நிழலாகினாள்
கண்ணோடு சேர்த்தேன் கனவாக ஆனாள்

யாரோடு யாரென்ற கேள்வி
விதி வந்து விடை சொல்லுமா
கடலோடு நதிகூட காயும்
என் கண்ணீர் காயாதம்மா

மீன்களெப்போதும் தண்ணீரிலே
ஞானம் இப்போது கண்ணீரிலே
கால்கள் எப்போதும் கண்போக்கிலே
காதல் எப்போதும் பெண்போக்கிலே
மேகங்களில்லா வானம் உண்டு
சோகங்களில்லா வாழ்வும் உண்டா
அலையில்லை என்னும் கடலொன்றுமுண்டா

யாரோடு யாரென்ற கேள்வி
விதி வந்து விடை சொல்லுமா
கடலோடு நதிகூட காயும்
என் கண்ணீர் காயாதம்மா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

******************************************

அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறுத்தொண்டன் நான்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

******************************************

பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும்பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா
ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா
அந்த ஆண்டவன்தான் சாவி கொடுத்து ஆட்டி வைக்கிறான்
ரொம்ப ஆடிபுட்டா வாழ்கையை தான் பூட்டி வைக்கிறான்
ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா

பத்து மாசம் சுமந்து அவ பட்டினிதான் கெடப்பா
நம்மை பக்குவமா பெத்தெடுக்க பத்தியம் தான் இருப்பா
மூச்சடக்கி முக்குளிச்ச முத்த போல காப்பா
அவ முந்தானையில் தொட்டில் கட்டி முத்தம் நூறு கொடுப்பா
பெத்தபுள்ள துடிக்கும் போது….
பெத்தபுள்ள துடிக்கும் போது கண்ணீர் சிந்துவா
அது கண்ணீர் இல்லடா அவ ரத்தம் தானடா
பூமியில நடந்து வரும் தெய்வம் தாண்டா தாயி
அத புரிஞ்சிக்காம பெத்த மனச தவிக்க விட்ட பாவி

ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா
ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா
அந்த ஆண்டவன்தான் சாவி கொடுத்து ஆட்டி வைக்கிறான்
ரொம்ப ஆடிபுட்டா வாழ்கையை தான் பூட்டி வைக்கிறான்
ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா

சினிமாவுல காதலிச்சா ரசிக்குதப்பா உள்ளம்
நெஜ வாழ்கையில காதலிச்சா பரிக்குதப்பா பள்ளம்
பொரக்குரப்போ தலையில தான் எழுதி வைச்சதப்பா
ஒரு பொன்னும் ஆணும் ஆசப்பட்டா அதுவும் என்ன தப்பா
காத்துக்கொரு வேலி இல்ல….
காத்துக்கொரு வேலி இல்ல காதலுக்கும் வேலி இல்ல
ஜாதி மத பேதம் என்ன சாத்தானுக்கு வேதம் என்ன
நெழல மெதிச்சு அழிக்க வந்த முட்டாளு
பூமி சுத்துற மட்டும் காதல் இருக்கும் நீ கேளு

தெரிஞ்சும் ஆடாதடா யப்பா
ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா
அந்த ஆண்டவன்தான் சாவி கொடுத்து ஆட்டி வைக்கிறான்
ரொம்ப ஆடிபுட்டா வாழ்கையை தான் பூட்டி வைக்கிறான்
ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு

ஆண் : இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்
ஈசானி மூலையில மேகம் இருக்கு

ஆண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு

பெண் : காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு

*

பெண் : தாய் வீட்டுப் பேரும் தாய் மாமன் சீரும்
தெக்கத்திப் பொண்ணுக்கொரு சொத்து சுகமே

ஆண் : சீர்கொண்டு வந்தும் பேர்கெட்டுப் போனா
சொல்லாம துக்கப்படும் சொந்த பந்தமே

பெண் : குத்தந்தான் பார்த்தா ஊரில் சுத்தம் இல்லையே

ஆண் : கோழிக்கு குஞ்சு மேலே கோபம் வல்லையே

பெண் : உம்போல அண்ணன் இந்த ஊரில் இல்லையே

ஆண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு

பெண் : இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்
ஈசானி மூலையில மேகம் இருக்கு

பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு

*

ஆண் : செங்காட்டு மண்ணும் நம் வீட்டுப் பொண்ணும்
கை விட்டுப் போகக் கண்டா கண்ணீர் வருமே

பெண் : தங்கச்சி கண்ணில் கண்ணீரை கண்டா
தன் மானம் கூட அண்ணன் விட்டுத் தருமே

ஆண் : பந்தத்தை மீறிப் போக சக்தி இல்லையே

பெண் : பாசத்தை பங்கு போடப் பட்டா இல்லையே

ஆண் : வேருக்கு இளகிப் போச்சு வெட்டுப் பாறையே

பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு

ஆண் : இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்
ஈசானி மூலையில மேகம் இருக்கு

ஆண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு

பெண் : காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போறாளே பொன்னுத்தாயி பொல 
பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோரும் தந்த 
மண்ணை விட்டு
பால் பீச்சும் மாட்ட விட்டு
பஞ்சாரத்துக் கோழியை விட்டு
போறாளே பொட்டப் புள்ள 
ஊரை விட்டு

சாமந்திப் பூவா
ஊமத்தம் பூவா
கருத்தம்மா எந்தப் பூவம்மா?
அஞ்சாறு சேவல் 
உள்ளூரில் ஏங்க
பொதி மாட்டு வண்டி மேலே
போட்டு வச்ச மூட்டை போல

போறாளே பொன்னுத்தாயி..)

நீ வச்ச பாசம்
நீ சொன்ன நேசம்
கடைசியில் 
ஊமையும் ஊமையும்
பேசிய பாஷையடி
தெக்கத்தி காத்து திசை மாறி வீச
ஒன்னோட மேகம் ஓடுதடி ஓடுதடி
உசுருள்ள நாக்கு ஒன்னு வாடுதடி வாடுதடி
கடைசியில் சாமிக்கு நேர்ந்தது சாதிக்கு ஆனதடி

நெஞ்சுக்குழி காஞ்சு நெடுங்காலம் ஆச்சு
ஒரு உயிர் 
வீட்டுக்கும் காட்டுக்கும் கூட்டுக்குள் இழுக்குதும்மா
சேமித்த காசு செல்லாமப் போச்சு
சொல்லாத சொல்லு பாரம் அம்மா பாரம் அம்மா
சோத்துக்கும் சொந்தத்துக்கும் தூரமம்மா தூரமம்மா
பொறு பொறு 
ஏழைக்கும் வாழைக்கும் நாளைக்கு நன்மையம்மா

(போறாளே பொன்னுத்தாயி..)
(சாமந்தி பூவா..)

(போறாளே பொன்னுத்தாயி..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்பது பொது உடமை
கஷ்டம் மட்டும்தானே தனி உடமை
அப்பனும் ஆத்தாளும் சேராம போன நீயும்தான் பொறக்கமுடியுமா
இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா ……………….

ஆசை மட்டும் இல்லாத ஆளேது கூறு
அந்த வழி போகாத ஆள் இங்கு யாரு
புத்தனும் போன பாதைதான்
பொம்பள என்னும் போதைதான்
அந்த வேகம் வந்திடும் போது
ஒரு வேலி என்பது ஏது
இது நாளும் நாளும் தாகம்தான்
உண்மைய எண்ணி பாரடா
இது இல்லாட்டா உலகம் இங்கே ஏதடா

(காதல் என்பது..)

ஆசை ஒரு நீரோட்டம் நில்லாம ஓடும்
உள்ளுக்குள்ள ஏதேதோ சங்கீதம் பாடும்
ஒன்னாக கலந்த உறவுதான்
எந்நாளும் இன்பம் வரவுதான்
இது காதல் என்கிற கனவு தினம் காண என்னுர மனசு
இத சேர துடிக்கும் வயசுதான்
வாழ்க்கையே கொஞ்சக் காலம்தான் இந்த வாழ்க்கைல
வாலிபம் கொஞ்ச நேரம்தான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமைதிக்கு பெயர் தான் சாந்தி, சாந்தி, சாந்தி

அந்த அலையினில் ஏதடி சாந்தி, சாந்தி, சாந்தி

உன் பிரிவில் ஏதடி சாந்தி, சாந்தி, சாந்தி

உன் உறவில் தானடி சாந்தி, சாந்தி, சாந்தி

அமைதிக்கு பெயர் தான் சாந்தி

அந்த அலையினில் ஏதடி சாந்தி

உன் பிரிவில் ஏதடி சாந்தி

உன் உறவில் தானடி சாந்தி

சாந்தி என் சாந்தி

நீ கொண்ட பெயரை நான் உரைத்து கண்டேன் சாந்தி

நீ காட்டும் அன்பில் நான் கண்டு கொண்டேன் சாந்தி

நீ பெற்ற துயரை நான் கேட்டு துடித்தேன் சாந்தி

நீ பெற்ற துயரை நான் கேட்டு துடித்தேன் சாந்தி

நீ பிரிந்த பின்னே நான் இழந்து நின்றேன் சாந்தி

நீ பிரிந்த பின்னே நான் இழந்து நின்றேன் சாந்தி

அமைதிக்கு பெயர் தான் சாந்தி

அந்த அலையினில் ஏதடி சாந்தி


எல்லோரும் வாழ்வில் தேடிடும் பாக்கியம் சாந்தி

என் உயிரோடு கலந்து எழுதிடும் வாக்கியம் சாந்தி

எது வந்த போதும் மறவாத செல்வம் சாந்தி

எது வந்த போதும் மறவாத செல்வம் சாந்தி

எனை இன்று வாடும் தனிமயில் இல்லயே சாந்தி

எனை இன்று வாடும் தனிமயில் இல்லயே சாந்தி

அமைதிக்கு பெயர் தான் சாந்தி

அந்த அலையினில் ஏதடி சாந்தி

உன்னோடு வாழ்ந்த சில காலம் போதும் சாந்தி

மண்ணோடு மறையும் நாள் வரை நிலைக்கும் சாந்தி

கண்ணோடு வழியும் நீர் என்று மாறும் சாந்தி

கண்ணோடு வழியும் நீர் என்று மாறும் சாந்தி

பொன் ஏடு எழுதும் என் உறவு வாழ்த்தும் சாந்தி

பொன் ஏடு எழுதும் என் உறவு வாழ்த்தும் சாந்தி

அமைதிக்கு பெயர் தான் சாந்தி

அந்த அலையினில் ஏதடி சாந்தி

உன் பிரிவில் ஏதடி சாந்தி

உன் உறவில் தானடி சாந்தி

சாந்தி என் சாந்தி

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன் வானில் மீன் உறங்க...
பூந்தோப்பில் தேன் உறங்க...
அன்பே உன் ஞாபகத்தில்...
எங்கே போய் நான் உறங்க...
கண்ணோடு தூக்கம் ஏது
நீ இல்லையேல்...
கண்ணீரில் நீந்துகின்றேன்
தேன் முல்லையே...
புது தேன் முல்லையே...

( இசை) சரணம் - 1 @manic11 )

புயல் காற்றில் மரங்கள் சாயும்
மலை சாயுமா...
பூவே நம் காதல் மண்ணில்
சாயாதம்மா...
வெயில் நாளில் நதிகள் காயும்
கடல் காயுமா...
வாழ்வே நம் காதல் வெள்ளம்
காயாதம்மா...
என் ஜீவனே ஓ ஓ...
என் ஜீவனே...
கார்கால மின்னல்கள்
இடியோடு வந்தாலும்
நீள் வானம் இரண்டாகுமா...
கீழ்வர்க்கம் மேல்வர்க்கம்
என்கின்ற பேதங்கள்
நேசத்தை துண்டாடுமா...
உனக்காகவே உயிர் வாழ்கிறேன்
விடும் மூச்சும் உனக்காக...
இல்லை வாழ்க்கை எதற்காக...
பொன் வானில் மீன் உறங்க...

( இசை) சரணம் - 2 @manic11 )

உனைத் தேடி வருவேன் கண்ணே
நடுராத்திரி...
நீயின்றி நாளும் இங்கு
சிவராத்திரி...
நடந்தாச்சு நிலவைத் தேடி
பல ராத்திரி...
நான் காண வேண்டும் உன்னால்
நவராத்திரி...
நீ காத்திரு ஓ ஓ...
எதிர்பார்த்திரு...
அன்பே என் பாட்டுக்கு
அன்றாடம் உன் பார்வை
ஆதார சுதியல்லவா...
பொன்னே உன் தோள் சேர
முடியாமல் தடை போடும்
பொல்லாத விதியல்லவா...
அதை மாற்றுவேன்
உனைத் தேற்றுவேன்
அடி ஊரார் தடுத்தாலும்...
உயிர்க் காதல் அரங்கேறும்...

பொன் வானில் மீன் உறங்க...
பூந்தோப்பில் தேன் உறங்க...
அன்பே உன் ஞாபகத்தில்...
எங்கே போய் நான் உறங்க...
கண்ணோடு தூக்கம் ஏது
நீ இல்லையேல்...
கண்ணீரில் நீந்துகின்றேன்
தேன் முல்லையே...
புது தேன் முல்லையே...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசந்த ஊஞ்சலிலே...
அசைந்த பூங்கொடியே...
உதிர்ந்த மாயம் என்ன
உன் இதய சோகம் என்ன
உன் இதய சோகம் என்ன

நூலும் இல்லை, வாலும் இல்லை, வானில் பட்டம் விடுவேனா
நாதி இல்லை, பேதி இல்லை, நானும் வாழ்வை ரசித்தேனா
நானும் வாழ்வை ரசித்தேனா
நூலும் இல்லை, வாலும் இல்லை, வானில் பட்டம் விடுவேனா
நாதி இல்லை, பேதி இல்லை, நானும் வாழ்வை ரசித்தேனா
நானும் வாழ்வை ரசித்தேனா

நினைவு வெள்ளம் பெருகிவர, நெருப்பெனவே சுடுகிறது
படுக்கை விரித்துப் போட்டேன், அதில் முள்ளாய் அவளின் நினைவு
பாழும் உலகை வெறுத்தேன், அதில் ஏனோ இன்னும் உயிரு
படுக்கை விரித்துப் போட்டேன், அதில் முள்ளாய் அவளின் நினைவு
பாழும் உலகை வெறுத்தேன், அதில் ஏனோ இன்னும் உயிரு
மண்ணுலகில் ஜென்மமென என்னை ஏனோ இன்றுவரை விட்டு வைத்தாள்
கண்ணிரண்டில் திராட்சைக்கொடி எண்ணம் வைத்து கண்ணீரைப் பிழிந்தெடுத்தாள்
இறைவா
கண்ணீரைப் பிழிந்தெடுத்தாள்

நிழல் உருவில் இணைந்திருக்க, நிஜம் வடிவில் பிரிந்திருக்க
பூத்தால் மலரும் உதிரும், நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை
நிலவும் தேய்ந்து வளரும், அவள் நினைவோ தேய்வதில்லை
பூத்தால் மலரும் உதிரும், நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை
நிலவும் தேய்ந்து வளரும், அவள் நினைவோ தேய்வதில்லை
காடுதன்னில் பாவி உயிர் வேகும்வரை பாவை உன்னை நினைத்திடுவேன்
பாடையிலே போகையிலும் தேவி உன்னைத் தேடி உயிர் பறந்திடுமே
உறவை
தேடி உயிர் பறந்திடுமே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையே வேஷம்!
இதில் பாசம் என்ன, நேசம் என்ன ?
வாழ்க்கையே வேஷம்!
இதில் பாசம் என்ன, நேசம் என்ன ?

காலத்தின் கோலம் புரிந்தது!
ஞானி தானே நானும்.
வாழ்க்கையே வேஷம்!

அன்பை நான் தந்தேன்;
தினம் ஆசையோடு காவல் நின்றேன்.
சொந்தமே என்றேன்;
அவர் வாழ்வுக்காக வாழ்ந்து வந்தேன்.
நெஞ்சிலே ஈரம், 
அது காய்ந்து போன பாலை தானா?

வறண்ட நிலம் நீரைத் தேடுது.
கசந்த மனம் ஞானம் பேசுது.
ஞானி தானே நானும்.

வாழ்க்கையே வேஷம்!

(ஏஏஏ... ஆரிரோ... ஆரிரோ... ஆரி ராரோ...
ஆரி ராரி ராரி ராரி ராரோ... 
ஆரிரோ... ஆரிரோ...
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ...)

மலர்களை அள்ளித் தரும் கைகள் மீது வாசம் சேரும்.
முள்ளையே கண்டேன்;
அந்த காயம் தந்த பாடம் போதும்!
கலங்குதே கண்கள்,
நான் போன ஜென்மம் செய்த பாவம்!

நினைப்பவர்கள் மறந்த நேரமே 
மறப்பதற்கு ஞானம் வேண்டுமே
ஞானி தானே நானும்.

வாழ்க்கையே வேஷம்!
இதில் பாசம் என்ன நேசம் என்ன ?
காலத்தின் கோலம் புரிந்தது 
ஞானி தானே நானும்.
வாழ்க்கையே வேஷம்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் காலில்லா கட்டிலடா

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

சிரிப்பவன் கவலையை மறக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை...

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தக தின தக ததிந்தோம்....தக தின தக ததிந்தோம்
தக தின தக ததிந்தோம் ததோம் ததோம் த தகதின தோம் 
ததோம் த தகதின தோம் ததோம் த தகதின தோம்

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா!
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
(உனக்கென்ன)
தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம்
நடிகரென மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்
ததோம் ததோம் த தகதினதோம் ததோம்த தகதினதோம்

ஆடாத மேடை இல்லை, போடாத வேஷம் இல்லை,
ஆடாத மேடை இல்லை, போடாத வேஷம் இல்லை,
சிந்தாத கண்ணீர் இல்லை, சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை,
கால் கொண்டு ஆடும் பிள்ளை, நூல் கொண்டு ஆடும் பொம்மை
கால் கொண்டு ஆடும் பிள்ளை, நூல் கொண்டு ஆடும் பொம்மை
உன் கையில் அந்த நூலா? நீ சொல்லு நந்தலாலா!
(உனக்கென்ன)
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் ஒன்று
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் ஒன்று
பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நானென்ன கள்ளா? பாலா? நீ சொல்லு நந்தலாலா!
(உனக்கென்ன)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் நியாபகம் உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது

ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனைச் சேருவேன்
வேராரும் நெருங்காமல் மனவாசல் தனை மூடுவேன்
உருவானது நல்ல சிவரஞ்சனி உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி
ராகங்களின் ஆலாபனை மோகங்களின் ஆராதனை
உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும்

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது

காவேரி கடல்சேர அணைதாண்டி வரவில்லையா
ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையா
வரம் நாளெல்லாம் இனி மதனோர்சவம்
வலையோசைதான் நல்ல மணிமந்திரம்
நான் தானைய்யா நீலாம்பரி தாலாட்டவா நடுராத்திரி
சுருதியும் லயமும் சுகமாய் உருகும் தருணம்

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் நியாபகம் உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மனமாம் அவனுக்கு
கேள்வி அனுப்பினான் இறைவனுக்கு 

ஒன்று நினைத்து வாட தேவை
மற்றொன்று மறந்து வாழும் சேவை!

இரவும், பகலும் இரண்டு ஆகும் 
துயரம், மகிழ்ச்சி ரெண்டாய் போகும் 

உறவு சுகம் தர, பிரிவால் மனம் நோகும்
ஒருமனதால் சுகம் எவ்வாறு ஏதுவாகும்?

சிறிய காயம் பிறக்க, 
பெரிய துன்பம் வதைக்க

காயம் ஆறும் முன் நன்கு
அடுத்த காயம் வந்தது இங்கு?

உடல் காயம் மருந்தில் ஆறும்
உள்ள  காயம் எவ்வாறு தீரும்?

கண்ணின் தண்டனை காட்சியாலே 
காட்சியின் தண்டனை காதலாலே 
காதலின் தண்டனை கடவுளாலே 
கடவுளை தண்டிப்பது எதனாலே?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா கட்டினவன் பெண்ணுக்கென்றும் உயிரம்மா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
படுத்தால் ஆறடிபோதும்
இந்த நிலமும் அந்த வானமும்
அது எல்லோருக்கும் சொந்தம்
அடி சொல்லடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே
சொல்லடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே

நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
நடந்தால் இரண்டடி

*

இறக்கை உள்ள குஞ்சு இது
கூடு ஒண்ணும் தேவையில்லை
புத்தியுள்ள பிள்ளை இது
கெட்டு நிற்கப்போவதில்லை
தாயொருத்தி இருந்தா ஒரு தந்தை உண்டு கேளம்மா
தந்தை ஒண்ணு இருந்தா பெத்த பாட்டி இன்றி போகுமா
தெருவோரம் கிடந்தும் அநாதை இல்லை
உறவென்னை வெறுத்தால் தினம் தருவேன் தொல்லை
கெட்டாலும் பட்டாலும் உன் பேரன் தான்
என்னடி ஞானப்பெண்ணே - உண்மை
சொல்லடி ஞானப்பெண்ணே

நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
நடந்தால் இரண்டடி

*

ஆனைகட்டி போரடித்த அப்பன் சுப்பன் காணவில்லை
அன்று முதல் இன்று வரை அக்கறமும் வாழவில்லை
வெட்ட வெட்ட வாழைதான் - அது
அள்ளித்தரும் வாழ்வைத்தான்
வெட்டி போட்ட மண்ணு தான்
அதை கட்டிக்காத்தா பொண்ணுதான்
நாம் வாழும் வாழ்வே அது சிலகாலம் தான்
உறவோடு வாழ்ந்தால் அது பூக்கோலம் தான்
கெட்டாலும் பட்டாலும் உன் பேரன் தான்
என்னடி ஞானப்பெண்ணே - உண்மை
சொல்லடி ஞானப்பெண்ணே

நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
படுத்தால் ஆறடிபோதும்
இந்த நிலமும் அந்த வானமும்
அது எல்லோருக்கும் சொந்தம் - அடி
சொல்லடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே
சொல்லடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே

நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
நடந்தால் இரண்டடி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணுக்குள்ளே உன்னை

வைத்தேன் கண்ணம்மா -நான்
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
அடி நீதான் என் சந்தோசம்
பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்செல்லாம்
நான் கேக்கும் சங்கீதம்
உன் புன்னகை நான்
சேமிக்கின்ற செல்வம்மடி..
நீ இல்லையென்றால்
நானும் இங்கே ஏழையடி
மனிதர்களை வாசிக்கிறேன்
மனிதனை பூவாய் யாசிக்கிறென்
உணர்வுகளை நேசிக்கிறேன்
உனைத்தானே உயிராய் சுவாசிக்கிறேன்
எனக்குள்ளே உன் மூச்சு
எதற்காக என் மூச்சு
அடி மௌனம் வேண்டாம்--கண்மணியே
ஒரு வார்த்தை பேசி விடு
நான் எனக்குள் இல்லை
துளைத்து விட்டேன் நீ
என்னை மீட்டுக்கொடு
(கண்ணுக்குள்ளே உன்னை...)
சுகம் என்பது தொலைவானது
உனை கண்டே பின்னே எனை சேர்ந்தது
வாழ்வெனக்கு வசப்பட்டது
வசந்தம் என் கண்ணில் தென்பட்டது
அலை பாய்ந்த நெஞ்சுக்குள்
அமைதியை தந்தாயே
நான் தேடிக் கண்ட திரவியமே
எனை உணக்காய் வார்த்தேனே
என் ஜீவன் முழுதும் வாரித்தந்து
உன் உயிரை காப்பேனே...
(கண்ணுக்குள்ளே உன்னை...)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் : பூசு மஞ்சள் பூசு
மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்னும்
பூத்தது ஏன் இங்கு

ஆண் : என் கண்கள் பொய்
சொல்லுமா வேர் இல்லாமல்
பூ பூக்குமா கண்ணோடு ஆனந்தமா
என் நெஞ்சோடு பூகம்பமா

ஆண் : பிம்பமா உன்
போலே பிம்பமா ஓ ஓ
நம்புமா என் உள்ளம்
நம்புமா

ஆண் : பூசு மஞ்சள் பூசு
மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்னும்
பூத்தது ஏன் இங்கு

பெண் : ……………………….

ஆண் : உயிர் நீங்கி
போனவளே என் உயிர்
வாங்கி போனவளே
என் உயிர் போன தேகம்
மட்டும் நடமாடுதே பாரம்மா
என் வாழ்வை பாரம்மா

ஆண் : நீ தந்த காயங்கள்
நெஞ்சோடு ஆறுமுன்னே
அழகான வாளொன்று அதை
கீறுதே தாங்குமா என் உள்ளம்
தாங்குமா

ஆண் : உன் போன்ற புன்னகையால்
என் வாழ்வை குடிப்பவள் யார்
உன் போன்ற பார்வையினால்
என் கண்ணை எரிப்பவள் யார்

ஆண் : ஒரு தொடர்கதையே
இங்கு விடுகதையா அந்த
விடையின் எழுத்து எந்தன்
விதி வந்து மறைத்ததா

ஆண் : பொங்குதே கண்ணீரும்
பொங்குதே ஓ ஓ கண்களில்
உன் பிம்பம் தங்குதே

ஆண் : பூசு மஞ்சள் பூசு
மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்னும்
பூத்தது ஏன் இங்கு

பெண் : ……………………….

ஆண் : வடக்கே ஒரு அஸ்தமனம்
தெற்கே ஒரு சந்ரோதயம்
ஆகாயம் என்னோடு திசை
மாறுதே உண்மையா நான்
என்ன பொம்மையா

ஆண் : ஒரு ஜென்மம் வாங்கி
வந்து இரு ஜென்மம் வாழ்கிறேன்
இது என்ன கதை என்று விதி
கேட்குதே மாயமா என் கண்ணீர்
மாறுமா

ஆண் : எங்கேயோ தொலைந்த
விதை இங்கே வந்து பூத்ததென்ன
முல்லை பூ என்றிருந்தேன்
முள்ளோடு பாய்ந்ததென்ன

ஆண் : நான் ஓட நினைக்க
நிழல் என்னை துரத்த
உயிர் திகைக்கும் பயணம்
எந்த திருப்பத்தில் முடிவது

ஆண் : ஓய்ந்ததே என்
கால்கள் ஓய்ந்ததே ஓ ஓ
தீர்ந்ததே கண்ணீரும்
தீர்ந்ததே

ஆண் : பூசு மஞ்சள் பூசு
மஞ்சள் பூசிய பூவொன்று
பூமியோடு போன பின்னும்
பூத்தது ஏன் இங்கு

ஆண் : என் கண்கள் பொய்
சொல்லுமா வேர் இல்லாமல்
பூ பூக்குமா கண்ணோடு ஆனந்தமா
என் நெஞ்சோடு பூகம்பமா

ஆண் : பிம்பமா உன்
போலே பிம்பமா ஓ ஓ
நம்புமா என் உள்ளம்
நம்புமா

பெண் : ……………………….

 

சுமைதாங்கி சாய்த்தாள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தின் தூக்கம் கலையாதோ ஓ..
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ ஓ..
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ ஓ ..
ஒரு நாள் பொழுதும் புலராதோ ஓ..
தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தன்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்
தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தன்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்
கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
உறவை கொடுத்தவர் அங்கே
அலை கடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக் கொடுப்பவர் இங்கே
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல் தான் எங்கள் வீடு
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல் தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழ்க்கை
இதுதான் எங்கள் வாழ்க்கை
தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தன்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்
தரைமேல் பிறக்க வைத்தான்
கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடி நீர் தருபவர் யாரோ
தனியாய் வந்தால் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு சாண் வயிறை வளார்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்
ஊரார் நினைப்பது சுலபம்
தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தன்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்
தரைமேல் பிறக்க வைத்தான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டுக்குப் பாட்டெடுத்து
நான் பாடுவதைக் கேட்டாயோ
துள்ளி வரும் வெள்ளலையே
நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ

கொத்தும் கிளி இங்கிருக்க
கோவைப் பழம் அங்கிருக்க
தத்தி வரும் வெள்ளலையே நீபோய்
தூது சொல்ல மாட்டாயோ
தத்தி வரும் வெள்ளலையே நீபோய்
தூது சொல்ல மாட்டாயோ

இளம் வாழம் தண்டாக எலுமிச்சம் கொடியாக
இருந்தவளைக் கைப் பிடிச்சு இரவெல்லாம் கண் முழிச்சு
இல்லாத ஆசையில என் மனச ஆடவிட்டான்
ஆடவிட்ட மச்சானே ஓடம் விட்டு போனானே
ஓடம் விட்டு போனானே ஓடம் விட்டு போனானே

ஊரெங்கும் தூங்கையிலே நான் உள்மூச்சு வாங்கையிலே
ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடி போய்ச் சொல்லி விடு

மின்னலாய் வகிடெடுத்து மேகமாய்த் தலைமுடித்து
பின்னலாய் ஜடைபோட்டு என் மனச எடைபோட்டு
மீன் புடிக்க வந்தவள நான் புடிக்க போனேனே
மை எழுதும் கண்ணாலே போய் எழுதிப் போனாளே

ஆசைக்கு ஆசை வச்சேன்
நான் அப்புறந்தான் காதலிச்சேன் ஹோய்
ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடிப்போய் சொல்லிவிடு

வாழைப்பூ திரி எடுத்து வெண்ணையிலே நெய் எடுத்து
ஏழை மனக் குடிசையிலே ஏத்தி வச்சான் ஒரு விளக்கு
ஏத்தி வச்ச கைகளிலே என் மனச நான் கொடுத்தேன்
நெஞ்சு மட்டும் அங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க
நான் மட்டும் இங்கிருக்க …நான் மட்டும் இங்கிருக்க

தாமரை அவளிருக்க இங்கே சூரியன் நானிருக்க
சாட்சி சொல்லும் சந்திரனே நீதான் ஓடிப்போய் தூது சொல்லு

பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ
சாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.