Jump to content

பிரிட்டனின் நிரம்பி வழியும் கடற்கரையோரங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதன் முதல் வெள்ளி வரை 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையினை அடைந்துள்ள நிலையில், இந்த வார இறுதி மழை வர சாத்தியம் உள்ளதாலும், மக்கள், அல்லோல கல்லோலமாக கடற்கரைகளை நோக்கி படை எடுத்துள்ளார்கள். வெளிநாட்டுப் பயணங்கள் செல்ல முடியாத நிலையில், வழக்கத்தினை விட மிக அதிகமான மக்கள் கிளப்பி வந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதே வேளை, போதியளவு உணவு விடுதிகள் வியாபாரத்துக்காக திறந்து இல்லாததால், மக்கள் பசியுடன் அலைந்து திரிவதனையும், திடீர் சாண்டவிச் வியாபாரிகள் அறா விலைக்கு வியாபாரம் செய்ய கிளம்பி இருப்பதனையும் காணக்கூடியதாக உள்ளதாம்.

இன்று வெள்ளி, மிக அதிகமாக மக்கள் சென்றுள்ளார்கள். பெர்ன்மௌத் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் கூடிய மக்கள், கொரோனா வைரசு எச்சரிக்கையினை மீறி நடந்துகொண்டிருப்பதாகவும், இதன் காரணமாக வைரசு பரவலாம் என்றும் கவலை தெரிவிக்கப்படுக்கின்றது.

வாகன தரிப்பிடங்களில், இன்னும் parking restriction ஆரம்பம் ஆகாத நிலையில், அதிகம் பேர் சுஜநலத்துடன், டபுள் லைன் உள்ள இடங்களிலும், மக்களின் வீடுகள் முன்னாலும் பார்க் பண்ணுகின்றனர் என்றும், பல இடங்களில் இதனால் கைகலப்பு நடந்து, போலீசார் அழைக்கப்படுள்ளார் என்றும் தெரிய வருகிறது.

இந்த நிலை நீடித்தால், கடற்கரையோரங்கள் தடை செய்யப்படட பிரதேசங்களாக உள்ளூர் அதிகாரிகளினால் அறிவிக்கப்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.