Jump to content

மன உளைச்சல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரஞ்சித் said:

நடந்த அழிவுகளிலிருந்து மனதை ஆறுதல்ப்படுத்தி, திசைதிருப்ப இந்த முயற்சிகள் உதவலாம். ஆனால், இன்றும் தொடர்ந்து நடைபெறும் திட்டமிட்ட அழிவுகள் பற்றி என்ன செய்யலாம்? நாம் அதுபற்றி வேண்டுமென்றே எண்ணாதுவிட்டாலும், அது நடக்கத்தானே போகிறது? நடப்பது நடக்கட்டும், எமக்கென்ன என்று இருப்பது எப்படிச் சாத்தியம்? நடப்பதற்கும் எமக்கும் மிக நெருங்கிய தொடர்பொன்று இருக்கும்போது, அவ்வளவு இலகுவாகக் கடந்தும், மறந்தும் போகமுடியும் என்று நினைக்கிறீர்களா? 

ஒரு இனத்தின் பங்காளனாகவும் உரித்தாளனாகவும் நியாயமாகச் சிந்திக்கும் உங்கள் வினாக்கள் தமிழ்த் தேசியத்தின் இருப்பை நேசிக்கும் பல லட்சம் தமிழ் உறவுகளின் வினாவென்றே கொள்ளமுடியும்.  2009இன் பின் இன்றுவரை மன அழுத்தத்திலிருந்து விடுபட முடியாத பலர் இன்றும் கவலைதோய்ந்த முகங்களோடு அமைதியாகத் தாமுண்டு தமது வேலையுண்டு என்று ஒதுங்கியிருக்கும் நிலை தொடர்கிறது. கால ஓட்டத்தில் காயங்கள் ஆறிவிடும் என்று கூறுவதைக் கேட்டிருக்கின்றேன். ஆனால், யதார்த்தத்தில் அது சாத்தியமா? உள்ளத்தின் எங்கோ ஒரு மூலையில் மௌனமாக உறங்குவதும்; தனிமையில் அது விழித்து வினா எழுப்புவதுமாகவே காலங்களை நகர்த்துகிறது. நாம் உண்டு உருண்டு உழவுசெய்து வளர்ந்த நிலங்கள் எம்மிடமில்லை என்பது எவளவு வலி நிறைந்தது என்பது புலம்பெயர் உறவுகளால் புரியமுடியாததல்ல. எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாகிவிட மனங்கள் மாற்றங்களுள் மறைந்து விடுகிறது. அது இயல்பானதும் கூட. பெருவிருட்சமே வீழ்ந்தபின் சிறு புற்களால் நிமிரமுடியுமா என்ற நம்பிக்கையீனங்கள் ஒருபுறமும்  புலத்திலும் தாய்நிலத்திலுமான கடந்த பதினொரு ஆண்டுகால நகர்வுகள் மறுபுறமுமாக மக்களைக் கலக்கிக் குழப்பிக் கலைத்து வைத்திருக்கிறது. யுத்தம் தீவிரமடைந்த இறுதிக்கட்டத்தில் புலத்திலே, ஆங்காங்கே சில இளையோர்கள் அகிம்சை ரீதியில் போராடியபோதும், யுத்தநிறைவின் பின் அவர்கள்போன்றோரை ஒருங்கிணைத்து அரவணைத்து அணியம்செய்யவும் வழிகாட்டவும் திராணியற்ற புலம்பெயர் சூழல். தாயகத்திலே நாடாளுமன்றக் கதிரைகளை நோக்கிய சூழல் மறுபுறமாக யாரையும் எதையும் புரிந்துகொள்ள முடியாத புதிர்நிலை அரசியலைக் கொண்டே அகவொடுக்க நிலைக்கு எமது மக்களை, எமது தலைமைகள் வழியாகவே மேற்குலகும் சிங்களமும் அழைத்துச் செல்வதில் இருந்தே உங்களின் பலவினாக்கள் தோற்றம் பெற்றுள்ளதென்பதே எனது அவதானிப்பாகும். ஆனால் இந்த உலகில் வாழும் உயிரிகளுக்கான பாத்திரம் என்ன என்பதை சூழலும் காலமுமே நிர்ணயம் செய்யுமென்பதை அண்மைய கொரொனோக் காலநிலை தெள்ளளெனச் சுட்டிநிற்கிறது. 

தம்மைத் தாம் வெல்ல வேண்டிய சூழலில் தமிழினம் இன்று நிற்கிறது. வீழ்ந்தவர்கள் வீழ்ந்துகிடந்தவாறு  எழமுயற்சிக்காதிருந்தால்; குறைந்தபட்சம் கையையாவதுநீட்டாது யாரும் கைகோடுக்க வரமாட்டார்கள் என்பதே உண்மைநிலை. இதனைத் தமிழினம் சிந்திக்காதவாறு சிதைந்துபோவதே இன்றை கையறுநிலை.  மே18 நினைவு நிகழ்வு இந்த ஆண்டு நகரங்கள்தோறும் நடைபெற்றது. நிகழ்வுக்காகச் சென்றபோது யேர்மன் அன்பரொருவர் அந்தச் செயற்பாட்டாளர்களுக்குக் கூறிய ஒரு விடயத்தை இங்கு சுட்டுவது பொருத்தமென நினைக்கிறேன். இதனை, அதாவது இன அழிப்பை நீங்கள் சரியாகப் பரப்புரை செய்து யேர்மன் மக்களுக்குத் தெரியப்படுத்தித் தொடர்ந்து முன்னெடுங்கள். அப்போது உங்களது நியாயமான போராட்டம் வெல்லும் என்றார். இங்கே போராடுதல் என்பது அனைத்துவழிகளிலும் அனைத்து வெளிகளிலும் நிகழ வேண்டிய காலம். ஆனால் நாமோ யாரோ போராடக்காசைக் கொடுத்துவிட்டுக் காத்திருந்தோராதலால் நானுட்பட இன்றும் அதே எதிர்பார்ப்போடு நகர்கின்றோம்.  

 தமிழ்த் தேசியவாதிகளாக நேற்றிருந்தோர் இன்று சிங்களத்தின் ஏவலாளர்களாக நிற்கின்றனர். தமிழினத்தின் அரசியல் நம்பிக்கைகள் தொடர்ந்து தோற்கடிக்கப்படும்போது  தமது இருப்பிற்கான நம்பிக்கைகள் பொய்த்துவிடச் சலிப்பேற்பட்டு இருப்பதே போதுமென்ற எண்ணமேற்பட்டுவிடும். இதுவே சிங்களத்தின் பெருவிருப்பமாகும். இந்த விருப்பை ஒருவகையிற் தமிழ்த் தலைமைகளே தெரிந்தோ தெரியாமலோ செய்கின்றனர்.   

ஆனால் இவற்றையும் கடந்து ஈழத்தீவிலே காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கான(அதில் முழு ஈழத்தமிழருக்கான நீதியும் மறைந்துள்ளதையும் மனங்கொள்ள வேண்டும்) நீதியைக் கோரிச் சலிப்பின்றிப் போராடும் ஒரு தரப்பும் உள்ளதென்பதும் சிறுநம்பிக்கையளிப்பதாக உள்ளதையும் நோக்க வேண்டும். விடுதலைக்கான தேவை இருக்கும்வரை போராட்டங்கள் தொடரும் என்பதை இந்த உலகு கடந்தே வருகிறது. இந்த உலகிலே ஒரு சிறிய மக்கட்தொகையைக் கொண்ட இனமாக இருக்கும் நாம் சரியான மதிப்பீடுகளை செய்வதும் மாற்றுவழிகளைத் தேடுவதுமே எமது இருப்புக்கான வழியாகும். புலத்திலே உள்ள இளைய தலைமுறை சிறந்த ஆற்றலாளர்களாக வளர்ந்த வரும் சூழலில் அவர்களுக்கு எமது தேசம் தேசியம் சார்ந்து சரியான புரிதலை ஏற்படுத்தின் நியாயத்தை அவர்களே இந்த நாடுகள் புரியும்வகையிற் பேசுவார்கள் என்பதே நம்பிக்கை. 


இதனை உயிரீகங்களூடாகக் கட்டமைக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தின் களநிலை மாறினாலும் போராட வேண்டிய கட்டாயம் இன்றும் அப்படியேதான் உள்ளதென்பதை தமிழினம் புரிந்துகொண்டதாலேயே தமது வாக்கினூடாகவேணும் பதிலளிக்க முனைகிறது. மாவீரர் தினத்திலும் மே18இலும் தடைகளைத் தாண்டிக் திரள்கிறது. இன்று எம்முன் இருப்பது எம்மால் என்ன செய்யமுடியுமோ அதனை செய்வதும் எமது பிள்ளைகளை குறைந்தபட்சம் இன மொழிப் பற்றுடையோராய் உருவாக்கிவிடுதலுமே.      

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

பரந்தனைச் சேர்ந்த ஒரு எனது வயதை ஒத்தவர் முதலாவது பிள்ளை மாவீரன்.கடைசி நேரத்தில் இருந்த இரு பிள்ளைகளையும் கட்டாயமாக கூட்டிக் கொண்டு போனார்கள் இன்னும் உடலம் கூட கிடைக்கவில்லை என்று கடுப்பானார்.சிறிது மெளனத்தின் பின் என்ன தான் சரிபிழை இருந்தாலும் அவங்கள் தான் சரி வேறு எவராலும் இந்த மண்ணை ஆளவோ கட்டுக் கோப்பாக வைத்திருக்கவோ முடியாது.அழிந்திருக்கவே கூடாது என்றார்.

நிறையப்பேர் புலிகள் முடிந்தால் தமிழர்களுக்கு பாலும் தேனும் மடை திறந்து பாயும் 
அப்பிடி இப்பிடி என்று ஏக கற்பனையில் வாழ்ந்தார்கள், இப்படி சிங்களம் முதலுக்கு மோசமாகும் நிலைக்கு  கொண்டு வந்து விடுவார்கள் என்பதை கனவிலும் நினைக்கவில்லை இப்ப பேந்த பேந்த முழிக்கிறார்கள் ,
சிங்களவனுக்கு புரியும் மொழியில் பேசியவர்கள் விடுதலை புலிகள் மட்டுமே, 
புலிகளது மௌனிப்பின் பின் தமிழர்கள் மட்டுமல்ல சிறுபான்மைகளின் அரசியலே பூச்சியம் 
இனி ஆளாளுக்கு குருடன் யானை பார்த்த கதை தான்,   

ரகு அண்ணை 
அளவுக்கு அதிகமாக நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட  ஒருவிடயத்தை பற்றி யோசிக்காதீர்கள் ,
எமது போராட்டத்தை முன் நின்று அழித்தவர்கள் எல்லோரும் இப்போது அவரவர் பாட்டில் ,
ஐநா திருவிழாவின் போது ஒப்புக்கு சப்பாணியாக அறிக்கை விடுவதுடன் முடிந்தது. நடப்பதை நமக்கு மேலிருப்பவன் மேல் போட்டுவிட்டு நமது வேலையை பார்க்கவேண்டியதுதான்,

ஆனால் ஒன்று இந்த யானை பார்த்த குருடர்கள் இருக்கிறார்கள் பாருங்கள் அவர்களுடன் வலு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் ரஞ்சித்
        முதலில் ஒரு மாவீரன் குடும்பத்தவராக உங்களைப் பார்ப்பதில் பெருமையடைகிறேன்.தலை வணங்குகிறேன்.
        சாதாரணமாக இனவிடுதலை போராட்டம் என்று கீழ்மட்ட உதவிகள் செய்தவர்களில் இருந்து எல்லோருக்குமே இன்னமும் நம்ப முடியாமல் என்ன ?எப்படி ? உண்மையா என்று தெரியவில்லை.தெளிவில்லை.
        உங்களை மாதிரி எனக்கும் பல நேரங்களில் இப்படியான சிந்தனைகள்.எங்காவது அடி வளவிற்குள் போய் நின்று ஐயோ என்று கத்தி குளற வேண்டும் போல இருக்கும்.
        ஊரிலே நடப்பதைப் பார்க்க விடுதலை வேட்கை இன்னும் இன்னும் கூடுகிறது.
இன்னும் இவ்வளவு கஸ்டம் துன்பம் சித்திரவதைகளையும் தாண்டி நல்ல தலைமை இருந்தால் போராடக் கூடியவர்களையும் கண்டேன்.நடைமுறைக்கு சாத்தியமில்லாது போனாலும் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
       பரந்தனைச் சேர்ந்த ஒரு எனது வயதை ஒத்தவர் முதலாவது பிள்ளை மாவீரன்.கடைசி நேரத்தில் இருந்த இரு பிள்ளைகளையும் கட்டாயமாக கூட்டிக் கொண்டு போனார்கள் இன்னும் உடலம் கூட கிடைக்கவில்லை என்று கடுப்பானார்.சிறிது மெளனத்தின் பின் என்ன தான் சரிபிழை இருந்தாலும் அவங்கள் தான் சரி வேறு எவராலும் இந்த மண்ணை ஆளவோ கட்டுக் கோப்பாக வைத்திருக்கவோ முடியாது.அழிந்திருக்கவே கூடாது என்றார்.
          எனவே எமக்கு மட்டுமல்ல புலிகளுக்கு எதிராக நின்றவர்களுக்கும் இன்றைய நிலையில் அவங்கள் இருந்திருக்க வேண்டும் என்போரும் இருக்கிறார்கள்.
          என்னைப் பொறுத்த வரை சாகும்வரை இந்த நினைவுகள் விட்டுப் போகாது.
 

சாகும்வரை இந்த நினைவுகள் விட்டுப் போகாது. இயன்றவரை தியானம் &  வேறுவழிகளில் மனதை திசைதிருப்பினால் நல்லது. இன்றுவரை நம்ப முடியாமலிருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

நிறையப்பேர் புலிகள் முடிந்தால் தமிழர்களுக்கு பாலும் தேனும் மடை திறந்து பாயும் 
அப்பிடி இப்பிடி என்று ஏக கற்பனையில் வாழ்ந்தார்கள், இப்படி சிங்களம் முதலுக்கு மோசமாகும் நிலைக்கு  கொண்டு வந்து விடுவார்கள் என்பதை கனவிலும் நினைக்கவில்லை இப்ப பேந்த பேந்த முழிக்கிறார்கள் ,
சிங்களவனுக்கு புரியும் மொழியில் பேசியவர்கள் விடுதலை புலிகள் மட்டுமே, 
புலிகளது மௌனிப்பின் பின் தமிழர்கள் மட்டுமல்ல சிறுபான்மைகளின் அரசியலே பூச்சியம் 
இனி ஆளாளுக்கு குருடன் யானை பார்த்த கதை தான்,   

ரகு அண்ணை 
அளவுக்கு அதிகமாக நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட  ஒருவிடயத்தை பற்றி யோசிக்காதீர்கள் ,
எமது போராட்டத்தை முன் நின்று அழித்தவர்கள் எல்லோரும் இப்போது அவரவர் பாட்டில் ,
ஐநா திருவிழாவின் போது ஒப்புக்கு சப்பாணியாக அறிக்கை விடுவதுடன் முடிந்தது. நடப்பதை நமக்கு மேலிருப்பவன் மேல் போட்டுவிட்டு நமது வேலையை பார்க்கவேண்டியதுதான்,

ஆனால் ஒன்று இந்த யானை பார்த்த குருடர்கள் இருக்கிறார்கள் பாருங்கள் அவர்களுடன் வலு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் 

அருமையான கருத்து... அக்னியஷ்த்ரா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நல்லதொரு கருத்தை பகிர்ந்துள்ளீர்கள் நொச்சி அண்ணா!, “ தமது இருப்பிற்கான நம்பிக்கைகள் பொய்த்துவிடச் சலிப்பேற்பட்டு இருப்பதே போதுமென்ற எண்ணமேற்பட்டுவிடும்” இந்த  உணர்வைத்தான் நான் ஊருக்கு போகும் சமயங்களிலெல்லாம் உணர்வது. 

அதே நேரத்தில் எங்களுக்கு நடந்தவற்றை பேசாமல் எழுதாமல் விடுவதும் இயலாத ஒன்று..இரண்டு உணர்வுகளுக்கிடையில் சிக்கிதவித்தாலும், பரப்புரைகளை செய்வதுடன் இப்போதையநிலையில் கல்வி, பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் என அவரவரிற்கு ஏற்றவகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதே இருப்பைதக்கவைத்துகொள்ளவும், மன உளைச்சலை குறைக்கவும் உதவும் நடவடிக்கைகள். 

Link to comment
Share on other sites

On 30/6/2020 at 04:00, அக்னியஷ்த்ரா said:

ஆனால் ஒன்று இந்த யானை பார்த்த குருடர்கள் இருக்கிறார்கள் பாருங்கள் அவர்களுடன் வலு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் 

பாதுகாப்பாக இருந்து இந்தக் குருடர்கள் யானையைத் தடவிப்பார்க்கவும் இந்தியா தான் உயிரோடு இருக்கும்வரை விடாது. யானைக்கு மதம் அதிகரிக்க ஊசி போட்டுக்கொண்டே இருக்கும்.😲

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.