Jump to content

இறுதிப்போரில் சரணடைந்தவர்கள் தொடர்பில் இராணுவத் தளபதி வெளியிடும் கருத்தை நம்ப முடியாது – சம்பந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப்போரில் சரணடைந்தவர்கள் தொடர்பில் இராணுவத் தளபதி வெளியிடும் கருத்தை நம்ப முடியாது – சம்பந்தன்

spacer.png

இறுதிப் போரில் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பலர் காணாமல் ஆக்கப்பட்டு இருந்தனர்.இதற்கு கண்கண்ட சாட்சியங்களும் உள்ளன. ஆகவே அரசும், இராணுவமும் தான் முழுப்பொறுப்பு, அவர்கள் தப்பவே முடியாது என தமிழ்த தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.இறுதிப் போரில் இராணுவத்தினரை களத்தில் நின்று வழிநடத்தியவர்களில் ஒருவரே தற்போது இராணுவத்தளபதியாக உள்ளார்.அவருக்கு அங்கு நடந்த உண்மை நிலவரம் தெரியும். எனவே அவர் உண்மையை வெளியிட வேண்டும்.அதை விடுத்து விடுதலைப்புலிகள் மீது பழி போட்டுவிட்டு அவர் தப்ப முடியாது.

இறுதிப்போரில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் அவருக்கு எதிராக ஐ.நாவில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.அவர் அமெரிக்காவுக்குள் நுழையக்கூட அமெரிக்க அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.அந்த வகையில் இறுதிப்போர் தொடர்பிலும், சரணடைந்தவர்கள் தொடர்பிலும் அவர் வெளியிடும் கருத்தை நம்ப முடியாது என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பலரை புலிகளே கொன்றனர். கொன்று அவர்களின் உடல்களை மறைத்தனர். அவ்வாறு மறைத்த உடல்களை எம்மால் எவ்வாறு கண்டறிய முடியும்.காணாமல் போனவர்கள் என கூறும் நபர்கள் அந்த பட்டியலில் இருக்கலாம்.சரணடைந்த நபர்கள் புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்டவர்களில் காணாமால் ஆக்கப்பட்டதாக கூறப்படும் அல்லது தேடப்படும் நபர்கள் இல்லை என்றால் அந்த நபர்கள் இறந்திருக்க வேண்டும்.” என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கையில் சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15)
 

 

http://www.samakalam.com/செய்திகள்/இறுதிப்போரில்-சரணடைந்தவ/

Link to comment
Share on other sites

3 hours ago, கிருபன் said:

இறுதிப் போரில் இராணுவத்தினரை களத்தில் நின்று வழிநடத்தியவர்களில் ஒருவரே தற்போது இராணுவத்தளபதியாக உள்ளார்.அவருக்கு அங்கு நடந்த உண்மை நிலவரம் தெரியும். எனவே அவர் உண்மையை வெளியிட வேண்டும்.

உலகத்திற்கானது

3 hours ago, கிருபன் said:

இறுதிப்போர் தொடர்பிலும், சரணடைந்தவர்கள் தொடர்பிலும் அவர் வெளியிடும் கருத்தை நம்ப முடியாது என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கானது

3 hours ago, கிருபன் said:

அவர் உண்மையை வெளியிட வேண்டும்.அதை விடுத்து விடுதலைப்புலிகள் மீது பழி போட்டுவிட்டு அவர் தப்ப முடியாது.

தமிழ் மக்களின் வாக்குகளுக்கானது.

Link to comment
Share on other sites

11 hours ago, கிருபன் said:

இறுதிப்போரில் சரணடைந்தவர்கள் தொடர்பில் இராணுவத் தளபதி வெளியிடும் கருத்தை நம்ப முடியாது – சம்பந்தன்

இது இப்ப தேர்தல் வருவதால்.

தேர்தல் முடிஞ்சதும் இறுதிப் போரே நடக்கேலை என்டு அறிக்கை விடக்கூடிய ஒரு நம்பிக்கைத் துரோகி சம்பந்தர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத் தளபதியின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து உண்மைகளை கண்டறிய வேண்டும்: ஸ்ரீதரன்

சவேந்திர சில்வாவின் வாக்கு மூலத்தை கருத்தில் கொண்டு உண்மைகளைக் கண்டறிய வேண்டும் எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ். மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.  

கிளிநொச்சி உதயநகர் பகுதியில் இடம்பெற்ற மக்களுடனான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

asasasa.jpg

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டினுடைய இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறியிருக்கிறார். காணாமல் போனவர்களை விடுதலைப் புலிகளே கொன்று விட்டதாக கூறியிருக்கிறார்.

உண்மையில் இராணுவத்திடம் தங்கள் கைகளால் ஒப்படைத்த பிள்ளைகளை தேடும் பெற்றோர்கள் கணவனை ஒப்படைத்துவிட்டு  குங்குமத்துடன் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.

இதனால் தமிழ்மக்களின் மனங்கள் உடைந்து போயிருக்கின்றன. இறுதி யுத்தம் நிறைவுற்ற 2009 ஆம் ஆண்டிலே  முள்ளிவாய்க்காலில் இருந்து சென்ற வேளையில் வவுனியா ஓமந்தை பகுதியில் இராணுவத்தினால் அறிவிக்கப்பட்டது ஒரு நாளாவது விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தால் வந்து சரணடையுமாறு அறிவிக்கப்பட்டது. இவ் அறிவித்தலை கேட்டு பலர் சரணடைந்தார்கள். 

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் க.வே பாலகுமாரன் தனது மகனுடன் சரணடைந்த போது அவர்களைச் சுற்றி இராணுவத்தினர் சூழ்ந்திருக்கும் புகைப்படம் பத்திரிகையில் வெளியானது. 

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன் தலைமையில் புலித்தேவன் போன்றோர் சரணடைந்திருந்தனர். 

இவர்கள் சரணடையும் விவகாரத்தில் தொடர்புகளை பேணியிருந்தவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆவார் அவர் எல்லா சாட்சியங்களையும் வழங்க வேண்டும். 

இவர்களைத் தவிர தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் தங்கன் விளையாட்டுத்துறை பொறுப்பாளர் ராஜா அவரின் மூன்று பிள்ளைகள் அவர்களுடன் பல தளபதிகள் சரணடைந்து இருக்கிறார்கள். இது தொடர்பாக நாம் பல தடவை பாராளுமன்றில் கேள்வி எழுப்பியிருக்கிறோம். 

தமிழர்களின் இரத்தத்தைக் குடித்த சவேந்திர சில்வாவுக்கே தெரியும் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று இராணுவத்தின் குறித்த படையணி பிரிவுக்கு பொறுப்பாக இருந்தவர். 

இராணுவத்தளபதி கூறியிருப்பதன் விளக்கம் என்ன ? இலங்கை அரசு ஐ.நா. வில் கூறிய படி நிலைமாறுகால நீதி என்பவற்றுள் அடங்கும் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து பாதிக்கப்பட்ட எம் மக்களுக்கு உரிய நீதி கிடைக்க சர்வதேசம் உதவ வேண்டும் எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
 

https://www.virakesari.lk/article/84851

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டோர் எங்கே? – குகதாஸ் கேள்வி

IMG-20200614-WA0004-960x641.jpg?189db0&189db0

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று (30) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். அதில் மேலும்,

‘அண்மையில் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கருத்துக் கூறும் போது அவர்கள் அனைவரும் புலிகளால் கொல்லப்பட்டு விட்டனர் என்று உண்மைக்கு புறம்பான விடையத்தை முன்வைத்தார்.

உண்மையில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது சவேந்திர சில்வா தலைமையிலான 58வது காலால் படைப்பிரிவுதான் களத்தில் நின்றது. அந்தவகையில் 2009 மே-16ம் திகதி 2 மணியில் இருந்து 18ம் திகதி வரை வட்டுவாகல், செல்வபுரம் பகுதியில் சரணடைந்த இலட்சக்கணக்கான மக்களில் பலர் ஆயிரக்கணக்கில் காணாமல் ஆக்கப்பட்டனர். இன்று உறவுகளால் அவர்கள் தேடப்படுகின்றனர்.

இவ்வாறு தேடப்படுபவர்கள் யுத்த களத்தில் இருந்து முழுமையான இராணுவ கட்டுப்பாட்டில் இராணுவத்தினரிடம் பெற்றோர்களால், மனைவிமார்களினால், உறவினர்களால் கையளிக்கப்பட்டவர்கள்.

ஆகவே வட்டுவாகல், செல்வபுரம் பகுதியிலும், ஓமந்தை சோதனைச் சாவடியிலும் பல ஆயிரக்கணக்கில் சரணடைந்தும், கையளிக்கப்பட்டும் அழைத்துச் செல்லப்பட்டு இன்றுவரை அவர்கள் எங்கே உள்ளனர் என தேடி அலையும் உறவினர்களுக்கு இராணுவத் தளபதியின் பதில் என்ன?’ – என்றுள்ளார்.

 

https://newuthayan.com/இராணுவத்திடம்-ஒப்படைக்க/

 

Link to comment
Share on other sites

On 29/6/2020 at 22:51, Rajesh said:

இது இப்ப தேர்தல் வருவதால்.

தேர்தல் முடிஞ்சதும் இறுதிப் போரே நடக்கேலை என்டு அறிக்கை விடக்கூடிய ஒரு நம்பிக்கைத் துரோகி சம்பந்தர்!

100% உண்மை!

சம்மந்தன் தேர்தல் சூட்டில் சற்று உணர்ச்சி வசப்படுகிறார்!  

சம்மந்தனையும் சுமந்திரனையும் இயக்கும் இந்தியப் பயங்கரவாதக் கும்பல் இம்முறை குளறுபடிகள் மூலம் நிலைமை சாதகமாக்குவது சிரமமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.