Jump to content

தமிழ் தேசிய கூட்டமைப்பு இயதசுத்தியுடன் செயற்படவில்லை – அனந்தி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு இயதசுத்தியுடன் செயற்படவில்லை – அனந்தி

ananthi-sasitharan-at-amparai.jpg?189db0&189db0

 

சரணடைந்த விடுதலைப் புலிகளை கடந்த ஐந்து ஆண்டுகளில் விடுதலை செய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கவில்லை என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

வட்டுக்கோட்டையில் நேற்று (27) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும்,

‘விடுதலைப் புலிகளின் அரசியல் பலமாக உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, புலிகளின் மௌனிப்புக்கு பின்னர் நீதி கேட்கின்ற பயணத்தை அவர்களாகவே முன்னெடுத்திருக்க வேண்டும். விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தை எந்த இடத்தில் முடிக்கப்பட்டதோ அந்த இடத்தில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அதுவும் முடியவில்லை.

சரணடைந்த விடுதலைப் புலிகள், காணாமல் ஆக்கப்பட்டோருக்காகவே நான் அரசியலில் கால் பதித்தேன் ஆனால், கடந்த ஐந்து வருட காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதயசுத்தியுடன் செயற்படவில்லை’ – என்றார்.

 

https://newuthayan.com/தமிழ்-தேசிய-கூட்டமைப்பு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தின் தேவைகருதி புலிகள் தங்கள் அரசியல் பேரம்பேசும் சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கிக் காட்டினார்கள். அவர்கள் கொண்டுவந்த அந்த தமிழ் இன அரசியல் ஒற்றுமையின் தாற்பரியத்தை சரியாக புரிந்துகொள்ளாத எமது அரசியல்வாதிகள் சுயலாபத்திற்கும் சிங்கள அரசுக்கு முண்டுகொடுக்கவும்  அந்த இணக்கப்பாட்டை சிதறடித்தார்கள்.

புலிகளின் இராணுவ பலம் உச்சம் தொட்டபோது கூட அவர்கள் அடைவேண்டிய இலக்கை அவர்களால் அடையமுடியாது போனதுதான் எமது சாபக்கேடு. அதுபோல் கூட்டமைப்பின் அரசியல் பலம் உச்சத்தை அடைந்த கடந்த சில வருடங்களில் அவ்வப்போது அமைந்த தீர்வுக்கான வாய்ப்புகளைத்   தீர்க்கதரிசனத்துடனும் சாணக்கியமாகவும் சரிவர பயன்படுத்தாமல் விட்ட அதன்  அரசியல்வாதிகள் தமிழ் இனத்துக்கு எதுவும் செய்யாமல் வாழாவெட்டியாய் இருந்து நாடாளுமன்றத்தை அலங்கரித்து திரும்பினார்கள்.

இப்போது அடுத்த தேர்தலில் வென்றபின் புதிய அரசுடன் இனப்பிரச்சினையை பேசுவதற்கு சர்வதேசத்தின் ஆதரவை பெறவேண்டும் என்கிறார்கள். புதிய அரசுடன் பேச என்ன இருக்கிறது. எந்த ஆட்சி வந்தாலும் அவர்கள் தீர்வு தரபோவதில்லை என்பதை இவர்கள் ஏன் உணர மறுக்கிறார்கள் அல்லது உணராதவர்கள் போல் நடிக்கிறார்கள். ஏற்கனவே  சர்வதேசத்துடன் பேசி முடித்து அவர்களின் ஆதரவை பெற்று அவர்களையும் ஆயத்தநிலையில்  வைக்கவில்லை என்றால் இவர்களிடம் தீர்வுக்கான  திட்டம் எதுவும் கைவசம் இல்லை என்றே கொள்ளலாம். இனப்பிரச்சினைக்கு தீர்ப்பை கொண்டுவரக்கூடிய எந்த தமிழ் அரசியல்வாதியும் இன்று எம் மத்தியில் இல்லை.

கடந்து போன உச்சங்கள் கூட்டமைப்புக்கு இனி மீண்டும் திரும்பாது. ஒவ்வொரு தமிழ் அணியும் தமக்கென அரசியல் திட்டங்களை முன் வைக்கின்றபோதும் தமிழின அரசியல் இணக்கப்பாட்டுக்கும் ஒற்றுமைக்கும் அவர்கள் வழங்கும் முக்கியத்துவம் பூச்சியம்தான். தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒரே பதாகையின் கீழ் ஒன்றுதிரண்டால் எமது பிரச்சினையில் 75 வீதம் தீர்ந்தது என்றே கொள்ளமுடியும்.

Link to comment
Share on other sites

7 hours ago, உடையார் said:

சரணடைந்த விடுதலைப் புலிகளை கடந்த ஐந்து ஆண்டுகளில் விடுதலை செய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கவில்லை என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

நீங்களும் அவங்க போலவோ? அல்லது வித்தியாசமா?
அதை சொல்லுங்க முதல்ல!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.