Jump to content

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

 

Protest-vavuniya-6-720x480-1.jpg?189db0&189db0

 

இலங்கையை சர்வதேச நீதிமன்றிற்கு பாரப்படுத்துமாறு கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் வுனியாவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியாவில் 1,229வது நாளாக சுழற்சி முறையில் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் உறவுகளே இந்த கவனயீர்ப்பை முன்னெடுத்தனர்.

இதன்போது நாடாளுமன்ற வேட்பாளர்கள் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் போன்றோருக்கு எதிரான பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டது.

  • Protest-vavuniya-3-720x480-1.jpg?189db0&
  • Protest-vavuniya-4-720x480-1.jpg?189db0&
  • Protest-vavuniya-6-720x480-1.jpg?189db0&
  • Protest-vavuniya-7-720x480-1.jpg?189db0&
  • Protest-vavuniya-9-720x480-1.jpg?189db0&
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியால்தான் எங்களது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டது’ – செல்வராணி சீற்றம்

Sequence-620x330-1.jpg?189db0&189db0

 

ஜனாதிபதியால் தான் எங்களது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டது அவர் ஜனாதிபதியாக வந்திருப்பது எங்களுக்கு பீதியாக இருக்கிறது“ என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இணைப்பாளர் தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று அம்பாறை மாவட்டத்தின் தம்பிலுவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்க இணைப்பாளர் தம்பிராசா செல்வராணி . எட்டு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டமானது 10 ஆண்டுகளை கடந்து 11 வது ஆண்டில் தொடர்கின்றது . எங்களது உறவுகளை வீடுகளிலிருந்து மனைவி ,தாய் , பிள்ளைகள் அழ அழைத்து செல்லப்பட்டவர்களும் . மாடுகட்ட சென்றவர்களையும் கடத்தி சென்றுள்ளனர். எங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்து என்று உண்மை எங்களுக்கு தெரியும் வரை போராட்டம் தொடரும்.

அண்மையில் இராணுவ தளபதி சவேந்திர டீ சில்வா காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அனைவரும் உயிருடன் இல்லை என தெரிவித்திருந்தார். ஏன் அப்படி கூறியிருந்தார் என எனக்கு தெரியாது? எனது கணவரை 2009-05 -17 திகதி எனது கையால் இராணுவத்தினரிடம் ஒப்படைத்தேன். ஆயிரக்கணக்கான சரணடைந்த உறவுகளை பேரூந்துகளில் ஏற்றிச் சென்றதை என் கண்ணால் கண்டேன்.

உயிருடன் ஒப்படைத்த என் உறவுகள் தற்போது இல்லை என கூறுவதற்கு இராணுவ தளபதிக்கோ ஜனாதிபதிக்கோ இல்லை எங்களுக்கு இவர்களே பதில் கூறவேண்டும். எமது போராட்டத்திற்கு எந்த ஒரு முடிவும் கிடைக்காது இருப்பதினாலே சர்வதேசத்திடம் கையேந்தி நிற்கின்றேன். நூற்றுக்கணக்கான உறவுகள் காணாமல் போன உறவுகளுக்காக காத்திருந்து உயிரிழந்துள்ளனர்.

இனிமேலும் இந்த நாட்டில் எந்த ஒரு உறவும் காணாமல் ஆக்கப்பட கூடாது. என் கணவன் இருந்திருந்தால் நான் வீதியில் நின்றிருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. இராணுவ தளபதியும் ஜனாதிபதியும் எவ்வித சாக்கு போக்குகளை சொல்லாது எமது சந்ததியை காப்பாற்றுங்கள். ஜனாதிபதியால் தான் எங்களது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டது அவர் ஜனாதிபதியாக வந்திருப்பது எங்களுக்கு பீதியாக இருக்கிறது. இனிமேல் ஜனாதிபதியின் ஆட்சி காலத்தில் தமிழ் , சிங்கள , முஸ்லிம் என எந்த உயிரும் காணாமலாக்கப்பட கூடாது என தெரிவித்தார்.

 

https://newuthayan.com/ஜனாதிபதியால்தான்-எங்கள/

Link to comment
Share on other sites

நம்பிக்கையும் தொடர்போராட்டமும் வீண் போகாது!

இந்த மக்களின் நீதிக்கான போராட்டத்துக்கு எதிராக செயற்படும், சிங்கள-பௌத்த அரச கொலைகாரர்களுக்கு சார்பாகவும் முழுமூச்சுடன் செயற்படும் சுமந்திரன்,டக்ளஸ் தேவானந்தா போன்ற  எடுபிடிகள் பாராளுமன்றதுக்கு தெரிவுசெய்யப்படும் வரை சவால்கள் தொடரவே செய்யும்! 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

1250வது நாளில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

Missing-Persons-Relations-Protest-in-Vavuniya.jpg?189db0&189db0

வவுனியா வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சி முறையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (21) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

சுழற்சி முறையிலான போராட்டம் இன்றுடன் 1,250வது நாட்களை எட்டியிருப்பதை முன்னெட்டு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த உறவினர்கள், கடந்த 1,250 நாட்களாக நாம் போராடி வருவதாகவும் தமக்கான தீர்வினைத் தருமாறு வெளிநாடுகளிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தமது பிரச்சினையை பார்க்காமல் தேர்தல் என அனைத்துக் கட்சிகளும் அலைவதாகத் தெரிவித்த அவர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ள நிலையில் அடுத்த தேர்தல் வருவதற்குள் தமிழர்கள் அடிமைப்படுத்தப்படுவார்கள் என்பது நிச்சயம் எனவும் சிங்களவர்களைப் பிரியப்படுத்தும் செய்தியாகவே அது உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.