Jump to content

மன உளைச்சல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரஞ்சித் said:

நடந்த அழிவுகளிலிருந்து மனதை ஆறுதல்ப்படுத்தி, திசைதிருப்ப இந்த முயற்சிகள் உதவலாம். ஆனால், இன்றும் தொடர்ந்து நடைபெறும் திட்டமிட்ட அழிவுகள் பற்றி என்ன செய்யலாம்? நாம் அதுபற்றி வேண்டுமென்றே எண்ணாதுவிட்டாலும், அது நடக்கத்தானே போகிறது? நடப்பது நடக்கட்டும், எமக்கென்ன என்று இருப்பது எப்படிச் சாத்தியம்? நடப்பதற்கும் எமக்கும் மிக நெருங்கிய தொடர்பொன்று இருக்கும்போது, அவ்வளவு இலகுவாகக் கடந்தும், மறந்தும் போகமுடியும் என்று நினைக்கிறீர்களா? 

ஒரு இனத்தின் பங்காளனாகவும் உரித்தாளனாகவும் நியாயமாகச் சிந்திக்கும் உங்கள் வினாக்கள் தமிழ்த் தேசியத்தின் இருப்பை நேசிக்கும் பல லட்சம் தமிழ் உறவுகளின் வினாவென்றே கொள்ளமுடியும்.  2009இன் பின் இன்றுவரை மன அழுத்தத்திலிருந்து விடுபட முடியாத பலர் இன்றும் கவலைதோய்ந்த முகங்களோடு அமைதியாகத் தாமுண்டு தமது வேலையுண்டு என்று ஒதுங்கியிருக்கும் நிலை தொடர்கிறது. கால ஓட்டத்தில் காயங்கள் ஆறிவிடும் என்று கூறுவதைக் கேட்டிருக்கின்றேன். ஆனால், யதார்த்தத்தில் அது சாத்தியமா? உள்ளத்தின் எங்கோ ஒரு மூலையில் மௌனமாக உறங்குவதும்; தனிமையில் அது விழித்து வினா எழுப்புவதுமாகவே காலங்களை நகர்த்துகிறது. நாம் உண்டு உருண்டு உழவுசெய்து வளர்ந்த நிலங்கள் எம்மிடமில்லை என்பது எவளவு வலி நிறைந்தது என்பது புலம்பெயர் உறவுகளால் புரியமுடியாததல்ல. எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாகிவிட மனங்கள் மாற்றங்களுள் மறைந்து விடுகிறது. அது இயல்பானதும் கூட. பெருவிருட்சமே வீழ்ந்தபின் சிறு புற்களால் நிமிரமுடியுமா என்ற நம்பிக்கையீனங்கள் ஒருபுறமும்  புலத்திலும் தாய்நிலத்திலுமான கடந்த பதினொரு ஆண்டுகால நகர்வுகள் மறுபுறமுமாக மக்களைக் கலக்கிக் குழப்பிக் கலைத்து வைத்திருக்கிறது. யுத்தம் தீவிரமடைந்த இறுதிக்கட்டத்தில் புலத்திலே, ஆங்காங்கே சில இளையோர்கள் அகிம்சை ரீதியில் போராடியபோதும், யுத்தநிறைவின் பின் அவர்கள்போன்றோரை ஒருங்கிணைத்து அரவணைத்து அணியம்செய்யவும் வழிகாட்டவும் திராணியற்ற புலம்பெயர் சூழல். தாயகத்திலே நாடாளுமன்றக் கதிரைகளை நோக்கிய சூழல் மறுபுறமாக யாரையும் எதையும் புரிந்துகொள்ள முடியாத புதிர்நிலை அரசியலைக் கொண்டே அகவொடுக்க நிலைக்கு எமது மக்களை, எமது தலைமைகள் வழியாகவே மேற்குலகும் சிங்களமும் அழைத்துச் செல்வதில் இருந்தே உங்களின் பலவினாக்கள் தோற்றம் பெற்றுள்ளதென்பதே எனது அவதானிப்பாகும். ஆனால் இந்த உலகில் வாழும் உயிரிகளுக்கான பாத்திரம் என்ன என்பதை சூழலும் காலமுமே நிர்ணயம் செய்யுமென்பதை அண்மைய கொரொனோக் காலநிலை தெள்ளளெனச் சுட்டிநிற்கிறது. 

தம்மைத் தாம் வெல்ல வேண்டிய சூழலில் தமிழினம் இன்று நிற்கிறது. வீழ்ந்தவர்கள் வீழ்ந்துகிடந்தவாறு  எழமுயற்சிக்காதிருந்தால்; குறைந்தபட்சம் கையையாவதுநீட்டாது யாரும் கைகோடுக்க வரமாட்டார்கள் என்பதே உண்மைநிலை. இதனைத் தமிழினம் சிந்திக்காதவாறு சிதைந்துபோவதே இன்றை கையறுநிலை.  மே18 நினைவு நிகழ்வு இந்த ஆண்டு நகரங்கள்தோறும் நடைபெற்றது. நிகழ்வுக்காகச் சென்றபோது யேர்மன் அன்பரொருவர் அந்தச் செயற்பாட்டாளர்களுக்குக் கூறிய ஒரு விடயத்தை இங்கு சுட்டுவது பொருத்தமென நினைக்கிறேன். இதனை, அதாவது இன அழிப்பை நீங்கள் சரியாகப் பரப்புரை செய்து யேர்மன் மக்களுக்குத் தெரியப்படுத்தித் தொடர்ந்து முன்னெடுங்கள். அப்போது உங்களது நியாயமான போராட்டம் வெல்லும் என்றார். இங்கே போராடுதல் என்பது அனைத்துவழிகளிலும் அனைத்து வெளிகளிலும் நிகழ வேண்டிய காலம். ஆனால் நாமோ யாரோ போராடக்காசைக் கொடுத்துவிட்டுக் காத்திருந்தோராதலால் நானுட்பட இன்றும் அதே எதிர்பார்ப்போடு நகர்கின்றோம்.  

 தமிழ்த் தேசியவாதிகளாக நேற்றிருந்தோர் இன்று சிங்களத்தின் ஏவலாளர்களாக நிற்கின்றனர். தமிழினத்தின் அரசியல் நம்பிக்கைகள் தொடர்ந்து தோற்கடிக்கப்படும்போது  தமது இருப்பிற்கான நம்பிக்கைகள் பொய்த்துவிடச் சலிப்பேற்பட்டு இருப்பதே போதுமென்ற எண்ணமேற்பட்டுவிடும். இதுவே சிங்களத்தின் பெருவிருப்பமாகும். இந்த விருப்பை ஒருவகையிற் தமிழ்த் தலைமைகளே தெரிந்தோ தெரியாமலோ செய்கின்றனர்.   

ஆனால் இவற்றையும் கடந்து ஈழத்தீவிலே காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கான(அதில் முழு ஈழத்தமிழருக்கான நீதியும் மறைந்துள்ளதையும் மனங்கொள்ள வேண்டும்) நீதியைக் கோரிச் சலிப்பின்றிப் போராடும் ஒரு தரப்பும் உள்ளதென்பதும் சிறுநம்பிக்கையளிப்பதாக உள்ளதையும் நோக்க வேண்டும். விடுதலைக்கான தேவை இருக்கும்வரை போராட்டங்கள் தொடரும் என்பதை இந்த உலகு கடந்தே வருகிறது. இந்த உலகிலே ஒரு சிறிய மக்கட்தொகையைக் கொண்ட இனமாக இருக்கும் நாம் சரியான மதிப்பீடுகளை செய்வதும் மாற்றுவழிகளைத் தேடுவதுமே எமது இருப்புக்கான வழியாகும். புலத்திலே உள்ள இளைய தலைமுறை சிறந்த ஆற்றலாளர்களாக வளர்ந்த வரும் சூழலில் அவர்களுக்கு எமது தேசம் தேசியம் சார்ந்து சரியான புரிதலை ஏற்படுத்தின் நியாயத்தை அவர்களே இந்த நாடுகள் புரியும்வகையிற் பேசுவார்கள் என்பதே நம்பிக்கை. 


இதனை உயிரீகங்களூடாகக் கட்டமைக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தின் களநிலை மாறினாலும் போராட வேண்டிய கட்டாயம் இன்றும் அப்படியேதான் உள்ளதென்பதை தமிழினம் புரிந்துகொண்டதாலேயே தமது வாக்கினூடாகவேணும் பதிலளிக்க முனைகிறது. மாவீரர் தினத்திலும் மே18இலும் தடைகளைத் தாண்டிக் திரள்கிறது. இன்று எம்முன் இருப்பது எம்மால் என்ன செய்யமுடியுமோ அதனை செய்வதும் எமது பிள்ளைகளை குறைந்தபட்சம் இன மொழிப் பற்றுடையோராய் உருவாக்கிவிடுதலுமே.      

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

பரந்தனைச் சேர்ந்த ஒரு எனது வயதை ஒத்தவர் முதலாவது பிள்ளை மாவீரன்.கடைசி நேரத்தில் இருந்த இரு பிள்ளைகளையும் கட்டாயமாக கூட்டிக் கொண்டு போனார்கள் இன்னும் உடலம் கூட கிடைக்கவில்லை என்று கடுப்பானார்.சிறிது மெளனத்தின் பின் என்ன தான் சரிபிழை இருந்தாலும் அவங்கள் தான் சரி வேறு எவராலும் இந்த மண்ணை ஆளவோ கட்டுக் கோப்பாக வைத்திருக்கவோ முடியாது.அழிந்திருக்கவே கூடாது என்றார்.

நிறையப்பேர் புலிகள் முடிந்தால் தமிழர்களுக்கு பாலும் தேனும் மடை திறந்து பாயும் 
அப்பிடி இப்பிடி என்று ஏக கற்பனையில் வாழ்ந்தார்கள், இப்படி சிங்களம் முதலுக்கு மோசமாகும் நிலைக்கு  கொண்டு வந்து விடுவார்கள் என்பதை கனவிலும் நினைக்கவில்லை இப்ப பேந்த பேந்த முழிக்கிறார்கள் ,
சிங்களவனுக்கு புரியும் மொழியில் பேசியவர்கள் விடுதலை புலிகள் மட்டுமே, 
புலிகளது மௌனிப்பின் பின் தமிழர்கள் மட்டுமல்ல சிறுபான்மைகளின் அரசியலே பூச்சியம் 
இனி ஆளாளுக்கு குருடன் யானை பார்த்த கதை தான்,   

ரகு அண்ணை 
அளவுக்கு அதிகமாக நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட  ஒருவிடயத்தை பற்றி யோசிக்காதீர்கள் ,
எமது போராட்டத்தை முன் நின்று அழித்தவர்கள் எல்லோரும் இப்போது அவரவர் பாட்டில் ,
ஐநா திருவிழாவின் போது ஒப்புக்கு சப்பாணியாக அறிக்கை விடுவதுடன் முடிந்தது. நடப்பதை நமக்கு மேலிருப்பவன் மேல் போட்டுவிட்டு நமது வேலையை பார்க்கவேண்டியதுதான்,

ஆனால் ஒன்று இந்த யானை பார்த்த குருடர்கள் இருக்கிறார்கள் பாருங்கள் அவர்களுடன் வலு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் ரஞ்சித்
        முதலில் ஒரு மாவீரன் குடும்பத்தவராக உங்களைப் பார்ப்பதில் பெருமையடைகிறேன்.தலை வணங்குகிறேன்.
        சாதாரணமாக இனவிடுதலை போராட்டம் என்று கீழ்மட்ட உதவிகள் செய்தவர்களில் இருந்து எல்லோருக்குமே இன்னமும் நம்ப முடியாமல் என்ன ?எப்படி ? உண்மையா என்று தெரியவில்லை.தெளிவில்லை.
        உங்களை மாதிரி எனக்கும் பல நேரங்களில் இப்படியான சிந்தனைகள்.எங்காவது அடி வளவிற்குள் போய் நின்று ஐயோ என்று கத்தி குளற வேண்டும் போல இருக்கும்.
        ஊரிலே நடப்பதைப் பார்க்க விடுதலை வேட்கை இன்னும் இன்னும் கூடுகிறது.
இன்னும் இவ்வளவு கஸ்டம் துன்பம் சித்திரவதைகளையும் தாண்டி நல்ல தலைமை இருந்தால் போராடக் கூடியவர்களையும் கண்டேன்.நடைமுறைக்கு சாத்தியமில்லாது போனாலும் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
       பரந்தனைச் சேர்ந்த ஒரு எனது வயதை ஒத்தவர் முதலாவது பிள்ளை மாவீரன்.கடைசி நேரத்தில் இருந்த இரு பிள்ளைகளையும் கட்டாயமாக கூட்டிக் கொண்டு போனார்கள் இன்னும் உடலம் கூட கிடைக்கவில்லை என்று கடுப்பானார்.சிறிது மெளனத்தின் பின் என்ன தான் சரிபிழை இருந்தாலும் அவங்கள் தான் சரி வேறு எவராலும் இந்த மண்ணை ஆளவோ கட்டுக் கோப்பாக வைத்திருக்கவோ முடியாது.அழிந்திருக்கவே கூடாது என்றார்.
          எனவே எமக்கு மட்டுமல்ல புலிகளுக்கு எதிராக நின்றவர்களுக்கும் இன்றைய நிலையில் அவங்கள் இருந்திருக்க வேண்டும் என்போரும் இருக்கிறார்கள்.
          என்னைப் பொறுத்த வரை சாகும்வரை இந்த நினைவுகள் விட்டுப் போகாது.
 

சாகும்வரை இந்த நினைவுகள் விட்டுப் போகாது. இயன்றவரை தியானம் &  வேறுவழிகளில் மனதை திசைதிருப்பினால் நல்லது. இன்றுவரை நம்ப முடியாமலிருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

நிறையப்பேர் புலிகள் முடிந்தால் தமிழர்களுக்கு பாலும் தேனும் மடை திறந்து பாயும் 
அப்பிடி இப்பிடி என்று ஏக கற்பனையில் வாழ்ந்தார்கள், இப்படி சிங்களம் முதலுக்கு மோசமாகும் நிலைக்கு  கொண்டு வந்து விடுவார்கள் என்பதை கனவிலும் நினைக்கவில்லை இப்ப பேந்த பேந்த முழிக்கிறார்கள் ,
சிங்களவனுக்கு புரியும் மொழியில் பேசியவர்கள் விடுதலை புலிகள் மட்டுமே, 
புலிகளது மௌனிப்பின் பின் தமிழர்கள் மட்டுமல்ல சிறுபான்மைகளின் அரசியலே பூச்சியம் 
இனி ஆளாளுக்கு குருடன் யானை பார்த்த கதை தான்,   

ரகு அண்ணை 
அளவுக்கு அதிகமாக நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட  ஒருவிடயத்தை பற்றி யோசிக்காதீர்கள் ,
எமது போராட்டத்தை முன் நின்று அழித்தவர்கள் எல்லோரும் இப்போது அவரவர் பாட்டில் ,
ஐநா திருவிழாவின் போது ஒப்புக்கு சப்பாணியாக அறிக்கை விடுவதுடன் முடிந்தது. நடப்பதை நமக்கு மேலிருப்பவன் மேல் போட்டுவிட்டு நமது வேலையை பார்க்கவேண்டியதுதான்,

ஆனால் ஒன்று இந்த யானை பார்த்த குருடர்கள் இருக்கிறார்கள் பாருங்கள் அவர்களுடன் வலு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் 

அருமையான கருத்து... அக்னியஷ்த்ரா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நல்லதொரு கருத்தை பகிர்ந்துள்ளீர்கள் நொச்சி அண்ணா!, “ தமது இருப்பிற்கான நம்பிக்கைகள் பொய்த்துவிடச் சலிப்பேற்பட்டு இருப்பதே போதுமென்ற எண்ணமேற்பட்டுவிடும்” இந்த  உணர்வைத்தான் நான் ஊருக்கு போகும் சமயங்களிலெல்லாம் உணர்வது. 

அதே நேரத்தில் எங்களுக்கு நடந்தவற்றை பேசாமல் எழுதாமல் விடுவதும் இயலாத ஒன்று..இரண்டு உணர்வுகளுக்கிடையில் சிக்கிதவித்தாலும், பரப்புரைகளை செய்வதுடன் இப்போதையநிலையில் கல்வி, பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் என அவரவரிற்கு ஏற்றவகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதே இருப்பைதக்கவைத்துகொள்ளவும், மன உளைச்சலை குறைக்கவும் உதவும் நடவடிக்கைகள். 

Link to comment
Share on other sites

On 30/6/2020 at 04:00, அக்னியஷ்த்ரா said:

ஆனால் ஒன்று இந்த யானை பார்த்த குருடர்கள் இருக்கிறார்கள் பாருங்கள் அவர்களுடன் வலு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் 

பாதுகாப்பாக இருந்து இந்தக் குருடர்கள் யானையைத் தடவிப்பார்க்கவும் இந்தியா தான் உயிரோடு இருக்கும்வரை விடாது. யானைக்கு மதம் அதிகரிக்க ஊசி போட்டுக்கொண்டே இருக்கும்.😲

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.