Jump to content

யாழில் இளைஞர்களை மிரட்டி கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த மூவருக்கும் விளக்கமறியல்


Recommended Posts

யாழ்ப்பாணம் மாநகரில் வீதியால் செல்லும் இளைஞர்களை மிரட்டி அலைபேசிகளைக் கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த மூவரையும் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் நாவலர் வீதி – கைலாசபிள்ளையார் கோவிலடி, கந்தர்மடம் சந்தி மற்றும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு அருகாமை ஆகிய இடங்களில் வீதியால் பயணித்த இளைஞர்களை வழிமறித்த மூவர், அவர்களிடம் அலைபேசிகளை பறித்துள்ளனர்.

வீதியால் பயணிக்கும் இளைஞர்களை வழிமறிக்கும் கும்பல், அலைபேசியைக் காட்டு என்று மிரட்டுவார்கள். அவர்களில் ஒருவர் எனது தங்கையை ஏன் படம் எடுத்தாய் என்று மிரட்டி அலைபேசியில் உள்ள படங்களை பார்ப்பது போன்று பாசாங்கு காட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வர்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் மாநகரில் அண்மைக்காலமாக அதிகரித்திருந்த நிலையில் முறைப்பாட்டாளர்களின் தகவலின் அடிப்படையில் அவர்களில் 3 பேரின் அலைபேசிகள் ஒருவரிடமிருந்து கைப்பற்றி  வழிப்பறிக் கும்பல் விற்பனை செய்துள்ளது.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அரியாலையைச் சேர்ந்த இருவரும் இராசாவின்தோட்டம் வீதியைச் சேர்ந்த ஒருவரும் என மூவரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பெருங்குற்றத் தடுப்புப் பொலிஸார் கைது செய்தனர்.

சந்தேக நபர்கள் நால்வரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்றுமுன்தினம் முற்படுத்தப்படுத்தப்பட்டனர். அவர்களில் அலைபேசிகளை வாங்கி வைத்திருந்தவருக்கு மன்றினால் பிணை வழங்கப்பட்டது.

ஏனைய மூவரை அடையாள அணிவகுப்புக்கு உள்படுத்த பொலிஸார் மன்றில் விண்ணப்பம் செய்தனர். எனினும் அடையாள அணிவகுப்பின்றி தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்வதாக சந்தேக நபர்கள் மூவரும் மன்றுரைத்தனர்.

அதனால் சந்தேக நபர்கள் மூவருக்கும் எதிராக குற்றப்பத்திரத்தை நாளை செவ்வாய்க்கிழமை மன்றில் சமர்ப்பிக்க பொலிஸாருக்கும் அறிவுறுத்தல் வழங்கிய யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல், அதுவரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

http://athavannews.com/யாழில்-இளைஞர்களை-மிரட்டி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் கைபேசிகளை திருடும் கும்பலுக்கு மறியல்!

mobile-robbery_710x400xt.jpg?189db0&189db0

 

யாழ்ப்பாணம் மாநகரில் வீதியால் செல்லும் இளைஞர்களை மிரட்டி அலைபேசிகளைக் கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த மூவரை நாளை (30) வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் நாவலர் வீதி – கைலாசபிள்ளையார் கோவிலடி, கந்தர்மடம் சந்தி மற்றும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு அருகாமை ஆகிய இடங்களில் வீதியால் பயணித்த இளைஞர்களை வழிமறித்த மூவர், அவர்களிடம் அலைபேசிகளை பறித்துள்ளனர்.

வீதியால் பயணிக்கும் இளைஞர்களை வழிமறிக்கும் கும்பல், அலைபேசியைக் காட்டு என்று மிரட்டுவார்கள். அவர்களில் ஒருவர் எனது தங்கையை ஏன் படம் எடுத்தாய் என்று மிரட்டி அலைபேசியில் உள்ள படங்களை பார்ப்பது போன்று பாசாங்கு காட்டிவிட்டு அவற்றுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வர்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் மாநகரில் அண்மைக்காலமாக அதிகரித்திருந்த நிலையில் முறைப்பாட்டாளர்களின் தகவலின் அடிப்படையில் 3 பேரின் அலைபேசிகள் நபர் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது. அவற்றை வழிப்பறிக் கும்பல் குறித்த நபருக்கு விற்பனை செய்துள்ளது.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அரியாலையைச் சேர்ந்த இருவரும் இராசாவின்தோட்டம் வீதியைச் சேர்ந்த ஒருவரும் என மூவரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பெருங்குற்றத் தடுப்புப் பொலிஸார் கைது செய்தனர்.

சந்தேக நபர்கள் நால்வரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்றுமுன்தினம் முற்படுத்தப்படுத்தப்பட்டனர். அவர்களில் அலைபேசிகளை வாங்கி வைத்திருந்தவருக்கு மன்றினால் பிணை வழங்கப்பட்டது.

ஏனைய மூவரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த பொலிஸார் மன்றில் விண்ணப்பம் செய்தனர். எனினும் அடையாள அணிவகுப்பின்றி தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்வதாக சந்தேக நபர்கள் மூவரும் மன்றுரைத்தனர்.

அதனால் சந்தேக நபர்கள் மூவருக்கும் எதிராக குற்றப்பத்திரத்தை நாளை செவ்வாய்க்கிழமை மன்றில் சமர்ப்பிக்க பொலிஸாருக்கும் அறிவுறுத்தல் வழங்கிய யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல், அதுவரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

 

https://newuthayan.com/யாழில்-கைபேசிகளை-திருடும/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Rajesh said:

யாழ்ப்பாணம் நாவலர் வீதி – கைலாசபிள்ளையார் கோவிலடி, கந்தர்மடம் சந்தி மற்றும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு அருகாமை ஆகிய இடங்களில் வீதியால் பயணித்த இளைஞர்களை வழிமறித்த மூவர், அவர்களிடம் அலைபேசிகளை பறித்துள்ளனர்.

நில்மினி, நாதமுனி, ஈழப்பிரியன்,  நெடுக்காலை போவான், சுவி.... எல்லாரும் 🏃🏽‍♀️ஓடியாங்கோ... 🏃🏽

நம்ம இடத்திலை, 🤭களவு நடக்குதாம்.... 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

நில்மினி, நாதமுனி, ஈழப்பிரியன்,  நெடுக்காலை போவான், சுவி.... எல்லாரும் 🏃🏽‍♀️ஓடியாங்கோ... 🏃🏽

நம்ம இடத்திலை, 🤭களவு நடக்குதாம்.... 😃

என்னது சிறியின் தொலைபேசியை பறித்துப் போட்டாங்களா?
சரி சரி விசாரயைக் கமிசன் வைப்பம்.
அதுக்காக ஆக்களை சேர்த்து ஆர்ப்பாட்டம் செய்வது கொரோனா காலத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னது சிறி யாற்றையோ  தங்கச்சியை படம் எடுத்திட்டாரோ? 🤣 போனகிழமை மட்டும் ஜெர்மனியலதான் இருந்ததாக கேள்வி. இது எப்ப நடந்தது? எப்ப போனார்? எப்ப படம் எடுத்தார்? படம் எடுக்கத்தான் போனாரோ? யாராவது தெரிந்தால் விளக்கமாக சொல்லுங்கோ. 
இப்ப சிறி நினைக்கப்போறார் இதென்ன வம்பாபோட்டுது  என்று.  ஊர் சனத்தை உதவிக்கு கூப்பிட்டால் ஈழப்பிரியன் அண்ணா , நில்மினி எல்லாம் தன்னை போட்டு வாட்டுதுகள் என்று. எங்க  சிறி இப்ப? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, nilmini said:

என்னது சிறி யாற்றையோ  தங்கச்சியை படம் எடுத்திட்டாரோ? 🤣 போனகிழமை மட்டும் ஜெர்மனியலதான் இருந்ததாக கேள்வி. இது எப்ப நடந்தது? எப்ப போனார்? எப்ப படம் எடுத்தார்? படம் எடுக்கத்தான் போனாரோ? யாராவது தெரிந்தால் விளக்கமாக சொல்லுங்கோ. 
இப்ப சிறி நினைக்கப்போறார் இதென்ன வம்பாபோட்டுது  என்று.  ஊர் சனத்தை உதவிக்கு கூப்பிட்டால் ஈழப்பிரியன் அண்ணா , நில்மினி எல்லாம் தன்னை போட்டு வாட்டுதுகள் என்று. எங்க  சிறி இப்ப? 

இப்ப தான் ஐபோன் ஒன்றை பிள்ளைகள் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். கொண்டு போய் சுதி காட்டிப் போட்டாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஈழப்பிரியன் said:

என்னது சிறியின் தொலைபேசியை பறித்துப் போட்டாங்களா?

 

≣ alte Nokia 8310 Vintage selten Telefon Handy | eBay

சிறித்தம்பியிட்டை கள்ளர் பறிச்ச ரெலிபோன் இதுதான். புது ரெலிபோனை வீட்டிலை மட்டும் தான் பாவிக்கிறவராம்.:grin:
சிறித்தம்பியா கொக்கா..:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

 

≣ alte Nokia 8310 Vintage selten Telefon Handy | eBay

சிறித்தம்பியிட்டை கள்ளர் பறிச்ச ரெலிபோன் இதுதான். புது ரெலிபோனை வீட்டிலை மட்டும் தான் பாவிக்கிறவராம்.:grin:
சிறித்தம்பியா கொக்கா..:cool:

இதைத்தான் இப்ப எழுத வந்தனான் நீங்கள் முந்தி விட்டீர்கள் .....அவங்கள் பறித்து கொண்டுபோன போனை போறவழியில்தான் பார்த்திருக்கினம்.இது தேறாது என்று திருப்பிக் குடுக்க வந்தபோதுதான் போலீசில் மாட்டுப் பட்டுப் போனாங்கள்......!  😂

Miss You Crying GIF - MissYou Crying Sobbing GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரும் ஊரைக் கூட்டி, ஒப்பாரி வைச்சு  புதுப் போன்   வாங்கப்  போட்ட திட்டத்தை. எல்லாருமாய்ச் சேந்து இப்பிடி போட்டுடைச்சுப் போட்டிடீங்களே? இனி எப்பிடி சிறியர் முகத்தைக் காட்டிறது? புது போன் வாங்கிறது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/6/2020 at 11:41, தமிழ் சிறி said:

நில்மினி, நாதமுனி, ஈழப்பிரியன்,  நெடுக்காலை போவான், சுவி.... எல்லாரும் 🏃🏽‍♀️ஓடியாங்கோ... 🏃🏽

நம்ம இடத்திலை, 🤭களவு நடக்குதாம்.... 😃

அதெப்பிடியாப்பா நடக்குது? நாம தான் தொழிலை விட்டு திருந்தி ஓடி வந்தாப்பிறகு?

புதுசா இரண்டு பேர் கிளம்பி இருப்பாங்களோ. அடோய் அப்செண்டிங்களா... எதை பண்ணினாலும் பிளான் பண்ணி பண்ணனும். இப்படியா மாட்டுறது...

அட சா... பாரு நம்ம தலை, தமிழ்சிறி அப்செட் ஆகிட்டாரு. :grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருடைய பதில்களையும் பார்த்து....  பயங்கர சிரிப்பாக இருந்தது.
நேற்று இவற்றை வாசித்து, சிரித்ததிலேயே.... நேற்றைய நாள், இனிமையாக கழிந்தது.

டிஸ்கி:  "பொல்லைக்  குடுத்து... அடி வாங்கின மாதிரி", ஒரு பீலிங்கு.  :grin: 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இளைஞர்கள் ஏன் இப்படி பயந்த பூச்சியானார்கள்..??! புத்தகப்பூச்சி நிலையில் இருந்து பயந்த பூச்சின்னு.. கூர்ப்பில் பின்னடைவதும் ஏனோ..??! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
    • இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
    • 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
    • இது உங்க‌ட‌ க‌ற்ப‌னை நிஜ‌ உல‌கிற்க்கு வாங்கோ விற‌த‌ர்.......................... இதை தான் ப‌ல‌ர் சொல்லுகின‌ம் இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம் என்று.............அட‌க்குமுறை தேர்த‌ல‌ முறைகேடாய் ந‌ட‌த்தினால் ம‌க்க‌ள் புர‌ட்சி ஒன்றே தீர்வாகும்...................ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ந‌ட‌ந்த‌ அநீதிக‌ள் முறைகேடு  ஒரு நாள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.