Jump to content

சீனாவுடனான மோதல்; டிக்டொக்,யுசி பிரௌசர் உட்பட 59 செயலிகளுக்கு இந்தியாவில் தடை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவுடனான மோதல்; டிக்டொக்,யுசி பிரௌசர் உட்பட 59 செயலிகளுக்கு இந்தியாவில் தடை!

InShot_20200629_220922217-1-960x573.jpg?189db0&189db0

இந்தியா – சீனா இடையே எல்லைப் பகுதியில் நடைபெற்ற மோதலுக்கு பிறகு சீன நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்கு சொந்தமான செயலிகளை இந்தியாவில் தடைசெய்ய வேண்டுமென்ற கோரிக்கை நாட்டின் பல்வேறு மட்டங்களில் வைக்கப்பட்டு வந்திருந்த நிலையில் தற்போது டிக்டொக், ஹலோ, கேம் ஸ்கானர், செயார்இட், யு.சி. பிரௌசர் போன்ற பிரபமான செயலிகள் மற்றும் கிளாஸ் ஓப் கிங்ஸ் விளையாட்டு உள்ளிட்ட 59 திறன்பேசி செயலிகளை தடை செய்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட செயலிகள் விபரம்:

Screenshot_20200629-221310-1.jpg?189db0&

 

https://newuthayan.com/சீனாவுடனான-மோதல்-டிக்/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, உடையார் said:

 

ஆக, சீனாவால் கொல்லப்பட்ட, காயப்படுத்தப்பட்ட இந்திய இராணுவத்தினரின் பெறுமதி என்பது 59 apps தான் 😂😂😂

இன்னும் கொஞ்சம் இராணுவத்தினரைக் கொன்றால் இன்னும் நாலு apps ஐ தடை செய்வார்கள் அம்புட்டுதே 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சீவா செய்யுற .. ஓட்டோ கண்ணாடிய திருப்பினா எப்படிப்பா ஸ்ராற் ஆகும்.? 👌

Chaos+1.png 

Link to comment
Share on other sites

லடாக் எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு – கல்வான் பள்ளத்தாக்கில் சக்தி வாய்ந்த பீரங்கியை நிறுத்தியது இந்தியா

   by : Dhackshala

202006301255203866_Tamil_News_India-depl

லடாக் எல்லையில் சீனாவின் படைக்குவிப்பை தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா சக்தி வாய்ந்த டி-90 பீஷ்மா பீரங்கிகளை நிறுத்தியுள்ளது.

துல்லியமான தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் இந்த பீரங்கி, ஒருநிமிடத்தில் 60 குண்டுகளைப் பொழியும் ஆற்றல் மிக்கது.

ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களை கையாளும் திறன் கொண்ட இந்த பீரங்கிகள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை. 48 டன் எடை கொண்ட இந்த பீரங்கி ஆயிரம் குதிரை விசை ஆற்றல் கொண்டதாகும். சீனா படைகளை குவித்ததை தொடர்ந்தே இந்தியாவும் படைகளை குவித்துள்ளதாக கூறப்படுகிறது.

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம் 15ஆம் திகதி ஊடுருவ முயன்ற சீன இராணுவ வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மோதல் தொடர்பாக இரு நாட்டு இராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, லடாக் எல்லையில் இருந்து படைகளை மீளப்பெற இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

எனினும் கல்வான் பகுதியில் சீனா தனது படைகளை குவித்துள்ள காட்சிகள் செயற்கைக் கோள் மூலமாக படமாக்கப்பட்டு வெளியாகியுள்ளன. மேலும் சீனா தனது உரிமைகோரும் பகுதியை தாண்டி 423 மீட்டர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளமை அந்த படங்களில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இந்தியா தனது சக்திவாய்ந்த டி-90 பீஷ்மா பீரங்கிகளை அதிகளவுக்கு எல்லையில் குவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/லடாக்-எல்லையில்-சீனாவின்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

tiktok-720x405.jpg

டிக்டாக் செயலியை மீண்டும் அனுமதிக்க இந்திய அரசு வாய்ப்பு

டிக்டாக் செயலியை மீண்டும் அனுமதிக்க இந்திய அரசு வாய்ப்பளித்துள்ளது. அதற்கமைய அந்த செயலியை நடத்தி வரும் தனியார் நிறுவனம் எந்த வகையிலும் தனிநபர் தகவல்களை திருடவில்லை என உறுதி அளிக்கும் வகையில் இந்திய அரசுக்கு விளக்கம் கொடுக்கலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஏற்கப்படும் பட்சத்தில் குறிப்பிட்ட செயலி மீண்டும் இந்தியாவில் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளாக தெரிவிக்கப்படுகிறது.

டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் தொலைபேசிகளில் இருந்து நீக்கப்படுவதாக நேற்று முன்தினம் மத்திய அரவு அறிவித்தது.

கடந்த ஜூன் 15ஆம் திகதி லடாக் பகுதியில் நடந்த இந்திய-சீன போரின் விளைவாக இந்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

டிக் டாக் செயலி இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானதென்பதால், இது தடை செய்யப்பட்டது பலருக்கு அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிக்டாக் மறுக்கப்பட்டதை தொடர்ந்து கருத்து வெளியிட்ட அதன் இந்திய தலைவர், தனிநபர் தகவல்களை டிக்டாக் செயலி என்றும் திருடும் செயலில் ஈடுபட்டது இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.

கிட்டத்தட்ட முப்பது இலட்சம் இந்திய வாடிக்கையாளர்களைக் டிக்டாக் செயலி கொண்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/டிக்டாக்-செயலியை-மீண்டும/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை அமெரிக்கா ஆதரவு

59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை அமெரிக்கா ஆதரவு

59 சீன செயலிகளுக்கு தடை அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது
பதிவு: ஜூலை 02,  2020 07:06 AM
வாஷிங்டன்

நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சீன நிறுவனங்களை சேர்ந்த டிக்டாக், ஷேர்இட், வீ சேட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.மத்திய அரசு தடை எதிரொலியாக செல்போன்களில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட டிக் டாக் உள்ளிட்ட செயலிகள் முடக்கப்பட்டுள்ளன.


சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்திருப்பது தொடர்பாக இந்தியாவுக்கான சீன தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மத்திய அரசின் நடவடிக்கை இந்தியாவின் சந்தை போட்டிக்கும், நுகர்வோர் நலனுக்கும் உகந்ததல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் மீதான இந்தியாவின் நடவடிக்கைக்கு அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ ஆதரவளித்துள்ளார்.  அவர் கூறி இருப்பதாவது:-

சீனாவிலிருந்து "சில மொபைல் பயன்பாடுகளுக்கு இந்தியாவின் தடையை நாங்கள் வரவேற்கிறோம், இந்த நடவடிக்கை "இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் தேசிய பாதுகாப்பையும் அதிகரிக்கும்" என கூறினார்

அமெரிக்காவும் இந்தியாவின் பாதையை பின்பற்றி சில சீன நிறுவனங்களுக்கு எதிராக முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/02070643/Pompeo-Welcomes-Indias-Sweeping-Ban-on-Chinese-Apps.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தடை எதுவும் இல்லை என்கிறார் ஆய்வாளர்.

 

டக்டாக்கிடம் 30 கோடி வாங்கியுள்ளார் மோடி.

இன்றும் 300 மில்லியன் டாலருக்கு சீன கம்பனியுடன் கையெழுத்திட்டுள்ள இந்தியா.

https://www.hindustantimes.com/business-news/chinese-firms-inks-deal-with-adani-to-invest-300-million-in-gujarat/story-9JwsdqAIyNnu3BHjNIboPI.html

India’s Adani Group inked a deal with East Hope Group, one of China’s largest companies, which will invest over $300 million to set up a manufacturing unit for solar power generation equipment in Gujarat.

“The MoU signed between the two leading companies from India and China proposes to set up manufacturing units in Mundra SEZ, Gujarat to produce solar power generation equipment, chemicals, aluminum and animal feed, and to put in place East Hope Group’s engineering and industrial integration chain to recycle and economise the product cost at Mundra SEZ,” said a statement.

An estimated investment of more than $300 million is expected to be made by East Hope Group in India, as part of the proposed cooperation between the two conglomerates.

East Hope Group, a 70 billion yuan company, is one of the largest corporate houses in China.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.