Jump to content

கொரோனாவிற்குப் பின்னரான ஒரு தேர்தல்: தமிழ் வாக்காளர்களே சிந்திக்க வேண்டும்..!!


Recommended Posts

கொரோனாவிற்குப் பின்னரான ஒரு தேர்தல்: தமிழ் வாக்காளர்களே சிந்திக்க வேண்டும்..!!

 

 

 

Srilanka-Parliament-Election-2020-Tamil-

நியூஸிலாந்தில் வசிக்கும் ஒரு நண்பர், முன்பு கொழும்பில் ஊடகத்துறையில் வேலை செய்தவர். என்னிடம் கேட்டார், “ஜனாதிபதி தேர்தலின் போது நீங்களும் சேர்ந்து இயங்கிய சுயாதீனக் குழு போன்ற ஒன்றை இம்முறை நாடாளுமன்றத் தேர்தலின் போதும் உருவாக்கினால் என்ன? ” என்று.

அவரிடம் நான் சொன்னேன் “உருவாக்கலாம் தான் ஆனால் அவ்வாறு உருவாக்கி கட்சிகளுக்கு என்ன சொல்வது?” ஏனென்றால் கடந்த 11 ஆண்டுகளாக கூட்டமைப்பு நாங்கள் எழுதிய எதையும் பேசிய எதையும் காதில் எடுத்துக் கொள்ளவில்லை.

தமிழ் மக்கள் பேரவையின் ஜனாதிபதி தேர்தலுக்கான சுயாதீனக் குழு முதலில் சந்தித்தது சம்பந்தரை. இச்சந்திப்பின் போது அவரிடம் ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்தும்படி கேட்டது. அப்பொழுது அவர் கேட்டார் ‘ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்தினால் அவர் தோற்று விடுவாரே? வெல்ல மாட்டாரே?’ என்று. பிறகு கேட்டார் ‘ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்தினால் தெற்கில் இனவாதிகள் மேலும் ஒன்று திரள்வார்கள். இது இனவாதிகளை பலப்படுத்தி விடாதா?’ என்று.

ஒரு தமிழ் பொது வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் ஏன் நிறுத்த வேண்டும் என்று திருநாவுக்கரசு நிலாந்தன் உட்பட பலரும் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார்கள். திருநாவுக்கரசு 2005 ஆம் ஆண்டு இதுகுறித்து பொங்கு தமிழ் இணையத்தளத்தில் தனபாலசிங்கம் என்ற புனைப் பெயரில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் அவர் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதற்கு விஞ்ஞானபூர்வமாக விளக்கம் அளித்திருந்தார். அதை சம்பந்தர் வாசித்திருக்கவில்லை போலும்.

அதன்பின், அதே கட்டுரையை சில மாற்றங்களோடு 2015ஆம் ஆண்டு அதே பெயரில் திருநாவுக்கரசு அதே இணையதளத்தில் மறுபடியும் எழுதியிருந்தார். அப்பொழுது நோர்வேயில் வசிக்கும் அரசியற் செயற்பாட்டாளர் ஆகிய அவருடைய மாணவர் ஒருவர் அவரிடம் கேட்டிருக்கிறார் ‘ஒரே கட்டுரையை சில மாற்றங்களோடு ஒரே பெயரில் ஐந்து ஆண்டுகளின் பின் ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று. அப்பொழுது திருநாவுக்கரசு கூறியிருக்கிறார் ‘ஐந்து ஆண்டுகளில் நமது அரசியலில் எதுவுமே மாறவில்லை. எனவே அதே கட்டுரையை திரும்ப வேண்டி வந்தது’ என்று. அக்கட்டுரையையும் சம்பந்தரோ அல்லது ஏனைய கூட்டமைப்புப் பிரமுகர்களோ வாசித்ததாகத் தெரியவில்லை.

அதற்குப்பின்னர், 2020 தேர்தலுக்காக 2019 நாங்கள் சம்பந்தரை சந்திக்கப் போனோம். அப்பொழுதுதான் அவர் எங்களிடம் மேற்கண்டவாறு கேட்டார். அதாவது ஒரு தமிழ் பொது வேட்பாளர் குறித்து ஏற்கனவே பலரும் எழுதியிருக்கும் ஒரு பின்னணியில் அதுகுறித்த அடிப்படை விளக்கம் எதுவும் இன்றி ஒரு மூத்த தலைவர் கேள்வி கேட்கிறார். அப்படி என்றால் தமிழில் தன்னைப் பற்றியும் தனது கட்சியைப் பற்றியும் தமிழ் அரசியலைப் பற்றியும் எழுதப்படும் அநேகமானவற்றை அவர் வாசிப்பது இல்லையா?

இதுதான் நிலைமை. இப்படிப்பட்டதொரு துர்ப்பாக்கியமான அரசறிவியல் சூழலில் ஒரு சுயாதீனக் குழுவை உருவாக்கி அதற்கு காசையும் நேரத்தையும் செலவழித்து கட்சித் தலைவர்களைச் சந்தித்து என்னத்தைச் சொல்வது? ஜனாதிபதி தேர்தலின்போது ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை தமிழ் பேரத்தின் குறியீடாக நிறுத்துவது என்று சுயாதீனக் குழு சிந்தித்தது. ஆனால் எந்த ஒரு கட்சித் தலைவரும் அது குறித்து முன்கூட்டியே சிந்தித்திருக்கவில்லை. ஒரு சுயாதீனக் குழு சிந்தித்தபோது அதற்குச் சம்மதிக்க பெரும்பாலான கட்சித் தலைவர்கள் தயாராக இருக்கவில்லை.

அப்படியொரு தீர்க்கதரிசனமான சிந்தனை எதுவும் எந்த ஒரு கட்சித் தலைமையிடமும் இருந்ததாகத் தெரியவில்லை. இதை மறுவளமாகச் சொன்னால் தமிழ் பேரத்தை எப்படி நிலை நாட்டலாம் என்பது குறித்து கட்சித் தலைவர்கள் யாரிடமும் தீர்க்கதரிசனம் மிக்க சிந்தனைகள் எதுவும் இருந்திருக்கவில்லை என்பதைத்தான் எல்லாக் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின்போதும் சுயாதீனக் குழு உணர்ந்துகொண்டது.

இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் இம்முறையும் அவ்வாறு கட்சித் தலைவர்களை நோக்கி வேண்டுகோளை விடுப்பது பயன்தருமா, பொருத்தமானதா? ஜனாதிபதி தேர்தலின்போது ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துமாறு எந்த ஒரு கட்சித் தலைவரையும் சுயாதீனக் குழுவினால் சம்மதிக்கச் செய்ய முடியவில்லை. இப்படிப்பட்ட ஒரு அனுபவத்தின் பின்னணியில் இம்முறையும் அப்படிப்பட்டதொரு சுயாதீனக் குழுவைவொன்றை உருவாக்கி கட்சித் தலைவர்களிடம் எதைக் கேட்பது?

கடந்த 11 ஆண்டுகளாக கூட்டமைப்பு நான்கு தடவைகள் உடைந்திருக்கிறது. முதலில் கஜேந்திரகுமார், அடுத்த உடைவு விக்னேஸ்வரன், அதன்பின் சுரேஷ், முடிவில் டெலோவில் இருந்து ஒரு பகுதி உடைந்துபோனது. இப்படியாக நான்கு தடவைகள் உடைந்த பின்னரும் கூட்டமைப்பு ஒரு பலமான கட்சியாகவே காணப்படுகிறது. இப்பொழுதும் அக்கட்சிக்குள் உட்பூசல்கள் மிகுந்து வருகின்றன. எனினும் வீட்டுச் சின்னத்தின் கீழ் கேட்டால்தான் வெல்லலாம் என்று நம்பும் வாக்கு வேட்டை அரசியல்வாதிகள் கூட்டமைப்பை தொடர்ந்தும் பாதுகாப்பார்கள். இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் கூட்டமைப்பு யார் சொல்லியும் எதையும் கேட்கப் போவதில்லை.

கடந்த 11 ஆண்டுகளாக தமிழ் அரசியல் வந்தடைந்திருக்கும் தேக்க நிலைக்கு கூட்டமைப்பே முழுப் பொறுப்பு. கடந்த 11 ஆண்டுகளில் தமிழ் அரசியலானது தலைகீழ் மாற்றத்தை அடைந்துவிட்டது. 2009இற்கு முன்னர் அரசியலில் ஈடுபடுவது என்பது உயிர் ஆபத்தானதாக இருந்தது. அக்காலகட்டத்தில் தியாகம் செய்யத் தயாரானவர்கள் மட்டுமே அரசியலில் ஈடுபட்டார்கள். ஆனால் 2009இற்குப் பின்னர் தியாகம் செய்யத் தயாரற்றவர்களும் நடிப்புச் சுதேசிகளும் பாதுகாப்பான கடந்தகாலத்தை பெற்றவர்களும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஆகிவிட்டார்கள். இப்பொழுது அரசியல் என்பது சேமிப்பது, உழைப்பு, வங்கிக் கணக்கை பெருக்கிக் கொள்வது, வாக்கு வேட்டை, வாக்கு வேட்டைக்காக எந்தப் பொய்யும் செல்லலாம். எந்த தியாகத்தையும் விற்கலாம், எந்த முகமூடியும் அணியலாம்.

அதாவது பொழிவாகச் சொன்னால் இப்பொழுது அரசியல் எனப்படுவது ஒரு பிழைப்பு. தேசியம் எனப்படுவது திருடர்கள் எடுத்தணியும் ஒரு முகமூடி. இப்படிப்பட்ட இழிநிலைக்கு தமிழ் அரசியல் வரக் காரணம் பெருமளவிற்கு கூட்டமைப்புத்தான். எனவே கூட்டமைப்பிடம் போய் ஒரு சுயாதீனக் குழு என்ன செய்ய வேண்டும் என்று கேட்பது ?

அதேசமயம், கூட்டமைப்பு பிழை விடுகிறது என்று கூறும் மாற்றுத் தரப்புக்கள் கடந்த 11 ஆண்டுகளாக என்ன செய்து வந்திருக்கின்றன? குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் கூட்டமைப்பிலிருந்து உடைந்து வந்த ஏனைய தரப்புகளையும் ஒன்றிணைக்கும் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. குறிப்பாக விக்னேஸ்வரனையும் கஜேந்திரகுமாரையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவர முடியவில்லை.

ஒரு குடையின் கீழ் வராவிட்டாலும் பரவாயில்லை ஆளுக்காள் பகிரங்கமாக மோதிக் கொள்ளாமலாவது விடலாம். ஆனால் கஜேந்திரகுமார் அணி விக்னேஸ்வரனையம் அவருடைய கட்சியையும் குறிப்பாக அவருடைய கூட்டுக்குள் நிற்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன் அணியையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதனால் மாற்று அணிகளுக்கிடையே ஓர் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியவில்லை.

கடந்த 11 ஆண்டுகளாக கூட்டமைப்பிலிருந்து உடைந்துபோன தரப்புக்கள் தங்களை கூட்டமைப்புக்கு நிகராக அல்லது மாற்றாக அல்லது குறைந்தபட்சம் அச்சுறுத்தும் சவாலாக வளர்த்துக்கொள்ளத் தவறிவிட்டன. இப்பொழுது கூட்டமைப்புக்குள் முன்னெப்போதையும் விட உட்புகைச்சல்கள் அதிகரித்துள்ளன. கூட்டமைப்பு பலவீனமாகக்கூடிய நிலைமைகள் அதிகரிக்கின்றன.

ஆனால், கூட்டமைப்பை உடைத்து ஒரு மாற்று அணியை ஒரு புதிய திரட்சியாக மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் பிரமாண்டமான ஐக்கிய முன்னணியாக கட்டியெழுப்ப மாற்று அணிக்குள் பெருந்தலைவர்கள் யாரும் இல்லை. இப்படியாக தனக்குள் ஐக்கியப்பட முடியாத மாற்று அணிகளிடம் ஒரு சுயாதீனக் குழு எதைக் கூறலாம்?

இதுதான் பிரச்சினை. தமிழ் கட்சிகளிடம் ஒரு சுயாதீனக் குழு இதைச் செய், இதைச் செய்யாதே என்று கூறும் ஒரு நிலைமை இன்னமும் முழு வளர்ச்சி பெறவில்லை. ஒரு சிவில் அமைப்பு தமிழ் அரசியலின் மீது தலையீடு செய்து பெரிய திருப்பகரமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு நிலைமை இப்பொழுது கொரோனாவுக்கு பின்னரான தமிழ் அரசியல் சூழலில் இல்லவேயில்லை.

எனவே, சுயாதீனக் குழுவோ அல்லது சிவில் சமூகமோ ஒரு விடயத்தை மட்டும் செய்யலாம். தமிழ் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கலாம். தமிழ் வாக்காளர்களை வழி நடத்தலாம். அல்லது குறைந்தபட்சம் தமிழ் வாக்காளர்களை விமர்சன பூர்வமாக சிந்திக்க வைக்கலாம். ஆனால் தேர்தலுக்கு கிட்டத்தட்ட 40 நாட்களே உள்ளன. ஒரு மக்கள் கூட்டத்தின் கருத்துலகத்தின் மீது அல்லது வாக்களிப்பு விருப்பத்தின் மீது செல்வாக்குச் செலுத்த இக்காலகட்டம் போதுமா?

http://athavannews.com/கொரோனாவிற்குப்-பின்னரான/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.