Jump to content

கடலுக்குள் புதையுண்ட பூமியின் 8 ஆம் கண்டம் பற்றி வரைபடத்தை வெளியிட்ட குழு.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடலுக்குள் புதையுண்ட பூமியின் 8 ஆம் கண்டம் பற்றி வரைபடத்தை வெளியிட்ட குழு.!

zealandia-maps-1593244226.jpg

பூமியில் தற்போது வரை ஏழு கண்டங்கள் ஒட்டுமொத்த கிரகத்தின் குறுக்கே பரவியுள்ளது என்று கூறிவந்தனர். ஆனால் பூமியில் ஏழு கண்டங்கள் இருக்கிறது என்பது முற்றிலுமான ஒரு பெரிய பொய் என்று GNS விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

இவர்களின் கணக்குப்படி பூமியில் ஒட்டுமொத்தமாக 8 கண்டங்கள் இருக்கிறது. பல மில்லியன் ஆண்டுகளாக கடலுக்குள் புதைக்கப்பட்டிருந்த பூமியின் 8 ஆம் கண்டதை இவர்கள் இப்பொழுது கண்டுபிடித்துள்ளனர்.

பூமியின் 8 ஆம் கண்டம்

இதற்கு முன்பு வரை பூமி 7 கண்டங்களாகப் பிரிக்கப்பட்டது, இப்போது நாம் அறிந்திடாத புதிய நிலப்பரப்பை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தெற்கு பசிபிக் கடலின் கீழ் சுமார் 3,500 அடி நீருக்கு அடியில் இந்த உண்மை மறைக்கப்பட்டுள்ளது. பூமியின் 8 ஆம் கண்டம் என்று கோரப்படும் இந்த கண்டம் இது வரை ஒரு சிறிய தீவாக நீருக்கு மேல் காட்சியளித்தது. இது அட்லாண்டிஸ் இல்லை ஸிலாந்தியா (Zealandia) என்று விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

நீருக்கடியில் புதையுண்ட எட்டாவது கண்டம்

மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நீருக்கடியில் மூழ்கி, பூமி இழந்த ஒரு மிக பெரிய கண்டமாக இந்த 'எட்டாவது கண்டம்' கருதப்படுகிறது. இந்த எட்டாம் கண்டத்தின் நிலப்பரப்பிற்கு ஸிலாந்தியா என்று பெயரிடப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் உள்ள ஜி.என்.எஸ் சயின்ஸின் ஆராய்ச்சியாளர்கள் இப்போது கண்டத்தின் வடிவத்தையும் அளவையும் மிக விரிவாக வரைபடமாக்கியுள்ளனர்.

பாத்திமெட்ரிக் அளவீடு முறை

மேப்பிங்கிற்காக, ஆராய்ச்சியாளர்கள் பாத்திமெட்ரிக் (bathymetric) அளவீடு முறையைப் பயன்படுத்தியுள்ளனர். பாத்திமெட்ரிக் முறை கடல் நீருக்கு அடியில் ஒளிந்துள்ள நிலப்பரப்பைக் கண்டறியும் ஒரு வித ஸ்கேனிங் முறையாகும்.

ஸிலாந்திய கடல் தளத்தின் வடிவம் மற்றும் அதன் ஆழம் ஆகியவற்றைச் சுற்றி ஆய்வு செய்துள்ளனர். கூடுதலாக, ரெக்றோனிக்-தட்டு எல்லைகளுக்குக் குறுக்கே ஸிலாந்தியவை துல்லியமாகக் கண்டறிய அதன் டெக்டோனிக் சுயவிவரத்தை ஆய்வு செய்துள்ளனர்.

வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்ட வரைபடம்

புதிதாக உருவாக்கப்பட்ட வரைபடங்கள் ஸிலாந்திய உருவாக்கம் குறித்து முன்னர் அறியப்படாத தகவல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது என்று விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. அனைத்து பயனர் பார்வைக்காகக் கண்டத்தின் தகவல்கள் மற்றும் விரிவான வரைபடங்கள் இப்போது இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இந்த வரைபடத்தின் உதவியோடு, மக்கள் 8 ஆம் கண்டதை பற்றிய கூடுதல் விபரங்களை அறிந்துகொள்ளலாம்.

முன்னணி ஆராய்ச்சியாளர் நிக் மோர்டிமர் கூறியது என்ன?

'நியூசிலாந்து மற்றும் தென்மேற்கு பசிபிக் பகுதியின் புவியியலின் துல்லியமான, முழுமையான மற்றும் புதுப்பித்த படத்தை வழங்குவதற்காக இந்த வரைபடங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம் - இதற்கு முன்பு இருந்ததை விட தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள வரைபடம் சிறந்தது' என்று முன்னணி ஆராய்ச்சியாளர் நிக் மோர்டிமர் தனது அறிக்கையில் தெளிவாகக் கூறியுள்ளார்.

8 ஆம் கண்டத்தின் மொத்த பரப்பளவு எவ்வளவு தெரியுமா?

ஸிலாந்தியாவின் மொத்த பரப்பளவு கிட்டத்தட்ட 2 மில்லியன் சதுர மைல்கள், அதாவது சரியாகச் சொன்னால் 5 மில்லியன் சதுர கிலோமீட்டராகும். இந்த ஒட்டுமொத்த பரப்பளவையும் இந்த விஞ்ஞானி குழு ஆராய்ச்சி செய்து அதன் தோற்றத்தை வரைபடமாக்கியுள்ளது. இந்த நடவடிக்கையில், ஸிலாந்தியா கண்டம் ஆஸ்திரேலியாவின் பாதி அளவு கொண்டது என்றும், இந்த கண்டத்தின் 6% மட்டுமே கடல் மட்டத்திற்கு மேல் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்ணீருக்கு மேலே உள்ள தீவு பகுதி

தண்ணீருக்கு மேலே உள்ள பகுதி நியூசிலாந்தின் வடக்கு மற்றும் தெற்கு தீவுகள் மற்றும் நியூ கலிடோனியா தீவின் அடித்தளமாக அமைந்திருக்கிறது. மீதமுள்ள ஸிலாந்தியா நீருக்கடியில் புதைக்கப்பட்டுள்ளது, இதனால் அதன் கடல் தளத்திற்கும் வரைபடமாக்க வேண்டியிருந்தது, எனவே தான் விஞ்ஞானிகள் குழு ஒரு பாத்திமெட்ரிக் அளவீடு முறைப் படி மிகத் துல்லியமாக வரைபடத்தை உருவாக்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலுக்கு அடியில் உள்ள மலைகள், முகடுகள் மற்றும் எரிமலைகள்

பாத்திமெட்ரிக் அளவீட்டு வரைபடத்தின் திடுக்கிடும் வெளிப்பாடு கண்டத்தின் செங்குத்தான மலைகள் மற்றும் நீரின் மேற்பரப்பை நோக்கி உயரும் முகடுகளைக் காட்டியுள்ளது. மலைகள் மற்றும் முகடுகளுடன் கூடுதலாக, வரைபடம் கடற்கரையோரங்கள், பிராந்திய வரம்புகள், எரிமலைகள் மற்றும் முக்கிய கடலுக்கடியில் உள்ள அம்சங்களைச் சுட்டிக்காட்டுகிறது.

வரைபடத்தில் உள்ள நிறங்கள்

விஞ்ஞானிகள் தயாரித்த மற்றொரு வரைபடம் நீருக்கடியில் கண்டத்தில் உள்ள மேலோடு வகைகளைக் காட்டுகிறது. இந்த வரைபடம் கண்டத்தின் வயது மற்றும் அதன் நிலப்பரப்பு தகவலைக் குறிக்கிறது. கண்ட மேலோடு அல்லது நிலப்பரப்புகளை உருவாக்கும் தடிமனான மேலோடு சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் பழுப்பு நிறங்களில் காட்டப்பட்டுள்ளது. இளைய, கடல் மேலோடு நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. சிவப்பு முக்கோணங்கள் எரிமலைகளைச் சுட்டிக்காட்டுகின்றது.

ரெக்றோனிக் தகடுகளின் ஆய்வு

ஆராய்ச்சியாளர்கள் ரெக்றோனிக் இயக்கங்களின் கீழ் ஆய்வு செய்தனர் மற்றும் அவற்றின் அவதானிப்புகளை வரைபடத்தில் வெளிப்படுத்தியுள்ளனர். ரெக்றோனிக் தகடுகளின் இத்தகைய இயக்கங்களைப் படிப்பது கண்டம் எவ்வாறு முதலில் உருவானது என்பதைக் கண்டறிய உதவும்.

அந்தவகையில் ஸிலாந்தியா சுமார் 30 மில்லியனிலிருந்து 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நீரில் மூழ்கியது என்று கணிக்கப்பட்டுள்ளது.

இன்னும் பல  தகவல்கள்

இன்னும் கூடுதல் ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். 2030 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த 8 ஆம் கண்டத்தின் முழு ஆராய்ச்சியையும் இந்த குழு முடித்துவிட திட்டமிட்டுள்ளது. இப்பொழுது இந்த ஒட்டுமொத்த ஆராய்ச்சியின் முதல் கட்டத்தை மட்டுமே ஆராய்ச்சி குழு முடித்துள்ளது என்றும், இன்னும் பல தகவல்கள் வரும் காலங்களில் வெளிவரக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

https://tamil.gizbot.com/scitech/startling-discovery-of-earth-s-8th-continent-named-zealandia-buried-inside-the-ocean-025928.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.