Jump to content

யாழ். தேர்தல் பிரச்சாரத்தில் த.தே.ம.முன்னணியினருக்கு நேர்ந்த கதி! ஓட.. ஓட.. விரட்டும் பகீர் காணொளி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாக்கு கேட்டு வீடு விடாக பிரச்சாரம் செய்யச் செல்லும் த.தே.ம.முன்னணியினர் தமிழ் மக்களால் விரட்டப்பட்டும் சம்பவங்கள் பரவலாக யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் இடம்பெற்று வருகின்றன.

இதோ ஒரு சம்பவம்:

வாக்கு கேட்டு வீட்டுக்கு செல்லும் த.தே.மக்கள் முன்னணி வேட்பாளரும், ஆதவாளரும் விரட்டப்படும் காட்சி:

 

பிரச்சாரம் செய்யச் சென்ற குறித்த த.தே.ம.முன்னணியினருக்கு இவ்வாறான விளக்கமொன்றை இளைஞரொருவர் வழங்குகிறார்.

அதேபோன்று தான் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் கோட்டாபய தான் வந்திருக்கிறார். நீங்கள் கடந்த தேர்தலில் வாக்கு போடக்கூடாது என்றீர்கள்..

இந்த நிலையில் உங்களுக்கு ஒரு விடயம் தெரிந்திருக்க வேண்டும், இந்த முறையும் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்றால் கோட்டபாய தான் வருவார் என்ற விடயம்.

அத்துடன் முல்லைத்தீவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் என்ற ஒரு அமைப்பு இருந்தது. அந்த அமைப்பை இரண்டாக்கி அதில் ஒருவருக்கு பணம் கொடுக்கப்பட்டது.

அந்த நேரம் பணம் கொடுத்தவர் கஜேந்திரகுமார். முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் சென்று பாருங்கள் ரெக்கோட் காணப்படுகிறது. உங்கள் கதைகள் அனைத்தையும் விடுங்கள். ஒவ்வொரு கட்சிகளின் கதைகளும் எங்களுக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilwin.com/srilanka/01/249722?ref=imp-news

Link to comment
Share on other sites

15 hours ago, பெருமாள் said:

அந்த அமைப்பை இரண்டாக்கி அதில் ஒருவருக்கு பணம் கொடுக்கப்பட்டது.

அந்த நேரம் பணம் கொடுத்தவர் கஜேந்திரகுமார்.

கஜேந்திரகுமார் கோஸ்ட்டியின் சதிகாரா, நாசகார வேலைகளை சாதராண மக்களும் நல்லா தெரிஞ்சு வைச்சிருக்கிறாங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது  திட்டமிட்டு எடுக்கப்பட்ட காணொளியாகத் தோன்றுகிறது.  சிறீதரனின் அண்ணாவினது ஊடகத்திற்காகத் திட்டமிடப்பட்டிருக்கலாம். கவனிக்கப்பட வேண்டியது அவசியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணொளி எடுத்தவருக்கு நிஜ அரசியல் தெரியாமல் நிற்கிறார்.

2005 இல இயக்கம் வாக்குப் போட வேண்டாம் என்று சொல்லி மகிந்த வந்தார் என்றால்.. 2010 தில் வாக்குப் போடச் சொல்லியும் மகிந்த தானே வந்தார். அப்புறம்.. 2015 இல் வாக்குப் போடச் சொல்லி.. மகிந்த போய் ரணில் வந்தார். என்னத்தை எடுத்தியள்...????!

அதேபோல்.. 1995 இல்.. வாக்குப் போடச் சொல்லி சந்திரிக்க வந்தார்.. மீண்டுக் 2000 ஆண்டில்.. வாக்குப் போடாமலும் அவரே வந்தார்.

அதேபோல். 1989 இலும் நீங்கள் போட்டு.. ஈரோஸ் வந்தும்.. என்னத்தை சாதிச்சம்..???!

யார் வந்தாலும் வராவிட்டாலும்... சிங்கள பெளத்த பேரினவாத,,, அரசின் தேர்தல்களில்.. தமிழர்களுக்கு ஒரு விமோசனமும் இல்லை என்ற புரிதலற்ற உளறல் தான் காணொளியை எடுத்தவரிடம். இன்னும் எம்மவர்களுக்கு எமக்கான.. அரசியல் என்ன என்பதே தெரியவில்லை. இதுகளுக்காக ஒரு இயக்கம் போராடி.. அழிந்தது தான் பேரவலம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி யார் என்றாலும் தீர்வு பொதி என்டு வந்தால் ஓட ஓட விரட்ட வேனும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, சுவைப்பிரியன் said:

இனி யார் என்றாலும் தீர்வு பொதி என்டு வந்தால் ஓட ஓட விரட்ட வேனும்.

😂 இவர்களின் தீர்வு பொதி எந்தளவு size கொண்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு கவுரவமான அரசியல்கட்சியாய் இருந்த கூத்தமைப்பை இப்படி சந்தி  சிரிக்கிறது போல் மாத்திய பெருமை எல்லாம் சுமத்திரனையே சேரும் .

பின்கதவால் ஆளை உள்ளே கொண்டுவரும்போது இதே யாழில் கட்டுசோத்துக்குள் பெருச்சாளி அல்ல பேயை சம்பந்தன் கொண்டுவருகிறார் என்று எழுதியபோது  அந்த கருத்து தூக்கபட்டத்துடன் அமைதியாக இருங்கள் என்று வேண்டுகோளும் விடப்பட்டது .இப்ப இருந்த ஒரு நம்பிக்கை கூத்தமைப்பையும் நாசம் பண்ணியுள்ளது பின்கதவால் வந்த பேய் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ஓட ஓட விரட்டியது" என்பது மிகைப் படுத்தல்! அவர் மரியாதையாகத் தான் அனுப்பி வைக்கிறார்! ஆனால், இந்த வீடியோவில் கேள்வி கேக்கிற சகோதரம் போலத் தான் தாயக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்! அவர்களின் அரசியல் திசை பற்றி புலம் பெயர்ந்த நாம் கவலைப் பட அவசியம் குறைவு! 

ஆனால், புலம்பெயர்ந்த தமிழர் சிலரின் அரசியல் ஞானம் தான் கொஞ்சம் கேலிக் கூத்தாக இருக்கிறது! தமிழர்களின் தேர்தல் பகிஷ்கரிப்பு மூலம் ரணிலை விழுத்தி "யதார்த்த வாதியான" மகிந்தவை புலிகள் வெல்ல வைக்கிறார்கள். அவர் புலிகளை அழித்த கையோடு தேர்தலுக்குப் போக பாரிய வெற்றி சிங்களவர்களால் கிடைக்கிறது!  இந்த 2010 வெற்றி, மகிந்தவுக்கு 2005 இல் புலிகளால் வழங்கப் பட்ட வாய்ப்பின் தொடர்ச்சி என்பதைக் கூட விளங்கிக் கொள்ள இயலாத புலம்பெயர் தீவிர தேசியர்கள், தாயக மக்களுக்கு அரசியல் படிப்பிக்க முயல்வது பெரிய வேடிக்கை! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.