Jump to content

சர்வதேசத்துடன் இணைந்து புதிய அணுகுமுறையில் இனப்பிரச்சனைக்கான தீர்வினை பெறுவோம் – மாவை


Recommended Posts

இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சனைக்கான உரிய தீர்வினை தராவிட்டால் சர்வதேசத்துடன் இணைந்து புதிய அணுகுமுறையில் இனப்பிரச்சனைக்கான தீர்வினை பெறுவோம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்களை நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தும் கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை வடமராட்சி நெல்லியடி தொகுதியில் உடுப்பிட்டி தொகுதி தலைவர் ப.சுரேந்திரன் மற்றும் பருதித்துறை தொகுதி உப தலைவர் ச.சுகிர்தன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கூட்டத்தில் தமிழரசு கட்சியின் வேட்பாளர்களான சகிகலா ரவிராஜ், சி.சிறிதரன், த.தபேந்திரன், ஈ.சரவணபவன், இமானுவேல் ஆனோல்ட், ஏ.சுமந்திரன் ஆகியோரும் பருத்தித்துறை, உடுப்பிட்டி தொகுதி தமிழரசு கட்சி நிர்வாகிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் என சுமார் 100 பேர் வரை கலந்து கொண்டிருந்தனர்.

http://athavannews.com/சர்வதேசத்துடன்-இணைந்து-ப/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Index of /wp-content/uploads/2015/02

திரும்பவும்.... அதே.... பேச்சு...

தமிழ் நாட்டில் கச்சதீவினை மீட்ப்போம் கதைபோல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகமோசமான இராணுவ ஆட்சியை சந்திக்கப்போகிறோம்..! சுமந்திரன் எச்சரிக்கை..

Sumanthiran.jpg

நாங்கள் எப்போதும் கண்டிராத அளவுக்கு ஒரு இராணுவ ஆட்சி உருவாகப்போகிறது. என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

உடுப்பிட்டி மற்றும் பருத்தித்துறை தொகுதி செயற்பாட்டாளருக்கான வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

மாற்று அணி என தம்மை தெரிவிப்பவர்கள் குறைந்தது 5 ஆசனங்களையாவது பெற முடியுமா எனவும் அவ்வாறு மாற்று அணி என்று குறிப்பிடுபவர்கள் தமிழ் மக்களை சின்னாபின்னமாக்கி சிதைக்கின்றவர்கள்.

நாங்கள் ஒரு அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்று முழுமையாக உழைத்தோம். அது ஒட்டு மொத்த சிங்கள மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும், அவ்வாறு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் சிங்கள மக்களுக்கு

எமது நியாய பாடுகளை தெளிவுபடுத்த வேண்டும், கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் மக்கள் கேட்பது நியாயம் தானே என சிங்கள மக்கள் உணரும் அளவிற்க்கு தலைவர் சம்மந்தர் ஐயா எதிர்கட்சி தலைவராக இருக்கின்ற காலத்தில் செயற்ட்டார்.

ஆயுதம் ஏந்தப் போராடாத நான் அதனை சொல்லி வாக்கை பெறுவது அவர்களது தியாகத்தையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் செயல் என்றும் மக்களுக்கு தீர்வு வேண்டும் என்றால் இங்கே பேசுவதை சிங்கள மக்கள் மத்தியிலும் பேச வேண்டும்.

என அவர் மேலும் தெரிவித்தார். மேற்படி வேட்பாளர்களை நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தும் கூட்டம் இன்று பிற்பகல் 3:30 வடமராட்சி நெல்லியடி மலிசந்தி பிள்ளையார் கல்யாண மண்டபத்தில் உடுப்பிட்டி தொகுதி தலைவர் ப.சுரேந்திரன்

மற்றும் பருதித்துறை தொகுதி உப தலைவர் ச.சுகிர்தன் ஆகியோர் தலமையில் இடம் பெற்றது. இதில் தமிழரசு கட்சி வெட்பாளர்களான திருமதி ரவிராஜ் ,சி.சிறிதரன், த.தபேந்திரன், ஈ.சரவணபவன், மாவை சேனாதிராசா, இமானுவேல் ஆனோல்ட், ஏ,சுமந்திரன் ஆகியோரும்

பருத்தித்துறை , உடுப்பிட்டி தொகுதி தமிழரசு கட்சி நிர்வாகிகள் செயற்பாட்டாளர்கள், பருத்தித்துறை பிரதேச சபை தலைவர் ச.அரியகுமார், கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் திரு ஐங்கரன், பருத்தித்துறை நகரசபை தவிசாளர் இருதயராசா என

சுமார் 100 பேர் வரை கலந்து கொண்டிருந்தனர். இதில் தமிழரசு கட்சியின் வேட்பாளர்களான மாவை சேனாதிராசா, எம் ஏ சுமந்திரன், த.தபேந்திரன், சி.சிறிதரன், ஈ.சரவணபவன், இ.ஆனோல்ட், திருமதி சசிகலா ரவிராஜ், ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

https://jaffnazone.com/news/18821

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறைவா

அமைதியையும்

எதையும்  கிரகிக்காத  மனவலிமையையும் தந்தருளும்

Link to comment
Share on other sites

ஊரில் சொல்வார்களே “சுத்திச் சுத்தி சுப்பர்ர கொல்லைக்குள்ள” என்று, இச்செய்தியைக் காண அதுதான் நினைவில் வருகின்றது.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, போல் said:

இனப்பிரச்சனைக்கான உரிய தீர்வினை தராவிட்டால் சர்வதேசத்துடன் இணைந்து புதிய அணுகுமுறையில் இனப்பிரச்சனைக்கான தீர்வினை பெறுவோம்

இன்னுமா நம்பிக்கொண்டிருக்கிறார்கள்? இதுவரை ஏன் சர்வதேசத்தோடு இணைய முன்வரவில்லை? பிளேன் ஓடவில்லையா? 

Link to comment
Share on other sites

2 hours ago, satan said:

இன்னுமா நம்பிக்கொண்டிருக்கிறார்கள்? இதுவரை ஏன் சர்வதேசத்தோடு இணைய முன்வரவில்லை? பிளேன் ஓடவில்லையா? 

கொரோனா வரும் என 10 வருஷத்துக்கு முதலே தெரிஞ்சப்படியா பிளேன் ஏறி சர்வதேசம் பக்கம் போகவில்லையாம். 

Link to comment
Share on other sites

On 26/6/2020 at 19:49, போல் said:

சர்வதேசத்துடன் இணைந்து புதிய அணுகுமுறையில் இனப்பிரச்சனைக்கான தீர்வினை பெறுவோம்

மாவை அந்த ரகசிய புதிய அணுகுமுறையை எப்ப ஏவப்போகிறார்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.