Jump to content

தற்கொலை எண்ணத்தை விரட்ட‘‘ஆமாம்.. எனக்கு கரோனா’’ என்று தைரியமாக சொல்லுங்கள்: மன இறுக்கத்தை போக்கும் மருத்துவர் தீபா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலை எண்ணத்தை விரட்ட‘‘ஆமாம்.. எனக்கு கரோனா’’ என்று தைரியமாக சொல்லுங்கள்: மன இறுக்கத்தை போக்கும் மருத்துவர் தீபா

suicidal-thoughts

கரோனா தொற்றுக்கு ஆளான சிலர் மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலைக்கு துணியும் சம்பவங்கள் வேதனையைத் தருகின்றன. இதுகுறித்து, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் உதவிப் பேராசிரியரும், துறைத் தலைவருமான டாக்டர் தீபா நம்மிடம் பேசினார். கரோனா சிறப்பு வார்டுகளில் நோயாளிகளுக்கு யோகா உள்ளிட்ட பயிற்சிகளை அளிப்பதுடன், அவர்களுக்கு இயற்கை மருந்துகளையும் வழங்கி வருகிறார் தீபா. அவருடன் உரையாடியதில் இருந்து..

கரோனா சிகிச்சையில் இருப்பவர்களில் 4 ஆயிரம் பேரை ஆற்றுப்படுத்தி இருக்கிறேன். அவர்களில் பலர் தங்களுக்கு கரோனா வந்ததை அவமானமாக, அசிங்கமாக நினைப்பதை உணரமுடிந்தது. அவர்களில் சிலர் தற்கொலை எண்ணத்தில் இருந்ததை கண்டுபிடித்து மீட்டிருக்கிறோம்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருமே இறந்துவிடுவார்கள் என்ற தவறான எண்ணமும், தேவையற்ற பயமும் மக்களிடம் நிறைய இருக்கிறது. நான் கவுன்சலிங் கொடுத்த நபர் ஒருவர், ‘‘எனக்கு கரோனா இருப்பதாக வெளியில் தெரிந்தால் அசிங்கம். உறவினர்களுக்குத் தெரிந்தால் எங்கள் குடும்பத்தையே ஒதுக்கிவிடுவார்கள். இதையெல்லாம் நினைத்தால் தற்கொலை செய்துகொள்ளலாம் போல இருக்கிறது’’ என்றார்.

‘தங்கள் வீட்டு வாசலில் மாநகராட்சியினர் தகடு அடித்துவிடுவார்களே’ என்று நினைத்தே பலர் மன இறுக்கம் அடைகின்றனர். தனிமையில் இருப்பதும் கடும்மன அழுத்தத்தை கொடுக்கிறது. சிலர், சக நோயாளிகளைப் பார்த்து தங்களுக்கும் ஏதும் ஆகிவிடுமோ என்றுபதறுகின்றனர். அதனால், ‘எங்களை வீட்டுக்கு அனுப்புங்கள்.. எதுவானாலும் அங்கேயே நடக்கட்டும்’ என்று அடம்பிடிக்கின்றனர். எந்த அறிகுறியும் இல்லாமல் ‘ஏசிம்ப்டமேட்டிக்’ நிலையில் இருப்பவர்கள், ‘எனக்குதான் எதுவும் இல்லையே, எதற்காக அடைத்து வைத்திருக்கிறீர்கள்?’ என்று சண்டை பிடிக்கின்றனர். வயதானவர்கள் சிலர் வாய் திறந்து பேச, தலைநிமிர்ந்து மற்றவர்களைப் பார்க்கவே சங்கடப்படுகின்றனர்.

இத்தகைய மன அழுத்தத்தில் இருந்த ஒரு பெரியவரிடம் பேசியபோது, ‘‘என்னை யாரோ பிடித்து அழுத்துவதுபோல இருக்கிறது. அதனால் பாத்ரூமுக்கு போகவே பயமாக இருக்கிறது’’ என்றார். இதெல்லாம் நம் உடம்பின் செல்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காததால் வரும் பிரச்சினை என்பதை புரியவைத்தேன். அவரது திருப்திக்காக படுக்கையை வேறு இடத்துக்கு மாற்றிக் கொடுத்ததும், தைரியமாகிவிட்டார்.

மனம்விட்டுப் பேசினாலே பாதி நோய் குணமாகிவிடும். பலர் அப்படி பேச மறுக்கின்றனர். உறவினர்களிடம் இருந்து போன் வந்தால்கூட எடுத்துப் பேச தயங்குகின்றனர். ‘உங்களுக்கு கரோனா வந்துவிட்டதாமே’ என்று போனில் கேட்பார்களோ என்ற பயம்.

அப்படி கேட்டால்தான் என்ன.. ‘‘ஆமாம், எனக்கு கரோனா வந்திருக்கிறது. சிகிச்சையில் இருக்கிறேன். சீக்கிரமே வீட்டுக்கு வந்துவிடுவேன்’’ என்று தைரியமாக சொல்லப் பழக வேண்டும். அப்போதுதான் மனக் குழப்பம், மன இறுக்கத்தில் இருந்து வெளியே வரமுடியும். தற்கொலை உள்ளிட்ட கெட்ட எண்ணங்கள் எழாமல் தடுக்க முடியும்.

அடுத்ததாக, தண்ணீர் குடிப்பது. நம் உடம்பில் தண்ணீர் அளவு சரியாக இருந்தால்தான் நோய் எதிர்ப்பு சக்தியும் சரியாக இருக்கும். தினமும் சராசரியாக 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் அப்போதுதான் உடற்சோர்வு ஏற்படாது. கழிவுகள் வெளியேறி புத்துணர்வு கிடைப்பதால் நமக்குள் நேர்மறையான எண்ணங்கள் பிறக்கும். இதுவே எந்த நோயையும் நம்மை அண்டவிடாது.

இன்னொரு முக்கிய விஷயம். கரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காக வரும் உறவினர்கள் வார்டிலேயேதான் இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு தொற்று ஏற்படுவது இல்லை. எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை மட்டுமே கரோனா எளிதில் தொற்றுகிறது. எனவே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வோம். மன இறுக்கத்தை தவிர்ப்போம். கரோனா வந்தாலும் எதிர்கொண்டு சமாளிக்கப் பழகிக்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

https://www.hindutamil.in/news/tamilnadu/561517-suicidal-thoughts-2.html

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.