Jump to content

தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகின்றார்கள்? ஒரு கள நிலை ‘அப்டேட்’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகின்றார்கள்? ஒரு கள நிலை ‘அப்டேட்’

June 27, 2020

sarvananda.jpg

 

மிகவும் இறுக்கமான அரசியல் பரப்பொன்று எம் முன்னே விரிந்து கிடக்கிறது. தேர்தல் நெருங்க, நெருங்கத் தேர்தல் களம் சூடு பிடிப்பதுதான் வழமை. இம்முறை அப்படியல்லாததொரு சூழ்நிலையே காணப்படுகிறது. அதற்கான காரணம் என்ன? என்று கேட்டால் உடனே கொரோனாவைச் சொல்லிவிடுவீர்கள். ஆனால் காரணம் அதுவல்ல. அரசியல் பரப்பைச் சூடாக்கவல்ல போட்டியாளர்கள் களத்தில் இல்லை என்பதுதான் உண்மையான விடயம்.

அதனால் போலிகள் எல்லாம் பொருத்தமானவர்கள்போல் தோற்றம் பெறத்தொடங்கி விட்டனர். நாடு முற்றிலும் இப்படியான தொரு நிலை காணப்பட்டாலும், தமிழர் தேசத்து அரசியலும் அவ்வாறே இனங் காணப் பட்டிருக்கிறது. பல ஆண்டுகாலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்துவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்பு போல இலகுவாக வெல்லக் கூடிய சூழ்நிலை தற்போது இல்லை என்று மக்கள் பேசிக்கொள்வது எனது செவிகளை எட்டியபோது… காரணம் என்னவாக இருக்கலாம்? என்ற கேள்வியும் என்னைப் பற்றிக் கொண்டது. விடை தேடிய என்னால், அதனைக் கேட்டுவிட்டு நகர்ந்து போக முடியவில்லை. அதனை நான் வாக்காளர்களாகிய மக்களிடம் கேட்டேன்.

 

ஒரு நீண்டகால அரசியல் பாராம்பரியமுள்ள கட்சிக்கு இப்படியானதொரு நிலைவரக் காரணம் என்ன? கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தமிழ் அரசில் பரப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது, மிகவும் மோசமானதொரு அரசியல் அனுபவத்தைச் சந்தித்துக் கொண்டது. அவர்களால் மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதி மொழிகள் பல பஞ்சாகிக் காற்றில் பறந்துபோயின. தீர்வைப் பெற்றுத் தருவதற்காக அவர்கள் சொன்ன கால அவகாசங்கள் எல்லாம் எல்லை கடந்த போது அவர்கள் தமக்குப் பொருத்த மற்றவர்கள் என்ற கருத்தே மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டது. அப்போதைய அரசோடு தமக்கிருந்த நெருக்கத்தை அவர்கள் சாதகமாகப் பயன்படுத்தத் தவறியதால், வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேல் மக்களுக்கு ஏற்பட்ட அவநம்பிக்கையே இது போன்ற பின்னடைவுக்குக் காரணம் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

அப்போது பேரம் பேசக் கூடிய வலுவோடு அவர்கள் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு தமிழ் மக்கள் நலன்களைவிட மூன்றாந்தரப்பு ஒன்றின் நலனே முக்கியமாக இருந்ததனால் “தமிழ் மக்களுக்கான தீர்வு” என்ற எண்ணத்தில் இவர்கள் வலுவாக இருக்கவில்லை. மத்தியில் ஆட்சியிலிருந்த மைத்திரி – ரணில் கூட்டின் நிதானமற்ற அரசில் போக்கினால், தடுமாறிப்போன அரசியல் சித்தாந்தத்துக்குள் இவர்கள் உள்வாங்கப் பட்டு அரசின் சர்வதேச நலனின் பாதுகாவலராகச் செயற்பட்டனர் என்ற குற்றச்சாட்டும் பரவலாக உண்டு. அதன் ஒரு அங்கமே சர்வதேச விசாரணையிலிருந்து அரசைப் பாதுகாத்து சர்வதேச விசாரணையை “உள்ளக விசாரணை” என்ற பதத்துக்குள் உள்ளடக்கிக் கொண்டது. சுருங்கச் சொல்லப் போனால் ஜெனிவாவில் இவர்கள் அரச பாதுகாவலர்களாக விளங்கினர் என்றும்,

 

உள்ளக விசாரணைக்கு இவர்கள் ஒத்துக் கொண்டிருக்கக் கூடாது என்பதுவும் மக்கள் வாதம். அந்தச் சந்தர்பங்களிலெல்லாம் இவர்கள் அவற்றை முறையாக எதிர்கொண்டு, அவற்றிற்கு எதிர்வினையாற்றத் தவறிவிட்டனர் என்றும் மக்கள் குறைபட்டுக் கொண்டுள்ளனர். கடந்த அரசின் ஆட்சிக்காலத்தே தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களால், அரசு பெற்ற பயன் அளவுக்குத் தமிழ் மக்கள் எதுவித லாபத்தையும் அரசில் ரீதியாகப் பெற்றிருக்கவில்லை என்பதைச் சாதாரண தமிழ் குடிமகனும் அறிவர். ஒரு இலங்கைக் குடிமகனுக்குரிய கொடுப்பனவுகளும், வசதி வாய்ப்பும் மக்களுக்குக் கிடைத்ததைச் சுட்டிக்காட்டி அவை தமது முயற்சியால் பெற்றுக் கொடுக்கப்பட்டவை என எவராவது குறிப்பிடுவாரேயானால், அதைவிட ஏமாற்றுக்கதை வேறொன்று இருக்க முடியாது. அபிவிருத்தி என்ற போர்வையில் நடைபெற்ற மக்கள் நல வள மேம்பாடுகள் அனைத்தும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டியவையே. அவை நாட்டின் அபிவிருத்தி என்றதன் கீழ் அடங்குமே ஒழிய ஒரு இனத்தின் போராட்டத்துக்குக் கிடைத்த தீர்வாக இருக்காது என்றதே மக்கள் கருத்து.

 

கடந்த அரசின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற , தமிழ் மக்களை உள்ளடக்கிய பல அரசு எதிர்ப்புப் போராட்டங்களில் , மனு நீதி கோரி நடைபெற்ற போராட்டமான காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் இன்னும் முடிவடைந்ததாக இல்லை. அது மட்டுமல்ல தமிழர்கள் காணிகளைச் சுவீகரிப்பதற்காக அரசு எடுத்த திணைக்கள ரீதியான செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டதா இல்லை. அது போன்று தமிழர் கலாசாரச் சின்னங்கள் மீது நடைபெற்றுக் கொண்டுவரும் பிற இன, மத ஆக்கிரமிப்புகளும் தொடர்கதையாகவே இருக்கிறது. இதை விடத் தற்பொழுது நடைபெறவிருக்கும் தேர்தலை மையமாகக் கொண்டு வாக்குகளைப் பிரிக்க வேண்டித் திட்டமிட்டுத் தீண்டிவிடப்பட்டுள்ள உள்ளக சாதி,மத ரீதியான பிரச்சினைகளும் தமிழ் ஒற்றுமையைச் சீர்குலைக்கின்ற நடவடிக்கைகளில் ஒன்றே. அதற்குத் தமிழ் கட்சிகள் எதிர்வினையாற்றுவதாக இல்லை. எனவே உள்ளும், புறமுமாகப் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தபடி தமிழ் மக்கள் தேர்தலைச் சந்திக்கின்றர்.

 

யாருக்கு வாக்களிப்பது? பெரும்பாலான மக்கள் மத்தியில் இது ஒரு சங்கடமான கேள்வியாகக் காணப்படுகிறது. தமக்கு நீதியைப் பெற்றுத் தருவார்கள் என்று எண்ணியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் தமது இலக்கைச் சென்றடைய வில்லை. அவர்களை எதிர்த்து நிற்கும் போட்டியாளர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து உடைந்து சென்றவர்களே. அவர்கள் நடுவேயும் பல உடைவுகளும், பிளவுகளும் உண்டு. ஆதலால் அவர்களும் தமிழ் மக்களின் பூரண நம்பிக்கையாளர்களாகவும் தென்படவில்லை. அது மட்டுமல்லாது தற்போது உள்ள அரசியற் சூழ்நிலை, இவர்கள் எல்லோரையும் “ஒரு மூன்றாந்தரப்பின் அரசியல் நலப் பாதுகாவலர்களோ?” என்றும் சந்தேகப்பட வைக்கிறது. அச் சந்தேகம் உண்மையாயின், அவர்கள் எமது தமிழ் மக்களின் வாக்குகளை வாங்கிக் கொண்டு நாடளுமன்றம் சென்று, அங்கு எமது இனத்தை அடகு வைப்பவர்களாகத்தானிப்பர். சிந்தித்து வாக்களிப்பது மிக மிக முக்கியம்.

 

http://thinakkural.lk/article/49761

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.